Jump to content

யாழ்ப்பாணக் கள்ளும், சீவல் தொழிலாளியும், வடையும்


Recommended Posts

பயணங்கள்  மேற்கொள்வதில் வல்லவர்களான  Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்று கள்ளையும், சீவல் தொழிலையும், வடையையும் ரசித்து புகழும் பயண ஒளித்தொகுப்பு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Luke & Sabrina  எமது பனங் கள்ளை ரசித்து குடிக்கும் போது....  பெருமையாகவும்,
அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லையே... என்று பொறாமையாகவும் இருந்தது. :grin:

வடை, கட்லட் போன்றவை செய்யும் இடமும் , தயாரிப்பவர்களும்   நல்ல துப்பரவாக இருந்ததில் மகிழ்ச்சி. 

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

Luke & Sabrina  எமது பனங் கள்ளை ரசித்து குடிக்கும் போது....  பெருமையாகவும்,
அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லையே... என்று பொறாமையாகவும் இருந்தது. :grin:

வடை, கட்லட் போன்றவை செய்யும் இடமும் , தயாரிப்பவர்களும்   நல்ல துப்பரவாக இருந்ததில் மகிழ்ச்சி. 

நுரை ததும்பும் பனங்கள்ளை பார்க்க ஆசையாக இருக்கின்றது. அதுவும் உடன் கள்ளு!

இந்த சீவல் தொழிலாளியின் முகத்தில் இருக்கும் சிரிப்பு வடிவாக இருக்கு. அவரின் முகம் புகைப்படங்களுக்கேயுரிய ஒரு முகம் (photogenic முகம்).

இதன் இரண்டாம் பாகத்துகாக காத்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் பாகத்தில் தென்னங்கள்ளையும் பார்க்க காத்திருக்கிறீங்களோ ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரருக்கு மீசை இல்லாததால வடித்து கொடுக்க வேண்டி இருக்கு.
நல்ல காணெளி இணைப்புக்கு நன்றி நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நுரை ததும்பும் பனங்கள்ளை பார்க்க ஆசையாக இருக்கின்றது. அதுவும் உடன் கள்ளு!

இந்த சீவல் தொழிலாளியின் முகத்தில் இருக்கும் சிரிப்பு வடிவாக இருக்கு. அவரின் முகம் புகைப்படங்களுக்கேயுரிய ஒரு முகம் (photogenic முகம்).

இதன் இரண்டாம் பாகத்துகாக காத்திருக்கின்றேன்.

 

அதிலும்... அந்தக் காணொயின், மூன்றாவது  நிமிடம் இருபதாவது வினாடியில் (3.20) 
"கழுகு  பார்வை"  எனப்படும் கோணத்தில்.... 
அந்த தொழிலாளியின், தலையில் இணைத்த... கமெரா மூலம்... எடுத்த,
ஒளிப் பதிவு... மிக அருமையானது, இது வரை,  யாரும் மேலே என்ன நடக்குது என்று... 
பார்க்காத விடயத்தை... ஒரு வெள்ளைக்காரன், சுலபமாக காட்டி விட்டான். 

அந்த தொழிலாளரின்,  வெள்ளந்தி... சிரிப்பும், 
வெள்ளைக்காரனின் அருமையான வர்ணனையும் மனதை  நெருடி விட்டது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து பேச்சு வழக்கு புரியவில்லை .. என்றாலும் சினிமா  பாடல் பாடுவதை புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது தோழர்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழத்து பேச்சு வழக்கு புரியவில்லை .. என்றாலும் சினிமா  பாடல் பாடுவதை புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது தோழர்..👌

தோழர் புரட்சி,    கள்ளுக் கொட்டிலில்.... பேசும் தமிழ், செந்தமிழ்    "வித்தியாசமானது"
அதனை... கள்ளு அடித்தவர்களால்  மட்டுமே... புரிந்து கொள்ள முடியும்... "சிப்ஸு " :grin:

உங்கள் காணொளியில்... கள்ளுக் கொட்டில்  எல்லாம்,
சீமெந்து  கட்டிடங்களாக வளர்த்து உள்ளதை.. பார்க்க சந்தோசமாய் இருக்கு.
அந்த... கள்ளு இருக்கும், நீல  கெமிக்கல் கொள்கலனை  பார்க்க, வயித்தை கலக்குது. 😨

Link to comment
Share on other sites

15 hours ago, நிழலி said:

பயணங்கள்  மேற்கொள்வதில் வல்லவர்களான  Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்று கள்ளையும், சீவல் தொழிலையும், வடையையும் ரசித்து புகழும் பயண ஒளித்தொகுப்பு.

 

Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்றது இருக்கட்டும். எங்களையும் அங்கு அழைத்துச் சென்று  வாயூறவைக்கும் பதிவைத்தந்த நிழலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!!

இன்றிரவு நித்திரை போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்றது இருக்கட்டும். எங்களையும் அங்கு அழைத்துச் சென்று  வாயூறவைக்கும் பதிவைத்தந்த நிழலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!!

இன்றிரவு நித்திரை போச்சு.

பாஞ்ச்  அண்ணை...  இந்த  ஒரு கிழமையில்.  🤩
அமெரிக்காவின்,  "அப்பாச்சி"   உலங்கு வான்  ஊர்தியையும்....  🤣
எங்கள் ஊர்...  "அம்மாச்சி"   கடையின்... வடையையும்,  பார்த்த சந்தோசத்தில்... 😍
எனக்கும்.. நித்திரை, வர மாட்டுது....  ஐயா.  :grin:
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடன் கள்ளு வாவ்......பனையாலை இறக்கினவுடனை அடிக்க வேணும்.அய்யொ கடவுளே வாய் ஊறுதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உடன் கள்ளு வாவ்......பனையாலை இறக்கினவுடனை அடிக்க வேணும்.அய்யொ கடவுளே வாய் ஊறுதே

வாங்களன் ஊருக்கு கள்ளடிக்க இங்க இப்ப (கிழக்கில்) தென்னங்கள்ளும் இறக்கிறதில்ல  யாழ்ப்பாண பக்கம் வந்தால் பனங்கள்ளாவது அடிக்கலாம் குடிக்கலாம் 

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

உடன் கள்ளு வாவ்......பனையாலை இறக்கினவுடனை அடிக்க வேணும்.அய்யொ கடவுளே வாய் ஊறுதே

கவலை வேண்டாம் சாமி அவர்களே! உங்கள் பரிமளாக்கா புதிய தொழிழ்நுட்ப முறையில் மரமேறும் பயிற்சி முடித்து வந்துள்ளார், உங்களை மரத்தின் வட்டுக்குள் ஏத்திப் பாளையில் வடியும் கள்ளைப் பானைக்குள் போகுமுன்பே சூப்பிக் குடிக்க வைத்துவிடுவார். அது பனையால் இறக்கிய கள்ளைவிடவும் சுவை அதிகமாக இருக்கும் என எண்ணுகிறேன். 🤣🤣

 climber-6.jpg

Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:

உங்களை மரத்தின் வட்டுக்குள் ஏத்திப் பாளையில் வடியும் கள்ளைப் பானைக்குள் போகுமுன்பே சூப்பிக் குடிக்க வைத்துவிடுவார். அது பனையால் இறக்கிய கள்ளைவிடவும் சுவை அதிகமாக இருக்கும் என எண்ணுகிறேன். 🤣🤣

 climber-6.jpg

இது பனங்கள்ளை பற்றி சொன்ன மாதிரி தோன்றவில்லை...

சசிவர்ணத்தின் திரியால் வந்த பாதிப்பு மாதிரி தெரியுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

உடன் கள்ளு வாவ்......பனையாலை இறக்கினவுடனை அடிக்க வேணும்.அய்யொ கடவுளே வாய் ஊறுதே

நொங்க‌ விட‌ க‌ள்ளின் சுவை சூப்ப‌ர் தாத்தா , 
என‌க்கு விஸ்கி விராண்டி விய‌ர் எல்லாம் பிடிக்காது ,

த‌மிழ் நாட்டில் போதை கூட‌னும் என்ற‌தால் க‌ள்ளுக்கை சுன்னாம்பை க‌ல‌ந்து குடிப்பின‌ம் ,  

நான் கேள்வி ப‌ட்ட‌ ம‌ட்டில் க‌ள்ளு உட‌ம்புக்கு ஆரோக்கிய‌மாம் , அது ச‌ரி தாத்தா நானும் நீங்க‌ளும் ப‌ண‌ ம‌ர‌த்துக்கு கீழ‌ இருந்து எப்ப‌ க‌ள்ளு அடிக்கிற‌து  😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாங்களன் ஊருக்கு கள்ளடிக்க இங்க இப்ப (கிழக்கில்) தென்னங்கள்ளும் இறக்கிறதில்ல  யாழ்ப்பாண பக்கம் வந்தால் பனங்கள்ளாவது அடிக்கலாம் குடிக்கலாம் 

ஏன் உங்கை தென்னங்கள்ளுக்கு என்ன நடந்தது?

12 hours ago, Paanch said:

கவலை வேண்டாம் சாமி அவர்களே! உங்கள் பரிமளாக்கா புதிய தொழிழ்நுட்ப முறையில் மரமேறும் பயிற்சி முடித்து வந்துள்ளார், உங்களை மரத்தின் வட்டுக்குள் ஏத்திப் பாளையில் வடியும் கள்ளைப் பானைக்குள் போகுமுன்பே சூப்பிக் குடிக்க வைத்துவிடுவார். அது பனையால் இறக்கிய கள்ளைவிடவும் சுவை அதிகமாக இருக்கும் என எண்ணுகிறேன். 🤣🤣

 climber-6.jpg

விட்டால் மீன் பொரியலும் வட்டுக்கை வரும் போலை கிடக்கு...🤣

2 hours ago, பையன்26 said:

நொங்க‌ விட‌ க‌ள்ளின் சுவை சூப்ப‌ர் தாத்தா , 
என‌க்கு விஸ்கி விராண்டி விய‌ர் எல்லாம் பிடிக்காது ,

த‌மிழ் நாட்டில் போதை கூட‌னும் என்ற‌தால் க‌ள்ளுக்கை சுன்னாம்பை க‌ல‌ந்து குடிப்பின‌ம் ,  

நான் கேள்வி ப‌ட்ட‌ ம‌ட்டில் க‌ள்ளு உட‌ம்புக்கு ஆரோக்கிய‌மாம் , அது ச‌ரி தாத்தா நானும் நீங்க‌ளும் ப‌ண‌ ம‌ர‌த்துக்கு கீழ‌ இருந்து எப்ப‌ க‌ள்ளு அடிக்கிற‌து  😁😂

கேரளாவுக்கு போய் அடிக்கிற பிளான் ஒண்டு இருக்கு.....பாப்பம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

 

கேரளாவுக்கு போய் அடிக்கிற பிளான் ஒண்டு இருக்கு.....பாப்பம் 😂

த‌மிழீழ‌ க‌ள்ளை போல் சுவையான‌ க‌ள்ளு இந்தியாவில் இல்லை தாத்தா , நிறைய‌ வித்தியாச‌ம் இருக்கு எங்க‌ட‌ நாட்டு க‌ள்ளுக்கும் அய‌ல் நாட்டு க‌ள்ளுக்கும் , முனிவ‌ர் உங்க‌ கூட‌ க‌ள்ளு குடிக்க‌னும் என்று ஆசை ப‌டுறார் கேர‌ளாவுக்கு போர‌தும் பார்க்க‌ ஊருக்கு போங்கோ , முனிவ‌ர் உங்க‌ளை வ‌டிவாய் க‌வ‌னிப்பார் 😁😂

தமிழ் நாட்டுக்கு போனால் அதிக‌ம் நொங்கு வேண்டி குடிப்பேன் , நொங்கும் பிடிச்சு போன‌ ஒன்று , போதை குடிவைக‌ளில் கொஞ்ச‌மும் நாட்ட‌ம் இல்லை 😉 , த‌மிழ் நாட்டுக்கு ஊருக்கு போனா க‌ள்ளு கொஞ்ச‌ம் குடிப்பேன் ந‌ட்பு வ‌ட்டார‌ங்க‌ளுட‌ன் 😁😂  , 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

 

கேரளாவுக்கு போய் அடிக்கிற பிளான் ஒண்டு இருக்கு.....பாப்பம் 😂

நான் அறிய அவர்களின் கள்ளை  குடித்த எம்மவருக்கு  நாலு நாள் தொடர்ந்து வயித்தால் அடிக்கும் ஒன்றாய் குடித்த மலையாளிகளுக்கு ஒன்றும் செய்யாது உங்களுக்கு புது பழக்கம் கவனம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பெருமாள் said:

நான் அறிய அவர்களின் கள்ளை  குடித்த எம்மவருக்கு  நாலு நாள் தொடர்ந்து வயித்தால் அடிக்கும் ஒன்றாய் குடித்த மலையாளிகளுக்கு ஒன்றும் செய்யாது உங்களுக்கு புது பழக்கம் கவனம் .

53 minutes ago, பையன்26 said:

த‌மிழீழ‌ க‌ள்ளை போல் சுவையான‌ க‌ள்ளு இந்தியாவில் இல்லை தாத்தா , நிறைய‌ வித்தியாச‌ம் இருக்கு எங்க‌ட‌ நாட்டு க‌ள்ளுக்கும் அய‌ல் நாட்டு க‌ள்ளுக்கும் , முனிவ‌ர் உங்க‌ கூட‌ க‌ள்ளு குடிக்க‌னும் என்று ஆசை ப‌டுறார் கேர‌ளாவுக்கு போர‌தும் பார்க்க‌ ஊருக்கு போங்கோ , முனிவ‌ர் உங்க‌ளை வ‌டிவாய் க‌வ‌னிப்பார் 😁😂

தமிழ் நாட்டுக்கு போனால் அதிக‌ம் நொங்கு வேண்டி குடிப்பேன் , நொங்கும் பிடிச்சு போன‌ ஒன்று , போதை குடிவைக‌ளில் கொஞ்ச‌மும் நாட்ட‌ம் இல்லை 😉 , த‌மிழ் நாட்டுக்கு ஊருக்கு போனா க‌ள்ளு கொஞ்ச‌ம் குடிப்பேன் ந‌ட்பு வ‌ட்டார‌ங்க‌ளுட‌ன் 😁😂  , 
 

 

அப்ப கனடா லண்டனிலை இருந்து கேரளா கள்ளு அடிக்கவெண்டு எங்கடை சனம் விழுந்தடிச்சு ஓடீனம்.பேஸ்புக்கிலை எல்லாம் படம் போடீனம்....ஒரு வேளை மலையாள குட்டியளோடை பறைஞ்சு களியாட்டம் பண்ணவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

 

அப்ப கனடா லண்டனிலை இருந்து கேரளா கள்ளு அடிக்கவெண்டு எங்கடை சனம் விழுந்தடிச்சு ஓடீனம்.பேஸ்புக்கிலை எல்லாம் படம் போடீனம்....ஒரு வேளை மலையாள குட்டியளோடை பறைஞ்சு களியாட்டம் பண்ணவோ?

அண்ணேய் எனக்கு தெரியாது எத்தனை பேருக்கு ஓடினது என்று  ஆனால் நம்ம ஊரு பனை அருவடை யாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் சொன்ன வயித்தியம் தான் கடைசியில் சரி வந்தது என்ன பெருன்சீரகத்து கொதிக்க வைத்த தண்ணி விடிகாலையில் கொடுக்கணும் கீழே அடைபட்டவுடன் நேரில் வந்து நன்றி சொல்லியவரை இன்னை வரைக்கும் காண முடியவில்லை .

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

ஏன் உங்கை தென்னங்கள்ளுக்கு என்ன நடந்தது?

விட்டால் மீன் பொரியலும் வட்டுக்கை வரும் போலை கிடக்கு...🤣

கேரளாவுக்கு போய் அடிக்கிற பிளான் ஒண்டு இருக்கு.....பாப்பம் 😂

கள்ளைக் குடித்தால் போதைவரும். 

கேரளக் கள்ளிகளைப் பார்த்தாலே போதைவரும் என்று யாரோ சொல்லியதைக்கேட்ட ஞாபகம்.

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

21 hours ago, நிழலி said:

இது பனங்கள்ளை பற்றி சொன்ன மாதிரி தோன்றவில்லை...

சசிவர்ணத்தின் திரியால் வந்த பாதிப்பு மாதிரி தெரியுது..

சசிவர்ணத்தின் எந்தத்திரியில் இது பற்றி எரிகிறது... காதலா, காமமா, மோகமா, போதையா அன்றிப் பக்தியா.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஏன் உங்கை தென்னங்கள்ளுக்கு என்ன நடந்தது?

எல்லாம் பொலிஸ் பிரச்சினையும் கள்ளு இறக்கவும் ஆட்கள் இல்லை அதாவது அந்த தொழிலை கைவிட்டுள்ளார்கள் 

 

11 hours ago, பையன்26 said:

த‌மிழீழ‌ க‌ள்ளை போல் சுவையான‌ க‌ள்ளு இந்தியாவில் இல்லை தாத்தா , நிறைய‌ வித்தியாச‌ம் இருக்கு எங்க‌ட‌ நாட்டு க‌ள்ளுக்கும் அய‌ல் நாட்டு க‌ள்ளுக்கும் , முனிவ‌ர் உங்க‌ கூட‌ க‌ள்ளு குடிக்க‌னும் என்று ஆசை ப‌டுறார் கேர‌ளாவுக்கு போர‌தும் பார்க்க‌ ஊருக்கு போங்கோ , முனிவ‌ர் உங்க‌ளை வ‌டிவாய் க‌வ‌னிப்பார் 😁😂

நானும் கூப்பிடுறன்  இந்த மனுசன் வருதில்லை பொடியா நான் வேற எந்த பொருளும் குடிப்பதில்லை ( மது வகைகள்) புகைப்பதுமில்லை ஆனால் குடிப்பவர்களுடன் சும்மா சந்தோஷமாக இருப்பேன் கம்பனிக்கு

அவர்கள் பூரணமான ஜானியாக ஆகும் போது பார்த்து ரசிப்பது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

 

நானும் கூப்பிடுறன்  இந்த மனுசன் வருதில்லை பொடியா நான் வேற எந்த பொருளும் குடிப்பதில்லை ( மது வகைகள்) புகைப்பதுமில்லை ஆனால் குடிப்பவர்களுடன் சும்மா சந்தோஷமாக இருப்பேன் கம்பனிக்கு

அவர்கள் பூரணமான ஜானியாக ஆகும் போது பார்த்து ரசிப்பது 

தாத்தா பொம்பிளை பிள்ளைய‌ல‌ விட‌ வெக்க‌ம் பிடிச்ச‌ ம‌னுச‌ன் முனிவா , ந‌ல்லூர் திருவிழாவுக்கு வ‌ருவார் அப்போது அமுக்கி பிடிச்சு ப‌னை ம‌ர‌ ப‌க்க‌ம் கூட்டிட்டு போங்கோ 😁😂/

நானும் உங்க‌ட‌ கேஸ் தான் , புகை பிடிப்ப‌து இல்லை , க‌ள்ளை த‌விற‌ வேறு ஒன்றும் அருந்துவ‌து இல்லை , க‌ள்ளும் சும்மா சுவைக்காண்டி குடிக்கிற‌து  த‌மிழ் நாட்டுக்கு ம‌ற்றும் த‌மிழீழ‌ம் போனால் , ம‌ற்ற‌ம் ப‌டி ஒன்றும் இல்லை 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னடாப்பா இங்க ஒரே குடிகாரா கூட்டமா கிடக்கு 😂😂😂

ஆனால் உடன் கள்ளு வெறிக்காதாமே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.