Jump to content

‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணத்துக்கு... புதிய ரயில் சேவை ஆரம்பம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D.jpg

‘ஸ்ரீதேவி  இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை ஆரம்பம்.

‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்திற்கான புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எஸ் 13 பவர் மூலம் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் இயக்கப்படவுள்ளது.

இதேவேளைஇ ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ சேவையுடன் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைகள் 7 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஸ்ரீதேவி-இன்டர்சிட்டி-எ/

 

 

Link to comment
Share on other sites

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க எந்த விலை கொடுத்தாவது பல  நண்பர்கள்(நண்பர்களுக்கு துணையாக நானும்) முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க பல நண்பர்கள் முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

Bildergebnis für ஸà¯à®°à¯à®¤à¯à®µà®¿

 

இப்ப, மட்டும் என்னவாம்.... 
சரோஜாதேவி,  சாவித்திரி,   ஸ்ரீதேவி   ரசிகர்கள் இன்னும் இருக்கின்றார்கள். :)

ஆனால் ஒன்று... முந்தி மாதிரி,  ஓடும்...  ரயிலில் பாய்ந்து,
 "சீட்"   பிடிக்க முடியாத,   "கொண்டிஷனில்"  இருந்தாலும்,  :grin:
அவர்கள்,  "ஸ்ரீதேவி ரயிலில்"  💓....  "ரிக்கற்"  பதிவு பண்ணி,  
பயணம் செய்து, தமது ஆசையை.... தீர்த்துக் கொள்வார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது.

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க எந்த விலை கொடுத்தாவது பல  நண்பர்கள்(நண்பர்களுக்கு துணையாக நானும்) முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

இப்போதும் முண்டியடிப்பார்கள் தமிழர்கள் ரசிகர்கள் அல்லவா. ஆனாலும் துபாய்க்கு பயணம் போறவர்கள் அதில் ஏறக்கூடாது அது சிறீதேவிக்குப் பிடிக்காது. 😲

Link to comment
Share on other sites

48 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

3 அல்லது 4 மணித்தியால வேலைக்காக கொழும்பு செல்கின்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த சேவை இருக்க போகின்றது. கொழும்பில் 4 மணி நேரத்தில் முடியக் கூடிய வேலைக்கு கூட ஒரு நாளுக்கு மேல் அங்கு தங்கி இருக்க வேண்டி இருக்கு. அல்லது ஒரு நாளில் வேலை முடித்து திரும்பி வருவதெனில் ரூபா1500 இற்கு மேல் கொடுத்து ஒழுங்கான வசதிகளும் இல்லாத பேரூந்தில் ஏறி (சாரதியின் திமிர் பேச்சுகளையும் அடாவடித்தனமான போக்குகளையும் சகிச்சுக் கொண்டு) அதிகாலை கொழும்பில் இறங்கி எங்காவது தங்கி மதியம் வேலையை பார்த்து  மீண்டும் இரவு பயணித்து அடுத்த நாள் அதிகாலையில் தான் யாழ்ப்பாணம் சேர வேண்டி இருக்கும். இதனால் வீண் அலைச்சலும், நித்திரை குறைவும் ஏற்படுவதுடன் மோசமான விபத்துகளுக்கும் ஆளாகின்றனர்.

இந்த சேவையின் மூலம் 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஏறி 10:16 இற்கு கொழும்பில் இறங்கி அலுவலை முடித்துக் கொண்டு 3:45 இற்கு கொழும்புக்கு ஏறி இரவு 10:25 இற்கு ஊர் போய் இரவுச் சாப்பாட்டை வீட்டிலேயே முடிச்சுக் கொண்டு வந்த களைப்பு தீர படுக்க முடியும். 3:45 இனை தவர விட்டால் அடுத்த ரயில் 6 மணி அளவில் இருக்கு என்று நினைக்கின்றேன்.

கொழும்பு - யாழ் வீதிப் போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து பல மடங்கு பாதுகாப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

இந்த சேவையின் மூலம் 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஏறி 10:16 இற்கு கொழும்பில் இறங்கி அலுவலை முடித்துக் கொண்டு 3:45 இற்கு கொழும்புக்கு ஏறி இரவு 10:25 இற்கு ஊர் போய் இரவுச் சாப்பாட்டை வீட்டிலேயே முடிச்சுக் கொண்டு வந்த களைப்பு தீர படுக்க முடியும். 3:45 இனை தவர விட்டால் அடுத்த ரயில் 6 மணி அளவில் இருக்கு என்று நினைக்கின்றேன்.

இந்த தொடரூந்தில் ஏறவும் இறங்கவும் நிச்சயம் யாருடைய உதவி தேவை.

புதியவர்கள் தனியே போனால் அவலங்கள் காத்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த தொடரூந்தில் ஏறவும் இறங்கவும் நிச்சயம் யாருடைய உதவி தேவை.

புதியவர்கள் தனியே போனால் அவலங்கள் காத்திருக்கும்.

ஊருக்கு போகும் போது.... நமக்கென்று,  ஒரு சில உறவுகள் இருக்கும் தானே....
அவர்கள், எம்மை... ரயில் நிலையத்துக்கு வந்து, வரவேற்பார்கள் தானே...
அதுகும்... இல்லா விட்டால், ஊருக்கு போகும் ஆசையையே... வராது.

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

கொழும்பு - யாழ் வீதிப் போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து பல மடங்கு பாதுகாப்பானது.

உண்மைதான் பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால் பாதை கடப்பவர்களின் பாதுகாப்பு...??? முதலில் பாதுகாப்பான கடவைகளை நிர்மாணித்துவிட்டு எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் ஓட்டிச் சேவையை புரியட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதேவியின் விசிறி யாரோ.. சொறீலங்கா தொடருந்து துறையில் இருக்கினம் போல..

சிறீதேவியின் ரயில் பயணங்களில் இருந்து இந்த பயணத்தை எம்மவர்கள்.. இப்படி பாடி பாடி.. பயணிக்க வேண்டியான். அப்படியே.. இடையில... விபத்துகளில் மாணவர்களை... மாடுகளை பலியிட்டுப் பயணிக்க வேண்டியான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

‘ஸ்ரீதேவி  இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

Link to comment
Share on other sites

3 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

இப்படி கற்பனை கதைகளை கட்டி விடுவதில் எம்மவர் வல்லவர்.

41 minutes ago, குமாரசாமி said:

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

உங்களுக்கு சிறீதேவி எல்லாம் சரி வராது வேண்டும் என்கறால் சரோஜாதேவி என்று ஒரு புது சேவை தொடங்கலாம் 😁😁😁

5 hours ago, Paanch said:

உண்மைதான் பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால் பாதை கடப்பவர்களின் பாதுகாப்பு...??? முதலில் பாதுகாப்பான கடவைகளை நிர்மாணித்துவிட்டு எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் ஓட்டிச் சேவையை புரியட்டும். 

ஒழுங்காக பார்த்து கடந்தால் ஒரு பிரச்சினையும் வராது.

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

சிறீதேவியின் விசிறி யாரோ.. சொறீலங்கா தொடருந்து துறையில் இருக்கினம் போல..

சிறீதேவியின் ரயில் பயணங்களில் இருந்து இந்த பயணத்தை எம்மவர்கள்.. இப்படி பாடி பாடி.. பயணிக்க வேண்டியான். அப்படியே.. இடையில... விபத்துகளில் மாணவர்களை... மாடுகளை பலியிட்டுப் பயணிக்க வேண்டியான்.

 

சிங்களவனுக்கு சொறிலங்காவாது இருக்கு; எங்களுக்கு ஒரு பரப்பு நிலம் கூட இல்லை.அதே போல் சொறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியை பார்க்கும் போது அது நீண்டகாலம் சொறிலங்காவாக இராது.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?

அர்ஜுனா ரணதுங்கட கனவுக்கன்னியோ தெரியல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

 

உங்களுக்கு சிறீதேவி எல்லாம் சரி வராது வேண்டும் என்கறால் சரோஜாதேவி என்று ஒரு புது சேவை தொடங்கலாம் 😁😁😁

 

ஏன் நாங்கள் திரிஷா ரயில்,நயன்தாரா ரயில் பற்றி சிந்திக்கக்கூடாது? 😎

Link to comment
Share on other sites

நான் சொறிலங்கன்ட ட்ரைன்ல ஒருக்கா போனபிறகு போறதில்ல. அதுவும் இடைல ஒருதரம் அந்தப் பயணமும் எப்பிடி இருக்கு என்டு தெரிஞ்சுகொள்ள தான்.

ஒரே குலுக்கம். வசதி இல்லாத சீட்கள். தடிங் புடிங் ஊஊ என்டு ஒரே சத்தம்.  
நிறையபேர் பெரிய பொதிகளை தலைக்கு மேல ரக்ல வைச்சுட்டு படுறபாட்டை பாக்க நிம்மதியும் போய்டும். இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் எக்கச்சக்கம். நிறைய சிங்கள ராணுவக் காடையர்கள் கூட பயணிப்பது. இப்பிடி நிறைய பிரச்சினைகள்.

இரவு பஸ் பயணம் மிகமிக வசதியானது. சீட் வசதியானது. குலுக்கம் மிக குறைவு. சத்தம் மிக குறைவு. பொதிகள் பிரச்சினை இல்லை. இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் இல்லை. 7-8 மணிநேர பயணத்துல 5 மணிநேரமாவது நிம்மதியா நித்திரை கொள்ளலாம். வசதியான இடத்துல ஏறி, வசதியான இடத்துல இறங்கலாம். எல்லாத்துக்கும் மேல முயற்சி உள்ள சில தமிழனின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்னாலான மிகச்சிறு பங்களிப்பு என்ற திருப்பதி. இந்த பஸ்களில் பணிபுரியும் உதவியாளர்கள் பெரும்பாலும் பக்குவமற்றவர்கள் என்ற குறைபாடு இருந்தாலும் என்ன செய்வது நமது சகோதரன் தானே என்டு மனதைத் தேத்திக்கொள்வதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

சில வேளை சிறிலங்கா தேவி என்றால் ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள் என நினைத்து அரசாங்கம் ஶ்ரீ தேவி என பெயரை வச்சிருக்கலாம் தமிழ்ர்களும் ஶ்ரீ தேவி என்றால் வாயையும் சூ...... தையும் அடைக்கலாம் என நினைச்சிருக்கும் போல .

ஆனால் ஶ்ரீதேவியில் பலர் குந்தி போகத்தான் போறார்கள் ஐ மீன் பயணம் செய்யத்தான் போகிறார்கள் இதுக்குள்ள கதை வேற

1 hour ago, Rajesh said:

நான் சொறிலங்கன்ட ட்ரைன்ல ஒருக்கா போனபிறகு போறதில்ல. அதுவும் இடைல ஒருதரம் அந்தப் பயணமும் எப்பிடி இருக்கு என்டு தெரிஞ்சுகொள்ள தான்.

ஒரே குலுக்கம். வசதி இல்லாத சீட்கள். தடிங் புடிங் ஊஊ என்டு ஒரே சத்தம்.  
நிறையபேர் பெரிய பொதிகளை தலைக்கு மேல ரக்ல வைச்சுட்டு படுறபாட்டை பாக்க நிம்மதியும் போய்டும். இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் எக்கச்சக்கம். நிறைய சிங்கள ராணுவக் காடையர்கள் கூட பயணிப்பது. இப்பிடி நிறைய பிரச்சினைகள்.

இரவு பஸ் பயணம் மிகமிக வசதியானது. சீட் வசதியானது. குலுக்கம் மிக குறைவு. சத்தம் மிக குறைவு. பொதிகள் பிரச்சினை இல்லை. இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் இல்லை. 7-8 மணிநேர பயணத்துல 5 மணிநேரமாவது நிம்மதியா நித்திரை கொள்ளலாம். வசதியான இடத்துல ஏறி, வசதியான இடத்துல இறங்கலாம். எல்லாத்துக்கும் மேல முயற்சி உள்ள சில தமிழனின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்னாலான மிகச்சிறு பங்களிப்பு என்ற திருப்பதி. இந்த பஸ்களில் பணிபுரியும் உதவியாளர்கள் பெரும்பாலும் பக்குவமற்றவர்கள் என்ற குறைபாடு இருந்தாலும் என்ன செய்வது நமது சகோதரன் தானே என்டு மனதைத் தேத்திக்கொள்வதுண்டு.

இதை பலர் ஏற்றுக்கொள்வார்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் தற்போது நடக்கும் விபத்துக்களால் சிலர் பஸ்ஸில் போவதை தவிர்த்தே வருகிறார்கள்  எப்போதும் போட்டி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2019 at 3:00 PM, சுவைப்பிரியன் said:

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

 

 

பொதுவாகவே நகரப் புறம் தவிர்ந்த ஏனைய பகுதியில் இருக்கும் எம்  ஊர் மக்கள் இரவு 8 மணிக்கு முன் இரவுச் சாப்பாட்டை முடிச்சுக் கொண்டு 10 மணிக்கு முதல் படுக்கப் போகும் வழக்கத்தைக் கொண்டவர்கள். இதற்கு முக்கிய காரணங்கள் அடுத்த நாள் விடிய பாடசாலைக்கு போக வேண்டும், வேலைக்கு போக வேண்டும், தோட்டங்களுக்கு போக வேண்டும், கோயிலுக்கு போக வேண்டும் மற்றும் இன்னபிற விடிய வேலைகளுக்காக.. ஆனால் நகர்புறத்தில் இவை எல்லாம் கொஞ்சம் தாமதமாகவே இடம்பெறும்.

நான் கடந்து 3 வருடங்களாக தொடர்ந்து ஊர் போகின்றபடியால் அங்குள்ள இன்றைய வழக்கங்களை கொஞ்சம் அதிகமாக நுனிப்புல் மேய்ந்து இருக்கின்றேன். அப்படி மேய்ந்ததில் இரவு 9 மணிக்கும் யாழ் நகரப் பகுதி உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருந்ததை அவதானித்துள்ளேன்.  கொழும்பு - யாழ் பேரூந்து வண்டி சேவை கூட 9 மணிக்கு பின் தான் பயணிக்க தொடங்குகின்றது (பண்ணை வீதிக்கருகில் 7:30 இற்கே ஆரம்பித்து பின் யாழ் டவுனுக்கு வந்து அங்கிருக்கும் பயணிகளை ஏற்ற 9 மணிக்கும் மேலாகின்றது), அதுவரைக்கும் அனேகமான உணவு விடுதிகள் தொடக்கம் பலசரக்கு கடைகள் வரை திறந்து இருக்கின்றன. முச்சக்கர வண்டிகள் ஓடித் திரிகின்றன. மொபைல் போன்கள் திருத்தும் கடைகள் அப்ப தான் பூட்டத் தொடங்குகின்றன.

நான் யாழ்ப்பாணத்தில் கொத்து ரொட்டி வாங்க கடைக்கு போனது இரவு 8:30. சாராயக் கடையும் திறந்து இருந்தது (கொத்து சாப்பிட முதல் குடிக்க வேண்டும் அல்லவா), என்னை பார்த்து விட்டு சித்தியின் மகன போனது இரவு 10 மணிக்கு...

இப்படிச் சொல்வதால் அங்கு எந்த அச்சமும் அச்சுறுத்தல்களும் கள்ளர் பயமும் வாள்வெட்டு அபாயங்களும் இல்லை என்பதல்ல. எல்லாம் இருக்கின்றன். சனம் வீட்டு கேட்டினை 8 மணிக்கே பூட்ட தொடங்குகின்றனர்.. ஆனால் புலம்பெயர் தமிழ் மீடியாக்கள் ஊதிப் பெருப்பித்து காட்டும் பிம்பத்தை போல அல்ல யாழ்ப்பாணமும் அதனை சுற்றியுள்ள இடங்களும் (கிளிநொச்சியில் கூட இரவு 9 மணிவரைக்கும் உயிர்ப்புடன் இருப்பதாக அறிய முடிகின்றது).

இந்த வருடமும் ஊர் போக கிளம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

ஐயா,

முன்னமும் “பட பஸ்” என்று அர்தசாமத்தில் ஓடும் பஸ் இருந்ததுதானே?

நாம் பலர் 24/7 வாழக்கைக்கு பழகி விட்டு, ஊருக்குப் போனதும் ஊர் ஏதோ 7 மணிக்கே அடங்கி விடுவது போல ஒரு பிரமை ஏற்படுகிறது.

ஊரில் இப்போதும் மக்கள் சூரியனை பின்பற்றியே பெரிதும் தமது அலுவல்களை செய்கிறார்கள். 8 மணிக்கு அநேகமாக எல்லா வீடுகளிலும் சாப்பாடு ஆகிவிடும். இதுவே வெளிநாட்டில் எண்டால் 10 மணி.

நைற் சிப்ட் என்பது அங்கே மிக அரிதானது, எனவே 8 மணிக்கு அங்கே ஊரடங்குவது வழமையே. 

ஆனால், திருவிழாக்கள், பார்டிகள், இரவுக்காட்சிகள் எல்லாமும் இருக்கிறன.

இரவில் பயணம் செய்பவர்கள் அநேகமாக முன்கூட்டியே வீடு திரும்பும் ஏற்பாட்டுடனே வருகிறார்கள். 

இந்த ரெயிலில் போவோர்கூட, நாவற்குழி வர, தெரிஞ்ச ஓட்டோக்கு அல்லது நண்பனுக்கு ஒரு கோல் கொடுப்பர் - அவர்கள் ஸ்டேசனில் வந்து ஏற்றிக் கொள்வர்.

ஆனால் நிழலி சொன்னது போல இந்த சேவை - நல்லதொரு அம்சமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விடயம். 

நானறிந்த வரையில் வெளிநாடு வந்த எல்லோருமே செலவழிக்கும் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளோம். தேவையில்லாமல் டிவியை ஓட விடுவது, வாகனத்தை ஸ்டார்ட்டில் விடுவது, நடக்கும் தூரத்துக்கு வாகனம் எடுப்பது, மின் குமிழிகளை அநியாயமா எரிய விடுவது, பகலில் செய்ய கூடிய விடயங்களை ( பார்டி, சிறு நிகழ்வுகள்) இரவில் விளக்கொளியில் செய்வது இப்படி.

ஆனால், பல ஆடம்பரங்கள் வந்த பின்பும், நுண்கடன் தொல்லைகளுக்குள்ளும் மக்கள் பெரிதும் அங்கே இன்னமும் சிக்கனமாகவே வாழ்கிறார்கள். குறிப்பாக யாழில்.

திருமண வைபவங்கள், ரிசப்சன் கூட பகலில்தான். 

களவு இல்லை என்பதல்ல, ஆனால் அது ஒரு பூதாகாரமான பிரச்சினை அல்ல. 

மக்களின் இயல்பு நிலையே அப்படித்தான்.

அடுத்த முறை கிழக்குக்கு போனால், ஆடி அமாவாசை நேரம் மட்டகளப்புக்கு போங்கள்.

நகர், கல்லடி போன்ற இடங்களில் மாரி, காளி கோயில்கள் வருடாந்த பூசை, தீ மிதி என இரவிரவாக ஒரே அமர்களப்படும்.

அடுத்து மாமாங்க திருவிழா இராபவனி, கீரைப்புட்டு, கடைகள் என 2 கிழமை ஒரே கொண்டாட்டம்.

போன தடவை சூரன் போரன்று கசூரினா பீச்சில் இருந்து 7 மணிக்கு வெளிகிட்டேன், ஒவ்வொரு ஊரிலும் சூரனைப் பார்த்து, நண்பரின் சண்டிலிப்பாய் இல்லத்துக்கு வர 2 மணி நேரம் எடுத்தது. அவ்வளவு நெரிசல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2019 at 2:47 PM, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

நன்றி பிரியன் உங்கள் பதிலுக்கு.நான் வருடத்திற்க்கு 3 மாதம் மட்டில் ஊரில் நிற்ப்பவன்.அதனால் தான் உங்களின் கருத்து என்னை குடைந்து கொன்டிருந்தது.மற்றும் படி உங்களுடன் முரன்படும் நோக்கம் எனக்கு இல்லை. உங்களின் நிலைப்பாட்டுக்கு மேலை நிழழியும் கோசானும் பதில் கோடுத்திருக்கிறாகள்.அது தான எனது பதிலும்.மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.