Jump to content

டிமென்ஷியா என்ற மறதி நோய்: "இந்தியாவின் புதிய சுகாதார சவால்"


Recommended Posts

மறதி நோய் (டிமென்ஷியா) - இந்தியாவின் புதிய சுகாதார சவால்படத்தின் காப்புரிமை Hindustan Times/Getty Images

'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய் பாதிக்கப்பட்ட நபரின் மூளையின் செயற்பாடு படிப்படியாக பாதிக்கப்பட்டு, அவரது நினைவாற்றல், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயல்பாடு என்று எல்லாமே பாதிக்கப்படும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் அனைத்து தேவைகளுக்கும் மற்றவரின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்.

டிமென்ஷியாவை முழுமையாக குணப்படுத்தக் கூடிய மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

வரும் காலங்களில் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரும் மருத்துவ மற்றும் சமூக நெருக்கடியாக டிமென்ஷியா என்கிற இந்த நோய் உருவாகியிருப்பதாக அல்சைமர்ஸ் நோய்க்கான உலக அமைப்பு எச்சரித்துள்ளது.
 
உலகளவில் ஒவ்வொரு 3 விநாடிக்கும் ஒருவர் இந்த நோயால் தாக்கப்படுகிறார் என்கிறது அந்த அமைப்பு.

இந்தியாவில் இந்த நோய் இருப்பதே தெரியாமல் அல்லது அதற்கு தகுந்த சிகிச்சை கிடைக்காமல் கிட்டத்தட்ட 90% பேர் வாழ்வதாக கூறுகிறார், அது தொடர்பான ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மருத்துவர் டாக்டர் ஶ்ரீதர் வைத்தீஸ்வரன்.

பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து:

கேள்வி: 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய் என்றால் என்ன? இது யாரை பாதிக்கும்?

பதில்: 'டிமென்ஷியா' என்பது மூளை பாதிப்படைவதால் ஏற்படும் நோய். அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மறதி நோயின் மிகப் பொது வடிவமான அல்சைமர் நோய் தாக்குதல் காரணனமாக, 'டிமென்ஷியா' அதிகமாக வருகிறது

அது தவிர, மூளைக்கு ரத்த ஓட்டம் சரியாக இல்லாத போது, ஏற்படும் மறதி நோயை 'வாஸ்குலர் டிமென்ஷியா' என சொல்கிறோம்.

பார்கின்சன் நோய் தாக்குதல் போன்ற காரணங்களாலும் டிமென்ஷியா ஏற்படும்.

பொதுவாக 60 அல்லது 65 வயதை கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மிகச் சிலருக்கு மட்டுமே 40 அல்லது 45 வயதில் இந்த நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. அது மிகவும் அரிது.

அதனால், 60 அல்லது 65 வயதை கடந்தவர்கள் வழக்கத்தை விட நினைவிழப்பு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

டாக்டர் ஶ்ரீதர் வைத்தீஸ்வரன் Image caption டாக்டர் ஶ்ரீதர் வைத்தீஸ்வரன்

கேள்வி: இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு எவ்வளவு அதிகமாக உள்ளது?

பதில்: இங்கு கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. அதில், கிட்டத்தட்ட 90% பேருக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை அல்லது அவர்களுக்கு நோய் இருப்பதே கண்டறியப்படவில்லை. இந்நிலையில், இங்கு இந்த நோயின் தாக்கம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. அப்போது கோடிக்கணக்கான இந்தியர்கள் இந்த நோயால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

இந்த விவகாரத்தில், 'டிமென்ஷியா' உள்ளவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் குடும்பத்தினரும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்த நோயாளிகளை கவனித்துக் கொள்ள நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 10 மணி நேரம் செலவிட வேண்டியுள்ளது. அதனால் இது ஒருவருக்கு முழு நேர வேலையாக மாறிவிடுகிறது.

இந்த தீவிரத்தை குறைக்க தேவையான மருத்துவ வசதிகளை நாம் பெருக்க வேண்டும்.

கேள்வி: இந்த நோயை கண்டறிய மற்றும் அதற்கு சிகிச்சை அளிக்க புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளதா?

பதில்: டிமென்ஷியாவுக்கு தொழில்நுட்பத்தை பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும்.

முதலாவதாக டிமென்ஷியா நோயை கண்டறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். இரண்டாவது, டிமென்ஷியா நோயாளிக்கு ஆதரவு மற்றும் சிகிச்சை அளிக்க முடியும், மூன்றாவதா விழிப்புணர்வு ஏற்படுத்த அது உதவும். நாலாவது, பயிற்சி அளிக்க தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும். இந்த நான்கு தலைப்புகளில் டிமென்ஷியாவுக்கான தொழில்நுட்பத்தை நாம யோசிக்கலாம்.

கேள்வி: அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்யவேண்டிய தேவையுள்ளதா?

பதில்: சர்வதேச அளவில் பார்க்கும் போது, டிமென்ஷியா நோயை கண்டறிய மொபைல் ஆப்களில் அல்லது பலகைக் கணினிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள் அல்லது படங்களை போட்டு அது தொடர்பான பதில்களை பெற்று நோய் கண்டறியப்படுகிறது.

ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் அந்த கைக்கருவிகளின் பயன்பாடு குறித்த அறிவு, அவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளதால் அவர்களின் மொழியறிவு போன்ற சவால்கள், சோதனையின் முடிவுகளை பாதிக்கும் அபாயம் உள்ளது.

மறதி நோய் (டிமென்ஷியா) - இந்தியாவின் புதிய சுகாதார சவால்படத்தின் காப்புரிமை Paul Watson

அதனால் சோதனை முயற்சியாக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் டெல்லி, மைசூர் மற்றும் சென்னையில் சமூக சுகாதார ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் பயன்படுத்தக் கூடிய மொபைல் ஆப் ஒன்றை சோதித்து வருகிறோம். இதில் அவர்கள் நேரடியாக கைக்கருவிகளை பயன்படுத்த மாட்டார்கள் என்பதால், துல்லியமான சோதனை முடிவுகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

வீடுகளில் உள்ள நோயாளிகளை கண்காணிக்க நிறைய தொழில்நுட்பங்கள் உள்ளன. குறிப்பாக வீடுகளில் இன்ஃப்ராரெட் சென்சார்களை பொருத்துவதன் மூலம் அவர்கள் எத்தனை முறை கதவை திறக்கிறார்கள், தண்ணீர் குடிக்கிறார்கள் மற்றும் என்னென்ன செய்கிறார்கள் போன்ற தகவல்களை பெற முடியும். பெருமாலும் நோயாளிகள், இரவு நேரங்களில் படுக்கையிலிருந்து எழுந்து விழுந்து விடுகின்றனர். அதை தவிர்க்க இது போன்ற சென்சார்களை அவர்களின் கட்டிலில் பொருத்தி, அவர்கள் எழுந்தால் அலாரம் செய்ய வைத்து அவர்களுக்கு உதவலாம்.

வீடுகளை விட்டு வெளியில் செல்லும் அவர்கள் நிறைய பேர் வழிதவறி காணாமல் போகும் நிலையைத் தவிர்க்க, இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் ஜி.பி.எஸ் டிராக்கர் அதிக அளவில் பயன்படுகிறது.

கேள்வி: இந்த நோயாளிகளுக்கு உதவும் ரோபோ தொழில்நுட்பம் தற்போது பயன்பாட்டில் உள்ளதா?

மறதி நோய் (டிமென்ஷியா) - இந்தியாவின் புதிய சுகாதார சவால்

பதில்: நோயாளிகளுடன் தொடர்ந்து உரையாடக்கூடிய ஒரு ரோபோவை பயன்படுத்தும் முயற்சியை நாங்கள் சென்னையில் மேற்கொண்டு வருகிறோம். பலகைக் கணினிக்கு முகம் போன்ற அமைப்பை உண்டாக்கி, மனிதன் போலவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், பேசவும் அதை தயார் செய்கிறோம். செயற்கை நுண்ணறிவுடன் அந்த ரோபோ இணைக்கப்பட்டு, சோதனைகள் வெற்றியடைந்தால், டிமென்ஷியா நோயாளிகளுக்கு அது பயனளிக்கும்.

இது தவிர சாதாரண மக்களின் பொருட்செலவை குறைக்கும் நோக்கில் இந்தியாவில் எராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறன.

https://www.bbc.com/tamil/science-49569718

Link to comment
Share on other sites

  • 1 month later...

மார்க்கம் என்ற கனடாவில் உள்ள நகரில் ஒரு விடுதி உள்ளது. 

அங்கு மறதி நோயால்  பாதிக்கப்படுபவர்களுக்கும் அவரக்ளுக்கு பாதுகாப்பும் அன்பும் அரவணைப்பும் தந்து உதவுவர்களுக்கும் பயனளிக்க ஒரு உல்லாச விடுதி உள்ளது, 

இதில் பலரும் பயனடைவதாக சொல்லப்படுகிறார்கள். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.