Jump to content

புழுத்தறிவு என்பது யாதெனில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புழுத்தறிவு என்பது யாதெனில்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

புழுத்தறிவு என்பது யாதெனில்

 

 

அடிப்படை அறிவு என்பதே இல்லாமல் இருக்கும் போது பகுத்தறிவு புழுத்தறிவு போலத்தான் தென்படும் அண்ணை.

கேபி, கருணா தனித்தமிழீழக் கொள்கையை பிழையாக வழிநடத்தினார்கள் நடத்துகிறார்கள் என்பதற்காக பிரபாகரனை, தமிழ்தேசியக் கொள்கையை எப்படி விமர்சிக்க முடியாதோ, அப்படித்தான் திமுக, தற்போதைய திக வை வைத்து, பகுத்தறிவுக் கொள்கையை விமர்சிக்க முடியாது.

தவிரவும் நீங்கள் தந்துள்ள காணொளியில், தனியே கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகிறன. பதில்களை தக்க ஒருவரிடம் கேட்டுப் போட்டால் அது ஊடக நேர்மை.

சும்மா பேஸ்புக்கில், யூடியூப்பில் வாற கஞ்சல்களை எல்லாம் வைத்து ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை, தமிழ்நாட்டை நல்வழிப்படுத்திய வழியை எடைபோட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதைக்கொட்டுவது என் கடமை. பொறுக்குவதும் புரள்வதும் தாண்டிச்செல்வதும் உங்கள் தலைகளில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புழுத்தறிவைப் பற்றி யாழ் களம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே அலசி ஆராய்ந்து விட்டது. இப்போது அவை கேள்விகளாக கறுப்புகளை துளைக்க ஆரம்பித்துவிட்டன.

எனிக் கறுப்புகளின் வேடம் தானே கலையும். 😂

இராமசாமியிசம் பேசிக் கொண்டே.. சாதிக் காப்பையும்.. பெண் பாதுகாப்பின்மையயையும் வளர்த்ததே.. இராமசாமிய வாரிசுகளாக தம்மை இனங்காட்டிக்கொண்ட திராவிடக் கும்பல்கள் தான். அவற்றால்.. இன்று அழிந்தது தமிழகம் மட்டுமல்ல.. ஈழத்தமிழினமும் தான். 

Link to comment
Share on other sites

தேங்கிய குட்டையாக  மக்களின் அறிவை வைத்திருக்க விரும்புவதே புழுத்தறிவு எனப்படும். அப்படி தேங்கிய குட்டையாக மூடதனங்களை புழுத்தறிவை  பேண விரும்புபர்களே பெரியாரையும் பகுத்தறிவையும்  திட்டுபவர்கள்.  தெருவில் பூரி விற்கும் லாயக்கு உள்ள  பாரிசாலன் போன்றவர்களின் உளரல்கள் தான் சிலருக்கு வரலாற்று புத்தகம்.  பெரியார் தன்னை என்றும் முன்னிலை படுத்தியதில்லை.  உனது அறிவு எல்லாவற்றையும் விட உயர்ந்த‍து. அதை சிற‍ப்பாக பாவித்து  நான் முன்னேற வேண்டும் என்று மட்டுமே அவர் கூறினார். தான் கூறுவதை கூட அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் உனது அறிவை உபயோகித்து யோசித்து உனக்கு சரிஎன பட்டால் மட்டும் ஏற்றுகொள் என்று தைரியமாக கூறியவர் அவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவை பெரியார் என்றுமே பெரியாரிசம் என்றோ, திராவிடம் என்றோ அழைக்கவில்லை. திராவிடம் என்பது மெதராஸ் மாநிலமாக இருந்த போது, அந்த மாநிலத்தில் வசித்த, தெலுங்கர், மலையாளி, துலு, தமிழருக்கும் சேர்ந்த கூட்டு அரசியல். அதற்கான தேவை மொழிவாரி மாநில பிரிவினையின் போதே அற்று விட்டது.

பகுத்தறிவுவாதம் என்பது உலகில் எல்லா மனிதருக்குமான பொது அரசியல். இதற்க்கான தேவை எப்போதும் இருக்கும். எங்கேயும்.

10 வருடத்தில் திருமாவை இதே யாழில் புகழ்ந்த நல்லவாய்கள் எல்லாம் இப்போ நாற வாய்கள் ஆனதையும் நாமும் கண்டுள்ளோம் 😂.

இன்றைக்கு சீமான் போன்ற போலித் தமிழ் தேசிய மழை ஈசல்களுக்காகவும், மோடி மகிந்தவுக்கு சொல்லி  எமக்கு விடிவு தருவார் என்ற நப்பாசைக்காகவும் சிலருக்கு பெரியாரைத் திட்டி தீர்க்க வேண்டி இருக்கிறது.

இன்னும் 10 வருடத்தில் சீமானையும் இப்படி எழுதும் போது உண்மை விளங்கும் 😂.

அதுவரை பெரியாரை சம்பந்தமே இல்லாமல் திட்டிக் கொண்டிருங்கள்....உங்கள் கோயில் விதானங்களில் மோகன்தாஸ் காந்திக்கு மட்டும் இல்லை, ரஜீவ் காந்திக்கும் சிலை ஏற்றுவார்கள் 🤦‍♂️

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

இன்றைக்கு சீமான் போன்ற போலித் தமிழ் தேசிய மழை ஈசல்களுக்காகவும், மோடி மகிந்தவுக்கு சொல்லி  எமக்கு விடிவு தருவார் என்ற நப்பாசைக்காகவும் சிலருக்கு பெரியாரைத் திட்டி தீர்க்க வேண்டி இருக்கிறது.

 

போலித் தேசீய வாதிகளை நீங்கள் சுட்டிக்காட்டும் போது ஏன் அவர்கள் போலி என்பதையும் உண்மையான தமிழ்த்தேசீயவாதிகள் யார் என்ன காரணத்தால் அவர்கள் உண்மைத் தமிழ்த்தேசீயவாதிகள் என்பதை சுட்டிக்காட்டுங்கள். அப்போது மக்கள் உண்மையின் பக்கம் செல்வார்கள். இது உங்கள் கருத்துக்கான எதிர்க் கருத்தல்ல மாறாக இது பிழை என்று வரையறுக்கும் போது சரி எது என்பதையும் முன்வையுங்கள் என்ற வேண்டுகோளேயாகும். 

Link to comment
Share on other sites

 

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடக்குமுறைக்கு எதிரான கொள்கைகளும் போராட்டங்களும்  எந்தெந்த காரணிகளால் ஒடுக்கப்படுகின்றார்களோ அதற்கு எதிராக  தோன்றிக்கொண்டே இருக்கின்றது. பெரியாரின் காலத்திற்கு முன்னரான காலத்தில் வருணாசிரம தர்மம் சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களின் என்னுமொரு பரிணாமம் தான் பெரியாரின் முயற்சிகள். இன்று பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி வந்த திராவிட அரசியல் கட்சிகள் மிகப்பெரும் சுரண்டலில் ஈடுபட்டு புதியதொரு ஒடுக்குமுறையை செய்யும் போது அதற்கெதிராக போராட்டங்கள் தொடரத்தான் செய்யும்.  விமர்சனங்கள் மாற்றுக் கருத்துக்கள் எழுவது இயல்பு. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, சண்டமாருதன் said:

 

போலித் தேசீய வாதிகளை நீங்கள் சுட்டிக்காட்டும் போது ஏன் அவர்கள் போலி என்பதையும் உண்மையான தமிழ்த்தேசீயவாதிகள் யார் என்ன காரணத்தால் அவர்கள் உண்மைத் தமிழ்த்தேசீயவாதிகள் என்பதை சுட்டிக்காட்டுங்கள். அப்போது மக்கள் உண்மையின் பக்கம் செல்வார்கள். இது உங்கள் கருத்துக்கான எதிர்க் கருத்தல்ல மாறாக இது பிழை என்று வரையறுக்கும் போது சரி எது என்பதையும் முன்வையுங்கள் என்ற வேண்டுகோளேயாகும். 

நியாயமான கோரிக்கைதான். ஆனால் 2009 ற்கு பின்னர் அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை. 

ஒரு சிலர் தேறுவார்கள் போல் தென்பட்டார்கள் -ஆனால் காலம் அவர்களையும் காட்டிக் கொடுத்து விட்டது.

#யாரைத்தான் நம்புவதோ பேதை உள்ளம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

பகுத்தறிவை பெரியார் என்றுமே பெரியாரிசம் என்றோ, திராவிடம் என்றோ அழைக்கவில்லை. திராவிடம் என்பது மெதராஸ் மாநிலமாக இருந்த போது, அந்த மாநிலத்தில் வசித்த, தெலுங்கர், மலையாளி, துலு, தமிழருக்கும் சேர்ந்த கூட்டு அரசியல். அதற்கான தேவை மொழிவாரி மாநில பிரிவினையின் போதே அற்று விட்டது.

பகுத்தறிவுவாதம் என்பது உலகில் எல்லா மனிதருக்குமான பொது அரசியல். இதற்க்கான தேவை எப்போதும் இருக்கும். எங்கேயும்.

10 வருடத்தில் திருமாவை இதே யாழில் புகழ்ந்த நல்லவாய்கள் எல்லாம் இப்போ நாற வாய்கள் ஆனதையும் நாமும் கண்டுள்ளோம் 😂.

இன்றைக்கு சீமான் போன்ற போலித் தமிழ் தேசிய மழை ஈசல்களுக்காகவும், மோடி மகிந்தவுக்கு சொல்லி  எமக்கு விடிவு தருவார் என்ற நப்பாசைக்காகவும் சிலருக்கு பெரியாரைத் திட்டி தீர்க்க வேண்டி இருக்கிறது.

இன்னும் 10 வருடத்தில் சீமானையும் இப்படி எழுதும் போது உண்மை விளங்கும் 😂.

அதுவரை பெரியாரை சம்பந்தமே இல்லாமல் திட்டிக் கொண்டிருங்கள்....உங்கள் கோயில் விதானங்களில் மோகன்தாஸ் காந்திக்கு மட்டும் இல்லை, ரஜீவ் காந்திக்கும் சிலை ஏற்றுவார்கள் 🤦‍♂️

சீமானை இன்று ஏற்றுக்கொண்டு முழுதான ஆதரவை நான் கொடுத்து வருகிறேன் 
காரணம் கேரளா ஆந்திரா கன்னடா வில் தமிழனை இரண்டாம் பிரஜையாகவே காலம்தோறும் வைத்து 
இருக்கிறார்கள். இங்குதான் போலி திராவிடம் பேசி தமிழை தொலைத்தார்கள். இனி தமிழையும் மண்ணையும் 
தமிழ்த்தேசியம் ஒன்றுதான் காக்கும்.
இந்தி திணிப்பு இல்லை...... இல்லை என்ரூ சொல்லிக்கொண்டே திணிப்பு கடந்த 50 வருடமாக 
மும்மொழி கொள்கை என்ற போர்வையில் ஹிந்தி அல்லாத மாநிலங்களில் நடக்கிறது. ஹிந்தி மாநிலங்களில் 
உள்ளவருக்கு ஹிந்தியே எழுத வாசிக்க தெரியாது .... அங்கு மும்மொழியும் இல்லை சொந்த மொழியும் இல்லை.
கிரேக்க மொழி   லத்தீன் மொழி  கீப்ரு போன்ற மொழிகள் அழிந்துபோயின ... அதன் முன்தோன்றிய தமிழ் மொழியாக அல்லாது வாழ்வாக இருந்த ஒரு காரணத்தால் மட்டுமே வாழ்கிறது. இப்போதைய உலகமயமாதல் அதுக்கும் ஆப்பு வைக்க வழி சமைத்து  கொடுக்கிறது ........ இனி போராடினால் மட்டுமே தமிழ் வாழும்.
அதுக்காக சீமான் போராடுகிறான்  .. எமது ஆதரவு என்றும் உண்டு.

பத்து வருடம் கழித்து சீமான் மாறலாம் ............
அதுக்காக இன்றே உங்களை போல இன்றே சாத்திரம் பார்த்து தூற்றுவதும் இல்லை 
அன்று தூற்றுவதுக்கு பின் நிற்க போவதும் இல்லை.
எமது ஆதரவு என்பது கொள்கை நிலை சார்ந்தது  
சீமான் என்ற தனிமனிதன் சார்ந்ததல்ல. 

சீமான் மாறினால் தூற்றித்தான் எழுதுவோம் அதன் பொருள் நாம் மாறுகிறோம் என்பதல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2019 at 11:27 PM, goshan_che said:

பகுத்தறிவை பெரியார் என்றுமே பெரியாரிசம் என்றோ, திராவிடம் என்றோ அழைக்கவில்லை. திராவிடம் என்பது மெதராஸ் மாநிலமாக இருந்த போது, அந்த மாநிலத்தில் வசித்த, தெலுங்கர், மலையாளி, துலு, தமிழருக்கும் சேர்ந்த கூட்டு அரசியல். அதற்கான தேவை மொழிவாரி மாநில பிரிவினையின் போதே அற்று விட்டது.

பகுத்தறிவுவாதம் என்பது உலகில் எல்லா மனிதருக்குமான பொது அரசியல். இதற்க்கான தேவை எப்போதும் இருக்கும். எங்கேயும்.

10 வருடத்தில் திருமாவை இதே யாழில் புகழ்ந்த நல்லவாய்கள் எல்லாம் இப்போ நாற வாய்கள் ஆனதையும் நாமும் கண்டுள்ளோம் 😂.

இன்றைக்கு சீமான் போன்ற போலித் தமிழ் தேசிய மழை ஈசல்களுக்காகவும், மோடி மகிந்தவுக்கு சொல்லி  எமக்கு விடிவு தருவார் என்ற நப்பாசைக்காகவும் சிலருக்கு பெரியாரைத் திட்டி தீர்க்க வேண்டி இருக்கிறது.

இன்னும் 10 வருடத்தில் சீமானையும் இப்படி எழுதும் போது உண்மை விளங்கும் 😂.

அதுவரை பெரியாரை சம்பந்தமே இல்லாமல் திட்டிக் கொண்டிருங்கள்....உங்கள் கோயில் விதானங்களில் மோகன்தாஸ் காந்திக்கு மட்டும் இல்லை, ரஜீவ் காந்திக்கும் சிலை ஏற்றுவார்கள் 🤦‍♂️

 

உங்களுடைய கருத்துடன் முரண்பாடில்லை  சகோ

ஆனால்  எங்கே  முரண்படுகின்றோம்  என்றால்

தமிழ் தேசியத்தை  நீங்கள்  சீமானுக்குள்  குறுக்கி  பார்க்கின்றீர்கள்

தமிழ்த்தேசியத்தின்  வீச்சும் காலமும் மிக மிக  அதிகம்

அதன்  பாதையில்

நான் சீமானை  ஒரு  துரும்பாக  மட்டுமே  நினைக்கின்றேன்

தலைவர்  கூட 

தமிழீழப்போராட்டத்தில்  தான் ஒரு  துரும்பு  என்று மட்டுமே சொல்லி  வந்தார்

என்பதையும்  கவனிக்கணும் சகோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2019 at 8:12 PM, tulpen said:

தேங்கிய குட்டையாக  மக்களின் அறிவை வைத்திருக்க விரும்புவதே புழுத்தறிவு எனப்படும். அப்படி தேங்கிய குட்டையாக மூடதனங்களை புழுத்தறிவை  பேண விரும்புபர்களே பெரியாரையும் பகுத்தறிவையும்  திட்டுபவர்கள்.  தெருவில் பூரி விற்கும் லாயக்கு உள்ள  பாரிசாலன் போன்றவர்களின் உளரல்கள் தான் சிலருக்கு வரலாற்று புத்தகம்.  பெரியார் தன்னை என்றும் முன்னிலை படுத்தியதில்லை.  உனது அறிவு எல்லாவற்றையும் விட உயர்ந்த‍து. அதை சிற‍ப்பாக பாவித்து  நான் முன்னேற வேண்டும் என்று மட்டுமே அவர் கூறினார். தான் கூறுவதை கூட அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் உனது அறிவை உபயோகித்து யோசித்து உனக்கு சரிஎன பட்டால் மட்டும் ஏற்றுகொள் என்று தைரியமாக கூறியவர் அவர். 

தெருவில் பூரி  விற்கும் லாயக்குள்ளவனுக்கும் பதில் சொல்ல

அறிவுயீவிகள்  அல்லது பகுத்தறிவாளர்  என்று  தம்மை  தாமே  சொல்லிக்கொள்பவர்களால் 

முடியாதிருப்பதை  என்னவென்பது  சகோ...?

அறிவற்றவன்  எதையும் கேட்பான்

அறிவுள்ளவன்  அல்லது எதையும் பகுத்தறிந்தவனின்  பதிலாக  உங்கள்  பதில்  கூட  இல்லையே??

நான்  இப்படித்தான்

நீ  அதை ஏற்றுக்கொள்ளணும்  என்பது தான்  பகுத்தறிவா??

அதை பெரியாரே  மறுத்திருக்கும் போது

அவர் வழியை  நீங்கள்  பின்பற்றுவதாக  எப்படி  எடுத்துக்கொள்ளமுடியும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Maruthankerny said:

சீமானை இன்று ஏற்றுக்கொண்டு முழுதான ஆதரவை நான் கொடுத்து வருகிறேன் 
காரணம் கேரளா ஆந்திரா கன்னடா வில் தமிழனை இரண்டாம் பிரஜையாகவே காலம்தோறும் வைத்து 
இருக்கிறார்கள். இங்குதான் போலி திராவிடம் பேசி தமிழை தொலைத்தார்கள். இனி தமிழையும் மண்ணையும் 
தமிழ்த்தேசியம் ஒன்றுதான் காக்கும்.
இந்தி திணிப்பு இல்லை...... இல்லை என்ரூ சொல்லிக்கொண்டே திணிப்பு கடந்த 50 வருடமாக 
மும்மொழி கொள்கை என்ற போர்வையில் ஹிந்தி அல்லாத மாநிலங்களில் நடக்கிறது. ஹிந்தி மாநிலங்களில் 
உள்ளவருக்கு ஹிந்தியே எழுத வாசிக்க தெரியாது .... அங்கு மும்மொழியும் இல்லை சொந்த மொழியும் இல்லை.
கிரேக்க மொழி   லத்தீன் மொழி  கீப்ரு போன்ற மொழிகள் அழிந்துபோயின ... அதன் முன்தோன்றிய தமிழ் மொழியாக அல்லாது வாழ்வாக இருந்த ஒரு காரணத்தால் மட்டுமே வாழ்கிறது. இப்போதைய உலகமயமாதல் அதுக்கும் ஆப்பு வைக்க வழி சமைத்து  கொடுக்கிறது ........ இனி போராடினால் மட்டுமே தமிழ் வாழும்.
அதுக்காக சீமான் போராடுகிறான்  .. எமது ஆதரவு என்றும் உண்டு.

பத்து வருடம் கழித்து சீமான் மாறலாம் ............
அதுக்காக இன்றே உங்களை போல இன்றே சாத்திரம் பார்த்து தூற்றுவதும் இல்லை 
அன்று தூற்றுவதுக்கு பின் நிற்க போவதும் இல்லை.
எமது ஆதரவு என்பது கொள்கை நிலை சார்ந்தது  
சீமான் என்ற தனிமனிதன் சார்ந்ததல்ல. 

சீமான் மாறினால் தூற்றித்தான் எழுதுவோம் அதன் பொருள் நாம் மாறுகிறோம் என்பதல்ல 

1. சீமான் போலித் தேசியவாதி என்பது மூக்குச் சாத்திரம் பார்த்துச் சொல்வதல்ல. சீமானின் தகிடுதத்தோம், முன்னுக்கு பின் முரண்பாடான நிலைப்பாடு, இவற்றை வைத்துத்தான் கணிக்கிரேன். இல்லை, ஏமாறுவதுதான் எங்கள் குலவழக்கம். நெருப்பு சுடும் வரை, அது சுடும் என ஏற்க மாட்டோம் என்றால் - அது உங்கள் விதி.

2. கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் தமிழன அடிவாங்குவதற்க்கு திராவிடக் கொள்கை காரணமா? அல்லது கையாலாகாத தமிழ்நாட்டு கட்சிகள் காரணமா? தமிழ்நாட்டின் தலைவராக, ஆட்சி அதிகாரத்தில் ஒரு போதும் அமராத பெரியாரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்? திமுக, திக, அதிமுக எல்லாமே பெயரளவில் மட்டுமே பகுத்தறிவு கட்சிகள். ஈழம் என்ற பதம் இருக்கிறது என்பதற்க்காக ஈபிடிபி யை எப்படி ஈழப் போராளிகள் என்று ஏற்க முடியாதோ அப்படித்தான் இவர்களையும் பகுத்தறிவுவாதிகள் என ஏற்க முடியாது.

3. அண்ணாதுரை-எடப்பாடி வரையானோரை சீமான் விமர்சிப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் பெரியாரை, பகுத்தறிவு கொள்கையை கேள்வி கேட்கும் போதுதான் பிரச்சனை வருகிறது. இந்த 50 வருடத்துக்கு முந்தி செத்த கிழவனோடுதானா சீமான் இன்னும் அரசியல் செய்ய வேண்டும்?

4. இங்கேதான் சீமான் யாரின் B டீம் என்ற கேள்வி எழுகிறது. ஹிந்துவா தமிழ்நாட்டில் காலூன்றாமல் இதுவரை காத்து நிற்பது பகுத்தறிவுவாதமும், பெரியாருமே. ஆக ஹிந்துவா காலூன்ற, பெரியாரை அகற்ற வேண்டும். அதுக்கு ஒரே வழி? பெரியாரை தமிழ் தேசியத்தின் எதிரியாக சித்தரிப்பது. பெரியாரை ஏற்று, அல்லது பெரியாரைப் பற்றி ஒரு வார்த்தை பேசாமல் அழகாக சீமானால் தமிழ் தேசிய அரசியல் செய்ய முடியும். அரை மலையாளி விஜையை தம்பியாக ஏற்கும் சீமானால் ஏன் பெரியாரை ஏற்க இயலவில்லை? ஏனென்றால் -அவருக்கு கொடுக்கப் பட்ட கொந்திராத்து அப்படி. ஹிந்துதுவாவின் நேரடி ஏஜெண்ட் ரஜனி, மறைமுக ஏஜெண்ட் சீமான். 

3 hours ago, விசுகு said:

 

உங்களுடைய கருத்துடன் முரண்பாடில்லை  சகோ

ஆனால்  எங்கே  முரண்படுகின்றோம்  என்றால்

தமிழ் தேசியத்தை  நீங்கள்  சீமானுக்குள்  குறுக்கி  பார்க்கின்றீர்கள்

தமிழ்த்தேசியத்தின்  வீச்சும் காலமும் மிக மிக  அதிகம்

அதன்  பாதையில்

நான் சீமானை  ஒரு  துரும்பாக  மட்டுமே  நினைக்கின்றேன்

தலைவர்  கூட 

தமிழீழப்போராட்டத்தில்  தான் ஒரு  துரும்பு  என்று மட்டுமே சொல்லி  வந்தார்

என்பதையும்  கவனிக்கணும் சகோ. 

இதிலும் முரண்பாடில்லை.

தமிழ் தேசியத்தின் வீச்சு நீண்டது, அதில் தன்னடக்கமாக பிரபா தன்னை துரும்பு என்றாலும், அவர் துரும்பல்ல, தூண்.

ஆனால் சீமான் தூணுமில்லை, துரும்புமில்லை, உள்ளே இருந்து அரிக்கும் துரு.

இந்த குருவுக்கு நீங்கள் வெள்ளையடித்து இரும்பு என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இதிலும் முரண்பாடில்லை.

தமிழ் தேசியத்தின் வீச்சு நீண்டது, அதில் தன்னடக்கமாக பிரபா தன்னை துரும்பு என்றாலும், அவர் துரும்பல்ல, தூண்.

ஆனால் சீமான் தூணுமில்லை, துரும்புமில்லை, உள்ளே இருந்து அரிக்கும் துரு.

இந்த குருவுக்கு நீங்கள் வெள்ளையடித்து இரும்பு என்கிறீர்கள்.

இன்றைய எம் அவலநிலையில்

நட்டாற்றில் கிடப்பவனுக்கு  கிடைக்கும்  ஒரு துரும்பு சீமான்  அவ்வளவு  தான்

தமிழகத்தின் பட்டி  தொட்டியெங்கும் எம்மை கொண்டு செல்ல  யாராவது தேவை

இன்று  அதை சீமான்  செய்கிறார்

ஓரளவு சென்றடைந்தும்  உள்ளது

இன்று  திராவிட கட்சிகளுக்கு  பெரும் தலைவலியாக  தமிழ்த்தேசியம் வந்திருக்கிறது

எனவே இதை இன்று  செய்தவர்  சீமான்

அடுத்த அடுத்த காலங்களை காலம்  தான் தீர்மானிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எங்களை கொண்டு சேர்கிறார? அல்லது ஆமை ஓடு கதை சொல்லி தன்னை கொண்டு சேர்கிறாரா? 

சீமான் பெரியாரை நீக்கி வெற்றிடத்தையே உருவாக்குகிறார். அதில் சுலபமாக ஹிந்துவா பூர.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சீமான் எங்களை கொண்டு சேர்கிறார? அல்லது ஆமை ஓடு கதை சொல்லி தன்னை கொண்டு சேர்கிறாரா? 

சீமான் பெரியாரை நீக்கி வெற்றிடத்தையே உருவாக்குகிறார். அதில் சுலபமாக ஹிந்துவா பூர.

நான் அறிய சீமான் பெரியாரின் சீடர்தான்

அவர் எதிர்ப்பது  திராவிடத்தையே  தவிர பெரியாரை  அல்லவே

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

தெருவில் பூரி  விற்கும் லாயக்குள்ளவனுக்கும் பதில் சொல்ல

அறிவுயீவிகள்  அல்லது பகுத்தறிவாளர்  என்று  தம்மை  தாமே  சொல்லிக்கொள்பவர்களால் 

முடியாதிருப்பதை  என்னவென்பது  சகோ...?

அறிவற்றவன்  எதையும் கேட்பான்

அறிவுள்ளவன்  அல்லது எதையும் பகுத்தறிந்தவனின்  பதிலாக  உங்கள்  பதில்  கூட  இல்லையே??

நான்  இப்படித்தான்

நீ  அதை ஏற்றுக்கொள்ளணும்  என்பது தான்  பகுத்தறிவா??

அதை பெரியாரே  மறுத்திருக்கும் போது

அவர் வழியை  நீங்கள்  பின்பற்றுவதாக  எப்படி  எடுத்துக்கொள்ளமுடியும்???

நான் கூற வந்த விடயம் வரலாற்றின் நீண்ட பக்கங்களை நுனிப்புல் மேயும் நபர்களிடம் கற்கக்கூடாது என்பதே ஆனால் நீங்கள் யார்  கேட்ட கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியவில்லை என்று எழுதாமல் பொதுப்படையாக விளங்கிக்கொள்ள முடியாதபடி  எழுதி உள்ளீர்கள். எமக்கு புரியாத விடயங்களை கேள்வி கேட்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. அந்த கேள்விகளுக்கு அது எம்  நம்பிக்கை, எம் முன்னோர் காட்டிய வழி என்று மழுப்பாமல்  நியாயமான  அறிவு பூர்வமான ஜதார்த்தமான பதில் சொல்வதே சரியானது. எனது  பதிலில் குறிப்பாக  எது தவறானது என்பதை நீங்கள்  சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள உதவியக இருக்கும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. சீமான் போலித் தேசியவாதி என்பது மூக்குச் சாத்திரம் பார்த்துச் சொல்வதல்ல. சீமானின் தகிடுதத்தோம், முன்னுக்கு பின் முரண்பாடான நிலைப்பாடு, இவற்றை வைத்துத்தான் கணிக்கிரேன். இல்லை, ஏமாறுவதுதான் எங்கள் குலவழக்கம். நெருப்பு சுடும் வரை, அது சுடும் என ஏற்க மாட்டோம் என்றால் - அது உங்கள் விதி.

சீமானின் முன்னுக்கு பின் முரண்பாடு என்ன?
சீமான் அரசியலில் இறங்கி இன்று  10 வருடங்களுக்கு மேல் ஆகிறது இந்த தசாப்த காலத்தில் 
உள்ளூர் வெளியூர் அரசியல் நிலைமைகளில் எவ்ளவோ மாற்றம் வந்திருக்கிறது. அவற்றுக்கு ஏற்றால்போல் 
மாறுவதுதான் அரசியலில் வெற்றி கொடுக்கும். 
சீமான் முன்னுக்கு பின் முரண்பாடாக இருந்தால் கூட ........ நீங்கள் முன்னும் தூற்றிக்கொண்டுதான் இருந்தீர்கள் 
முரண்பாட்டுக்கு பின் என்று உங்களுக்கு ஒரு நிலை இல்லை. நீங்கள் காத்திருப்பது எப்போ சீமான் தவறுவான் 
நாங்கள் புத்திசாலிகள் என்று நிரூபித்து விடலாம் என்பதுக்கு. இந்த காத்தருப்பில் 10 வருடத்தை சீரழித்துவிட்டீர்கள்........  இதுதான் பிரபாகரன் விட்டுக்கொடுத்து போயிருந்தால் எப்போதோ இந்தியா விடிவு தந்திருக்கும் என்று 40 வருடம் கழித்தவர்களின் நிலை.இன்று 10 வருடம் புலிகள் இல்லாத காலத்தில் இந்தியா ஈழத்தமிழருக்கு அடிக்கும் ஆப்புகள்தான் மிகவும் அபாயமானது.  

2. கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் தமிழன அடிவாங்குவதற்க்கு திராவிடக் கொள்கை காரணமா? அல்லது கையாலாகாத தமிழ்நாட்டு கட்சிகள் காரணமா? தமிழ்நாட்டின் தலைவராக, ஆட்சி அதிகாரத்தில் ஒரு போதும் அமராத பெரியாரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்? திமுக, திக, அதிமுக எல்லாமே பெயரளவில் மட்டுமே பகுத்தறிவு கட்சிகள். ஈழம் என்ற பதம் இருக்கிறது என்பதற்க்காக ஈபிடிபி யை எப்படி ஈழப் போராளிகள் என்று ஏற்க முடியாதோ அப்படித்தான் இவர்களையும் பகுத்தறிவுவாதிகள் என ஏற்க முடியாது.

சீமான் எங்கே பெரியாரை இழுக்கிறார்?
பெரியாரின் பெயரில்  மேடைபோட்டு .... பெரியார் மீதும் தமிழன் மீதும் மிளகாய் அரைக்கும் 
அரைவேக்காட்டு அரசியலைத்தான் சீமானும் சரி நாங்களும் சரி எதிர்க்கிறோம். 

பெரியாரின் பெயரால் மேடை போடுபவர்களால்தான் இந்த நிலைமை வந்தது என்பதை 
நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள் ........... இதைத்தான் சீமானும் சொல்கிறார். உங்களைப்போலவே நாங்களும் அந்த உண்மையை ஏற்றுக்கொள்கிறோம் 

3. அண்ணாதுரை-எடப்பாடி வரையானோரை சீமான் விமர்சிப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் பெரியாரை, பகுத்தறிவு கொள்கையை கேள்வி கேட்கும் போதுதான் பிரச்சனை வருகிறது. இந்த 50 வருடத்துக்கு முந்தி செத்த கிழவனோடுதானா சீமான் இன்னும் அரசியல் செய்ய வேண்டும்?

பகுத்தறிவு கொள்கை   பெரியாரை சீமான் கேள்வி கேட்பது இல்லை 
10 வருடத்தை வீணடித்த நீங்கள்  ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்ல ஒன்று வேண்டும் என்று 
பற்றிப்பிடிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். 

4. இங்கேதான் சீமான் யாரின் B டீம் என்ற கேள்வி எழுகிறது. ஹிந்துவா தமிழ்நாட்டில் காலூன்றாமல் இதுவரை காத்து நிற்பது பகுத்தறிவுவாதமும், பெரியாருமே. ஆக ஹிந்துவா காலூன்ற, பெரியாரை அகற்ற வேண்டும். அதுக்கு ஒரே வழி? பெரியாரை தமிழ் தேசியத்தின் எதிரியாக சித்தரிப்பது. பெரியாரை ஏற்று, அல்லது பெரியாரைப் பற்றி ஒரு வார்த்தை பேசாமல் அழகாக சீமானால் தமிழ் தேசிய அரசியல் செய்ய முடியும். அரை மலையாளி விஜையை தம்பியாக ஏற்கும் சீமானால் ஏன் பெரியாரை ஏற்க இயலவில்லை? ஏனென்றால் -அவருக்கு கொடுக்கப் பட்ட கொந்திராத்து அப்படி. ஹிந்துதுவாவின் நேரடி ஏஜெண்ட் ரஜனி, மறைமுக ஏஜெண்ட் சீமான். 

இந்துவா என்பது வெறும் மூடர்களுக்கானது 
இந்து மதம் என்பதே ஒரு சாக்கடை  அறிவில்லாதா ஒரு மூடர்கள் வாழும் இடங்களில் 
இது படரும் ......... கல்வியறிவில் மக்கள் முன்னேறும்போது அது விலகும். தென் இந்தியாவை பொறுத்தவரை 
ஒன்று கல்வியறிவு மற்றது பொருளாதார முன்னேற்றம் இவைதான் இந்துவாவை காலூன்றாமல் வைத்து இருக்கிறது. பெரியாரின் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இதுக்கு பலமாக அமைந்தது என்பதை யார் மறுக்கிறான்? பெரியாரின் பெயரில் மேடைபோடும் தி மு கதான் கடந்த 60 வருடமாக  சாதி கட்சிகளை உள்வாங்கி வளர்க்கிறது என்ற முரண்பாட்டைதான் சீமான் வெளிக்கொண்டு வருகிறார் பேசிக்கொண்டு இருக்கிறார். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடை சட்டம் மூலம் ஈழ போராட்ட செய்திகளை 
ஈழத்துடன் ஆனா தொடர்புகளை கிந்தியா மழுங்கடித்து வந்தது 

இன்று தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எல்லாம் புலிக்கொடியையும் பிரபாகரனையும் 
கொண்டு சேர்த்த பெருமை சீமானை மட்டுமே சாரும் இந்த நன்றி கடன் எனக்கு எப்போதும் இருக்கும். 

இன்று கூகிள் முகநூல் யூடுப் போன்றவை திட்டமிட்டு எமது போராட்ட வரலாறை அழித்து வருகிறது 
கடந்த 40 வருடத்தை நீங்கள் புலிகள் புறணி பாடி கழித்தீர்கள் ...... மிகுதி 10 வருடம் சீமான் புறணி பாடி கழித்தீர்கள். ஆதலால் போராட்டத்துக்கு யார் முண்டு கொடுக்கிறான் என்பதையும் .... யார் யார் நேரிடை மறைமுக எதிரி என்பதையும் அரியமாட்டீர்கள். இன்று இணையத்தில் எமது போராட்ட வரலாறுகளை  புலிகளின் வரலாறுகளை எழுதி காத்து வருபவர்கள் 90% தமிழகத்து இளைஞர்கள்தான் இவர்கள் யாவரும் சீமானின் உந்துதலில் உதித்தவர்கள்.
கடந்த 10 வருட ஈழ எழுத்துக்கள் 90 வீதமானவை விட்ட பிழைகளை திருத்துகிறோம் என்று சொந்த வாழ்வுக்கு 
புலிவாந்தி எடுத்தவர்கள்தான் (சமகாலத்தில் நடந்தது என்பதை நினைவில் கொள்க). இராணுவ பிடி ஈழத்தில் கொஞ்சம் கொஞ்சம் தளர வீதிக்கு போனால் இனி மக்களே கல் எடுத்து எறிவார்கள் என்பதால் இப்போ கொஞ்சம்  அடங்கிவிட்டார்கள். 

உலகின் எந்த வடிவிலான அடக்குமுறைக்கும் நான் எதிரானவன் 
அதற்காக குரல் கொடுக்கும் எவனுக்கும் என் ஆதரவு இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நான் கூற வந்த விடயம் வரலாற்றின் நீண்ட பக்கங்களை நுனிப்புல் மேயும் நபர்களிடம் கற்கக்கூடாது என்பதே ஆனால் நீங்கள் யார்  கேட்ட கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியவில்லை என்று எழுதாமல் பொதுப்படையாக விளங்கிக்கொள்ள முடியாதபடி  எழுதி உள்ளீர்கள். எமக்கு புரியாத விடயங்களை கேள்வி கேட்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. அந்த கேள்விகளுக்கு அது எம்  நம்பிக்கை, எம் முன்னோர் காட்டிய வழி என்று மழுப்பாமல்  நியாயமான  அறிவு பூர்வமான ஜதார்த்தமான பதில் சொல்வதே சரியானது. எனது  பதிலில் குறிப்பாக  எது தவறானது என்பதை நீங்கள்  சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள உதவியக இருக்கும்  

தெருவில் பூரி விற்கும் லாயக்கு உள்ள  பாரிசாலன் போன்றவர்களின் உளரல்கள் தான் சிலருக்கு வரலாற்று புத்தகம்.

எந்த அடிப்படையில் இதை  நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்??

Link to comment
Share on other sites

25 minutes ago, விசுகு said:

தெருவில் பூரி விற்கும் லாயக்கு உள்ள  பாரிசாலன் போன்றவர்களின் உளரல்கள் தான் சிலருக்கு வரலாற்று புத்தகம்.

எந்த அடிப்படையில் இதை  நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்??

அவரது இலுமினாட்டி  உளரல்களை கேட்டவன்  என்ற அடிப்படையில் எனது கருத்தை கூறினேன். அவரது பிதற்றல்களை சிலர் உண்மை என்று அப்பாவித்தனமாக நம்புவதாக எனக்கு பட்டதால் அந்த கருத தைக் கூறினேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

அவரது இலுமினாட்டி  உளரல்களை கேட்டவன்  என்ற அடிப்படையில் எனது கருத்தை கூறினேன். அவரது பிதற்றல்களை சிலர் உண்மை என்று அப்பாவித்தனமாக நம்புவதாக எனக்கு பட்டதால் அந்த கருத தைக் கூறினேன். 

மிகத்தவறான

வருந்தத்தக்க கருத்து (தெருவில் பூரி விற்கும் லாயக்கு)

Link to comment
Share on other sites

15 minutes ago, விசுகு said:

மிகத்தவறான

வருந்தத்தக்க கருத்து (தெருவில் பூரி விற்கும் லாயக்கு)

அவரது  வெறும் பிதற்றல்களை கேட்டதால்  அவரை கேலி செய்ய கூறப்பட்ட கருத்து. அது உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். அது சரி புழுத்தறிவு என்று எதைக் குறிப்பிட்டீர்கள். ஓடும் தெளிவான நதி  போல் அல்லாமல் தேங்கிய குட்டையாக அறிவை வைத்திருக்கும் மூடத்தனங்களைத்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, tulpen said:

அவரது  வெறும் பிதற்றல்களை கேட்டதால்  அவரை கேலி செய்ய கூறப்பட்ட கருத்து. அது உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். அது சரி புழுத்தறிவு என்று எதைக் குறிப்பிட்டீர்கள். ஓடும் தெளிவான நதி  போல் அல்லாமல் தேங்கிய குட்டையாக அறிவை வைத்திருக்கும் மூடத்தனங்களைத்தானே. 

(புழுத்தறிவு )அது  திரியின் தலைப்பு

பகுத்தறிவும்

மூடத்தனங்களும்

நம்பிக்கைகளும்

காலம்  வயது  அனுபவம் வாழ்வின் தன்மை  சார்ந்து  மாறக்கூடியன

இதை  வரையறுப்பதும்

நான்  சொல்வதே பகுத்தறிவு  என்பது ஒரு  போதும் நிரந்தரம் கிடையாது

அதை  காலம் எனக்கு  கற்றுத்தந்து போல  உங்களுக்கும்  கற்றுத்தரும்

மேலும் ஒரு  தொழிலை  செய்பவருக்கு 

எந்த அறிவும் இருக்காது  என்பதையே  கண்டித்தேன்

எனக்கு  எந்த காயமும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தெருவில் பூரி விற்கும் லாயக்கு உள்ள  பாரிசாலன்

டீ வித்த மோடிதான் இப்போதைய இந்திய பிரதமர். 

இன்றைய உலகில்  தெருவில் பூரி விற்க தகுதி உடையவனும் 
சமூக நீதி   சமூக பொருளாதார பின்னடைவு  போன்ற அறிவுகள் 
அவனின் பூரி வியாபாரத்த்தில் இருந்து கற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் 

மற்றவர்களை காட்டிலும் அவனுடைய தற்போதைய சமூக பார்வை என்பது சரியானதாக இருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.