Jump to content

தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 ஆண்டுகள் சிறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

September 7, 2019

 

dinamalr.jpg?resize=411%2C123

தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முத்தமிழ் முதல்வன் என்பவரை அந்த சமயத்தில் வெளியான தினமலர் நாளிதழில் ‘டீக்கடை பெஞ்ச்’ பகுதியில் பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்கு மதுபானம் கடத்துபவர்களிடம் முத்தமிழ் முதல்வன் லஞ்சம் பெற்றார் எனவும், சட்டவிரோதமான முறையில் சொத்துக்கள் வாங்கினார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து, தனக்கு எதிராக அவதூறு பரப்பு விதமாக செய்தி வெளியிட்டதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரி தினமலர் நாளிதழுக்கு முத்தமிழ் முதல்வன் கடிதம் அனுப்பிய போதும் தினமலர் நிர்வாகம் அதற்கு பதில் அளிக்காதமையினால் தினமலர் நாளிதழுக்கு எதிராக முத்தமிழ் முதல்வன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் கிருஷ்ணகிரி நீதிமன்றம் நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில் செய்தி ஆதாரங்களுடன் வெளியிடப்படவில்லை என்றும், யூகங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன் இதுபோன்ற செய்திகளில் குற்றம்சாட்டுப்படுபவரின் பெயரை நேரடியாக குறிப்பிடமாட்டார்கள். ஆனால், தினமலர் நாளிதழ் காவல் அதிகாரியின் பெயரையே நேரடியாகக் குறிப்பிட்டுள்ளது எனவும் தெரிவித்தது.

இதனையடுத்து, அவதூறு செய்தி வெளியிட்டதற்காக தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா 5 லட்சம் ரூபா நஷ்ட ஈடு முத்தமிழ் முதல்வனுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நஷ்ட ஈடு வழங்கவில்லை எனில் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். #தினமலர்  #ஆசிரியர் #சிறை

http://globaltamilnews.net/2019/130118/

Link to comment
Share on other sites

On 7/16/2019 at 6:44 PM, வல்வை சகாறா said:

ராசவன்னியருக்குத் திருமணம் வாழ்த்துவோம்  என்ற

தலைப்பை போட்ட பாஞ்சை என்ன செய்யலாம்?

வல்வை சகாறா அவர்களே! இதற்காக தயவுசெய்து நீதிமன்றம் போய்விடாதீர்கள். நாங்களே எங்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்வோம்.🤨

இனிமேல் என்னுடைய செய்திகளை மட்டுமல்ல, ஊடகச் செய்திகளையும் நம்பிப் படிக்கலாம் என்று இத்தால் உறுதி கூறுகிறேன். 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.