Jump to content

இன்று, ஆசிரியர் தினம். (05.09.2019)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

தாய், தந்தையருக்கு.... அடுத்த இடத்தில்  மதிக்கப் படுபவர்கள் ஆசிரியர்கள்.
இன்று நாம்... உலகத்தை புரிந்து கொள்ளவும்,  சமூகத்தில்  நல் மதிப்புள்ள மனிதராக வாழவும்...
அவர்கள் கற்றுத் தந்த படங்களே... வழி காட்டியாக உள்ளன.

எம்மை... இந்த நிலைக்கு, கொண்டு வந்த.. ஆசிரிய பெரு மக்களை, இந்த நாளில் நினைவு கூருவோம்.

உங்களுக்கும், ஆசிரியருக்கும் இடையில் நடந்த... சுவையான,  சம்பவங்களையும் எழுதுங்களேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் படிக்கும்போது சாதாரணமாக வகுப்பு எடுத்த ஆசிரியர்கள் பலர் பின்னாளில் அதே பாடசாலையில் அடுத்தடுத்து அதிபர்களாகி விட்டார்கள். அதனால் அங்கங்கே அவ்வப்போது  நடந்த நகைச்சுவையான சம்பவங்களை எழுத முடியாது தவிக்கிறேன்......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு வாத்தியார் தினம். வாழ்த்துக்கள் சொல்லணும். பலருக்கு.

நாமெல்லாம் மனுசரா இன்று உலாவுகின்றோம் என்றால்

எம்மை நல்வழிப்படுத்தியவர்கள் முதற்கொண்டு

இளம் வயதில் நாம் கொடுத்த இம்சைகளை சகித்துக்கொண்டவர்கள் வரை

நன்றி சொல்லணும்.


அந்தவைகையில்

நான் மகாவித்தியாலயத்தில் அதிவிசேட சித்திகளைப்பெற

என்னை தயாராக்கிய எமது சீதா ரீச்சர், (வர்த்தகம்)

தாமோதரம்பிள்ளை ஆசிரியர் (சங்கீதம்),

சிவகுரு ஆசிரியர் (தமிழ் சைவம்) ,

சண்முகநாதன் ஆசிரியர் (சமூக கல்வி),

மகேசுவரி ஆசிரியை (விஞ்ஞானம்), கணிதம் ஆங்கிலம் என அத்தனை பேரும்

இன்று என் கண்முன்னே வந்து போனார்கள்.


பின்னர் உயர்தரத்தில் பம்பலப்பிட்டிய இந்துவில்

C class என்றாலே குளப்படியாளர்களின் கூடாரம் என்பதை மாற்றி

நண்பனுக்கு நண்பனாக ஆசிரியனுக்கு ஆசிரியனாக

தேசவிரும்பிகளாக என்னை நல்வழிப்படுத்திய

கணக்கியலுக்கு கடவுளாக வந்து எம்மை கரை சேர்த்த Raja Master மற்றும்

Pure math Miss. Indu ரீச்சர், பொருளியல் Miss. மகேசுவரி ரீச்சர்,

வர்த்தகம் இந்திரயித் ஆசிரியர் என அத்தனை பேரும் இன்று என் கண்முன்னே வந்து போனார்கள்.

இவர்களில் வர்த்தகம் இந்திரயித் ஆசிரியர் அவர்கள்

இன்னொரு வடிவத்தில் மறக்கமுடியாதவர்.

வகுப்புக்கு வரும் போதெல்லாம்

குட் மோர்னிங் சொல்வாரோ இல்லையோ

Pungs புகையில வியாபாரமெல்லாம் எப்படி போகுது?

ஏனப்பா முருகனை கோவணத்தோட மலையில விட்டினீங்க? என

என்னை எனது ஊர்ப்பற்றாளனாக மாற்றியவர்.

எல்லோருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை அடுத்த மாதம் 6ம் திகதிதான் ஆசிரியர் தினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஆசிரியர்கள் நிறைய வேண்டும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.