Jump to content

போர்க்குற்ற விசாரணையை நடத்துவது அவசியம் – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா


Recommended Posts

 

போர்க்குற்ற விசாரணையை நடத்துவது அவசியம் – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா

Maj.-Gen.-Ashok-K.-Mehta-300x200.jpg

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அது நல்லிணக்க முயற்சிகளின் நம்பகத்தன்மைக்கு அவசியமானது என்றும் மேஜர் ஜெனரல் அசோக் கே. மேத்தா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையின் தளபதியாகப் பணியாற்றியவரும், தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளருமான  மேஜர் ஜெனரல் அசோக் கே. மேத்தா கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியிருக்கிறார்.

“போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு பங்களிப்பு குறித்து தீர்மானிக்கும் உரிமை சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருக்கிறது.

ஆனால், 2015 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முன்பாக அளித்த உறுதிப்பாட்டின் மீது, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

இந்த தீர்மானம் குறித்த முரண்பாடுகளை தீர்ப்பதுடன், சிறுபான்மை தமிழ்மக்களை வென்றெடுப்பது மற்றும் அவர்களுக்கு நீதி வழங்குவது பற்றிய கேள்விக்கும் பதிலளிக்கப்பட வேண்டும்.

காணாமல்போனாருக்கான பணியகம் அமைக்கப்பட்டது உள்ளிட்ட சில முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெற்றன. ஆனால் அது பின்பற்றப்படுவதாக நான் நினைக்கவில்லை.

2015 ஆம் ஆண்டின் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் குறித்து அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.

நீடித்த சமாதானத்துக்கு நிலைமாறுகால மற்றும் நல்லிணக்கம் முக்கியமான அம்சமாகும், ஆனால் அதனை அரசாங்கம் தீவிரமாக பின்பற்றுவதை காணமுடியவில்லை.

சில மேற்கு நாடுகள் இதேபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன, அவை 2011 இல் இருந்து, கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை.

இன்னமும் குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன. 2015 ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசாங்கத்தால் விசாரணை செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க  முதலில் இரண்டு ஆண்டுகளும், பின்னர்,  இரண்டு ஆண்டு கால நீட்டிப்பும் கிடைத்தது.

இந்த விசாரணையின் மூலம், உண்மையில் மனித உரிமைகளை மீறியவர்களை நீதிக்கு முன்பாக கொண்டு வருவது, அனைத்துலக சட்டத்தை மதிக்கும் ஒரு நாடு என்ற வகையில், சிறிலங்காவுக்கு நல்லது.

புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரிப்பது மாத்திரமன்றி, புதிய அரசாங்கத்தின் கீழ் எல்லா போர்க்குற்ற விவகாரங்களும் விசாரிக்கப்பட வேண்டியது அவசியம்.

நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதியைப் பெறுவதற்கு ஒரு முழு அளவிலான செயல்முறை உள்ளது.  இது முதலில் தொடங்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, அந்த செயல்முறை தீவிரமாகவும், நேர்மையுடனும் செயற்படுத்தப்பட வேண்டும்.

தீவிரவாதத்தின் மீள் எழுச்சியைத் தடுக்க நல்லிணக்கம் அவசியமானது. ஆனால் சிறிலங்காவில் நல்லிணக்க செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை. நல்லிணக்கத்தை மேற்கொள்வதற்கான அரசியல் விருப்பம் இல்லாததே அதற்குக் காரணம்.

போர்க்குணத்தின் மீள்எழுச்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்திலிருந்து விடுபட 30 ஆண்டுகள் ஆனது.   இப்போது சிறிலங்கா, மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த  இன்னும் 30 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் அர்ப்பணிக்க  வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/09/04/news/39871

Link to comment
Share on other sites

14 minutes ago, nunavilan said:

நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதியைப் பெறுவதற்கு ஒரு முழு அளவிலான செயல்முறை உள்ளது.  இது முதலில் தொடங்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, அந்த செயல்முறை தீவிரமாகவும், நேர்மையுடனும் செயற்படுத்தப்பட வேண்டும்.

இந்த மேத்தா போன்ற ஆய்வாளர்கள் கூட இனப்படுகொலையாளிகளே.

ஒரு நாட்டின் முழுமையாயான வரலாற்றை இன உணர்வுகளை புரியாமல் வெறுமையாக ஒரு இராணுவ தீர்வு என்ற கோணத்தில் அணுகி, சிங்கள இனவழிப்பிற்கு உதவிய பின்னர் மீண்டும் இருப்பை நிலைநாட்ட எழுதுகிறார்கள். 

இந்திய அரசு செய்த தமிழர் படுகொலைகளை ஒப்புக்கொள்ளாமல் எழுத்துபவர்கள் வெறும் எழுத்துக்களுக்காகவே  !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.