Jump to content

புழுத்தறிவு என்பது யாதெனில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

சீமானை பற்றி நீங்கள் எழுதுவதை பார்த்தால், சீமானுக்கே புல்லரிச்சு போகும். சீமான் ஒரு காலத்தில் தன்னை பெரியாரின் பேரன் என அறிவித்தவர்.

அப்படிப் பட்ட சீமானுக்கு எனக்கும் உங்களுக்கும் தெரிந்த பெரியாரினால் ஏற்பட்ட நன்மைகள், பகுத்தறிவுவாததின் தர்க்கம் இரெண்டும் புரிந்திருக்க வேண்டும்.

மிகவும் இலகுவாக - பெரியாரை- திமுக, திக, அதிமுகவிடம் இருந்து மீட்கும் அரசியலை சீமான் கையில் எடுத்திருக்கலாம்.

பெரியாரில் ஒரு தவறுமில்லை, பகுத்தறிவிலும் ஒரு தவறுமில்லை, திராவிடம் ஒரு காலத்தில் தேவைப்பட்ட இப்போ காலவதியான கொள்கை. இப்படி சீமான் சொல்லி இருந்தால் - அது நியாமான அரசியல்.

ஆனால், பிராமணர்கள் தமிழர்கள், பெரியார் பூமி எங்கே இருக்கு காமி, முருகன் முப்பாட்டன், இதெல்லாம் எதை காட்டுகிறது?

சீமான், தமிழ் தேசியத்தில் இருந்து பகுத்தறிவு எனும் இனிப்பை விலக்கி, இந்து சமயம் எனும் விடத்தை கலக்கிறார். இந்துதுவா காலூன்ற எவை தடை? பகுத்தறிவுக் கொள்கையும், பெரியாரும். அவற்றை தமிழன விரோத கருத்துகளாக சித்தரித்து, தமிழரிடம் இருந்து அந்நியப் படுத்திவிட்டால், முருகன் முப்பாட்டன், மாயவன் மாமன் எனச் சொல்லி இந்துதுவாவால் அந்த வெற்றிடத்தை இலகுவில் நிரப்ப முடியும்.

சீமானின் தம்பிகள் உண்மையானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சீமான் பிஜேபியின் ஏஜெண்ட்.

பிரபாகரன், புலிக் கொடியை ஏந்தினால் தமிழ் தேசியவாதிகளை இலகுவாக ஏமாற்றலாம் எனத் தெரிந்தே இதை கையில் எடுக்கிறார். அதுவும் நல்லாகவே வேலை செய்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரை, பகுத்தறிவுவாதத்தை பற்றி முகநூலில் வந்த திரிப்புகளையும் அவதூறுகளையும் மட்டுமே கொண்டு தம் மதிப்பீட்டை வைத்திருப்பவர்களுக்கு. பார்பனர்களின் ஊடகமான விகடனில் இருந்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.