Jump to content

‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணத்துக்கு... புதிய ரயில் சேவை ஆரம்பம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D.jpg

‘ஸ்ரீதேவி  இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை ஆரம்பம்.

‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்திற்கான புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எஸ் 13 பவர் மூலம் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் இயக்கப்படவுள்ளது.

இதேவேளைஇ ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ சேவையுடன் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைகள் 7 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஸ்ரீதேவி-இன்டர்சிட்டி-எ/

 

 

Link to comment
Share on other sites

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க எந்த விலை கொடுத்தாவது பல  நண்பர்கள்(நண்பர்களுக்கு துணையாக நானும்) முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க பல நண்பர்கள் முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

Bildergebnis für ஸà¯à®°à¯à®¤à¯à®µà®¿

 

இப்ப, மட்டும் என்னவாம்.... 
சரோஜாதேவி,  சாவித்திரி,   ஸ்ரீதேவி   ரசிகர்கள் இன்னும் இருக்கின்றார்கள். :)

ஆனால் ஒன்று... முந்தி மாதிரி,  ஓடும்...  ரயிலில் பாய்ந்து,
 "சீட்"   பிடிக்க முடியாத,   "கொண்டிஷனில்"  இருந்தாலும்,  :grin:
அவர்கள்,  "ஸ்ரீதேவி ரயிலில்"  💓....  "ரிக்கற்"  பதிவு பண்ணி,  
பயணம் செய்து, தமது ஆசையை.... தீர்த்துக் கொள்வார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது.

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க எந்த விலை கொடுத்தாவது பல  நண்பர்கள்(நண்பர்களுக்கு துணையாக நானும்) முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

இப்போதும் முண்டியடிப்பார்கள் தமிழர்கள் ரசிகர்கள் அல்லவா. ஆனாலும் துபாய்க்கு பயணம் போறவர்கள் அதில் ஏறக்கூடாது அது சிறீதேவிக்குப் பிடிக்காது. 😲

Link to comment
Share on other sites

48 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

3 அல்லது 4 மணித்தியால வேலைக்காக கொழும்பு செல்கின்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த சேவை இருக்க போகின்றது. கொழும்பில் 4 மணி நேரத்தில் முடியக் கூடிய வேலைக்கு கூட ஒரு நாளுக்கு மேல் அங்கு தங்கி இருக்க வேண்டி இருக்கு. அல்லது ஒரு நாளில் வேலை முடித்து திரும்பி வருவதெனில் ரூபா1500 இற்கு மேல் கொடுத்து ஒழுங்கான வசதிகளும் இல்லாத பேரூந்தில் ஏறி (சாரதியின் திமிர் பேச்சுகளையும் அடாவடித்தனமான போக்குகளையும் சகிச்சுக் கொண்டு) அதிகாலை கொழும்பில் இறங்கி எங்காவது தங்கி மதியம் வேலையை பார்த்து  மீண்டும் இரவு பயணித்து அடுத்த நாள் அதிகாலையில் தான் யாழ்ப்பாணம் சேர வேண்டி இருக்கும். இதனால் வீண் அலைச்சலும், நித்திரை குறைவும் ஏற்படுவதுடன் மோசமான விபத்துகளுக்கும் ஆளாகின்றனர்.

இந்த சேவையின் மூலம் 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஏறி 10:16 இற்கு கொழும்பில் இறங்கி அலுவலை முடித்துக் கொண்டு 3:45 இற்கு கொழும்புக்கு ஏறி இரவு 10:25 இற்கு ஊர் போய் இரவுச் சாப்பாட்டை வீட்டிலேயே முடிச்சுக் கொண்டு வந்த களைப்பு தீர படுக்க முடியும். 3:45 இனை தவர விட்டால் அடுத்த ரயில் 6 மணி அளவில் இருக்கு என்று நினைக்கின்றேன்.

கொழும்பு - யாழ் வீதிப் போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து பல மடங்கு பாதுகாப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

இந்த சேவையின் மூலம் 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஏறி 10:16 இற்கு கொழும்பில் இறங்கி அலுவலை முடித்துக் கொண்டு 3:45 இற்கு கொழும்புக்கு ஏறி இரவு 10:25 இற்கு ஊர் போய் இரவுச் சாப்பாட்டை வீட்டிலேயே முடிச்சுக் கொண்டு வந்த களைப்பு தீர படுக்க முடியும். 3:45 இனை தவர விட்டால் அடுத்த ரயில் 6 மணி அளவில் இருக்கு என்று நினைக்கின்றேன்.

இந்த தொடரூந்தில் ஏறவும் இறங்கவும் நிச்சயம் யாருடைய உதவி தேவை.

புதியவர்கள் தனியே போனால் அவலங்கள் காத்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த தொடரூந்தில் ஏறவும் இறங்கவும் நிச்சயம் யாருடைய உதவி தேவை.

புதியவர்கள் தனியே போனால் அவலங்கள் காத்திருக்கும்.

ஊருக்கு போகும் போது.... நமக்கென்று,  ஒரு சில உறவுகள் இருக்கும் தானே....
அவர்கள், எம்மை... ரயில் நிலையத்துக்கு வந்து, வரவேற்பார்கள் தானே...
அதுகும்... இல்லா விட்டால், ஊருக்கு போகும் ஆசையையே... வராது.

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

கொழும்பு - யாழ் வீதிப் போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து பல மடங்கு பாதுகாப்பானது.

உண்மைதான் பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால் பாதை கடப்பவர்களின் பாதுகாப்பு...??? முதலில் பாதுகாப்பான கடவைகளை நிர்மாணித்துவிட்டு எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் ஓட்டிச் சேவையை புரியட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதேவியின் விசிறி யாரோ.. சொறீலங்கா தொடருந்து துறையில் இருக்கினம் போல..

சிறீதேவியின் ரயில் பயணங்களில் இருந்து இந்த பயணத்தை எம்மவர்கள்.. இப்படி பாடி பாடி.. பயணிக்க வேண்டியான். அப்படியே.. இடையில... விபத்துகளில் மாணவர்களை... மாடுகளை பலியிட்டுப் பயணிக்க வேண்டியான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

‘ஸ்ரீதேவி  இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

Link to comment
Share on other sites

3 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

இப்படி கற்பனை கதைகளை கட்டி விடுவதில் எம்மவர் வல்லவர்.

41 minutes ago, குமாரசாமி said:

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

உங்களுக்கு சிறீதேவி எல்லாம் சரி வராது வேண்டும் என்கறால் சரோஜாதேவி என்று ஒரு புது சேவை தொடங்கலாம் 😁😁😁

5 hours ago, Paanch said:

உண்மைதான் பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால் பாதை கடப்பவர்களின் பாதுகாப்பு...??? முதலில் பாதுகாப்பான கடவைகளை நிர்மாணித்துவிட்டு எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் ஓட்டிச் சேவையை புரியட்டும். 

ஒழுங்காக பார்த்து கடந்தால் ஒரு பிரச்சினையும் வராது.

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

சிறீதேவியின் விசிறி யாரோ.. சொறீலங்கா தொடருந்து துறையில் இருக்கினம் போல..

சிறீதேவியின் ரயில் பயணங்களில் இருந்து இந்த பயணத்தை எம்மவர்கள்.. இப்படி பாடி பாடி.. பயணிக்க வேண்டியான். அப்படியே.. இடையில... விபத்துகளில் மாணவர்களை... மாடுகளை பலியிட்டுப் பயணிக்க வேண்டியான்.

 

சிங்களவனுக்கு சொறிலங்காவாது இருக்கு; எங்களுக்கு ஒரு பரப்பு நிலம் கூட இல்லை.அதே போல் சொறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியை பார்க்கும் போது அது நீண்டகாலம் சொறிலங்காவாக இராது.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?

அர்ஜுனா ரணதுங்கட கனவுக்கன்னியோ தெரியல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

 

உங்களுக்கு சிறீதேவி எல்லாம் சரி வராது வேண்டும் என்கறால் சரோஜாதேவி என்று ஒரு புது சேவை தொடங்கலாம் 😁😁😁

 

ஏன் நாங்கள் திரிஷா ரயில்,நயன்தாரா ரயில் பற்றி சிந்திக்கக்கூடாது? 😎

Link to comment
Share on other sites

நான் சொறிலங்கன்ட ட்ரைன்ல ஒருக்கா போனபிறகு போறதில்ல. அதுவும் இடைல ஒருதரம் அந்தப் பயணமும் எப்பிடி இருக்கு என்டு தெரிஞ்சுகொள்ள தான்.

ஒரே குலுக்கம். வசதி இல்லாத சீட்கள். தடிங் புடிங் ஊஊ என்டு ஒரே சத்தம்.  
நிறையபேர் பெரிய பொதிகளை தலைக்கு மேல ரக்ல வைச்சுட்டு படுறபாட்டை பாக்க நிம்மதியும் போய்டும். இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் எக்கச்சக்கம். நிறைய சிங்கள ராணுவக் காடையர்கள் கூட பயணிப்பது. இப்பிடி நிறைய பிரச்சினைகள்.

இரவு பஸ் பயணம் மிகமிக வசதியானது. சீட் வசதியானது. குலுக்கம் மிக குறைவு. சத்தம் மிக குறைவு. பொதிகள் பிரச்சினை இல்லை. இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் இல்லை. 7-8 மணிநேர பயணத்துல 5 மணிநேரமாவது நிம்மதியா நித்திரை கொள்ளலாம். வசதியான இடத்துல ஏறி, வசதியான இடத்துல இறங்கலாம். எல்லாத்துக்கும் மேல முயற்சி உள்ள சில தமிழனின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்னாலான மிகச்சிறு பங்களிப்பு என்ற திருப்பதி. இந்த பஸ்களில் பணிபுரியும் உதவியாளர்கள் பெரும்பாலும் பக்குவமற்றவர்கள் என்ற குறைபாடு இருந்தாலும் என்ன செய்வது நமது சகோதரன் தானே என்டு மனதைத் தேத்திக்கொள்வதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

சில வேளை சிறிலங்கா தேவி என்றால் ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள் என நினைத்து அரசாங்கம் ஶ்ரீ தேவி என பெயரை வச்சிருக்கலாம் தமிழ்ர்களும் ஶ்ரீ தேவி என்றால் வாயையும் சூ...... தையும் அடைக்கலாம் என நினைச்சிருக்கும் போல .

ஆனால் ஶ்ரீதேவியில் பலர் குந்தி போகத்தான் போறார்கள் ஐ மீன் பயணம் செய்யத்தான் போகிறார்கள் இதுக்குள்ள கதை வேற

1 hour ago, Rajesh said:

நான் சொறிலங்கன்ட ட்ரைன்ல ஒருக்கா போனபிறகு போறதில்ல. அதுவும் இடைல ஒருதரம் அந்தப் பயணமும் எப்பிடி இருக்கு என்டு தெரிஞ்சுகொள்ள தான்.

ஒரே குலுக்கம். வசதி இல்லாத சீட்கள். தடிங் புடிங் ஊஊ என்டு ஒரே சத்தம்.  
நிறையபேர் பெரிய பொதிகளை தலைக்கு மேல ரக்ல வைச்சுட்டு படுறபாட்டை பாக்க நிம்மதியும் போய்டும். இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் எக்கச்சக்கம். நிறைய சிங்கள ராணுவக் காடையர்கள் கூட பயணிப்பது. இப்பிடி நிறைய பிரச்சினைகள்.

இரவு பஸ் பயணம் மிகமிக வசதியானது. சீட் வசதியானது. குலுக்கம் மிக குறைவு. சத்தம் மிக குறைவு. பொதிகள் பிரச்சினை இல்லை. இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் இல்லை. 7-8 மணிநேர பயணத்துல 5 மணிநேரமாவது நிம்மதியா நித்திரை கொள்ளலாம். வசதியான இடத்துல ஏறி, வசதியான இடத்துல இறங்கலாம். எல்லாத்துக்கும் மேல முயற்சி உள்ள சில தமிழனின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்னாலான மிகச்சிறு பங்களிப்பு என்ற திருப்பதி. இந்த பஸ்களில் பணிபுரியும் உதவியாளர்கள் பெரும்பாலும் பக்குவமற்றவர்கள் என்ற குறைபாடு இருந்தாலும் என்ன செய்வது நமது சகோதரன் தானே என்டு மனதைத் தேத்திக்கொள்வதுண்டு.

இதை பலர் ஏற்றுக்கொள்வார்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் தற்போது நடக்கும் விபத்துக்களால் சிலர் பஸ்ஸில் போவதை தவிர்த்தே வருகிறார்கள்  எப்போதும் போட்டி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2019 at 3:00 PM, சுவைப்பிரியன் said:

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

 

 

பொதுவாகவே நகரப் புறம் தவிர்ந்த ஏனைய பகுதியில் இருக்கும் எம்  ஊர் மக்கள் இரவு 8 மணிக்கு முன் இரவுச் சாப்பாட்டை முடிச்சுக் கொண்டு 10 மணிக்கு முதல் படுக்கப் போகும் வழக்கத்தைக் கொண்டவர்கள். இதற்கு முக்கிய காரணங்கள் அடுத்த நாள் விடிய பாடசாலைக்கு போக வேண்டும், வேலைக்கு போக வேண்டும், தோட்டங்களுக்கு போக வேண்டும், கோயிலுக்கு போக வேண்டும் மற்றும் இன்னபிற விடிய வேலைகளுக்காக.. ஆனால் நகர்புறத்தில் இவை எல்லாம் கொஞ்சம் தாமதமாகவே இடம்பெறும்.

நான் கடந்து 3 வருடங்களாக தொடர்ந்து ஊர் போகின்றபடியால் அங்குள்ள இன்றைய வழக்கங்களை கொஞ்சம் அதிகமாக நுனிப்புல் மேய்ந்து இருக்கின்றேன். அப்படி மேய்ந்ததில் இரவு 9 மணிக்கும் யாழ் நகரப் பகுதி உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருந்ததை அவதானித்துள்ளேன்.  கொழும்பு - யாழ் பேரூந்து வண்டி சேவை கூட 9 மணிக்கு பின் தான் பயணிக்க தொடங்குகின்றது (பண்ணை வீதிக்கருகில் 7:30 இற்கே ஆரம்பித்து பின் யாழ் டவுனுக்கு வந்து அங்கிருக்கும் பயணிகளை ஏற்ற 9 மணிக்கும் மேலாகின்றது), அதுவரைக்கும் அனேகமான உணவு விடுதிகள் தொடக்கம் பலசரக்கு கடைகள் வரை திறந்து இருக்கின்றன. முச்சக்கர வண்டிகள் ஓடித் திரிகின்றன. மொபைல் போன்கள் திருத்தும் கடைகள் அப்ப தான் பூட்டத் தொடங்குகின்றன.

நான் யாழ்ப்பாணத்தில் கொத்து ரொட்டி வாங்க கடைக்கு போனது இரவு 8:30. சாராயக் கடையும் திறந்து இருந்தது (கொத்து சாப்பிட முதல் குடிக்க வேண்டும் அல்லவா), என்னை பார்த்து விட்டு சித்தியின் மகன போனது இரவு 10 மணிக்கு...

இப்படிச் சொல்வதால் அங்கு எந்த அச்சமும் அச்சுறுத்தல்களும் கள்ளர் பயமும் வாள்வெட்டு அபாயங்களும் இல்லை என்பதல்ல. எல்லாம் இருக்கின்றன். சனம் வீட்டு கேட்டினை 8 மணிக்கே பூட்ட தொடங்குகின்றனர்.. ஆனால் புலம்பெயர் தமிழ் மீடியாக்கள் ஊதிப் பெருப்பித்து காட்டும் பிம்பத்தை போல அல்ல யாழ்ப்பாணமும் அதனை சுற்றியுள்ள இடங்களும் (கிளிநொச்சியில் கூட இரவு 9 மணிவரைக்கும் உயிர்ப்புடன் இருப்பதாக அறிய முடிகின்றது).

இந்த வருடமும் ஊர் போக கிளம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

ஐயா,

முன்னமும் “பட பஸ்” என்று அர்தசாமத்தில் ஓடும் பஸ் இருந்ததுதானே?

நாம் பலர் 24/7 வாழக்கைக்கு பழகி விட்டு, ஊருக்குப் போனதும் ஊர் ஏதோ 7 மணிக்கே அடங்கி விடுவது போல ஒரு பிரமை ஏற்படுகிறது.

ஊரில் இப்போதும் மக்கள் சூரியனை பின்பற்றியே பெரிதும் தமது அலுவல்களை செய்கிறார்கள். 8 மணிக்கு அநேகமாக எல்லா வீடுகளிலும் சாப்பாடு ஆகிவிடும். இதுவே வெளிநாட்டில் எண்டால் 10 மணி.

நைற் சிப்ட் என்பது அங்கே மிக அரிதானது, எனவே 8 மணிக்கு அங்கே ஊரடங்குவது வழமையே. 

ஆனால், திருவிழாக்கள், பார்டிகள், இரவுக்காட்சிகள் எல்லாமும் இருக்கிறன.

இரவில் பயணம் செய்பவர்கள் அநேகமாக முன்கூட்டியே வீடு திரும்பும் ஏற்பாட்டுடனே வருகிறார்கள். 

இந்த ரெயிலில் போவோர்கூட, நாவற்குழி வர, தெரிஞ்ச ஓட்டோக்கு அல்லது நண்பனுக்கு ஒரு கோல் கொடுப்பர் - அவர்கள் ஸ்டேசனில் வந்து ஏற்றிக் கொள்வர்.

ஆனால் நிழலி சொன்னது போல இந்த சேவை - நல்லதொரு அம்சமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விடயம். 

நானறிந்த வரையில் வெளிநாடு வந்த எல்லோருமே செலவழிக்கும் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளோம். தேவையில்லாமல் டிவியை ஓட விடுவது, வாகனத்தை ஸ்டார்ட்டில் விடுவது, நடக்கும் தூரத்துக்கு வாகனம் எடுப்பது, மின் குமிழிகளை அநியாயமா எரிய விடுவது, பகலில் செய்ய கூடிய விடயங்களை ( பார்டி, சிறு நிகழ்வுகள்) இரவில் விளக்கொளியில் செய்வது இப்படி.

ஆனால், பல ஆடம்பரங்கள் வந்த பின்பும், நுண்கடன் தொல்லைகளுக்குள்ளும் மக்கள் பெரிதும் அங்கே இன்னமும் சிக்கனமாகவே வாழ்கிறார்கள். குறிப்பாக யாழில்.

திருமண வைபவங்கள், ரிசப்சன் கூட பகலில்தான். 

களவு இல்லை என்பதல்ல, ஆனால் அது ஒரு பூதாகாரமான பிரச்சினை அல்ல. 

மக்களின் இயல்பு நிலையே அப்படித்தான்.

அடுத்த முறை கிழக்குக்கு போனால், ஆடி அமாவாசை நேரம் மட்டகளப்புக்கு போங்கள்.

நகர், கல்லடி போன்ற இடங்களில் மாரி, காளி கோயில்கள் வருடாந்த பூசை, தீ மிதி என இரவிரவாக ஒரே அமர்களப்படும்.

அடுத்து மாமாங்க திருவிழா இராபவனி, கீரைப்புட்டு, கடைகள் என 2 கிழமை ஒரே கொண்டாட்டம்.

போன தடவை சூரன் போரன்று கசூரினா பீச்சில் இருந்து 7 மணிக்கு வெளிகிட்டேன், ஒவ்வொரு ஊரிலும் சூரனைப் பார்த்து, நண்பரின் சண்டிலிப்பாய் இல்லத்துக்கு வர 2 மணி நேரம் எடுத்தது. அவ்வளவு நெரிசல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2019 at 2:47 PM, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

நன்றி பிரியன் உங்கள் பதிலுக்கு.நான் வருடத்திற்க்கு 3 மாதம் மட்டில் ஊரில் நிற்ப்பவன்.அதனால் தான் உங்களின் கருத்து என்னை குடைந்து கொன்டிருந்தது.மற்றும் படி உங்களுடன் முரன்படும் நோக்கம் எனக்கு இல்லை. உங்களின் நிலைப்பாட்டுக்கு மேலை நிழழியும் கோசானும் பதில் கோடுத்திருக்கிறாகள்.அது தான எனது பதிலும்.மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.