Jump to content

ஒற்றை டெஸ்டில் பங்களாதேஷை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்


Recommended Posts

image_d7a069f095.jpg

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே சட்டோகிராமில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த ஒற்றை டெஸ்ட்டை ஆப்கானிஸ்தான் இன்று வென்றது.

இன்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: 342/10 (துடுப்பாட்டம்: ரஹ்மட் ஷா 102, அஸ்கர் ஆப்கான் 92, ரஷீட் கான் 51, அஃப்ஸர் ஸஸாய் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 4/116, ஷகிப் அல் ஹஸன் 2/64, நயீம் ஹஸன் 2/43)

பங்களாதேஷ்: 205/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 52, மொஷாடெக் ஹொஸைன் ஆ.இ 48, லிட்டன் தாஸ் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 5/55, மொஹமட் நபி 3/56)

ஆப்கானிஸ்தான்: 260/10 (துடுப்பாட்டம்: இப்ராஹிம் ஸட்ரான் 87, அஸ்கர் ஆப்கான் 50, அஃப்ஸர் ஸஸாய் ஆ.இ 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 3/58, மெஹிடி ஹஸன் மிராஸ் 2/35, நயீம் ஹஸன் 2/61, தஜியுல் இஸ்லாம் 2/86)

பங்களாதேஷ்: 173/10 (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹஸன் 44, ஷட்மன் இஸ்லாம் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 6/49, ஸகிர் கான் 3/59)

போட்டியின் நாயகன்: ரஷீட் கான்

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/ஒற்றை-டெஸ்டில்-பங்களாதேஷை-வீழ்த்தியது-ஆப்கானிஸ்தான்/44-238199

Link to comment
Share on other sites

ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை வென்று வரலாற்று சாதனை

 

டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஓர் அணியை வெல்லவேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடிய ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை 173 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தது.

இதன்மூலம் 224 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்துள்ளது

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் எடுத்த ஆப்கானிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் ரஷீத்கான் வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தார்.

இதுவரை அயர்லாந்து, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுடன் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான், மொத்தம் தான் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sport-49637116

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷித் கான் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார்.

September 10, 2019

rasithkhan.jpg?resize=624%2C351இளம் வயதில் அணித்தலைவராக பதவி ஏற்ற ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார். பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 224 ஓட்ட வித்தியாசத்தில் வென்று ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்ட ரஷித் கான் இளம் வயதில் அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற நிலையில் இவ்வாறு சிறப்புமிக்க வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற வீரர் என்ற சாதனைப் படைத்த ரஷித் கான், அறிமுக போட்டியிலேயே வெற்றி பெற்ற அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும் அணித்தலைவராக அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் அடித்ததுடன் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றி முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதுடன் ஆட்ட நாயகன் விருதையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இதேவேளை டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 10 நாடுக்ளுக்கு எதிராக தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை பங்களாதேஸ் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  #ரஷித்கான்  #சாதனை #ஆப்கானிஸ்தான்

 

http://globaltamilnews.net/2019/130252/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.