Jump to content

யாழ் திரைப்படம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.youtube.com/watch?v=qOzX4RiPUXs

 

மிஷ்டிக் பிலிம்ஸ் சார்பில் யாழ் படத்தை தயாரித்து, கதை, திரைக்கதை,வசனம் எழுதி எம்.எஸ் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இலங்கையில் போர் உச்சத்தில் இருக்கும் போது கன்னி வெடிகளுக்கிடையே இரண்டு மணி நேரத்தில் நடக்கும் சம்பவவங்களின் மூன்று கதைகளின் கோர்வை தான்; யாழ் படத்தின் கதை.

முதலில் அப்பாவி அபலைப்; பெண்ணான நீலிமா ராணி கைக்குழந்தையுடன் இருக்கையில் சிங்கள ராணுவ வீரர் டேனியல்பாலாஜியின் விசாரணைப் பார்வையில் சிக்குகிறார். விடுதலைப் புலி தமிழ்செல்வி என்று நினைத்து நீலிமாவை துரத்த கன்னி வெடியில் காலை வைத்து விடுகிறார் டேனியல் பாலாஜி. இடத்தை விட்ட நகர முடியாமல் தவிக்கும் டேனியல் பாலாஜி நீலிமா ராணியை குழந்தையை காரணம் காட்டி மிரட்டுகிறார். நீலிமா ராணிக்கு உதவ வரும் முதியவரும் கன்னி வெடியில் சிக்கி இறக்கிறார். டேனியல் பாலாஜிக்கு காப்பாற்ற வரும் இன்னொரு சிங்கள ராணுவ வீரரை சந்தர்ப்பம் பார்த்து சுட்டுக் கொல்கிறார் நீலிமா ராணி. இறுதியில் டேனியல் பாலாஜியிடமிருந்து நீலிமா தப்பித்து குழந்தையை காப்பாற்றினாரா? என்பது முதல் கதை.

இரண்டாவது வினோத் காதலிக்கும் லீமா பாபு ஊரை விட்டு போவதை பார்த்து தானும் உடன் செல்ல உடைமைகளை எடுத்து வரும் வழியில் அனாதையாக இருக்கும் பேபி ரக்ஷனாவை பார்த்து விசாரிக்கிறார். பேபி ரக்ஷனா தன் தாயை காணவில்லை என்றும், அவரை தேடிக் கண்டு பிடித்து சேர்க்குமாறு கூற வேறு வழியின்றி குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் வினோத். வரும் வழியில் சிங்கள ராணுவத்தினரின் விசாரணை என்று நேரம் சென்று விட கடற்கரைக்கு வருவதற்குள் காதலி உட்பட அனைவரும் படகில் சென்று விடுகின்றனர். இறுதியில் வினோத் காதலியை தேடிச் சென்றாரா? பேபி ரக்ஷனாவை விட்டு விட்டுச் சென்றாரா? அல்லது பேபி ரக்ஷனாவை தாயுடன் சேர்த்து வைக்க முயன்றாரா? என்பதே மீதிக் கதை.

மூன்றாவதாக லண்டனிலிருந்து மிஷா கோஷல் தன் காதலன் சசிகுமாரை தேடி இலங்கைக்கு வருகிறார். நண்பர்கள் உதவியுடன் சசிகுமாரை சமாதனம் செய்து லண்டனுக்கு அழைத்துச் செல்ல நினைக்கும் மிஷாவின் பேச்சை கேட்காமல் சொந்த ஊரிலேயே இருக்கப் போவதாக சசிகுமார் கூறுகிறார். கன்னி வெடியில் இறந்த தாயின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால் நிலத்தில் இருக்கும் கன்னி வெடிகளை அகற்றிய பிறகே லண்டன் வருவதாக சசிகுமார் சொல்கிறார். இதனால் கோபமடையும் மிஷா கோஷல் என்ன செய்தார்? சசிகுமாரை சமாதனம் செய்து அழைத்துச் சென்றாரா? இல்லையா? என்பதே க்ளைமேக்ஸ்.

இந்த மூன்று கதைகளில் நடித்த வினோத் கிஷன், டேனியல் பாலாஜி, சசிகுமார், சுப்பிரமணி;, மிஷா கோஷல், நீலிமா ராணி, லீமா பாபு ஆகியோருடன் பேபி ரக்ஷனா சிறப்பாகவும், இயல்பாகவும் நடித்திருப்பது படத்தின் தத்ரூபமான காட்சிகளுக்கு மேலும் மெருகுட்டுகிறது.

ஏ.கருப்பையா, எம்.நஷீர் ஆகிய இருவரின் ஒளிப்பதிவு இலங்கையில் நடக்கும் போரினால் அப்பாவி மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு அனாதைகளாகவும், அகதிகளாகவும் நடைப்பயணம் செல்வதையும், சிங்கள ராணுவத்தின் கெடுபிடி களையும், வானத்திலிருந்து விழும் குண்டு மழையிலிருந்து தப்பிக்க நினைக்கும் ஈழத் தமிழ் மக்கள் பதுங்கு குழிகளை தேடி ஒடுவதும், மூன்று வித பரிணாமங்களில் கதையை நகர்த்தி அச்சு அசலாக காட்சிக் கோணங்களில் தந்து அசத்தியிருக்கின்றனர்.
எஸ்.என் அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதமாக இருப்பதோடு அழகான வரிகள் கேட்க கேட்க தமிழின் இனிமை காதில் ஒலித்து மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எம்.எஸ்.ஆனந்த். யாழ் என்ற இசைக்கருவியை உருவாக்கிய ஈழத் தமிழர்கள் தமிழர்களின் கலை, கலாச்சாரம்,பண்பாடு, சித்தாந்த கருத்துக்களை யாழ் மூலம் இசைத்து பல ஊர்களில் பரப்பி வந்ததால் அவர்களை பாணர்கள் என்று அழைக்கப்பட நாளடைவில் அந்த ஊருக்கு யாழ்ப்பாணம் என்ற பெயரும் வந்தது என்பதை முதல் பாட்டிலேயே வரைபடத்தின் மூலம் எடுத்துரைத்த விதமே கேட்கவும் பார்க்கவும் சிறப்பாக இருந்தது. அதன் பின் இலங்கையில் ஆரம்பம் முதல் இறுதி வரை இரண்டு மணி நேரத்தில் நடக்கும் கதையில் மூன்று வித கதைகள் தனித்தனியாக பயணித்து யாழ் இசைக்கருவியோடு நட்பு, காதல், வன்மம், செண்டி;மென்ட் கலந்து இன்னிசை விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்த். வித்தியாசமான முயற்சியில் ஈழத் தமிழர்களின் பேச்சு, போராட்டங்கள், அவலங்கள், வாழ்வியலை யதார்த்தமாக மனதை தொடும்படி படம் பிடித்து தனித்தன்மையோடு இயக்கியிருக்கிறார் எம்.எஸ்.ஆனந்த். இதில் ஈழத் தமிழர்களை மையப்படுத்தி ஈழத்தமிழ் பாடலாசிரியர்கள் இயற்றிய பாடல்கள் இலங்கைத்தமிழில், இசையிலும், வசனத்திலும் கலந்திருப்பது செவிக்கு இனிமையாகவும், கண்களுக்கு இதமாகவும் இருக்கிறது.

மொத்தத்தில் அனைவரைவும் ஈர்த்து மனதை நெகிழச்செய்யும் தாழ் இந்த யாழ்.

 

https://www.chennaicitynews.net/cinema/யாழ்-திரை-விமர்சனம்-64444/

https://www.youtube.com/watch?v=qOzX4RiPUXs

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.