Jump to content

புரொக்சி முருகன்


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் இப்ப குளிர்காலம் தொடங்கிவிட்டது ,சனி,ஞாயிறுகளில் வீட்டுக்குள்ளஅடைபட்டு இருக்கவேண்டிகிடக்கு.அன்று கதிரவன் உசாராக சூட்டை பரப்பிக்கொண்டிருந்தான்.அவன் சூடாக இருப்பதை உணர்ந்த நான் எம்பெருமான் சிட்னி முருகனை சென்று தரிசிக்க வெளிக்கிட்டேன்.வழமையாக கோடைகாலங்களில் மாலைநேரங்களில் தான்  சிட்னி முருகனை போய் சுகம் விசாரிக்கிறனான் மாலை நேரங்களில் அதிகமாக பிரசாதங்கள் கிடைக்கும் அதன் மூலம் பசிஅடங்காவிட்டால் முருகனின்ட ரெஸ்ரொரன்டில் எதாவது வாங்கி சாப்பிட்டு பசியை போக்கலாம். குளிர்காலத்தில அவனை போய் சந்திப்பது குறைவு எதாவது நொண்டி சாட்டை சொல்லி வீட்டுக்குள்ளே இருந்திடுவேன் ..

 

அன்று காலநிலை ஒரளவு நன்றாக இருந்தது இன்றைக்கும் சாட்டு சொன்னால் எம்பெருமான் கோவித்துக்கொள்வான் என்ற பயத்தில  அவனது கோட்டைக்கு சென்றேன்.

கார் கதவை திறந்து இறங்க முதல் ஒருத்தர்  அருகே ஒடிவந்தார்.

"கிடைச்சதோ"

ஒரு கணம் நான் திகைத்துவிட்டேன்,காசு கிடைச்சதோ அடி கிடைச்சதோ ,எது கிடைச்சது என கேட்கிறார் என முழிப்பதை அறிந்தவர்

"போஸ்ட் பொக்ஸுக்குள்ள ஒரு கடிதம் போட்டேன் கிடைச்சதோ"

"ஒம்மோம்  ..... அந்த மொட்டை கடிதமோ"

"யூ கான்ட் செ தட் ,இட் இஸ் பெட்டிசன்"

"நான் அதை மொட்டை கடிதமாத்தான் பார்க்கிறேன்"

"அப்ப உந்த கொமிட்டிக்காரங்கள் செய்யிறதெல்லாம் சரி என்று போட்டு சும்மா இருக்கப்போறீயளே"

"எனக்கும் கொமிட்டிக்காரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ட

டிலிங் எல்லாம் எம்பெருமான்  முருகனுடன் மட்டும் தான்"

"சும்மா இருக்கின்ற உங்களை மாதிரி ஆட்கள் வாக்குகளை எங்களுக்கு தந்தால் உந்த கொமிட்டிக்காரங்களுக்கு  ஒரு பாடம் படிப்பிக்கலாம்"

" நான் மெம்பர் இல்லை"

 "ஏன்டாப்பா பொய் சொல்லுகிறாய் உன்ட பெயர் மெம்பர்லிஸ்டில் இருக்கு நான் பார்த்து போட்டுத்தான் உன்னை மறிச்சனான்."

"நானில்லை மனிசி தான் மெம்பர் "

"அப்படியே அப்ப உன்னோட கதைச்சு பிரயோசன்மில்லை,அவளிட்ட கேட்கிறேன்"

"அண்ணே  குடும்பத்தில புடுங்குபாடுகளை உண்டாக்காமல் சும்மா விடுங்கோ"

"இதில என்ன புடுங்குபாடு இருக்கு"

"நீங்களும் உந்த கொமிட்டிகாரரும் செய்யிற அட்டாகாசம் ஊர் அறிந்த விடயம் இதுக்குள்ள என்ட மனிசியையும் அனுப்ப நான் தயாரில்லை"

சரி புதுசா என்ன திட்டம் கொண்டு வாறீயள் "

" எல்லாம் பழசுதான் கார் பார்க்,தேர்முட்டி கட்டுற விடயங்கள் தான்"

"என்ன ஒரு நூறு பேர் இருப்பியள் நீங்களே  உங்களுக்குள் கதைத்து ஒரு நல்ல முடிவு எடுக்கலாம் தானே,உந்த கார் பார்க் விடயம் ஐந்தாறு வ‌ருசம் இழுபடுதானே"

" இந்த முறை எப்படியும் ஒரு முடிவு எடுக்க வேணும் அது தான்proxyக்கு ஒடிதிரிகின்றேன் ,முப்பது சேர்த்து போட்டன் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் மற்ற கோஸ்டியை மட‌க்கி போடலாம்"

"சரி பின்னேரம் வீட்ட வாங்கோ வாங்கி தாரன்"

முருகனை வழிபட உள்ளே சென்றேன் வேலுடன் சாந்தசொருபமாக வீட்டிருந்தான் .முருகா உன்னை காக்க உன் பக்தர்கள் போட்டி போட்டு அடிபடுகிறார்கள் நீ என்னடா என்றால் "நான் உண்டு என் வேலையுண்டு" என்று இருக்கின்றாய் என புலம்பிகொண்டிருந்தேன்.

 

"டேய் லூசா நீயும் போய் அப்படி இருந்து பார் நிம்மதியாக இருக்கும்"

சொல்லுவது போல தனது வேலில் இருந்த அழகிய ரோஜா பூவை எனது காதில் வைத்தான்.

இதுக்கு பிறகும் முருகனுடன் வாக்குவாதப்பட மனம் இடம் கொடுக்கவில்லை சுற்றி கும்பிட்டுவிட்டு வெளியேறி

வெளி வீதியில் இறங்கி நடக்க தொடங்கினேன்.

பின் தோளில் ஒருவர் தட்டி

"இப்ப தான் நினைச்சனான் உம்மை சந்திக்க வேணும் என்று ,கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தது என இதைதான் சொல்லுறது,  முருகன் விடமாட்டான் அவ‌னின்ட விடயங்கள் தோல்விய‌டைய "

இவரை எனக்கு பெரிதாக பழக்கமில்லை இரண்டு மூன்று தடவை மற்றுமோர் ந‌ண்பரின் விருந்துபாசரத்தில் உட்சாக பாணம் அருந்தியதன் மூலம் பழக்கமானவர்.ஆங்கிலம் ,தமிழ் சிங்களம் எல்லாத்திலும் பாண்டித்தியம் பெற்றவர் அதுமட்டுமல்ல ஒர் பொறியியாளர்.

மற்றும் அரசியல் ,கிறிக்கட்,விளையாட்டு போன்ற செய்திகளும் ந‌ன்றாகவே அறிந்து வைத்திருப்பவர்.

" ஹலோ ! என்ன விடயமா என்னை சந்திக்க இருந்தீங்கள்?"

"உம்மட புரொக்சியை எனக்கு தரவேணும் உவங்களுக்கு ஒரு பாடம் படிபிக்க வேணும்"

" யாருக்கு "

"உந்த கோவில் கொமிட்டிக்காரங்களுக்கு"

நானும் ஒன்று தெரியாத மாதிரி

 "கோவில் நல்லாதானே நடக்குது, கொமிட்டிக்காரார் நல்லாத்தானே நடத்தினம்."

"நீர் எங்க இருக்கிறீர் ஐசெ,உந்த கார் பார்க்கும்,தேர்முட்டியும் கட்டுறதிலதான்  பிரச்சனை"

" முருகனிட்ட இடம் இருக்கு ,பணம்  இருக்கு சந்தோசமா கட்டிமுடிக்கலாம் தானே"

"மற்ற கோஸ்டி 200 கார்விடக்கூடிய மாதிரிதான் பிளான் வைச்சிருக்கினம்,எங்கன்டஆட்களின்ட பிளான்படி 225 கார் விடலாம்"

"என்ன 25 கார் விடுகிறதில தான் பிரச்சனையே"

"அதுமட்டுமல்ல உந்த புரஜக்ட் எங்கன்ட ஆட்கள் தலைவராகவும் செயலாளராகவும் இருக்கும் பொழுது தான் தொடங்கி வைச்சவயள்,அதை நாங்கள் தானே முடிச்சு வைக்க வேணும் "

"ஒரு பொது நோக்கோடு செய்கிற காரியத்தை யார் தொடக்கினால் என்ன முடிச்சால் என்ன"

" "நீர் என்ன ஐசே சிம்பிளா சொல்லிபோட்டிர்,நோங்கு குடிக்கிறது ஒருத்தன் விரல் சூப்பிறது இன்னோருத்தனே,அவையள் தேர்முட்டியை கிழக்கில் கட்டவேணும் என்டிச்சினம் நாங்கள் எதிர்த்து வடக்கில் கட்ட வேணும் என்று சொல்லி போட்டம் "

"அப்படியே சங்கதி"

" நான் முப்பது புரோக்சி சேர்த்திட்டன் உம்மடைய தாரும்"

"உமக்கு தந்திருப்பன் கோவிலுக்கு வரும் பொழுது கணேசர் கேட்டவர் ஒம் என்று சொல்லி போட்டன் ,அவர் உம்மட கோஸ்டி தானே"

"ஐயோ அந்த கிழவனிட்டயே கொடுத்தனீர் அந்தாள் மற்ற கோஸ்டி,

அடுத்த முறை உம்மட புரோக்சியை  எனக்கு தாரும் இப்பவே சொல்லி வைச்சிட்டன்"

அடுத்த முறை உமக்குத்தான் என்று சொல்லி போட்டுவிடைபெற்றேன்,அவர் நினைச்சுகொண்டு திரிவார் அடுத்த முறை என்ட புரோக்சி அவருக்கு என்று ,ஆனால் ஆளுக்கு தெரியாது நான் மெம்பர் இல்லை என்ற செய்தி.

காரில் ஏறி சிடியை அழுத்தினேன்

"நீ அல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் இல்லம்"

 

சீர்காழியின் குரல் காதில் வந்து ஒலித்தது.

வீட்டு டிரைவேயில் கணேசரின்ட கார் நின்றது ,

" நீங்கள் பின்னேரம் வருவீங்கள் என்று நினைச்சேன் "

"உன்னட்ட புரோக்சி இல்லை என்றவுடனே நான் உசாராகிட்டேன்,கோவில் வேறு யாரும் கேட்டு எடுத்து விடுவாங்கள் என்று நேராக உன்ட வீட்டை வந்திட்டன்"

"எடுத்திட்டிங்களே"

" உன்ட மனிசி  என்னை போல உசாரடா டெலிபோனில் கதைச்சே நாலு புரோக்சி எடுத்து தந்திட்டாள் ,பிள்ளை தாங்க்ஸ் அடுத்த முறையும் எனக்கு எடுத்து தா,நான் போயிட்டு வாரன் எமது வெற்றியை நாளைய தேர்தல் சொல்லும் "என பாட்டு பாடியபடியே சென்றார்

"சரி அண்ணே பிறகு சந்திப்போம் "

"ஏன்னப்பா தேவையில்லாத வேலை பார்த்தனீர் பேசாமல் உம்மட புரோக்சியை மட்டும் கொடுத்திருக்கலாமே"

" அவையள் கார் பார்க் கட்டுறது நல்ல விடயம் தானே"

" "இப்ப நாலைந்து வருசமா கட்டினம்  நீங்களும் பார்த்து கொண்டு இருங்கோ ....தங்களுடைய  BMW,Benz, போன்றவைக்கு தரிப்பிடம் கட்டுறதில் மட்டும்  இழுபறிபடவில்லை முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணிற இடம் ட்டுறதிலும் இழுபறியாம்"

"உங்களுக்கு"

"அடுத்த முறை புரோக்சி முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணும் விடயத்தில் தான் இருந்து பாரும்"

 

அன்னதான கந்தன்,அலங்கார கந்தன் இந்த ரிசையில் சிட்னிவாழ் பக்தர்கள், முருகா உன்னை புரொக்சி முருகன் என வெகுவிரைவில் அழைக்க தொடங்கி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் வச்சு செய்திட்டான், பேசாமல் வீட்டிலேயே படுத்திருந்திருக்கலாம்.........!   😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் பார்க்கும்,தேர் முட்டியும் கட்டுற நேரம் ஒரு வயோதிபமடம் கட்டலாமோ எண்டு ஒருக்கால்  அப்பன் முருகனிட்டை கேட்டுப்பாருங்கோ :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வருமானம் எதுவும் கிடைக்காத பொது விடயங்களில் நேரத்தை ஏன் தமிழர்கள் வீணடிக்கின்றார்கள் என்று தெரியவில்லை!  வெறும் புகழ் மட்டும் இருக்காது. எப்படியும் ஊழல்கள் செய்வார்கள் என்று புரொக்ஸி முருகனுக்கும் தெரியும்! ஆனால் தனது வெகிக்கிள் பார்க்கிங் கிடைக்கவேண்டும் என்று பொத்திக்கொண்டு இருப்பார்😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு உள்ள கோயிலிலும்.... இரண்டு கோஷ்ட்டிகள்  இருந்து கொண்டு,
இரண்டு பகுதியும்.. புடுங்கு படுவதை பார்த்து... வெறுப்பில்,
கோவில் பக்கம், போவதையே... குறைத்து விட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2019 at 6:52 PM, suvy said:

முருகன் வச்சு செய்திட்டான், பேசாமல் வீட்டிலேயே படுத்திருந்திருக்கலாம்.........!   😂 

அவர் உப்படியான சேட்டைகள் என்னோடு விட்டு பார்க்கிறவர் ,நானோ விக்கிரமாதித்தன் மாதிரி மீண்டும் மீண்டும் அவரின்ட காலடியில் போய் விழுந்திடுவன்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2019 at 9:24 AM, குமாரசாமி said:

கார் பார்க்கும்,தேர் முட்டியும் கட்டுற நேரம் ஒரு வயோதிபமடம் கட்டலாமோ எண்டு ஒருக்கால்  அப்பன் முருகனிட்டை கேட்டுப்பாருங்கோ :cool:

 

அப்பன் முருகன் எல்லாத்துக்கும் ஒகே,ஆனால் அவரின்ட தொண்டர்மார் தான் பிரச்சனை,பெயர்ப்பலகையில் தங்கட பெயர் இடம்பெறவேண்டும் என்று முருகனின்ட சில திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுறவையள் ஆனால் முருகன் சுழிச்சு வெட்டி ஒடிக்கொண்டு வாரான்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2019 at 4:27 PM, கிருபன் said:

 வருமானம் எதுவும் கிடைக்காத பொது விடயங்களில் நேரத்தை ஏன் தமிழர்கள் வீணடிக்கின்றார்கள் என்று தெரியவில்லை!  வெறும் புகழ் மட்டும் இருக்காது. எப்படியும் ஊழல்கள் செய்வார்கள் என்று புரொக்ஸி முருகனுக்கும் தெரியும்! 

On 9/7/2019 at 4:27 PM, கிருபன் said:

 

On 9/7/2019 at 4:27 PM, கிருபன் said:

ஆனால் தனது வெகிக்கிள் பார்க்கிங் கிடைக்கவேண்டும் என்று பொத்திக்கொண்டு இருப்பார்

 

 

ஊழல் என்று சொல்லமுடியாது ,தொண்டர்கள் பணவசதி படைத்தவர்கள் ,கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்கும் தொண்டர்கள்.....எல்லாத்தைய்ம் தாங்கள் தான் செய்யவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள்....இளய சமுதாயத்திற்க்கு விட்டு கொடுப்பதற்கே தயங்குகிறார்கள்.

அவன் ஒருத்தன் தான் தன்னுடைய வெயிக்கிளை ஊரில இருந்து இறக்குமதி செய்து ஒடுகிறான்,மற்றவையள் எல்லாம் வெளிநாட்டு வாகனம் வைச்சிருக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2019 at 5:12 PM, தமிழ் சிறி said:

இங்கு உள்ள கோயிலிலும்.... இரண்டு கோஷ்ட்டிகள்  இருந்து கொண்டு,
இரண்டு பகுதியும்.. புடுங்கு படுவதை பார்த்து... வெறுப்பில்,
கோவில் பக்கம், போவதையே... குறைத்து விட்டேன். 

சீ சீ..... புடுங்குபாடு நடக்குது என்று நாங்கள் ஒதுங்கினால் வேறு ஆள்கள் குடிபுகுந்துவிடுவாங்கள்.....சோ ...இவையளின்ட புடுங்குபாடு எங்களுக்கு தெரியும் என்று சொல்லிகொண்டு நாங்கள் போய்வரவேண்டும்.....பக்தி என்ற பெயரில் அடுத்த தலைமுறை கொஞ்சம் தமிழ்கற்றுகொள்ள வசதியாக இருக்கும்....இந்த கோவில்கள் ஒழுங்காக நடந்தால்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலங்களின் பின்னர்....புத்தனின் கதையை வாசித்த திருப்தி...!

இந்த ஆக்களின்ர கோதாரியால தான் .....நான் இவையளின்ர கண்ணிலை படாமல் முருகனிட்டைப் போக வேண்டி வந்தது..!

ஒரு கொட்டிலில குந்திக்கொண்டிருந்த முருகன்...இப்ப கோபுரக் கலசங்களோட குந்தியிருக்கிறார்!

சத்தியமாய்....அவர் மேல எனக்குப் பொறாமையில்லை!

ஆனால் அவர் கொட்டிலில குந்திக்கொண்டிருக்கேக்க இருந்த வழிபாட்டுத் திருப்தி....இப்ப நிச்சயமாய் இல்லை என்று தான் சொல்லுவன்!

தொடர்ந்தும் உங்கள் கிறுக்கல்களை எதிர்பார்க்கின்றோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2019 at 5:56 PM, புங்கையூரன் said:

நீண்ட காலங்களின் பின்னர்....புத்தனின் கதையை வாசித்த திருப்தி...!

இந்த ஆக்களின்ர கோதாரியால தான் .....நான் இவையளின்ர கண்ணிலை படாமல் முருகனிட்டைப் போக வேண்டி வந்தது..!

ஒரு கொட்டிலில குந்திக்கொண்டிருந்த முருகன்...இப்ப கோபுரக் கலசங்களோட குந்தியிருக்கிறார்!

சத்தியமாய்....அவர் மேல எனக்குப் பொறாமையில்லை!

ஆனால் அவர் கொட்டிலில குந்திக்கொண்டிருக்கேக்க இருந்த வழிபாட்டுத் திருப்தி....இப்ப நிச்சயமாய் இல்லை என்று தான் சொல்லுவன்!

தொடர்ந்தும் உங்கள் கிறுக்கல்களை எதிர்பார்க்கின்றோம்!

20 வருடங்களுக்கு முன்பு கதிர்காம கந்தனிட்ட போன போது இருந்த திருப்தி இப்ப இல்லை ,முருகனும் பாவம் என்ன செய்வான் எத்தனை என்று கவனிக்கிறது,.சிங்களவனோட உறவை வைத்தால் கொஞ்சம் கெத்தா இருக்கலாம் என்று நினைச்சிட்டான்....
அதை பார்த்த நம்ம சிட்னி முருகனும் , இப்ப "மல்டிகல்சரை "பயங்கரமா பின்பற்ற தொடங்கிட்டான் .

பை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில்  நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட  நடவடிக்கையில் இறங்கிட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, putthan said:

20 வருடங்களுக்கு முன்பு கதிர்காம கந்தனிட்ட போன போது இருந்த திருப்தி இப்ப இல்லை ,முருகனும் பாவம் என்ன செய்வான் எத்தனை என்று கவனிக்கிறது,.சிங்களவனோட உறவை வைத்தால் கொஞ்சம் கெத்தா இருக்கலாம் என்று நினைச்சிட்டான்....
அதை பார்த்த நம்ம சிட்னி முருகனும் , இப்ப "மல்டிகல்சரை "பயங்கரமா பின்பற்ற தொடங்கிட்டான் .

பை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில்  நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட  நடவடிக்கையில் இறங்கிட்டான்.

மிகவும் நல்ல செய்தி....!

அந்தக் கோவிலாவது....இந்துக்கோவிலாக அன்றி.....சைவைக் கோவிலாக இருக்கும் என்னும் நம்பிக்கை என்னிடம் நிறையவே உண்டு...புத்தன்!

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/11/2019 at 9:02 AM, putthan said:

பை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில்  நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட  நடவடிக்கையில் இறங்கிட்டான்

அங்கையும் தலைவர்,உபதலைவர் பொருளாளர் எல்லாரும் இருப்பினம் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 9/12/2019 at 12:34 PM, புங்கையூரன் said:

மிகவும் நல்ல செய்தி....!

அந்தக் கோவிலாவது....இந்துக்கோவிலாக அன்றி.....சைவைக் கோவிலாக இருக்கும் என்னும் நம்பிக்கை என்னிடம் நிறையவே உண்டு...புத்தன்!

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி...!

இந்து கோவிலாக தான் மாறும் ,தவிர்க்க முடியாத காரணங்களால்....இந்து என்ற அடையாளத்தை நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்று கொண்டு விட்டோம்....பஞ்சபுராணம் மட்டும் தமிழில் பாடும் நிலை இப்பொழுது இருக்கின்றது ...வட இந்தியர்களின் மத்தியில் முருகனுக்கும்,வினாயக்ருக்கும் தமிழில் பஞ்சபுராணமாவது பாடும் நிலை கிடைத்துள்ளது என் மகிழ்ச்சியடையத்தான் இருக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அங்கையும் தலைவர்,உபதலைவர் பொருளாளர் எல்லாரும் இருப்பினம் தானே?

இன்னும் உசாராக தொடங்கவில்லை ,இரண்டு வருடத்தில வந்திடுவினம் .....அந்த நகரில் சிட்னி போன்று சனம் இல்லை ....ஆகவே புடுங்குபாடுகள் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தா கீரைக்கடைக்கும் எதிர்க் கடை இருந்தா தான் வியாபாரம் சரியாக ஓடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இன்னும் உசாராக தொடங்கவில்லை ,இரண்டு வருடத்தில வந்திடுவினம் .....அந்த நகரில் சிட்னி போன்று சனம் இல்லை ....ஆகவே புடுங்குபாடுகள் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன்

எண்டாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எண்டதை உண்மையாக்காமல் விடமாட்டினம்.அது சந்திரமண்டலமாக இருந்தாலும் சரி..😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.