Jump to content

பாக்கிஸ்தான் செல்வதற்கு இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் மறுப்பு


Recommended Posts

இலங்கையின் ஒரு நாள் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண ரி20 அணியின் தலைவர் லசித் மலிங்க உட்பட முக்கிய வீரர்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக பாக்கிஸ்தான் செல்வதற்கு மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

திமுத் கருணாரட்ன தினேஸ் சந்திமல் அஞ்சலோ மத்தியுஸ் சுரங்க லக்மால் நிரோசன் டிக்வெல குஜால் ஜனித் பெரோ தனஞ்செய சில்வா திசார பெரேரா லசித்மலிங்க அகில தனஞ்செய ஆகிய வீரர்களே பாதுகாப்பு காரணங்களிற்காக பாக்கிஸ்தான் செல்ல மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள அணியின் வீரர்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் இன்று சந்தித்துள்ளனர்.

பாக்கிஸ்தான் தொடரிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வீரர்களிற்கு தெளிவுபடுத்துவதற்காகவும் பாக்கிஸ்தான் செல்வதற்கு அவர்கள் தயராகயிருக்கின்றார்களா என்பதை அறிவதற்காகவும் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கையின் முன்னாள் விமானப்படை தளபதியும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பாதுகாப்பு ஆலோசகருமான ரொசான் குணதிலக பாக்கிஸ்தானில் காணப்படும் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் சபை மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இலங்கை அணியினருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது மேற்குறிப்பிடப்பட்ட பத்து வீரர்களும் பாக்கிஸ்தான் செல்வதற்கு மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் பாக்கிஸ்தானில் ரி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கான அணியை தெரிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/64461

Link to comment
Share on other sites

மெத்தியூஸ், சந்திமல், திசர ஆகியோராலேயே அணிக்குள் பிரச்சினை: தற்போது அந்த நிலையில்லையென்கிறார் அசந்த டிமெல்

தலைமைப்பயிற்றுவிப்பாளர் என ஒருவர் இல்லாதபோது இலங்கை வீரர்கள் பதற்றமின்றி அச்சமின்றி விளையாடுகின்றனர் என இலங்கையின் தெரிவுக்குழு தலைவர் அசந்தடி மெல் தெரிவித்துள்ளார்.

தலைமைப்பயிற்றுவிப்பாளர் இருக்கின்றாரா இல்லையா என்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் சபை அரசியல் காரணமாக புதிதாக நியமிக்கப்படும் தலைமை பயிற்றுவிப்பாளர் அழுத்தங்களிற்கு உள்ளாகின்றார், உடனடியாக வெற்றிகளை காண்பிக்குமாறு அவர் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார் என தெரிவித்துள்ள அசந்த டிமெல் இதன் காரணமாக தலைமைப் பயிற்றுவிப்பாளர் அந்த அழுத்தங்களை வீரர்கள் மீது திணிக்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தலைமைப் பயிற்றுவிப்பாளர் என ஒருவர் இல்லாததன் காரணமாக வீரர்கள் அழுத்தங்களற்ற நிலையில் உள்ளனர் தலைமை பயிற்றுவிப்பாளர் ஒருவர் இருந்த நேரத்தை விட இலகுவாக விளையாடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு நீண்ட கால நோக்கில் தலைமைப்பயிற்றுவிப்பாளர் அவசியமா இல்லையா என்பது தெரியாது ஆனால் அவர்கள் தலைமைப்பயிற்றுவிப்பாளர் இன்றி நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார்கள் என குறிப்பிட்டுள்ள அசந்தடிமெல், இலங்கை அணிக்கு துடுப்பாட்ட, பந்து வீச்சு, களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்களே அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் லசித் மலிங்க அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார் எனவும் அசந்த டிமெல் குறிப்பிட்டுள்ளார்.

மலிங்க இளம் வீரர்களுடன் நன்கு இணைந்து செயற்படுகின்றார், இளம் வீரர்களும் அவ்வாறு அவருடன் இணைந்து செயற்படுகின்றனர், சிரேஸ்ட வீரர்கள் சிலருடன் மலிங்கவிற்கு காணப்பட்ட பிரச்சினைகள் இளம் வீரர்களுடன் இல்லை எனவும் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒன்றாக மதிய உணவிற்கு செல்கின்றனர் இளம் வீரர்கள் அவரின் பின்னால் உள்ளனர் அவருக்கு ஆதரவு வழங்குகின்றனர் இது நல்ல அறிகுறி எனவும் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சிரேஸ்ட வீரர்கள் காரணமாகவே பிரச்சினைகள் காணப்பட்டன அவர்கள் அணிக்குள் தங்களுக்கென குழுக்களை உருவாக்கி வைத்திருந்தனர் எனவும் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

திசர பெரோ, அஞ்சலோ மெத்தியூஸ், தினேஸ் சந்திமல் போன்ற வீரர்களிற்கு பிரச்சினைகள் காணப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ள அசந்த டி மெல் இந்த வீரர்களை அணியில் மீண்டும் சேர்த்தால் அதனால் அணிக்கு சாதகமான நிலை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/64398

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.