Jump to content

நியா­ய­மான தீர்வை வலி­யு­றுத்தும் பொறுப்பு இந்­தி­யா­விற்கு உள்­ளது - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நியா­ய­மான தீர்வை வலி­யு­றுத்தும் பொறுப்பு இந்­தி­யா­விற்கு உள்­ளது - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

(நா.தனுஜா)

ஜம்மு – காஷ்மீர் தொடர்பில் இந்­திய அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்கை அவர்­க­ளது நாட்டின் உள்­ளக விவ­கா­ர­மாகும். ஆனால் இலங்கை - இந்­திய ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இணைந்த வடக்கு, கிழக்கில் மாகா­ண­ச­பை­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் முழு­மை­யாக வழங்­கப்­பட வேண்டும் என்று இணங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

எனவே தமிழர் பிரச்­சினை தொடர்பில் நியா­ய­மான உரிய தீர்வை வழங்­கு­வ­தற்­கான அழுத்­தத்தை பிர­யோ­கிக்க வேண்­டிய தார்­மீக பொறுப்பு தற்­போதும் இந்­தி­யா­விற்கு உண்டு. ஆகவே ஜம்மு – காஷ்மீர் விவ­கா­ரத்­தையும் இலங்கைத் தமிழர் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விவ­கா­ரத்­தையும் தொடர்­பு­ப­டுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார்.

25.jpg

தமிழர் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு இலங்கை அர­சாங்­கத்­திற்கு இந்­தியா அழுத்தம் பிர­யோ­கிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூறி­வ­ரு­கின்­றது. அதே­போன்று டில்­லியில் பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்து இவை தொடர்பில் வலி­யு­றுத்­து­வ­தற்கும் கூட்­ட­மைப்பு எதிர்­பார்த்­துள்­ளது.

இருப்­பினும், அண்­மையில் இந்­திய அர­சாங்கம் அதன் அர­சி­ய­ல­மைப்பின் சரத்து 370  மற்றும் 35 ஏ என்­ப­வற்றை இரத்துச் செய்­ததன் ஊடாக  ஜம்மு – காஷ்­மீரின் சிறப்பு அந்­தஸ்தை நீக்கி, அதன் சுயாட்­சியை முடி­விற்குக் கொண்டு வந்­தி­ருந்­தது. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் இலங்­கையின் தமிழர் பிரச்­சி­னைக்கு விரும்­பத்­தக்க தீர்­வொன்று வழங்­கப்­ப­டு­வ­தற்கு இந்­தியா அழுத்தம் வழங்­குமா என்ற கேள்­விகள் எழுந்­தி­ருக்­கின்­றன.

இந்­நி­லையில், கூட்­ட­மைப்பு இன்­னமும் இந்­தி­யாவை நம்­பு­கின்­றதா என்று வின­விய போதே  செல்வம் அடைக்­க­ல­நாதன் இவ்­வாறு பதி­ல­ளித்தார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது:

ஜம்மு – காஷ்மீர் தொடர்பில் இந்­திய அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்கை அவர்­க­ளது நாட்டின் உள்­வி­வ­கா­ர­மாகும். அதில் எம்மால் தலை­யி­டவோ அல்­லது கருத்­து­கூ­றவோ முடி­யாது. ஆனால் இலங்கை –- இந்­திய ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இணைந்த வடக்கு, கிழக்கில் மாகா­ண­சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் முழு­மை­யாக வழங்­கப்­பட வேண்டும் என்று இணங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அது காலா­வ­தி­யாக கூடி­ய­தொரு ஒப்­பந்­த­மல்ல. எனவே தற்­போதும் தமிழர் பிரச்­சினை தொடர்பில் நியா­ய­மான உரிய தீர்வை வழங்­கு­வ­தற்­கான அழுத்­தத்தை பிர­யோ­கிக்க வேண்­டிய தார்­மீகப் பொறுப்பு இந்­தி­யா­விற்கு உண்டு. அத­ன­டிப்­ப­டையில் அவர்­க­ளு­டைய கட­மையை அவர்கள் நிறை­வேற்ற வேண்டும் என்றார்.

அதே­வேளை மக்கள் விடு­தலை முன்­ன­ணியும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­ப­தற்கு எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலே சிறந்த தருணம் என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க கூறி­யி­ருக்­கிறார். இது­தொ­டர்பில் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை வின­விய போது பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் யாருக்கு ஆத­ரவு வழங்­கப்­போ­கின்றோம் என்­பது குறித்த எந்­த­வொரு தீர்­மா­னத்­திற்கும் இன்­னமும் வர­வில்லை. எமக்­கென சில கொள்கைகளும் கோரிக்கைகளும் உள்ளன. அவற்றை பூர்த்திசெய்யும் வகையில் செயற்திட்டங்களை கொண்டிருப்பதுடன், அதனைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கும் தரப்பினரையே நாங்கள் ஆதரிக்க முடியும். எனவே அனைத்துத் தரப்பிலிருந்தும் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடும்வரை பொறுத்திருக்க வேண்டும்.

 

https://www.virakesari.lk/article/64399

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

நியா­ய­மான தீர்வை வலி­யு­றுத்தும் பொறுப்பு இந்­தி­யா­விற்கு உள்­ளது - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

நம்ம நாட்டாமை தம்பி பசுபதி ரீச்சர வச்சிருக்கான் டோவ்.!

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடைக்கல மாதவே இவனுகள் இன்னும் இந்தியாவை நம்புறாங்க  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
    • 😔 ம்ம்ம்ம் குதிரையை குளம் வரை கூட்டிப்போகலாம், நீரை அதுதான் குடிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.