Jump to content

இங்க பாருங்கோ


Recommended Posts

http://www.thestar.com/article/204762

இதைப்பார்த்து அழுகிறதா சிரிக்கிறதா எண்டு தெரியலை சும்மா சொல்லக் கூடாது நாங்கள் எவ்வளவு முன்னேறிட்டம் :angry: :D:D:(:rolleyes: :'(

Link to comment
Share on other sites

இதில் அழுதவதற்கு என்ன இருக்கின்றது?

ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் எம்மைப் பற்றிய ஒருவிடயம் விரிவாகவும், சரியான முறையிலும் எழுதப்பட்டிருப்பது சந்தோசப் படவேண்டிய விடயம் அல்லவா?

இந்தக் கட்டுரையில் ஒரு புளுகும் இல்லையே? ஏன் அழுகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அது விருப்பம். உங்களுக்குப் பிடித்திருந்தால் பின்பற்றுங்கள். இல்லையென்றால் விடுங்கள். யார் தடுத்தது உங்களை? B) :P

Link to comment
Share on other sites

அதானே? நமக்கு, ஆம்பளைகளிற்கு இப்படி ஒன்றும் செய்யுறாங்கள் இல்லை என்ற கவலையில நாங்கள் இருக்கிற இந்த நேரத்தில நீங்கள் வேற வயித்தெரிச்சலை கிளப்பிக்கொண்டு இருக்கிறீங்கள்...

Link to comment
Share on other sites

கம்பனைக் கடவுளாக்குவதை அனுமதிப்பவர்களுக்கு இது அவசியமான சடங்காக இருக்கலாம்.

ஆனால் நொந்து போயிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம் புலம் பெயர் மக்கள் எப்படியெல்லாம் பங்களிக்கலாம் என்று சிந்திப்பவர்களுக்கு இது எரிச்சலைத் தரும் செய்திதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா சாப்பாடு விழும்.. இப்படியாவது சாப்பிட்டு.. இழப்பதை நிவர்த்திக்கட்டன்...! அநேகம் பெண்கள் அனீமியா எனும் இரத்தத்தில் அயன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் பெண்கள் கூட. காரணம் மாதவிலக்கின் போது அதிக இரத்தம் இழக்கப்படுவதால் மீள இரத்ததை உற்பத்தி செய்ய போதிய அயன் கிடைக்காததால். இதனால் தலைச்சுற்று பலவீனம் தலையிடி எரிச்சல் கோபம் தோல் மஞ்சளாதல் என்று பல அறிகுறிகள் தென்படும். இதுவே முற்றிப் போனா மரணம் கூட ஆகலாம்.

அதுதான் அந்தக் காலத்தில உதுகளைச் செய்து உட்கார வைச்சு சாப்பாடு போடுறவங்க போல..!

பையங்கள் வயசுக்கு வந்தா இப்படிப் பிரச்சனைகள் இல்ல. அதால அதுகளைக் கவனிக்கிறதே இல்ல..! பிறந்தாலும் பொண்ணாப் பிறகனுப்பா.. அத்தனை சலுகைகள்..! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பனைக் கடவுளாக்குவதை அனுமதிப்பவர்களுக்கு இது அவசியமான சடங்காக இருக்கலாம்.

ஆனால் நொந்து போயிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம் புலம் பெயர் மக்கள் எப்படியெல்லாம் பங்களிக்கலாம் என்று சிந்திப்பவர்களுக்கு இது எரிச்சலைத் தரும் செய்திதான்

என்ன சொல்ல வருகின்றீர்கள். கொண்டாடுபவர்களுக்கு ஈழத்தின் மேலே கரிசனையில்லை என்றா?? கொண்டாடதவர்கள் எல்லோரும் ஈழத்திற்காக இவர்களை விட என்ன மேலாகச் செய்தார்கள் என்று சொல்லுங்கள்.

இச் சடங்கால், இவர்கள் செலவளித்தால், மற்றவர்கள் குடி, கூத்து, கும்மாளம் என்று செலவளிப்பார்கள். அது எல்லாம் ஈழப் போராட்டத்திற்கான பங்களிப்பா? அதற்கு யாரும் தடை சொல்வதில்லையே. பகுத்தறிவு என்ற பெயரில் நன்றாக மூளைச்சலவை நடக்கின்றது என்பது உண்மை போல.

ஈழத்துக்காக சிந்திப்பவர்களுக்கு எரிச்சல் தருகின்ற செய்தி என்று வாக்கியம் அமைப்பது மூலம், இதை எதிர்ப்பதை நியாயப்படுத்த வேண்டா.இதைக் கொண்டாடுபவர்களுக்கு அவர்களை விட ஈழத்தின் மீது பற்றிருக்கின்றது.

Link to comment
Share on other sites

ஆனால், இப்படியான சந்தர்ப்பங்களின் போதுதானே வெவ்வேறு நாடுகளில் வாழும் உறவினர்கள் பல வருங்களின் பின் ஒன்று சேர்கின்றார்கள்....

எனவே, இதைப் பிழை என கூறமுடியவில்லை...

Link to comment
Share on other sites

நாகாPகம் வளர வளர என்னமோ எல்லாம் புகுத்துறாங்க..அதிலும் குறிப்ப கனடா...பிரித்தானியாவில் சில புதிய புகுத்தல்களும் நடைபெறுகிறது...பணம் சம்பாதிப்பதற்காக புதிய மாடலிங் சோ வைக்கிறார்கள் போல...

அந்த பெண்ணை சுற்றி எத்தனை பெண்கள் பரதம் ஆடுகிறார்கள்..அது போக குதப்பி வேறு வெட்டுகிறார்கள்...

பத்தா குறைக்கு மது கூட கொடுக்கப்படுகிறது..இதையெல்லா

Link to comment
Share on other sites

ஆம்பிள்ளைகளுக்கும் இதுபோண்று ஒரு மாறுதல் உண்டு, அதை குரல் மாறுதல், உடலில் ஆங்காங்கு முடி முளைத்தல் மற்றும் தலையில் முடி உதிருவது அதிகரித்தல் மூலம் அறியலாம்.

ஆனால் பெண்களுக்கு முதல் சில நாட்களில் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்சினைகளை தவிர்பதற்க்கே இப்படியான முறை அந்த காலத்தில் வழக்கில் இருந்தது. இன்னும் தமிழ் நாட்டில் உள்ள பழக்கங்களில் இதுவும் ஒன்று.

Link to comment
Share on other sites

எங்களுக்கென்றொரு தனிக்கலாச்சாரம் இருக்கெல்லோ அதைப் பின்பற்றவேண்டும் தப்பில்லை.

ஆனால் இந்தக்கலாச்சாரத்தோடு எங்களுடைய வசதியையும் வெளிக்காட்ட வேணுமெல்லவா? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமோ? இது தப்போ தப்பில்லையோ எனக்குத் தெரியாது.

இந்த சம்பிரதாய நிகழ்வுக்கு மது, மாமிசமா? அத்துடன் மதகுருவின் வரவும் என்னய்யா கலாச்சாரம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.