Jump to content

ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி : 300 ரூபாய் செலவாகும். 200 ரூபாய் லாபம் கிடைக்கும்.


ampanai

Recommended Posts

ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாள் - "சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன்"

இது 2019ஆம் ஆண்டு. ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்? நாம் யாரிடமாவது ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை அவர்கள் ஏளனமாகக்கூட பார்க்கக்கூடும்.

 

ஆனால், ஒரு ரூபாய்க்கு ஒருவரின் பசியை போக்குகிறார் இந்த கமலாத்தாள் பாட்டி.

கோவை மாவட்டம், வடிவேலம்பாளையம் கிராமத்தில் இன்றும் ஒரு ரூபாய்க்கு சுடச்சுட இட்லி சுட்டு கொடுக்கிறார் இந்தப் பாட்டி. இவருக்கு வயது 80.

 

இந்தத் தள்ளாத வயதிலும், ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கிறார்.

ஆட்டுக் கல்லில் மாவறைக்கும் கமலாத்தாள் பாட்டி Image caption ஆட்டுக் கல்லில் மாவறைக்கும் கமலாத்தாள் பாட்டி

"காலை 5:30 மணிக்கு எழுந்து சட்னி சாம்பார் செய்வேன். ஆறு மணி அளவில் இட்லி அடுப்பை பற்ற வைப்பேன். 12 மணி வரைக்கும் இட்லி ஊத்துவேன்" என்கிறார் கமலாத்தாள்.

உங்களால் எப்படி ஒரு ரூபாய்க்கு இட்லி விற்க முடிகிறது? என்று கேட்டதற்கு,

"அரிசி, பருப்பு, தேங்காய், கடலை, எண்ணெய் இதெல்லாம் சேர்த்து, எனக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் செலவாகும். 200 ரூபாய் லாபம் கிடைக்கும். அவ்வளவுதான். சாகும் வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன். யார் சொன்னாலும் விலை ஏற்ற மாட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் நான் வாழப்போகிறேன்?" என்று அவர் கூறுகிறார்.

"எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் இங்கு வந்து வாங்கி செல்வார்கள். சிலர் இங்கேயே அமர்ந்து சாப்பிடுவார்கள். தானாகவே இட்லி எடுத்துக் கொண்டு சாப்பிட்டு செல்வார்கள். சிலர் காசு கொடுப்பார்கள். சிலர் காசு கொடுக்காமல் சாப்பிட்டு செல்வார்கள். நான் கண்டுகொள்ள மாட்டேன். ஏழைகள் வந்து சாப்பிட்டு வாழ்த்திவிட்டு போகட்டும்" என்கிறார் கமலாத்தாள் தெரிவித்தார்.

இட்லி

"நாங்கள் எல்லாம் சோளக்களி, ராகி, கம்பஞ்சோறு போன்ற உணவுகளை சாப்பிட்டு வளர்ந்தோம். இதனால்தான் இன்றும் என் உடலில் தெம்பு இருக்கிறது." என்று தான் இந்த வயதிலும் திடமாக உழைக்கும் ரகசியத்தை தெரிவிக்கிறார் கமலாத்தாள் பாட்டி.

மேலும், தற்போதெல்லாம் அனைவரும் அரிசி சோறே அதிகம் சாப்பிடுவதாகவும், அதனாலேயே யாருக்கும் தெம்பு இருப்பதில்லை என்று அவர் கூறுகிறார்.

இந்தக்கடையின் தினசரி வாடிக்கையாளர் ராமசாமி கூறுகையில், "இப்பவும் இங்க இட்லி ஒரு ரூபாய்தான். 10 ரூபாய் இருந்தால் வயிறு நிறைய இங்கு சாப்பிடலாம். இன்னிக்கு எங்கிட்ட காசு இல்ல, நாளைக்கு தரேன் என்று சொன்னால்கூட, அவர் ஒன்னும் சொல்லமாட்டார். என் கையில் 500 ரூபாய் இருந்தாலும், நான் இங்கு வந்துதான் சாப்பிடுவேன். காரணம் சுவை. ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைப்பார். அம்மிக்கல்லில்தான் சட்னி அரைப்பார். சாம்பாரும் மிகப் பிரமாதமாக இருக்கும்" என்கிறார்.

"பாட்டி சில நாள் போண்டா சுட்டுக் கொடுப்பார். இட்லி ஒரு ரூபாய். போண்டா இரண்டு ரூபாய். வேறு எங்கு சாப்பிட்டாலும் இங்கிருக்கும் சுவை வராது. இங்கு 10 இட்லி சாப்பிட்டால் வயிர் நிறைந்துவிடும்" என்கிறார் பாட்டிக்கடைக்கு அருகில் வேலை பார்க்கும் செல்வசுந்தரம்.

https://www.bbc.com/tamil/india-49551458

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

"எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் இங்கு வந்து வாங்கி செல்வார்கள். சிலர் இங்கேயே அமர்ந்து சாப்பிடுவார்கள். தானாகவே இட்லி எடுத்துக் கொண்டு சாப்பிட்டு செல்வார்கள். சிலர் காசு கொடுப்பார்கள். சிலர் காசு கொடுக்காமல் சாப்பிட்டு செல்வார்கள். நான் கண்டுகொள்ள மாட்டேன். ஏழைகள் வந்து சாப்பிட்டு வாழ்த்திவிட்டு போகட்டும்" என்கிறார் கமலாத்தாள் தெரிவித்தார்.

அந்த எண்பது வயது மூதாட்டி... ஒரு ரூபாய்க்கு விற்கும்  இட்டலிக்கு கூட,
காசு கொடுக்காமல் செல்லும்.... கேவலமான மனிதர்களை  என்னவென்பது.  ☹️

Link to comment
Share on other sites

 

4 hours ago, ampanai said:

"அரிசி, பருப்பு, தேங்காய், கடலை, எண்ணெய் இதெல்லாம் சேர்த்து, எனக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் செலவாகும். 200 ரூபாய் லாபம் கிடைக்கும். அவ்வளவுதான். சாகும் வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன். யார் சொன்னாலும் விலை ஏற்ற மாட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் நான் வாழப்போகிறேன்?" என்று அவர் கூறுகிறார்.

பாட்டி அம்பானியை விட அதிக வீதம் இலாபம் மட்டுமல்ல சக உறவுகளுக்கு சேவையும் செய்கின்றார்.

இவரிலும் ஒரு 'மதர் தெரேசா' தெரிகின்றார். 

Link to comment
Share on other sites

ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாள்: மாவட்ட நிர்வாகம் முதல் மகேந்திரா நிறுவனம் வரை குவியும் உதவிகள்

கோவை மாவட்டம், வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் புதிய வீடு கட்டி தருவதாக தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில வாரங்களில் பிபிசி தமிழ் உட்படப் பல ஊடகங்களில் செய்தியாக வந்த ஒரு ரூபாய் இட்லிப்பாட்டிக்கு பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கமலாத்தாள் பாட்டி குறித்து ஊடகங்களில் தொடர்ந்து வந்த செய்திகளால், பலர் பாட்டியின் வீடு தேடிச் சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பொருள் உதவியும் செய்து வருகின்றனர்.

பாட்டி

மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா பாட்டி குறித்த செய்தியை பகிர்ந்து பாட்டியின் வியாபாரத்தில் தான் முதலீடு செய்ய விரும்புவதாகவும், அவருக்கு எரிவாயு அடுப்பு வாங்கி தருவதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று கமலாத்தாள் பாட்டியைத் தனது அலுவலகத்திற்கு வரவழைத்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவரது சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

வீடு பழுதடைந்த நிலையில் இருப்பதாகப் பாட்டி கூறியதைக் கேட்ட ஆட்சியர், பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தரப்படும் எனவும், தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

யார் இந்த ஒரு ரூபாய் இட்லிப் பாட்டி?

கோவை மாவட்டம் ஆலாந்துறை வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதான கமலாத்தாள் தனது ஒரு ரூபாய் இட்லி குறித்த ஊடகங்களின் செய்தியால் பிரபலம் அடைந்தார்.

கமலாளாத்தால் பாட்டி தனது இட்லி வியாபாரம் தொடங்கிய முதல் 15 வருடங்கள் 50 பைசாவுக்கும், அதன் பிறகு தற்போது வரை ஒரு ரூபாய்க்கும் இட்லி விற்று வருகிறார்.

வீட்டிற்கு வாங்கிச்செல்லப் பாத்திரம் கொண்டு வந்தால் மட்டுமே இட்லி கொடுக்கிறார்.

பாட்டியின் சுவையான இட்லிக்கு வடிவேலம்பாளையத்தை சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டருக்குள் இருக்கும் ஊர்களிலிருந்து தினமும் பலர் வந்து செல்கின்றனர்.

பாட்டிக்கு ஆதரவாக அவரது பேரன் புருசோத்தமன் இருந்து வருகிறார்.

இந்தத் தள்ளாத வயதிலும், ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-49665243

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à®à¯à®à¯à®à¯ à®à®²à¯à®²à®¿à®²à¯ மாவறà¯à®à¯à®à¯à®®à¯ à®à®®à®²à®¾à®¤à¯à®¤à®¾à®³à¯ பாà®à¯à®à®¿

அந்தப் பாட்டியின்... நல்ல மனதிற்கும், பட்ட சிரமங்களுக்கும்...
பலரும் உதவ முன்வந்திருப்பது... மகிழ்ச்சியாக உள்ளது. 💓

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

நல்ல சேவை மானப்பான்மை  பாட்டிக்கு, இன்னும் பல ஆண்டுகாலமாக இருந்து இத்தொண்டை செய்யனும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.