Jump to content

தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்க டெஸ்லா நிறுவனத்துக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு


ampanai

Recommended Posts

Dkn_Tamil_News_2019_Sep_03__900814235210419.jpg

 

வாஷிங்டன் : அமெரிக்காவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார். உலக அளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெஸ்லா கார் நிறுவனத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயக்குமார் மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாத மின்சார வாகன உற்பத்திக்கு தமிழக அரசு வழங்கி வரும் ஒத்துழைப்பு குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் டெஸ்லா அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். இதையடுத்து தமிழகத்தில் தொழில் தொடங்க டெஸ்லா நிறுவனத்திற்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னர் டெஸ்லா நிறுவன உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நினைவுபரிசுகளை வழங்கினார். அதே போன்று டெஸ்லா அதிகாரிகளும் முதல்வருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

 

ரூ.5,080 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்து ..

இதனிடையே நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற தொழில் முதலீட்டார்கள் கூட்டத்தில் ரூ.5,080 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகியது. தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்க மேலும் 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து ஃபாக்ஸ்கான், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த தொழில் முதலீட்டாளர் கூட்டம் மூலம் 26,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

 

புளூம் எனர்ஜி நிறுவனத்தை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார்

இதைத் தொடர்ந்து கலிபோர்னியாவில் நவீன முறையில் மின் உற்பத்தி செய்து வரும் புளூம் எனர்ஜி நிறுவனத்தை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார். இந்நிறுவனத்தில் இயற்கை முறையில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதாவது பையோ கேஸ் மற்றும் ஹைட்ரொஜெனை எரிக்காமல் மின்சாரத்தை தயாரித்து வருகிறார்கள். அதனை முதல்வருடன் அமைச்சர் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயக்குமார் மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் பார்வையிட்டனர். சுத்தமான மற்றும் மலிவான விலையில் இந்நிறுவனத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய நவீன மின்சார உற்பத்தி குறித்து முதல்வருக்கு நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=523961

Link to comment
Share on other sites

Dkn_Tamil_News_2019_Sep_03__466625392436982.jpg

 

சான்பிரான்சிஸ்கோ: தமிழகத்தில் முதலீடு செய்ய டெஸ்லா நிறுவனத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். எலக்ட்ரானிக் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=523942

அமேசான் நிறுவன அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி

டெஸ்லாவில் எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami with Bloom Energy Team

Link to comment
Share on other sites

2.5 லட்சம் கோடிக்கும் மேலாக முதலீடுகளை முதல்வர் பெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. முதல்வர் கூறிய மொத்த முதலீடும் தமிழகத்திற்கு வந்து விட்டால் திமுக சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

https://www.ndtv.com/tamil/dmk-ready-to-host-ceremony-on-behalf-of-appreciation-to-cm-edappadi-says-mkstalin-2096118

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.