Jump to content

ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் பலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Airport-720x450.jpg

ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் பலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து ஒக்டோபர் 16ஆம் திகதி இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்தியாவின் புதுடில்லி, கொச்சி மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலுள்ள விமான நிலையங்களுக்கே பலாலியிலிருந்து விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான பயணிகள் விமான சேவையை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமலசிறி தெரிவித்தார்.

இந்தியாவின் விமான சேவை நிறுவனங்களான அலையன்ஸ் ஏயர் மற்றும் இண்டிகோ ஆகியன யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கான சேவையில் ஈடுபட பேச்சுக்கள் நடத்தியுள்ளன. அத்துடன், பிற பிராந்திய விமான சேவை நிறுவனங்களும் யாழ்ப்பாணத்திலிருந்து சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஒக்டோபர்-16ஆம்-திகதி-முதல்/

Link to comment
Share on other sites

பலாலியில் இருந்து கொச்சின், மும்பை, டெல்லிக்கே விமான சேவை

Palaly_Airport-300x200.jpgயாழ்ப்பாணத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவதுடன், பலாலி அனைத்துலக விமான நிலையம் வரும் ஒக்ரோபர் 16ஆம் நாள் செயற்பட ஆரம்பிக்கும் என்று சிறிலங்கா  விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் எச்எம்சி நிமலசிறி தெரிவித்துள்ளார்.

”பலாலி விமான நிலையத்தை இயக்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுள்ளன. பலாலியில் இருந்து கொச்சின், மும்பை, புதுடெல்லிக்கு விமானங்கள் இயக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தியாவின் அலையன்ஸ் எயர் மற்றும் இன்டிகோ ஆகிய நிறுவனங்கள் பலாலியில் இருந்து விமான சேவைகளை ஆரம்பிக்க பேச்சுக்களை நடத்தி வருவதாக  போக்குவரத்து மற்று விமான சேவைகள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்குப் பின்னர் ஏனைய பிராந்திய விமான சேவைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கிடையே, பலாலி விமான நிலையத்தில் பணியாற்றுவதற்குத் தேவையான தமது திணைக்களத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுங்கத் திணைக்களமும் பலாலியில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

அதேவேளை, பலாலி விமான நிலையத்தில்  சுங்கத் தீர்வையற்ற வணிக நிலையமும், அமைக்கப்படவுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/09/08/news/39922

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.