Jump to content

மறதிநோய் பொய் பேசுதல்


Recommended Posts

இன்று உலகத்தில் அதிகரித்து வரும் நோய்களில் ஒன்று மராத்தி நோய் :  

பலவேறு வழிகளில் இவர்கள் மேல்  அன்பு வைத்திருப்பவர்களுக்கு இவர்களை அன்புடன் பாதுகாப்பது ஒரு சவாலாக உள்ளது 

ஒருவர் தனது எண்பது வயதில் நாளும் வேலைக்கு செல்ல ஆயத்தமாவார். இவரை இவருடன் வாழ்ந்த மனைவி நீங்கள் இளைப்பாறி பத்துவருடங்கள் ஆகி விட்டன என்பார். அவருக்கு கோபம் வந்து விடும். சண்டை... பக்கத்து வீட்டாருக்கு ஆரம்பத்தில் இந்த சிக்கல் விளங்கவில்லை, காரணம் சமூக தாழ்வு மனப்பான்மை. 

காலப்போக்கில் மனைவி, கணவனின் உலகை புரிய ஆரம்பித்தாள். அவரின் உலகம் சுருங்கி இப்பொழுது அவர் தன்னை ஒரு நாற்பது வயதினராக பார்ப்பது விளங்கியது. அவரும், அந்த உலகில் சேர்ந்து பயணிக்க முடிவு செய்தார். அதில், சில பொய்களையும் சொல்ல ஆரம்பித்தார். அது மிகவும் மனத்தை உருக்குவதாக இருந்தது. காரணம், ஐம்பது வருடம் கடந்த தாம்பத்திய வாழ்வில் பொய்களை சொல்ல ஆரம்பித்தது தான்.   

கணவர் வேலைக்கு காலையில் எழுத்து செல்ல ஆரம்பிக்கும்பொழுது மனைவி சொள்ளுவார், ' இன்று லீவு நாள், வேலை இல்லை. இருங்கோ சாப்பாட்டையும் தேநீரையும் கொண்டுவாறன் '. அவரும், 'ஓ அப்படியே',  என சிரித்து அமர்ந்து விடுவார்.  

சில நேரங்களில் தனது மனைவியை பார்த்து எங்கே எனது மனைவி என கேட்ப்பதுண்டு. மனைவியும், 'நான் தான் உங்கள் மனைவி' என்பார். அவருக்கு கோபம் வந்து விடும். எனது மனைவி கிழவியே இல்லை என்பார் கோபத்துடன்.  இப்பொழுது மனைவி கூறுவது, ' உங்கள் மனைவி அங்கால போயிருக்கின்றா, இப்ப வந்திடு விடுவா ' என்பார். கணவரும் அமைதியாகி விடுவார்.  

தனது சொந்தப்பிள்ளைகளையும் கூட அவர் மறந்த பொழுது பிள்ளைகளும், நான் உங்கள் பிள்ளை என வாதிடுவதில்லை. அவர்கள் கூறுவது, 'நாங்களும் உங்கள் குடும்பத்தில் ஒருவர்' என்பதே. 

பொய்களும் இங்கே ஒரு ஒரு சிறந்த மருந்தாகி விடுகின்றது. 

மூலம் : சுய ஆக்கம். 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறதியும், பகல்கனவும் கூட சாபமில்லை, ஒரு வித வரம்தான். என்ன கொஞ்சம் அதிகமாகும் போது பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஜாலியாய் இருக்கும்......!  😂

Link to comment
Share on other sites

சில  ஆய்வுகள், இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் இந்த நோயினால் பீடிக்கப்பட்டுவதாக கூறுகின்றது, இதில் எவ்வளவு உண்மை உள்ளது என தெரியவில்லை. 

புதிதாக எதையாவது கற்பது ( சீன மொழி, எப்படி ஒன்றை வடிவமைப்பது ..) மறதியை குறைக்க உதவும்.

எழுதுவதும் உதவும் என்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.