Jump to content

அந்தி சாய்ந்தது 'இது ஒரு பொன்மாலைப் பொழுது'


ampanai

Recommended Posts

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 2 பà¯à®°à¯, à®à®£à¯à®à®³à¯à®à¯à®à®¾à®© à®à®£à¯à®£à®¾à®à®¿à®à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ à®à¯à®³à¯à®¸à¯ à®à®ªà¯

அந்தி சாய்ந்தது 'இது ஒரு பொன்மாலைப் பொழுது'

வைரமுத்துவின் முதல் திரையிசைப் பாடலான, "இது ஒரு பொன் மாலைப் பொழுது" பாடலை மீட்டும்போதெல்லாம் நிழல்கள் நாயகன், ராஜசேகர் மனத்திரையில் வந்துபோவார்.

ஒரு மெல்லிய வயலின் இசையைத்தொடர்ந்து வரும்,
"வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதிபெறும்
திருநாள் மலரும் சேதிவரும்
கேள்விகளால் வேள்விகளை நான் வெல்வேன்" என்ற பாடல் வரிகளை பலமுறை திரும்பத் திரும்ப கேட்ட ஞாபகம். வைரமுத்துவையும் ராஜசேகரையும் அறிமுகமாக்கிய இந்த பாடலை ரசிக்காத உள்ளங்களே தமிழ்ச் சமுதாயத்தில் இருக்கமுடியாது.

இன்று ராஜசேகர் யார் என்று கேட்டால் சரவணன் மீனாட்சி சீரியலின் நடிகர் என சொல்லும் இளம் மட்டத்துக்கு, நிழல்கள் படத்தின்பின் இயக்குநர் ராபர்ட் என்பவருடன் இணைந்து (ராபர்ட்-ராஜசேகர் இரட்டையர்) பாலைவனச் சோலை, சின்னப்பூவே மெல்லப் பேசு போன்ற அவரின் முன்னைய பிரதிபலிப்புக்கள் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. தரமான ஒரு குணச்சித்திர நடிகர் மற்றும் இயக்குநரை இழந்தது தமிழ் சினிமா!!

ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா!

 

மூலம் முகநூல் பக்கம் 

அவருக்கு இருந்தது ஒரே ஆசை... அது நிறைவேறாமலேயே போயிட்டார்!-நடிகர் ராஜசேகரின் இறப்பால் கலங்கும் மனைவி

’மனசுக்குள் மத்தாப்பு’, ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர்கள், ‘ராபர்ட்- ராஜசேகர். இரட்டை இயக்குநர்களான இவர்களில், ராபர்ட் கடந்த ஆண்டு இறந்து விட்டார். ராஜசேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

ஏழு படங்கள் வரை இயக்கியிருக்கும் ராஜசேகர், ராபர்ட்டுடன் இணைந்தே ஒளிப்பதிவாளராக திரைப் பயணத்தைத் தொடங்கியவர். ‘நிழல்கள்’ உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். சினிமாவிலிருந்து ஒதுங்கிய பின், சில சீரியல்களை இயக்கினார். ‘சரவணன் மீனாட்சி’, ‘மாப்பிள்ளை’ சீரியல்களில் நடித்தார். தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘சத்யா’ சீரியலிலும் நடித்துக்கொண்டிருந்தார்.

’மனசுக்குள் மத்தாப்பு’ படத்தை இயக்கியபோது நடிகை சரண்யாவைத் திருமணம் செய்தார். பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக சரண்யாவுடனான திருமணம் விவாகரத்தில் முடிய, இரண்டாவதாக தாரா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

தாராவிடம் பேசினோம். ‘மூச்சுத் திணறல் இருக்குன்னு ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணினேன். தனி மனுஷியா இருந்து கவனிச்சிட்டிருந்தேன். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. மருத்துவமனையில பணம் கட்ட முடியலங்கிறதுக்காக, ரெண்டு நாள் ட்ரீட்மென்டே தராம போட்டுட்டாங்க. எம்.ஜி.ஆரால் சம்பாதிச்சவங்களால் நடத்தப்பட அந்த ஆஸ்பத்திரி, ஒரு நடிகன்ங்கிறதுக்காகவாவது கொஞ்சம் இரக்கம் காட்டி நடந்திருக்கலாம்.

 

கடைசி நேரத்துல, ரத்த சம்பந்தம் இல்லாத சீரியல் இயக்குநர் விக்ரமாதித்யன் வந்து பணம் கட்டின பிறகு சிகிச்சை தந்தாங்க. வேதனையான இன்னொரு விஷயமும் இருக்கு. இவர், எம்.ஜி.ஆரோட வளர்ப்பு மகளான ராதாம்மாவுக்கு சம்பந்தி முறை வேணும். இவரோட சொந்தத் தங்கச்சியை அந்த வீட்டுல கொடுத்திருக்காங்க.

படம் எடுத்தார், சினிமாவுல நடிச்சார்னு என்ன பெருமை இருந்தாலும் சம்பாதிக்கலை. இவரைக் கட்டிக்கிட்டதுல இருந்து வாடகை வீட்டுலதான் இருந்தோம். இப்பத்தான் சின்னதா ஒரு ஃபிளாட் வாங்கினார். அதுல கிரஹப்பிரவேசம் நடத்தி இன்னும் குடியேறக்கூட இல்லை. சாகறதுக்குள் சொந்த வீட்டுல ஒரு நாள் வசிச்சிட்டுப் போயிடணும்கிறதுதான் அவரோட ஒரே ஆசையா இருந்தது. அது நிறைவேறலை.

ஆனா, முப்பது வருஷமா அவரோட நான் வாழ்ந்த வாழ்க்கையைக் குறை சொல்லவே மாட்டேன். என்னை 100 சதவிகிதம் சந்தோஷமாவே வச்சிருந்தார். இன்னும் மிச்சமிருக்கிற என்னோட காலத்தை நினைச்சாத்தான் எப்படி நகருமோனு பயமா இருக்கு’ - என்றபடி கலங்குகிறார் தாரா.

ராஜசேகரின் உயிர் பிரிகிற கடைசித் தருணத்தில், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் நடிகை சரண்யாவும் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைக்குச் சிகிச்சை எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தார் அவர்.

https://cinema.vikatan.com/tamil-cinema/director-and-actor-rajasekar-passes-away

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான நடிகர்.....ஆழ்ந்த இரங்கல்கள்......!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.