Jump to content

யாழ் மாநகரை கம்பீரமாக கட்டியெழுப்புவோம் – பிரதமர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
FB_IMG_1567851224152.jpg

“அழகிய கம்பீரமாக எழுந்து நிற்கும் நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும்”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர கட்டடத்திற்கு இன்று (07) அடிக்கல் நாட்டிய போது இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

யாழ்ப்பாணம் மாநகர மண்டபத்திற்கு நாம் இன்று அடிக்கல் நாட்டியுள்ளோம். இது யாழ்ப்பாணத்திற்கு அழகிய மண்டபமாக இருக்கப் போகிறது. நல்லூர் ஆலயம் எந்தளவு அழகியதொரு கம்பீரமாக எழுந்து நிற்கின்றதோ அதேபோல் எல்லோராலும் பேசப்படக்கூடிய அழகான புதியதொரு யாழ்ப்பாணம் நகரத்தை கட்டியெழுப்பப்பும் மாபெரும் திட்டம் இது என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் என்னிடம் எப்போது கட்டடம் வரப்போகிறது. எப்பொழுது நிதி ஒதுக்கப்போகிறீர்கள்? எப்பொழுது இதை செய்யப்போகிறீர்கள்? என தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார். என்னிடம் கேட்பார். அமைச்சிடம் கேட்பார். இப்படியாக யாழ் மாநகரத்தை கட்டியெழுப்பும் பணியில் அவரது பங்களிப்பு பாராட்ட வேண்டியதாகும் இவ்வாறானவர்கள் தான் எமக்கு கட்டாயமாக தேவையாகும்.

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபம் அமைக்க இந்தியா நிதி உதவியளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோல் சந்தைத் தொகுதியை அமைத்து வருகின்றோம். நெடுந்தூர பஸ் நிலையக் கட்டடம் அமைக்கப்படுகிறது. மேலும் பலாலி விமான நிலையத்தை நாம் யாழ்ப்பாணம் விமான நிலையம் என்கின்ற பெயரில் அபிருத்தி செய்து வருகின்றோம். முதலாவது கட்டமாக இந்தியாவுக்கு மாத்திரம் தான் விமான சேவை இடம்பெறும். ஆனாலும் காலக்கிரமத்தில் அது சர்தேச மட்டத்தில் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யும் விமான நிலையமாக மாறும் என்பதை கூறிக்கொள்கின்றேன். இதன்மூலம் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தியடையும்.

சுற்றுலாப் பயணிகளை இந்த பிரதேசத்திற்கு ஈர்த்துக்கொள்வதற்கு குறிப்பாக தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும். அதற்கான மூலோபாயங்கள் என்ன என்பதை சிந்தித்து வருகின்றோம் அதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். இதனை பிரதான சுற்றுலா வலயமாக்கவுள்ளோம்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிருத்தி செய்துவருகிறோம் அத்துடன் சீமெந்து தொழிற்சாலையையும் மீள இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். புதிய தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளோம். கிளிநொச்சி, பூநகரியையயும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். அதுபோல் யாழ்ப்பாணத்தில் வர்த்தகம் தொழிற்முயற்சிகளையும் கட்டியெழுப்பவுள்ளோம் இதற்கென புதிய நிதியத்தை ஸ்தாபிக்கப்படும். – என்றார்.

https://newuthayan.com/?p=5116

Link to comment
Share on other sites

தேர்த்தல் நெருங்க "அடியடா பிடியாடா" என்பார்கள். தேர்த்தல் முடிய புத்தர் மூலைக்கு மூலை முளைத்துக்கொண்டே போவார்.( இப்போ அவதானித்து பார்த்தீர்கள் எனில் புத்தர் ஒரு நீண்ட break எடுப்பதை அவதானிக்கலாம். இவர்களின் அனுசரணை இல்லாமல் புத்தர் ஒரு அங்குலமும் நகர மாட்டார் என்பதையும் தமிழ் வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்)

Link to comment
Share on other sites

திட்டங்களை தீட்டுவது நல்லதே, அதை நிறைவேற்ற நிதியை ஒதுக்கி பின்னர் அதை பெரு எதற்கும் திசை திருப்பாமல் இருக்கவேண்டும். திட்டம் முழுமையாக்கப்படல் வேண்டும். 

இப்படி பல திட்டங்கள் எழுத்துடனும் அரை வாசியிலும் இறந்து விட்டன.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடந்தால் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

 

ஒரு கட்டடம்

அடிக்கல் 1 Vs அடிக்கல் 2

டக்ளஸ் தேவானந்தா பசில் ராஜபக்சே கோஷ்டி Vs சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கே கோஷ்டி

70193359_533047853903240_684265928658622

69766391_533046573903368_845639177945586

Link to comment
Share on other sites

அடிக்கல் நாட்ட ல்தி றந்துவைத்தல்  என்று அரசியலவாதிகளின் ஆடம்பர  பந்தா, பொன்னாடை போர்ததுதல் என்ற உதவாக்கரை சம்பிரதாயங்கள் நடைபெறாத  நாடுகளில் நாம் வாழ்வது குறித்து மகிழ்ச்சியடைவதுடன்  எமது நாட்டிலும் இதே போல் நடக்க வேண்டும் என்பது ஒரு கனவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, tulpen said:

அடிக்கல் நாட்ட ல்தி றந்துவைத்தல்  என்று அரசியலவாதிகளின் ஆடம்பர  பந்தா, பொன்னாடை போர்ததுதல் என்ற உதவாக்கரை சம்பிரதாயங்கள் நடைபெறாத  நாடுகளில் நாம் வாழ்வது குறித்து மகிழ்ச்சியடைவதுடன்  எமது நாட்டிலும் இதே போல் நடக்க வேண்டும் என்பது ஒரு கனவு. 

ம்கும் எங்க நடக்க போகுது கிணறு முதல் கக்கூஸ் வரைக்கும் திறப்பு விழாவும் சாவீட்டு அரசியலும் 

Link to comment
Share on other sites

On 9/7/2019 at 8:30 PM, பிழம்பு said:

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் என்னிடம் எப்போது கட்டடம் வரப்போகிறது. எப்பொழுது நிதி ஒதுக்கப்போகிறீர்கள்? எப்பொழுது இதை செய்யப்போகிறீர்கள்? என தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார்.

யாழ்நகர முதல்வர் பக்கா கேடி. நிதி கிடைச்சா சுமந்திரன் போல கொள்ளையடிக்கலாம் என்டு அலைஞ்சு திரிஞ்சிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2019 at 5:00 PM, பிழம்பு said:

“அழகிய கம்பீரமாக எழுந்து நிற்கும் நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும்”

அஹா.... நல்லூர் ஆலயத்தை  இவர்களா கட்டி எழுப்பினார்கள்
இத்தனை நாளும் இது தெரியாமல் இருந்த்திட்டேன்

Link to comment
Share on other sites

7 hours ago, tulpen said:

அடிக்கல் நாட்ட ல்தி றந்துவைத்தல்  என்று அரசியலவாதிகளின் ஆடம்பர  பந்தா, பொன்னாடை போர்ததுதல் என்ற உதவாக்கரை சம்பிரதாயங்கள் நடைபெறாத  நாடுகளில் நாம் வாழ்வது குறித்து மகிழ்ச்சியடைவதுடன்  எமது நாட்டிலும் இதே போல் நடக்க வேண்டும் என்பது ஒரு கனவு. 

பொதுவாக மேற்குலகத்தில் மண்வெட்டியுடன் அரசியல்வாதிகள் காட்சி தருவார்கள். 

2019-0318-federal-courthouse-groundbreaking-1024x576.jpg

 

Link to comment
Share on other sites

அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு 27 லட்சம் செலவாம் ,ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சாப்பாட்டின் விலை 2500 கிட்ட ( தகவல் உறுதிபடுத்தப்பட்டது இல்லை) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனையை பறித்து முசுலிமிடம் கொடுத்தாயிற்று...இப்ப யாழ்ப்பாணத்தையும் பறித்து பிரிக்க ரெடி..பதவி ஆசை பிடித்த  ..காட்டெரி இது..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.