Jump to content

இலங்கை தேசிய பாராலிம்பிக் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற அனீக்: புற்றுநோயால் காலை இழந்தபின்னும் சாதனை


Recommended Posts

மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற அனீக்

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக, தனது ஒரு காலை இழந்த இளைஞர் ஒருவர், இலங்கை தேசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இலங்கை கிழக்கு மாகாணம் - காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர்தான் அனீக். 2018ஆம் ஆண்டு இவர் தனது இடது காலை இழந்தார். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம், புற்றுநோயாக மாறியதால் அவரது காலை அகற்ற வேண்டியதாயிற்று.

தனது 10 வயதில் தாயையும், 16 வயதில் தந்தையையும் இழந்த அனீக், தற்போது மாமாவோடு (தாயின் தம்பி) வசித்து வருகின்றார். இவருக்கு 14 வயதில் ஒரு தம்பியும் இருக்கிறார்.

மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் தேசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, கடந்த 05 மற்றும் 06ஆம் தேதிகளில் கொழும்புவிலுள்ள சுகததாஸ மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அனீக் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் கலந்து கொண்டு, இந்த மூன்றிலும் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கங்களை தட்டிச்சென்றார்.

தேசிய பாராலிம்பிக் குழு ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில் 190-க்கும் மேற்பட்ட தடகள போட்டிகள் இடம்பெற்றன.

இவற்றில் சுமார் 800 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 18 வயதுக்குக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் அனீக் கலந்துகொண்டார்.

வாழ்க்கையில் சோதனைகளையும் கடினமான நெருக்கடிகளையும் சமாளித்து கொண்டே, இந்த சாதனையைப் புரிந்துள்ள அனீக் உடன் பிபிசி தமிழ் பேசியது.

"நான் பாவித்துக் கொண்டிருந்த மாற்றுக் கால் ஒரு தடவை உடைந்து விட்டது. அதனையடுத்து மருத்துவர் ஒருவரை காத்தான்குடியில் சந்தித்தேன். அப்போதுதான் விளையாட்டில் எனக்குள்ள ஆர்வம் பற்றி அவர் அறிந்து கொண்டார். அதனையடுத்து தேசிய பரா மெய்வல்லுநர் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை, அந்த மருத்துவர்தான் உரிய தரப்பினருடன் பேசி பெற்றுத் தந்தார்," என்றார் அனீக்.

விளையாட்டு மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக, விளையாட்டுப் பயிற்சிகளில் அனீக் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார். அவருக்கென்று பயிற்சியாளர்கள் எவருமில்லை. சுயமாகவே பயிற்சி செய்து, இந்த வெற்றிகளை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கென்று 'பிளேட் ஃபுட்' (Blade foot) எனும் மாற்றுக் கால்கள் உள்ளன. அதன் விலை சுமார் 15 லட்சம் இலங்கை ரூபாய். எனது பொருளாதார நிலையில் அந்த வகை காலை என்னால் வாங்க முடியாது. எனவே, நான் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் சாதாரண காலினைக் கொண்டுதான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றேன். 'பிளேட் ஃபுட்' இருந்தால், எனது ஓட்ட வேகத்தையும், நீளம் தாண்டுதல் தூரத்தினையும் இன்னும் அதிகரிக்க முடியும்," என்றும் அனீக் கூறினார்.

துபாயில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச பரா மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தகுதி சுற்று போட்டிகளாகவும், தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற அனீக்

விளையாட்டுத் திறமைகளோடு, தனது கல்வியிலும் அனீக் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். வரக்காபொல பிரதேசத்திலுள்ள தனியார் பாடசாலையொன்றில், ஆங்கில மொழி மூலம் இவர் உயர்கல்வி கற்று வருகின்றார்.

'எனக்கு ஏற்பட்ட எந்தவோர் இழப்பும், எனது திறமைகளுக்குத் தடையாக அமைந்து விடவில்லை' என்று சொல்வது போல், தனக்குக் கிடைத்த மூன்று தங்கப் பதக்கங்களையும் கழுத்தில் அணிந்து கொண்டு, புன்னகைத்து நிற்கிறார் அனீக்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49620272

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.