Jump to content

அதிகாரங்களை வழங்கியிருந்தால் அபிவிருத்தியடைந்திருப்போம்


Recommended Posts

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தமிழீ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட அதிகாரங்களை, இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்கு  இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தால்,  இன்று வடக்கு - கிழக்கு அபிவிருத்தியடைந்த பிரதேசமாக மிளிர்ந்திருக்குமென, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

வரணி - இடைக்குறிச்சி  பகுதியில், நேற்று (07), பனை சார் உற்பத்திப் பொருள்களுக்கான சேவை நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தாங்கள் ஒரு நிலையான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால், ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டுமெவும் ஆனால் தற்போது தமது இனத்தினுடைய ஒற்றுமையை சிதைப்பதற்காக பல்வேறுபட்ட தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆகவே, அனைவரும் அவதானமாக இருந்து, தமது இனத்தின் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, நிலையான அரசியல் தீர்வை எய்துவதற்காக ஓரணியில் பயணிக்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/அதிகாரங்களை-வழங்கியிருந்தால்-அபிவிருத்தியடைந்திருப்போம்/72-238063

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் நிறைய காசு சேர்த்திருப்போம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.