Jump to content

புரொக்சி முருகன்


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் இப்ப குளிர்காலம் தொடங்கிவிட்டது ,சனி,ஞாயிறுகளில் வீட்டுக்குள்ளஅடைபட்டு இருக்கவேண்டிகிடக்கு.அன்று கதிரவன் உசாராக சூட்டை பரப்பிக்கொண்டிருந்தான்.அவன் சூடாக இருப்பதை உணர்ந்த நான் எம்பெருமான் சிட்னி முருகனை சென்று தரிசிக்க வெளிக்கிட்டேன்.வழமையாக கோடைகாலங்களில் மாலைநேரங்களில் தான்  சிட்னி முருகனை போய் சுகம் விசாரிக்கிறனான் மாலை நேரங்களில் அதிகமாக பிரசாதங்கள் கிடைக்கும் அதன் மூலம் பசிஅடங்காவிட்டால் முருகனின்ட ரெஸ்ரொரன்டில் எதாவது வாங்கி சாப்பிட்டு பசியை போக்கலாம். குளிர்காலத்தில அவனை போய் சந்திப்பது குறைவு எதாவது நொண்டி சாட்டை சொல்லி வீட்டுக்குள்ளே இருந்திடுவேன் ..

 

அன்று காலநிலை ஒரளவு நன்றாக இருந்தது இன்றைக்கும் சாட்டு சொன்னால் எம்பெருமான் கோவித்துக்கொள்வான் என்ற பயத்தில  அவனது கோட்டைக்கு சென்றேன்.

கார் கதவை திறந்து இறங்க முதல் ஒருத்தர்  அருகே ஒடிவந்தார்.

"கிடைச்சதோ"

ஒரு கணம் நான் திகைத்துவிட்டேன்,காசு கிடைச்சதோ அடி கிடைச்சதோ ,எது கிடைச்சது என கேட்கிறார் என முழிப்பதை அறிந்தவர்

"போஸ்ட் பொக்ஸுக்குள்ள ஒரு கடிதம் போட்டேன் கிடைச்சதோ"

"ஒம்மோம்  ..... அந்த மொட்டை கடிதமோ"

"யூ கான்ட் செ தட் ,இட் இஸ் பெட்டிசன்"

"நான் அதை மொட்டை கடிதமாத்தான் பார்க்கிறேன்"

"அப்ப உந்த கொமிட்டிக்காரங்கள் செய்யிறதெல்லாம் சரி என்று போட்டு சும்மா இருக்கப்போறீயளே"

"எனக்கும் கொமிட்டிக்காரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ட

டிலிங் எல்லாம் எம்பெருமான்  முருகனுடன் மட்டும் தான்"

"சும்மா இருக்கின்ற உங்களை மாதிரி ஆட்கள் வாக்குகளை எங்களுக்கு தந்தால் உந்த கொமிட்டிக்காரங்களுக்கு  ஒரு பாடம் படிப்பிக்கலாம்"

" நான் மெம்பர் இல்லை"

 "ஏன்டாப்பா பொய் சொல்லுகிறாய் உன்ட பெயர் மெம்பர்லிஸ்டில் இருக்கு நான் பார்த்து போட்டுத்தான் உன்னை மறிச்சனான்."

"நானில்லை மனிசி தான் மெம்பர் "

"அப்படியே அப்ப உன்னோட கதைச்சு பிரயோசன்மில்லை,அவளிட்ட கேட்கிறேன்"

"அண்ணே  குடும்பத்தில புடுங்குபாடுகளை உண்டாக்காமல் சும்மா விடுங்கோ"

"இதில என்ன புடுங்குபாடு இருக்கு"

"நீங்களும் உந்த கொமிட்டிகாரரும் செய்யிற அட்டாகாசம் ஊர் அறிந்த விடயம் இதுக்குள்ள என்ட மனிசியையும் அனுப்ப நான் தயாரில்லை"

சரி புதுசா என்ன திட்டம் கொண்டு வாறீயள் "

" எல்லாம் பழசுதான் கார் பார்க்,தேர்முட்டி கட்டுற விடயங்கள் தான்"

"என்ன ஒரு நூறு பேர் இருப்பியள் நீங்களே  உங்களுக்குள் கதைத்து ஒரு நல்ல முடிவு எடுக்கலாம் தானே,உந்த கார் பார்க் விடயம் ஐந்தாறு வ‌ருசம் இழுபடுதானே"

" இந்த முறை எப்படியும் ஒரு முடிவு எடுக்க வேணும் அது தான்proxyக்கு ஒடிதிரிகின்றேன் ,முப்பது சேர்த்து போட்டன் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் மற்ற கோஸ்டியை மட‌க்கி போடலாம்"

"சரி பின்னேரம் வீட்ட வாங்கோ வாங்கி தாரன்"

முருகனை வழிபட உள்ளே சென்றேன் வேலுடன் சாந்தசொருபமாக வீட்டிருந்தான் .முருகா உன்னை காக்க உன் பக்தர்கள் போட்டி போட்டு அடிபடுகிறார்கள் நீ என்னடா என்றால் "நான் உண்டு என் வேலையுண்டு" என்று இருக்கின்றாய் என புலம்பிகொண்டிருந்தேன்.

 

"டேய் லூசா நீயும் போய் அப்படி இருந்து பார் நிம்மதியாக இருக்கும்"

சொல்லுவது போல தனது வேலில் இருந்த அழகிய ரோஜா பூவை எனது காதில் வைத்தான்.

இதுக்கு பிறகும் முருகனுடன் வாக்குவாதப்பட மனம் இடம் கொடுக்கவில்லை சுற்றி கும்பிட்டுவிட்டு வெளியேறி

வெளி வீதியில் இறங்கி நடக்க தொடங்கினேன்.

பின் தோளில் ஒருவர் தட்டி

"இப்ப தான் நினைச்சனான் உம்மை சந்திக்க வேணும் என்று ,கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தது என இதைதான் சொல்லுறது,  முருகன் விடமாட்டான் அவ‌னின்ட விடயங்கள் தோல்விய‌டைய "

இவரை எனக்கு பெரிதாக பழக்கமில்லை இரண்டு மூன்று தடவை மற்றுமோர் ந‌ண்பரின் விருந்துபாசரத்தில் உட்சாக பாணம் அருந்தியதன் மூலம் பழக்கமானவர்.ஆங்கிலம் ,தமிழ் சிங்களம் எல்லாத்திலும் பாண்டித்தியம் பெற்றவர் அதுமட்டுமல்ல ஒர் பொறியியாளர்.

மற்றும் அரசியல் ,கிறிக்கட்,விளையாட்டு போன்ற செய்திகளும் ந‌ன்றாகவே அறிந்து வைத்திருப்பவர்.

" ஹலோ ! என்ன விடயமா என்னை சந்திக்க இருந்தீங்கள்?"

"உம்மட புரொக்சியை எனக்கு தரவேணும் உவங்களுக்கு ஒரு பாடம் படிபிக்க வேணும்"

" யாருக்கு "

"உந்த கோவில் கொமிட்டிக்காரங்களுக்கு"

நானும் ஒன்று தெரியாத மாதிரி

 "கோவில் நல்லாதானே நடக்குது, கொமிட்டிக்காரார் நல்லாத்தானே நடத்தினம்."

"நீர் எங்க இருக்கிறீர் ஐசெ,உந்த கார் பார்க்கும்,தேர்முட்டியும் கட்டுறதிலதான்  பிரச்சனை"

" முருகனிட்ட இடம் இருக்கு ,பணம்  இருக்கு சந்தோசமா கட்டிமுடிக்கலாம் தானே"

"மற்ற கோஸ்டி 200 கார்விடக்கூடிய மாதிரிதான் பிளான் வைச்சிருக்கினம்,எங்கன்டஆட்களின்ட பிளான்படி 225 கார் விடலாம்"

"என்ன 25 கார் விடுகிறதில தான் பிரச்சனையே"

"அதுமட்டுமல்ல உந்த புரஜக்ட் எங்கன்ட ஆட்கள் தலைவராகவும் செயலாளராகவும் இருக்கும் பொழுது தான் தொடங்கி வைச்சவயள்,அதை நாங்கள் தானே முடிச்சு வைக்க வேணும் "

"ஒரு பொது நோக்கோடு செய்கிற காரியத்தை யார் தொடக்கினால் என்ன முடிச்சால் என்ன"

" "நீர் என்ன ஐசே சிம்பிளா சொல்லிபோட்டிர்,நோங்கு குடிக்கிறது ஒருத்தன் விரல் சூப்பிறது இன்னோருத்தனே,அவையள் தேர்முட்டியை கிழக்கில் கட்டவேணும் என்டிச்சினம் நாங்கள் எதிர்த்து வடக்கில் கட்ட வேணும் என்று சொல்லி போட்டம் "

"அப்படியே சங்கதி"

" நான் முப்பது புரோக்சி சேர்த்திட்டன் உம்மடைய தாரும்"

"உமக்கு தந்திருப்பன் கோவிலுக்கு வரும் பொழுது கணேசர் கேட்டவர் ஒம் என்று சொல்லி போட்டன் ,அவர் உம்மட கோஸ்டி தானே"

"ஐயோ அந்த கிழவனிட்டயே கொடுத்தனீர் அந்தாள் மற்ற கோஸ்டி,

அடுத்த முறை உம்மட புரோக்சியை  எனக்கு தாரும் இப்பவே சொல்லி வைச்சிட்டன்"

அடுத்த முறை உமக்குத்தான் என்று சொல்லி போட்டுவிடைபெற்றேன்,அவர் நினைச்சுகொண்டு திரிவார் அடுத்த முறை என்ட புரோக்சி அவருக்கு என்று ,ஆனால் ஆளுக்கு தெரியாது நான் மெம்பர் இல்லை என்ற செய்தி.

காரில் ஏறி சிடியை அழுத்தினேன்

"நீ அல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் இல்லம்"

 

சீர்காழியின் குரல் காதில் வந்து ஒலித்தது.

வீட்டு டிரைவேயில் கணேசரின்ட கார் நின்றது ,

" நீங்கள் பின்னேரம் வருவீங்கள் என்று நினைச்சேன் "

"உன்னட்ட புரோக்சி இல்லை என்றவுடனே நான் உசாராகிட்டேன்,கோவில் வேறு யாரும் கேட்டு எடுத்து விடுவாங்கள் என்று நேராக உன்ட வீட்டை வந்திட்டன்"

"எடுத்திட்டிங்களே"

" உன்ட மனிசி  என்னை போல உசாரடா டெலிபோனில் கதைச்சே நாலு புரோக்சி எடுத்து தந்திட்டாள் ,பிள்ளை தாங்க்ஸ் அடுத்த முறையும் எனக்கு எடுத்து தா,நான் போயிட்டு வாரன் எமது வெற்றியை நாளைய தேர்தல் சொல்லும் "என பாட்டு பாடியபடியே சென்றார்

"சரி அண்ணே பிறகு சந்திப்போம் "

"ஏன்னப்பா தேவையில்லாத வேலை பார்த்தனீர் பேசாமல் உம்மட புரோக்சியை மட்டும் கொடுத்திருக்கலாமே"

" அவையள் கார் பார்க் கட்டுறது நல்ல விடயம் தானே"

" "இப்ப நாலைந்து வருசமா கட்டினம்  நீங்களும் பார்த்து கொண்டு இருங்கோ ....தங்களுடைய  BMW,Benz, போன்றவைக்கு தரிப்பிடம் கட்டுறதில் மட்டும்  இழுபறிபடவில்லை முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணிற இடம் ட்டுறதிலும் இழுபறியாம்"

"உங்களுக்கு"

"அடுத்த முறை புரோக்சி முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணும் விடயத்தில் தான் இருந்து பாரும்"

 

அன்னதான கந்தன்,அலங்கார கந்தன் இந்த ரிசையில் சிட்னிவாழ் பக்தர்கள், முருகா உன்னை புரொக்சி முருகன் என வெகுவிரைவில் அழைக்க தொடங்கி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் வச்சு செய்திட்டான், பேசாமல் வீட்டிலேயே படுத்திருந்திருக்கலாம்.........!   😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் பார்க்கும்,தேர் முட்டியும் கட்டுற நேரம் ஒரு வயோதிபமடம் கட்டலாமோ எண்டு ஒருக்கால்  அப்பன் முருகனிட்டை கேட்டுப்பாருங்கோ :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வருமானம் எதுவும் கிடைக்காத பொது விடயங்களில் நேரத்தை ஏன் தமிழர்கள் வீணடிக்கின்றார்கள் என்று தெரியவில்லை!  வெறும் புகழ் மட்டும் இருக்காது. எப்படியும் ஊழல்கள் செய்வார்கள் என்று புரொக்ஸி முருகனுக்கும் தெரியும்! ஆனால் தனது வெகிக்கிள் பார்க்கிங் கிடைக்கவேண்டும் என்று பொத்திக்கொண்டு இருப்பார்😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு உள்ள கோயிலிலும்.... இரண்டு கோஷ்ட்டிகள்  இருந்து கொண்டு,
இரண்டு பகுதியும்.. புடுங்கு படுவதை பார்த்து... வெறுப்பில்,
கோவில் பக்கம், போவதையே... குறைத்து விட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2019 at 6:52 PM, suvy said:

முருகன் வச்சு செய்திட்டான், பேசாமல் வீட்டிலேயே படுத்திருந்திருக்கலாம்.........!   😂 

அவர் உப்படியான சேட்டைகள் என்னோடு விட்டு பார்க்கிறவர் ,நானோ விக்கிரமாதித்தன் மாதிரி மீண்டும் மீண்டும் அவரின்ட காலடியில் போய் விழுந்திடுவன்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2019 at 9:24 AM, குமாரசாமி said:

கார் பார்க்கும்,தேர் முட்டியும் கட்டுற நேரம் ஒரு வயோதிபமடம் கட்டலாமோ எண்டு ஒருக்கால்  அப்பன் முருகனிட்டை கேட்டுப்பாருங்கோ :cool:

 

அப்பன் முருகன் எல்லாத்துக்கும் ஒகே,ஆனால் அவரின்ட தொண்டர்மார் தான் பிரச்சனை,பெயர்ப்பலகையில் தங்கட பெயர் இடம்பெறவேண்டும் என்று முருகனின்ட சில திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுறவையள் ஆனால் முருகன் சுழிச்சு வெட்டி ஒடிக்கொண்டு வாரான்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2019 at 4:27 PM, கிருபன் said:

 வருமானம் எதுவும் கிடைக்காத பொது விடயங்களில் நேரத்தை ஏன் தமிழர்கள் வீணடிக்கின்றார்கள் என்று தெரியவில்லை!  வெறும் புகழ் மட்டும் இருக்காது. எப்படியும் ஊழல்கள் செய்வார்கள் என்று புரொக்ஸி முருகனுக்கும் தெரியும்! 

On 9/7/2019 at 4:27 PM, கிருபன் said:

 

On 9/7/2019 at 4:27 PM, கிருபன் said:

ஆனால் தனது வெகிக்கிள் பார்க்கிங் கிடைக்கவேண்டும் என்று பொத்திக்கொண்டு இருப்பார்

 

 

ஊழல் என்று சொல்லமுடியாது ,தொண்டர்கள் பணவசதி படைத்தவர்கள் ,கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்கும் தொண்டர்கள்.....எல்லாத்தைய்ம் தாங்கள் தான் செய்யவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள்....இளய சமுதாயத்திற்க்கு விட்டு கொடுப்பதற்கே தயங்குகிறார்கள்.

அவன் ஒருத்தன் தான் தன்னுடைய வெயிக்கிளை ஊரில இருந்து இறக்குமதி செய்து ஒடுகிறான்,மற்றவையள் எல்லாம் வெளிநாட்டு வாகனம் வைச்சிருக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2019 at 5:12 PM, தமிழ் சிறி said:

இங்கு உள்ள கோயிலிலும்.... இரண்டு கோஷ்ட்டிகள்  இருந்து கொண்டு,
இரண்டு பகுதியும்.. புடுங்கு படுவதை பார்த்து... வெறுப்பில்,
கோவில் பக்கம், போவதையே... குறைத்து விட்டேன். 

சீ சீ..... புடுங்குபாடு நடக்குது என்று நாங்கள் ஒதுங்கினால் வேறு ஆள்கள் குடிபுகுந்துவிடுவாங்கள்.....சோ ...இவையளின்ட புடுங்குபாடு எங்களுக்கு தெரியும் என்று சொல்லிகொண்டு நாங்கள் போய்வரவேண்டும்.....பக்தி என்ற பெயரில் அடுத்த தலைமுறை கொஞ்சம் தமிழ்கற்றுகொள்ள வசதியாக இருக்கும்....இந்த கோவில்கள் ஒழுங்காக நடந்தால்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலங்களின் பின்னர்....புத்தனின் கதையை வாசித்த திருப்தி...!

இந்த ஆக்களின்ர கோதாரியால தான் .....நான் இவையளின்ர கண்ணிலை படாமல் முருகனிட்டைப் போக வேண்டி வந்தது..!

ஒரு கொட்டிலில குந்திக்கொண்டிருந்த முருகன்...இப்ப கோபுரக் கலசங்களோட குந்தியிருக்கிறார்!

சத்தியமாய்....அவர் மேல எனக்குப் பொறாமையில்லை!

ஆனால் அவர் கொட்டிலில குந்திக்கொண்டிருக்கேக்க இருந்த வழிபாட்டுத் திருப்தி....இப்ப நிச்சயமாய் இல்லை என்று தான் சொல்லுவன்!

தொடர்ந்தும் உங்கள் கிறுக்கல்களை எதிர்பார்க்கின்றோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2019 at 5:56 PM, புங்கையூரன் said:

நீண்ட காலங்களின் பின்னர்....புத்தனின் கதையை வாசித்த திருப்தி...!

இந்த ஆக்களின்ர கோதாரியால தான் .....நான் இவையளின்ர கண்ணிலை படாமல் முருகனிட்டைப் போக வேண்டி வந்தது..!

ஒரு கொட்டிலில குந்திக்கொண்டிருந்த முருகன்...இப்ப கோபுரக் கலசங்களோட குந்தியிருக்கிறார்!

சத்தியமாய்....அவர் மேல எனக்குப் பொறாமையில்லை!

ஆனால் அவர் கொட்டிலில குந்திக்கொண்டிருக்கேக்க இருந்த வழிபாட்டுத் திருப்தி....இப்ப நிச்சயமாய் இல்லை என்று தான் சொல்லுவன்!

தொடர்ந்தும் உங்கள் கிறுக்கல்களை எதிர்பார்க்கின்றோம்!

20 வருடங்களுக்கு முன்பு கதிர்காம கந்தனிட்ட போன போது இருந்த திருப்தி இப்ப இல்லை ,முருகனும் பாவம் என்ன செய்வான் எத்தனை என்று கவனிக்கிறது,.சிங்களவனோட உறவை வைத்தால் கொஞ்சம் கெத்தா இருக்கலாம் என்று நினைச்சிட்டான்....
அதை பார்த்த நம்ம சிட்னி முருகனும் , இப்ப "மல்டிகல்சரை "பயங்கரமா பின்பற்ற தொடங்கிட்டான் .

பை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில்  நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட  நடவடிக்கையில் இறங்கிட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, putthan said:

20 வருடங்களுக்கு முன்பு கதிர்காம கந்தனிட்ட போன போது இருந்த திருப்தி இப்ப இல்லை ,முருகனும் பாவம் என்ன செய்வான் எத்தனை என்று கவனிக்கிறது,.சிங்களவனோட உறவை வைத்தால் கொஞ்சம் கெத்தா இருக்கலாம் என்று நினைச்சிட்டான்....
அதை பார்த்த நம்ம சிட்னி முருகனும் , இப்ப "மல்டிகல்சரை "பயங்கரமா பின்பற்ற தொடங்கிட்டான் .

பை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில்  நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட  நடவடிக்கையில் இறங்கிட்டான்.

மிகவும் நல்ல செய்தி....!

அந்தக் கோவிலாவது....இந்துக்கோவிலாக அன்றி.....சைவைக் கோவிலாக இருக்கும் என்னும் நம்பிக்கை என்னிடம் நிறையவே உண்டு...புத்தன்!

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/11/2019 at 9:02 AM, putthan said:

பை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில்  நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட  நடவடிக்கையில் இறங்கிட்டான்

அங்கையும் தலைவர்,உபதலைவர் பொருளாளர் எல்லாரும் இருப்பினம் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 9/12/2019 at 12:34 PM, புங்கையூரன் said:

மிகவும் நல்ல செய்தி....!

அந்தக் கோவிலாவது....இந்துக்கோவிலாக அன்றி.....சைவைக் கோவிலாக இருக்கும் என்னும் நம்பிக்கை என்னிடம் நிறையவே உண்டு...புத்தன்!

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி...!

இந்து கோவிலாக தான் மாறும் ,தவிர்க்க முடியாத காரணங்களால்....இந்து என்ற அடையாளத்தை நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்று கொண்டு விட்டோம்....பஞ்சபுராணம் மட்டும் தமிழில் பாடும் நிலை இப்பொழுது இருக்கின்றது ...வட இந்தியர்களின் மத்தியில் முருகனுக்கும்,வினாயக்ருக்கும் தமிழில் பஞ்சபுராணமாவது பாடும் நிலை கிடைத்துள்ளது என் மகிழ்ச்சியடையத்தான் இருக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அங்கையும் தலைவர்,உபதலைவர் பொருளாளர் எல்லாரும் இருப்பினம் தானே?

இன்னும் உசாராக தொடங்கவில்லை ,இரண்டு வருடத்தில வந்திடுவினம் .....அந்த நகரில் சிட்னி போன்று சனம் இல்லை ....ஆகவே புடுங்குபாடுகள் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தா கீரைக்கடைக்கும் எதிர்க் கடை இருந்தா தான் வியாபாரம் சரியாக ஓடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இன்னும் உசாராக தொடங்கவில்லை ,இரண்டு வருடத்தில வந்திடுவினம் .....அந்த நகரில் சிட்னி போன்று சனம் இல்லை ....ஆகவே புடுங்குபாடுகள் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன்

எண்டாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எண்டதை உண்மையாக்காமல் விடமாட்டினம்.அது சந்திரமண்டலமாக இருந்தாலும் சரி..😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.