Jump to content

பௌத்த விகாரை வளாகத்தில் இந்து ஆலய மகா கும்பாபிசேகம் மட்டக்களப்பில் மத நல்லிணக்கம்


Recommended Posts

இனங்களுக்கிடையில் மத இன நல்லிணகத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரை விகாராதிபதி பட்ட பொல ஸ்ரீ குனானந்த நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைய  மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் ஜெயந்திபுரம் பௌத்த விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி  ஆலயத்தின் பிரதிஷ்டா மகாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் நிகழ்வு மிக சிறப்பாக நேற்று நடைபெற்றது.

கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய பிரதம குரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் கிரிகைகள் ஆரம்பமாகி  தானிய வாசம் ,வாஸ்து சாந்தி ,,தூபி ஸ்தாபனம்  யாக பூஜைகள் இடம்பெற்று ஸ்ரீகண் திருஷ்டி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு  இடம்பெற்றது.

விநாயர் வழிபாடுகளுடன் விசேட யாக பூஜைகளுடன்     கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்  நிகழ்வுகள்  சிறப்பாக நடைபெற்றது.

IMG_6817.JPG

 

 

விநாயர் வழிபாடுகளுடன் விசேட யாக பூஜைகளுடன்     கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்  நிகழ்வுகள்  அடியார்கள் புடை சூழ   அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன்  கோலாகலமாக நடைபெற்றது .

தொடர்ந்து பிரதான  கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூல மூர்த்தியாகிய  கணபதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது .பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன பிரதம குரு கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய பிரதம குரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில்  நடைபெற்ற  மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன  நிகழ்வில் ஜெயந்திபுரம் கிராம  மக்கள்  கலந்து சிறப்பித்தனர் .

https://www.virakesari.lk/article/64348

IMG_6824.JPG

IMG_6857.JPG

IMG_6871.JPG

Link to comment
Share on other sites

"பௌத்த விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி  ஆலயத்தின்..."

 

நீண்ட கால அடிப்படையில் இதனால் சைவர்களுக்கு பாதிப்பு என நாம் எண்ணலாம்.

ஆனால், நிகழ்காலத்திற்கு உதவும். இது சைவத்தை அது சார்ந்த மொழி, கலாச்சாரத்தை இன்றுடன் அழிக்கப்படாமல் வைத்திற்குக்க உதவும். இன்று இருந்தால் தான் நாளை பற்றி எண்ணலாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

நீண்ட கால அடிப்படையில் இதனால் சைவர்களுக்கு பாதிப்பு என நாம் எண்ணலாம்.

ஆனால், நிகழ்காலத்திற்கு உதவும். இது சைவத்தை அது சார்ந்த மொழி, கலாச்சாரத்தை இன்றுடன் அழிக்கப்படாமல் வைத்திற்குக்க உதவும். இன்று இருந்தால் தான் நாளை பற்றி எண்ணலாம்.

புத்த பெருமானைச் சைவர்களும், சைவக்கடவுளரை பெளத்தர்களும் வணங்கிக் கொண்டாடுவது, இலங்கையில் தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் நிகழ்வு. இன்று கேடுகெட்ட சில அரசியல்வாதிகள் தோற்றம்பெறும் வரையில், அவரவர் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையூறுகள் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ.... இது, இறால்  போட்டு... சுறா பிடிக்கிற மாதிரி இருக்கு.
நாளைக்கு சைவ கோவிலுக்குள், ஒரு மூலையில்  புத்தரை வைத்து மத நல்லிணக்கம் செய்வம்  என்று,
புத்த பிக்குமார் ஆரம்பித்தால்.... அதனை தடுக்க முடியாமல், போகும்.
கதிர்காம கந்தனுக்கு நடந்த மாதிரி, மூலக்  கடவுளை ´...  ஒரு மூலையில்  இருத்தி விடுவார்கள். :grin:

சிங்களவன் லேசுப்  பட் ட ஆள் இல்லை. அவன் செய்யும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும்,
பெரிய காரண, காரியங்கள் இருக்கும். சூதனமாக  நடந்து கொள்ளுங்கோ.....

Link to comment
Share on other sites

கண்டி தலதாமாளிகளியில் சம முக்கியத்துவம் கொடுத்து சர்ச்சும், கோவிலும், மசூதியும் கட்டும் போது தான் உண்மையான மத நல்லிணக்கத்துக்கு முதற்படியாக அமையும்.

Link to comment
Share on other sites

முதன்மை மதமாக பௌத்தம் ஒரு பல்லின மத சமூக நாட்டில் இருப்பதே இந்த நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று. இருந்தாலும் இந்த முயற்சி  பாராட்டுக்குரியதே.

Link to comment
Share on other sites

மதம்பிடித்தால் அந்த மதத்தால் ஆட்கொண்ட மனிதர்கள் செய்வது என்னவென்று அவர்களுக்கே தெரியாது. மதம்கொண்ட யானைபோல் செயற்பட்டு மனிதவாழ்வையே  நாசம் செய்துவிடுவார்கள். அதனால்தான் எம் முன்னோர்கள் சைவத்தை மதம் என்று பெயரிட்டு அழைக்காது சைவ சமயம் என்று அழைத்தார்களோ.?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயர் புத்தருக்கு அபிசேகம் செய்திருக்க வேணும்....

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

ஐயர் புத்தருக்கு அபிசேகம் செய்திருக்க வேணும்....

ஐயர் பிராமண குலவழி வந்தவராக இருந்தால் வரும்படி இல்லாமல் செய்யமாட்டார். :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Paanch said:

ஐயர் பிராமண குலவழி வந்தவராக இருந்தால் வரும்படி இல்லாமல் செய்யமாட்டார். :shocked:

அதுதான் அவையள் புத்தரை தூக்கிபிடிக்கவில்லை என்று நினைக்கிறன்

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

அதுதான் அவையள் புத்தரை தூக்கிபிடிக்கவில்லை என்று நினைக்கிறன்

பாவம் புத்தர். 😢

அவரைத் திருப்பதிக்குக் கொண்டுசென்று பிரதிட்டை செய்தால் என்ன....? :100_pray:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.