Jump to content

‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்!


Recommended Posts

‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்!

‘வேப்பிங்’ எனப்படும் புகைத்தலினால் அமெரிக்காவில் இது வரையில் 5 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீப காலங்களில் நூற்றுக்கணக்கானோர் சுவாசப் பை தொடர்பான வியாதிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களது வியாதிகளை சாதாரண தொற்று நோய்கள் எனக் கருதி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததனால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவே கருதப்படுகிறது.

vaping-credit-reuters.jpg

சமீப காலங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் பலர் இளைய வயதினர் எனவும் இஅவர்கள் எல்லோரிலும் காணப்பட்ட பொது அம்சம் இவர்கள் வபிங் என்ற புகைத்தலைச் செய்தவர்கள் என்றும் தெரிய வந்த போது இப் புகைத்தலின் பின்னணி பற்றி அமெரிக்க மருத்துவ சமூகம் ஆராய்தது.

மததிய சுகாதார திணைக்களை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்படி சந்தையில் காணப்படும் புகைத்தல் கருவிகளில் பாவிக்கும் திரவங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவை எதிலும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் பதார்த்தங்கள் காணப்படவில்லை என அறியப்படுகிறது. இருப்பினும் நியூயோர்க்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஈ-சிகரட் எனப்படும் புகைத்தல் கருவிகளில் பாவிக்கப்படும் சில திரவங்கள் கருப்புச் சந்தையில் விற்கப்படும் விட்டமின் ஈ (vitamin E) எண்ணை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று கலிபோர்ணியா, மினெசோட்டா மாநிலங்களின் மருத்துவ அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி அங்கு இருவர் வேப்பிங் காரணமாக மரணமடைந்திருக்கிறார்கல எனவும் அவர்களில் ஒருவர் பாவித்த வேப்பிங் கருவியில் ரி.எச்.சி. (THC) எனப்படும் கஞ்சாவின் மூலப்பதார்த்தம் காணப்பட்டது என அறியப்படுகிறது.

மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் பேச்சாளர் இலியானா அறியாஸ் இன் கருத்துப்படி, இது வரை 450 வேப்பிங் தொடர்பான சுவாச நோய்களுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிய வருகிறது.

வட கரோலைனா சுவாச நோய் மருத்துவர் டானியல் பொஃக்ஸ் இன் கருத்துப்படி, எண்ணை அல்லது கொழுப்புக் கலந்த பதார்த்தங்களை புகையாக உள்ளிழுக்கும்போது தொற்று நோய் அல்லாத நிமோனியா, (மருத்துவ உலகத்தில் லிபோயிட் நிமோனியா என அழைக்கப்படும்) ஏற்படக் காரணமாக அமையலாம் எனக் கூறுகிறார்.

நியூயோர்க் சுகாதாரத் திணைக்களத்தின் தரவுகளின்படி வேப்பிங் காரணமாக அனுமதிக்கப்பட்ட 34 நோயாளிகளில் அத்தனை பேரிலும் கஞ்சா தொடர்பான ‘விட்டமின் ஈ’ எண்ணை சம்பந்தப்பட்டிருந்தது எனத் தெரிய வருகிறது.

சருமத்தில் பூசப்படும் விட்டமின் ஈ பதார்த்தங்களால் ஆபத்து எதுவுமில்லை என்றும் அது சுவாசத்துடன் கலக்குப்போது தான் பிரச்சினை எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அறிகுறிகளாக, சுவாசிக்கக் கஷ்டப்படுவதும், நெஞ்சு வலியும் இருந்தனவென்று பல நோயாளிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பலர் தொற்று நோயாளிகளாகத் தீர்மானிக்கப்பட்டு வேறு வழிகளில் சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிலடெல்பியாவைச் சேர்ந்த 19 வயதுடைய கெவின் பொக்கிளேயர் சுவாசப்பை மாற்றத்திற்காகத் தற்போது ‘கோமா’ வில் வைக்கப்பட்டுள்ளார் என அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரெறோயிட் போன்ற மருந்துகளால் சிகிச்சையளிக்கப்பட்டுச் சிலர் குண்மாகியிருப்பிநும் சரியாந சிகிச்சை முறை என்னவென்பதை மருத்துவ சமூகம் இன்னும் விவாதித்துக்கொண்டுதான் இருக்கிறது.

அவர்கள் இளையவர்களுக்கு விடுக்கும் கோரிக்கை – வேப்பிங் செய்யாதீர்கள்!

2006 இல் சிகரட் குடிப்பதை நிறுத்தவென அறிமுகப்படுத்தப்பட்ட ஈ-சிகரட்டுகளைப் பாவிக்கும் இளைய தலைமுறையினரின் (பெரும்பாலும் பாடசாலை மாணவர்கள்) எண்ணிக்கை 2018 இல் 3.6 மில்ல்யன் எனவும், அதற்கு முதல் வருடத்தில் 1.5 மில்லியன் எனவும் அறியப்படுகிறது.

http://marumoli.com/வேப்பிங்-vaping-புகைத்தலால்-அ/

Link to comment
Share on other sites

சுவாசப்பையில் ஒருவித எண்ணெய் திரவம் படிவதால் சுவாசப்பை தனது இயல்பான திறனை இழக்கின்றது. 

 

Link to comment
Share on other sites

அமெரிக்க வைத்தியர்கள் 'வேப்பிங்கை' கை விடுமாறு அறிவுறுத்தல்  

அதேவேளை இது எவ்வாறு  அனுமதிக்கப்பட்டது என்ற  கேள்வி முன்வைக்கப்படுகின்றது

  • The use of e-cigarettes is unsafe for kids, teens, and young adults.
  • Most e-cigarettes contain nicotine. Nicotine is highly addictive and can harm adolescent brain development, which continues into the early to mid-20s.1
  • E-cigarettes can contain other harmful substances besides nicotine.
  • Young people who use e-cigarettes may be more likely to smoke cigarettes in the future.

https://www.cdc.gov/tobacco/basic_information/e-cigarettes/Quick-Facts-on-the-Risks-of-E-cigarettes-for-Kids-Teens-and-Young-Adults.html

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் விரைவில் ஈ சிகரெட்டுக்கு தடை விதிக்க திட்டம்

ஈ சிகரெட்களுக்கு தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் சமீப காலங்களில் நாடு முழுவதும் ஈ சிகரெட் பயன்படுத்துபவர்களில் கணிசமானோருக்கு நுரையீரல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டன.

இதற்கு இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், 450-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளில் 25 சதவீதம் ஈ சிகரெட் பயன்படுத்துவது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மக்கள் உடல் நலமற்றுப் போவதையும், இளைஞர்கள் பாதிக்கப்படுவதையும் அனுமதிக்க முடியாது என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மெலானியா டிரம்பும், ஈ சிகரெட் தடையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஈ சிகரெட் சாதாரண சிகரெட்டை விட குறைந்த பாதிப்பு உள்ளது என தங்களது அங்கீகாரம் ஏதுமின்றி விளம்பரப்படுத்திய ஜூல் லேப்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும், பல்வேறு நறுமணங்களில் வருவன உள்பட ஈ சிகரெட்டை தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அந்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

https://www.polimernews.com/dnews/79613/அமெரிக்காவில்-விரைவில்-ஈசிகரெட்டுக்கு-தடை-விதிக்கதிட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

அமெரிக்காவில் விரைவில் ஈ சிகரெட்டுக்கு தடை விதிக்க திட்டம்

மக்கள் பாவிக்கும் ஒரு பொருளை... சந்தைப் படுத்த முதல்,
அதன் நன்மை தீமைகளை ஆராய... மருத்துவ கழகங்களோ... சுகாதார அமைப்புகளோ....
பரிசோதனைக்கு உட்படுத்தாமல்... சந்தைப் படுத்த எப்படி  சாத்தியப் பட்டது. 

Link to comment
Share on other sites

பரிசோதனைக்கு உட்படுத்தாமல்... சந்தைப் படுத்த எப்படி  சாத்தியப் பட்டது. 

பொதுவாக சோதனை செய்யப்பட்டு, அங்கீகாரம் பெற்று தான் சநதைக்கு வரும். 

ஆனால், இங்கே கள்ள சந்தையில் தயாரிக்கப்பட்ட சில இரசாயன பொருட்கள் கலக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. 

குறிப்பு: கனடாவில் இதுவரை எவரும் இவ்வாறு பாதிக்கப்படவில்லை. ஆனால், சட்ட ரீதியாக பவிக்கப்படும் கஞ்சாவில் கள்ள சந்தை  பொருட்கள் கலக்கப்பட்டதால், ஒரு நிறுவனம் தனது விற்கும் உரிமையை இழக்கும் நிலையில் உள்ளது. 

டிஸ்கி : திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

மக்கள் பாவிக்கும் ஒரு பொருளை... சந்தைப் படுத்த முதல்,
அதன் நன்மை தீமைகளை ஆராய... மருத்துவ கழகங்களோ... சுகாதார அமைப்புகளோ....
பரிசோதனைக்கு உட்படுத்தாமல்... சந்தைப் படுத்த எப்படி  சாத்தியப் பட்டது. 

இஞ்சை சின்னப்பொடியள் எல்லாம் ஊதிக்கொண்டு திரியுதுகள்.

Bildergebnis für Vaping

அதுக்குள்ளை விதம் விதமாய் நறுமணங்கள வேறை சேர்த்திருக்காமெல்லே..

Bildergebnis für Vaping

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரி கோச்சி இல இருந்து வார புகையை விட கூடுதல் புகை விடுவானுங்க 

Link to comment
Share on other sites

மாணவர்கள் மத்தியில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் புழக்கம் 77% அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பதால் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

இதையடுத்து, எலக்ட்ரோனிக் சிகரெட்டில் உள்ள 400 வகையான பிராண்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இ-சிகரெட்டுகளை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இ-சிகரெட்கள் தடைக்கும், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்கர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526988

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் சிகரெட் பெட்டிகள் எல்லாவற்றையும் மூடியே வைத்திருக்கவேண்டும் என்று சட்டம் வந்ததன் பின்னர்  பாவனையாளர்கள் குறைந்துவிட்டதாகக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/13/2019 at 8:45 PM, குமாரசாமி said:

இஞ்சை சின்னப்பொடியள் எல்லாம் ஊதிக்கொண்டு திரியுதுகள்.

Bildergebnis für Vaping

அதுக்குள்ளை விதம் விதமாய் நறுமணங்கள வேறை சேர்த்திருக்காமெல்லே..

Bildergebnis für Vaping

 

ஊருக்கையும் வெளிநாட்டிலிருந்து வந்த இளசுகள் புகைவிட்டு சிலருக்கும் கொடுத்து ஊதிக்கொண்டிந்தார்கள்  நறுமணமாக இருந்தது என பொடியங்கள் சொல்லி திரிஞ்சானுகள் உன்மை நிலை தெரியாமல்

Link to comment
Share on other sites

புகைத்தல் கூட ஒரு மூடத்தனம் தான். ஆனால், புகைத்தலுடன் சோதிடத்தையும் சேர்த்திருந்தால் நாலு பேர் பயனடைந்திருப்பார்கள்  🙂 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.