Jump to content

மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று  ஆரம்பம்

(லியோ நிரோஷ தர்ஷன்)

உறுதிமொழிகளுக்கு அமைவான பொறுப்புக்கூறலில் இலங்கையின் நம்பகத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கேள்வியெழுப்படலாம். மேலும் நிலையான பொறிமுறையொன்றின் கீழ் இலங்கையை கண்காணிக்கும் யோசனையை சிறப்பு அந்தஸ்துள்ள அமைப்புகள் கூட்டத்தொடரில் வலியுறுத்தவும் உள்ளன.

HRC.jpg

அதேபோன்று இந்த கூட்டத்தொடரின் போது சவேந்திர சில்வாவின் நியமனம் உள்ளிட்ட இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் எட்டுப்பேர் கொண்ட நிபுணர் குழுவின் கூட்டறிக்கை குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளன.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று  திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இந்த கூட்டத்தொடர்  ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

உறுதிமொழிகளுக்கு அமைவான பாதுகாப்புத்துறைசார்  மறுசீரமைப்புக்களை இலங்கை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் குறித்தும் துரித விசாரணைகளையும் இந்த குழு வலியுறுத்தியுள்ளது.

உண்மை , நீதி , இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான விஷேட அறிக்கையாளர் பாபின் சல்வியோலி, வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான ஐ.நா செயற்குழு உறுப்பினர்களான பேர்னாட் துஹெய்மி , தா ஹூங்கா பாய்க், கூறியா எஸ் சிலோமி, யூசியானோ கசன், கென்ரிகாஸ் மைக்கெவிசியஸ், சட்டத்துக்கு முரணான படுகொலைகள் தொடர்பான விஷேட அறிக்கையாளர் ஹெக்னேஸ், கோலாமாட் , சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு எதிரான விஷேட நிபுணர் நீல்ஸ் உள்ளிட்டவர்களே இவ்வாறு இலங்கை குறித்து கூட்டறிக்கையினை வெளியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்ற கூட்டத்தொடரில்  இலங்கையின் மனித உரிமை நிலவரம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் குறித்து பிரதான நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட வில்லை. ஆனால் கூட்டதொடரின் பக்க கலந்துரையாடல்களின் போது இலங்கை குறித்து சர்தேச மன்னிப்புச்சபை  மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட  ஐ.நாவில் நிரந்தர சிறப்பு அந்தஸ்துள்ள  மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன  இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளன.

இதேவேளை பொறுப்புக்கூறல் விடயத்தில் கடப்பாடுடைய  சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதானது ஏற்றுக்கொள்ள கூடிய விடயமல்ல. அத்தோடு பாதிப்புற்ற தரப்பினரை அச்சுறுத்துவதாகவும் அந்த மக்களை அச்ச சூழலுக்குள் தள்ளுவதுமாகவே இந்த நியமனம் அமையப்பெற்றுள்ளது. இந் நிலையானது நல்லிணக்கத்தை முற்றிலுத் பாதித்து விடும் என்றும் ஐ.நா நிபுணர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.

இறுதிக்கட்ட போரில் 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக சவேந்திர சில்வா செயற்பட்டார். போர்க்குற்றங்களிலும், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களிலும் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படையணி தொடர்புப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே ஐ.நா அமைதிகாக்கும் படைக்கான விசேட ஆலோசனைக் குழுவிலிருந்து 2012 ஆம் ஆண்டு சவேந்திர சில்வா நீக்கப்பட்டார். இதே வேளை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30 (1) தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதன் ஊடாக இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் பொறுப்குக்கூறலுக்கு இலங்கை உடன்பட்டுள்ளது  என்றும் நிபுனர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே சவேந்திர சில்வா விவகாரம் மற்றும் கால அவகாசத்தின் அடிப்படையிலான முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. குறிப்பாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் நிவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூகா இலங்கை விவகாரத்தை 42 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வுகளின் போது கவனத்தில் கொள்ளவுள்ளனர்.

மேலும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை குறித்தும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்துள்ள நிலையில் இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்களுடன் தொடர்புப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற இராணுவ தளபதிகளுக்கு அரசாங்கம் உயர் பதவிகளை வழங்கியமை தொடர்பில் சர்வதேச சமூகம் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சவேந்திர சில்வாவின் நியமனமானத்தின் பின்னர் இந்த நிலை மேலும் வலுவடைந்துள்ள நிலையில் ஐ.நா செயலாளர் நாயம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உட்பட பல நாடுகளும் கடுமையான விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளன.

 

https://www.virakesari.lk/article/64393

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

giphy.gif

அவையள் எப்போ பிரேக் விடுவினம் என்டு காத்துகொண்டுருக்கினம் ..👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.