Jump to content

முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் - நடிகர் தர்ஷன் வரவேற்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்து, ஈழத்தமிழர்கள் சிலர் எதிர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

முத்தையா முரளிதரன் தமிழராக இருந்த போதிலும், ஒருநாளும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக செயற்பட்டதில்லை எனவும், சிங்களவர்களுக்கு சாதகமாகவே அவர் செயற்பட்டுள்ளதாகவும் ஈழத் தமிழர்கள் சிலர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்களை கடந்த காலங்களில் பகிர்ந்து வந்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழர்கள் வசித்த பகுதிகளில் இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்திய தமிழர்களின் வாழ்விடத்தை அழித்ததாக கூறியுள்ள ஈழத் தமிழர்கள், இந்த சந்தர்ப்பத்திலும் முத்தையா முரளிதரன் சிங்களவர்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது சரியானதா என இலங்கை தமிழர்களிடம் நாம் வினவினோம்.

முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் - நடிகர் தர்ஷன் வரவேற்பு

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் நிர்ஷன் ராமானுஜத்திடம் பி.பி.சி தமிழ் வினவியது.

ஈழத்தமிழ் பிரச்சினையும், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக நடிக்கும் விஜய் சேதுபதியின் நிலைப்பாட்டையும் ஒன்றிணைத்து கருத்து வெளியிடுவது முற்றிலும் தவறான விடயம் என பிரபல ஊடகவியலாளரம் நிர்ஷன் இராமானுஜன் தெரிவித்தார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக்கும், ஈழத் தமிழர்களின் வாழ்க்கை முறைமைக்கும் இடையில் எந்தவித தொடர்புகளும் கிடையாது என சுட்டிக்காட்டிய அவர், முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை, விஜய் சேதுபதி ஒரு நடிகர் என்ற கோணத்திலிருந்து பார்த்து நடிப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் கூறினார்.

இந்த இரண்டு விடயங்களையும் ஒப்பிட்டு கோர்வையாக பார்வையிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் முன்பு காணப்பட்ட நிலைமை வேறு, தற்போது காணப்படுகின்ற நிலைமை வேறு என கூறிய நிர்ஷன் இராமானுஜம், நாட்டில் தற்போது அவ்வாறான சர்ச்சைக்குரிய நிலைமை கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் யுத்தம் இல்லாத பின்னணியில், நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தமிழர்களுக்கு சில பிரச்சனைகள் காணப்படுகின்ற நிலையில், அதனை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் - நடிகர் தர்ஷன் வரவேற்புபடத்தின் காப்புரிமை FACEBOOK

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் விஜய் சேதுபதியின் தீர்மானத்தை கைவிடும் பட்சத்தில் மாத்திரமே இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கப்படும் என எண்ணுவார்களாயின், அது முற்றிலும் தவறான விடயம் என பிரபல ஊடகவியலாளர் நிர்ஷன் ராமானுஜம் குறிப்பிடுகின்றார்.

விஜய் சேதுபதியின் துறைசார்ந்த விடயத்திற்கு அமைய, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது அவரது சரியான தீர்மானம் எனவும் இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் நிர்ஷன் ராமானுஜம் கூறுகின்றார்.

விஜய் சேதுபதியின் தீர்மானம் தொடர்பில் இலங்கையின் பிரபல தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ், பி.பி.சி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் - நடிகர் தர்ஷன் வரவேற்புபடத்தின் காப்புரிமை FACEBOOK

சிலர் தமது சட்டை பையை நிரப்பிக் கொள்வதற்காக சில பிரச்சினைகளை தூண்டி விடுவதாகவும், முத்தையா முரளிதரன் மற்றும் விஜய் சேதுபதி தொடர்பிலான பிரச்சினையும் அதில் ஒரு அங்கம் எனவும் இலங்கையின் பிரபல தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் கூறினார்.

விளையாட்டை விளையாட்டாகவும், கலையை கலையாகவும் பார்த்து ரசித்தால் எந்தவித பிரச்சினையும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைளிலுள்ள ஒரு தமிழனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தென்னிந்திய திரையுலகம் தயாராகியுள்ள நிலையில், அதனை தாம் வரவேற்பதாக தர்ஷன் தர்மராஜ் கூறுகின்றார்.

முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் - நடிகர் தர்ஷன் வரவேற்புபடத்தின் காப்புரிமை FACEBOOK

எவ்வாறான பிரச்சனைகள் வந்தாலும், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் விஜய் சேதுபதி நிச்சயம் நடிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என இலங்கையின் பிரபல தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் வேண்டுக்கோள் விடுக்கின்றார்.

முத்தையா முரளிதரனின் நிலைப்பாடு

தனது வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க மறுப்பது தொடர்பில் தனக்கு இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார்.

தனது வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் திட்டமிட்ட வகையில் எடுக்கப்படும் என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

விளையாட்டு, அரசியல் மற்றும் கலை ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்றாக முடிச்சு போட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எது எவ்வாறாயினும், திட்டமிட்ட வகையில் தனது வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள், எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49576574

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பிழம்பு said:

பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

 

கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்து, ஈழத்தமிழர்கள் சிலர் எதிர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

முத்தையா முரளிதரன் தமிழராக இருந்த போதிலும், ஒருநாளும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக செயற்பட்டதில்லை எனவும், சிங்களவர்களுக்கு சாதகமாகவே அவர் செயற்பட்டுள்ளதாகவும் ஈழத் தமிழர்கள் சிலர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்களை கடந்த காலங்களில் பகிர்ந்து வந்திருந்தனர்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழர்கள் வசித்த பகுதிகளில் இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்திய தமிழர்களின் வாழ்விடத்தை அழித்ததாக கூறியுள்ள ஈழத் தமிழர்கள், இந்த சந்தர்ப்பத்திலும் முத்தையா முரளிதரன் சிங்களவர்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது சரியானதா என இலங்கை தமிழர்களிடம் நாம் வினவினோம்.

முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் - நடிகர் தர்ஷன் வரவேற்பு

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் நிர்ஷன் ராமானுஜத்திடம் பி.பி.சி தமிழ் வினவியது.

ஈழத்தமிழ் பிரச்சினையும், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக நடிக்கும் விஜய் சேதுபதியின் நிலைப்பாட்டையும் ஒன்றிணைத்து கருத்து வெளியிடுவது முற்றிலும் தவறான விடயம் என பிரபல ஊடகவியலாளரம் நிர்ஷன் இராமானுஜன் தெரிவித்தார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக்கும், ஈழத் தமிழர்களின் வாழ்க்கை முறைமைக்கும் இடையில் எந்தவித தொடர்புகளும் கிடையாது என சுட்டிக்காட்டிய அவர், முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை, விஜய் சேதுபதி ஒரு நடிகர் என்ற கோணத்திலிருந்து பார்த்து நடிப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் கூறினார்.

இந்த இரண்டு விடயங்களையும் ஒப்பிட்டு கோர்வையாக பார்வையிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் முன்பு காணப்பட்ட நிலைமை வேறு, தற்போது காணப்படுகின்ற நிலைமை வேறு என கூறிய நிர்ஷன் இராமானுஜம், நாட்டில் தற்போது அவ்வாறான சர்ச்சைக்குரிய நிலைமை கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் யுத்தம் இல்லாத பின்னணியில், நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தமிழர்களுக்கு சில பிரச்சனைகள் காணப்படுகின்ற நிலையில், அதனை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் - நடிகர் தர்ஷன் வரவேற்புபடத்தின் காப்புரிமை FACEBOOK

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் விஜய் சேதுபதியின் தீர்மானத்தை கைவிடும் பட்சத்தில் மாத்திரமே இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கப்படும் என எண்ணுவார்களாயின், அது முற்றிலும் தவறான விடயம் என பிரபல ஊடகவியலாளர் நிர்ஷன் ராமானுஜம் குறிப்பிடுகின்றார்.

விஜய் சேதுபதியின் துறைசார்ந்த விடயத்திற்கு அமைய, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது அவரது சரியான தீர்மானம் எனவும் இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் நிர்ஷன் ராமானுஜம் கூறுகின்றார்.

விஜய் சேதுபதியின் தீர்மானம் தொடர்பில் இலங்கையின் பிரபல தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ், பி.பி.சி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் - நடிகர் தர்ஷன் வரவேற்புபடத்தின் காப்புரிமை FACEBOOK

சிலர் தமது சட்டை பையை நிரப்பிக் கொள்வதற்காக சில பிரச்சினைகளை தூண்டி விடுவதாகவும், முத்தையா முரளிதரன் மற்றும் விஜய் சேதுபதி தொடர்பிலான பிரச்சினையும் அதில் ஒரு அங்கம் எனவும் இலங்கையின் பிரபல தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் கூறினார்.

விளையாட்டை விளையாட்டாகவும், கலையை கலையாகவும் பார்த்து ரசித்தால் எந்தவித பிரச்சினையும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைளிலுள்ள ஒரு தமிழனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தென்னிந்திய திரையுலகம் தயாராகியுள்ள நிலையில், அதனை தாம் வரவேற்பதாக தர்ஷன் தர்மராஜ் கூறுகின்றார்.

முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் - நடிகர் தர்ஷன் வரவேற்புபடத்தின் காப்புரிமை FACEBOOK

எவ்வாறான பிரச்சனைகள் வந்தாலும், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் விஜய் சேதுபதி நிச்சயம் நடிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என இலங்கையின் பிரபல தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் வேண்டுக்கோள் விடுக்கின்றார்.

முத்தையா முரளிதரனின் நிலைப்பாடு

தனது வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க மறுப்பது தொடர்பில் தனக்கு இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார்.

தனது வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் திட்டமிட்ட வகையில் எடுக்கப்படும் என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

விளையாட்டு, அரசியல் மற்றும் கலை ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்றாக முடிச்சு போட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எது எவ்வாறாயினும், திட்டமிட்ட வகையில் தனது வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள், எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49576574

விளையாட்டு, அரசியல் மற்றும் கலை ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்றாக முடிச்சு போட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

கோமாளி படத்தில் வெட்டப்பட்ட காட்சிக்காவும் ஒரு எதிர்ப்பை முரளி விரைவில் தெரிவிப்பார் என் நம்பலாம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.