Jump to content

அறிவியல் - ஆன்மீகம் - மொழி


Recommended Posts

#மொழி_vs_அறிவியல்

அறிவியலில் எல்லா கேள்விகளுக்கும் பதில் இல்லையே ஏன்..? 

உண்மையில் அந்த அளவுக்கு அவர்கள் அறிவியலை தேடி படித்து இருப்பார்களா என்றால் இல்லை...

அடிப்படையாக சில கேள்விகளை  ஆன்மீக கதைகளின் கண்ணோட்டத்தில் கேட்பார்கள்....

முக்கிய  கேள்விகள் இதோ

1. மனிதனின் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன..? 
2. தவறு செய்பவன் தப்பித்து கொண்டால் அவனை கண்டுபிடித்து தண்டிப்பது யார்?
3. ஏன் மனிதன் வாழ பூமி அமைய வேண்டும்..??
4. மரணத்தின் பின் என்ன நடக்கும் ?
5. ஏன் மனிதனுக்கு மட்டுமே 6 அறிவு? 

இந்த 5 கேள்விகளுக்கும் அறிவியலில் பதிலில்லை என்று ஏதோ அறிவியலை விட தங்களின் மத கட்டுக்கதைகள் சிறந்தது என மார்தட்டி கொள்வர்...காரணம் இந்த 5 கேள்விகளுக்கும் ஆன்மீக கட்டுகதைகளில் ஒரு வரி பதில் உண்டு

விடைகள்

1) கடவுளின் சித்தம்
2) தீர்ப்பு நாளில் நரக தண்டனை அல்லது மறுபிறவியில் துன்பம்
3) கடவுள் மனிதனுக்காக படைத்தது
4) ஆன்மா உடலை விட்டு வெளியேறும்
5) மனிதன் கடவுளின் சிறந்த படைப்பு

ஆனால் இந்த கட்டுக்கதை பதில்களை திரும்பவும் அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஒரு துளியும் ஆதாரம் இருக்காது...

1) கடவுள் படைத்ததற்கு ஆதாரம் என்ன? - மத நம்பிக்கை
2) தீர்ப்பு நாள் அல்லது மறு ஜென்மத்திற்கு ஆதாரம்? - மத நம்பிக்கை
3) ஏன் பூமியில் 75 கடல்? எதற்கு அவ்வளவு பெரிய அண்டார்டிகா பனி கண்டம்? எதற்கு மனித வாழ்வில் பயண்படாத பல கோடி இதர உயிரினங்கள்? எதற்கு கொடி உயிர் கொல்லி கிருமிகள்? எதற்கு இயற்கை பேரழிவுகள் (நல்லவர்களும் அழிக்கிறார்கள்) ? - கடவுளின் சித்தம்
4) ஆன்மா வெளியேறும் ஆதாரம்? 
5)ஏன் 9,000 வகை மரபியல் நோய்கள்? - கடவுளின் சித்தம் 

ஆக ஆன்மீகம் என்ற பெயரில் ஆதாரமற்ற கட்டுகதைகள் மட்டுமே சிறுபிள்ளைத்தனமான பதிலாக கிடைக்குமே ஒழிய ஆதாரத்துடன் எதுவுமே வராது

இந்த கேள்விகளுக்கு பின்னணி என்ன?

1) மனிதன், தன்னையும் மீறி நடக்கும் அழிவுகளுக்கும் மரணத்திற்கும் அஞ்சினான்...

2) மொழி முதலில் வந்தது...

3) தன் பயங்களையும் கற்பனைகளையும்   ஆன்மீகம் என்ற பெயரில் பொட்டலம் கட்டினான்

4) அறிவியல் கண்டுபிடிப்புகள் பின்னால் வந்தது....

5) பின்னர் அதை சார்ந்த அறிவியல் புரிதல் வந்தது....

இதில் வெறும் 3 ஆவது நிலை வரை மட்டுமே நிற்பவர்கள்தாம் இன்னும் ஆன்மீக கண்ணோட்டத்தோடு உலகை காண்கின்றனர்..‌.

இதை அறிவியலில் 'Sapir- Whorf hypothesis' என்பர்...தன் தாய்மொழியை முதலில் கற்பதால் அதை சார்ந்த சிந்தனைகளிளேயே உலகை காண்பது....

உதாரணமாக தமிழில் ஓர் அறிவித்திருந்தது 6 அறிவு வரை உயிரினங்களை பிரித்து 'உயர்தினை, அஃறினை' என்று தமிழ் இலக்கணத்திற்கு வித்திட்டவர் தொல்காப்பியர்...  எனவே தமிழ் பேசும் அனைவருக்கும் மனிதன் என்பவன் இதர  உயிரினங்களை காட்டிலும் 6 அறிவு படைத்த உயர்ந்த உயிரினம் என்ற எண்ணம் தானாகவே வரும். 

 உதாரணமாக தமிழ் வாக்கியத்தில்

எலிகள் ஆற்றுக்கு சென்றன...(கீழ் நிலை)
மனிதர்கள் ஆற்றுக்கு சென்றார்கள்...(உயர் நிலை) 

இந்த எண்ணத்திற்கு மேலும் நல்ல தீனி போடுவது மத கட்டுகதைகள்....

அறிவியல் சிந்தனைகள் முதல் வந்து பின்னர் தமிழ் வந்திருந்தால் 

எலிகள் ஆற்றுக்கு சென்றார்கள்...மனிதர்கள் ஆற்றுக்கு சென்றார்கள்...

என்று மனிதர்களும் எலிகளை போல ஒரு பாலூட்டி உயிரினம் தான் என்று தமிழ் இலக்கணம் வேறு மாதிரி அமைந்திருக்கும்....

இது போன்ற 'சிந்தனை' பிழைகள் தமிழில் மட்டுமல்ல ஒவ்வொரு மொழிகளிலும் உள்ளது...

எனவே அறிவியலால் பதில் கூற முடியாது என்று மார்தட்டி கொள்ளும் பல கேள்விகளும் தேவையற்ற காரணமற்ற வெட்டி கேள்விகளே என்று உணர்த்துகிறது அறிவியல்....

#மொழி_vs_அறிவியல்

வசந்தன் - ஆய்வுகூடம் - அறிவியல் தகவல்கள்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.