Jump to content

யாழ் நூலகத்தை அழித்தது ஐதேக; பிரதமர் முன் – சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Share0
FB_IMG_1567842246307.jpg

“யாழ்ப்பாணம் நூலகத்தை ஐக்கிய தேசிய கட்சியினர் அழித்தார்கள். தற்போதைய பிரதமர் அப்போது அமைச்சரவை அமைச்சராக இருந்தார். அவரது அமைச்சரவை அமைச்சர்களின் வழிகாட்டலில் தான் நூலகம் எரிக்கப்பட்டது”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில் இன்று (07) நடைபெற்ற மாநகர சபை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் முன்பாக உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணம் மாநகர சபை கட்டடத்தை யாழ் கோட்டையில் இருந்த இராணுவமே அழித்தது. – என்றார்.

https://newuthayan.com/?p=5113

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

இந்த வீர வசனங்களை கடந்த பல வருடங்களாக காணவில்லையே ஏன்ன்ன்ன்ன்?????

நீங்க  வேற?

ஏதோ பேரம்  பேசுதல்  முடியல  போல......?😥

Link to comment
Share on other sites

புது டெல்லியில் கூட்டமைப்பிற்கு புது அரசியல் மெட்டு போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா என எண்ண தோன்றுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kadda+thuraiku.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே அறியாத பெரிய ஒரு உண்மையை இவர் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டார். தமிழ் மக்களுக்கு பெரும் வரலாற்றுச் சேவையை வழங்கிவிட்டார்.. இந்த குடுகுடுப்பை கும்பலின் கூத்தாடி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை அரசியலில் இருந்து  அப்புறத்த ஆயுதம் எம்மிடம் தானே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருநாளும் ஓவ்வொரு கதை. அனைத்து வேட்பாளர்களுடன் பேசிய பின்பே முடிவெடுப்போம் என்று முந்தநாள் சொன்னார்.ரணில் வேட்பாளராக நினறால் ரணிலுக்குத்தான் தமிழ்மக்கள் வாக்களிப்பர் என்று நேற்றுச்சொன்னார்.ஐதேக ஆட்சியில் ரணில் அமைச்சராக இருந்த பொழுதே யாழ்நூலகம் எரிக்கப்பட்டது என்று இன்று சொல்கிறார். இதே ரணிலை பலமுறை காப்பாற்றியது சும்த்திரனால் வழிநடத்தப்படும் கூட்டமைப்புத்தான்.ரணில் வேட்பாளர் என்றால் கூட்டமைப்பின் ஆதரவு தமிழ்மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  ரணிலுக்குத்தான். இந்த வாய்ச்சவடால்கள் எல்லாம் தமிழ்மக்களை ஏமாற்றுகிற  வழமையான செயல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாம் அழித்தவற்றை தாமே தமது கைகளால் மீள கட்டி எழுப்புகிறார்கள்….

September 8, 2019

Sumanthiran.png?resize=630%2C413

தமிழர்களளின் சொத்துக்களை அழித்த ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியே தற்போது அதனை மீள எமக்கு கட்டித் தருகின்றது. இந்த சம்பவம் முழு நாட்டு மக்களுக்கு ஆழமான கருத்துக்களை கூறுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாது தாம் அழித்தவற்றை தாமே தங்களின் கைகளினால் கட்டிக் கொடுப்பதனை  எடுத்துக் கூறுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் நகர மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ் மாநகர சபை மைதானதில் நேற்று  இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய  அவர்,  யாழ்ப்பாண பொது நூலகம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதே சில நொடியில் எரித்தளிக்கப்பட்டது. நாட்டின் தற்போது பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்க அன்று அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். அமைச்சரவையின் வழிகாட்டலின் கீழ் இரு நபர்கள் இந்த நாசகார வேலையை செய்திருந்தார்கள்.

ஆனால் யாழ்ப்பாண மாநகர சபையின் நகர மண்டபம் அவ்வாறு அளிக்கப்படவில்லை. யாழ் கோட்டை தொடக்கம் மாநகர மண்டப கட்டிடம் வரை இராணுவத்தின குண்டுத்தாக்குதல்களினால் சிதைத்து உடைக்கப்பட்டது. இதனை  இப்போது கூறுவதன் நோக்கம் என்னவென்றால் யாரால் அழிக்கப்பட்டதோ அவர்களினாலேயே மீள கட்டியமைக்கப்படவுள்ளது. இந்த சம்பவம்தமிழ்   மக்களுக்கு மட்டுமல்லாது முழு நாட்டு மக்களுக்கும் பல ஆழமான கருத்துக்களை கூறுகின்றது.

அதாவது இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாது நாம் அழித்தவற்றை தாமே தங்களின் கைகளினால் கட்டிக் கொடுப்பதனை என்பதை எடுத்துக் கூறுகின்றது. இது மீள நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமனால் அரசியல் ரீதியாகவும் ஸ்திரதன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும். வெறுமனே பௌதிக அபிவிருத்திகள் இதனை முழுமைப்படுத்தாது. எனவே அரசியல் ரீதியான தீர்வுக்கு பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

ஆனால் அவை இறுதி செய்யப்படாமல் உள்ளது.எனவே அரசியல் தீர்வு கைவிடப்படாமல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் படையினராலேயே நாம் கொன்று குவிக்கப்படாமல் இருப்பதுடன் எமது சொத்துக்கள் அழிக்கப்படாமல் தொடர்ந்து இந்த நாட்டின் மக்களாக  தமிழ் மக்கள் உரிமைகளுடன் நாம் வாழ வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

 

http://globaltamilnews.net/2019/130188/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.