Jump to content

1000 வருடங்கள் பழமையான, தமிழகத்தை சேர்ந்த நடராஜர் சிலை.. ஆஸ்திரேலியாவிலிருந்து நாளை திரும்புகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Australia to return the 1,000-year old Nataraja idol to India on tomorrow

1000 வருடங்கள் பழமையான, தமிழகத்தை சேர்ந்த நடராஜர் சிலை.. ஆஸ்திரேலியாவிலிருந்து நாளை திரும்புகிறது

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் அந்த நாட்டின் தேசிய கேலரி இயங்கிவருகிறது. இங்கு உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த அரிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த சுபாஷ்கபூர் என்ற பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்யு டீலரிடமிருந்து 5.6 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் பணம் கொடுத்து ஆஸ்திரேலிய கேலரி வெண்கலத்தால் செய்த நடராஜர் சிலையை வாங்கியுள்ளது. அதை தனது கேலரியில் காட்சிக்கும் வைத்துள்ளது.
2012ம் ஆண்டு சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ்கபூரை போலீசார் கைது செய்தபோது, ஆஸ்திரேலிய கேலரிக்கு நடராஜர் சிலையை விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இவர் மீதான வழக்கு தமிழகத்தில் நடந்துவருகிறது.

இதையடுத்து இந்தியா அந்த சிலையை திருப்பிக்கொடுக்குமாறு ஆஸ்திரேலிய கேலரியை கேட்டுக்கொண்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் சிலையை திருப்பி அளிக்க ஆஸ்திரேலிய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.

16ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த நடராஜர் சிலை, நாளை தமிழகம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more at: https://tamil.oneindia.com/news/international/australia-to-return-the-1-000-year-old-nataraja-idol-to-india-on-tomorrow-362516.html

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

Australia to return the 1,000-year old Nataraja idol to India on tomorrow

1000 வருடங்கள் பழமையான, தமிழகத்தை சேர்ந்த நடராஜர் சிலை.. ஆஸ்திரேலியாவிலிருந்து நாளை திரும்புகிறது


16ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த நடராஜர் சிலை, நாளை தமிழகம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more at: https://tamil.oneindia.com/news/international/australia-to-return-the-1-000-year-old-nataraja-idol-to-india-on-tomorrow-362516.html

16 ம் நூற்றாண்டு  ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதா? 

Link to comment
Share on other sites

அவுசைப்பொறுத்தவரையில், சிலைக்கும் ' கூட  விசா' வேண்டும்  🙂 

8 minutes ago, tulpen said:

16 ம் நூற்றாண்டு  ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதா? 

 

சுபாஷ்கபூர் ஆயிரம் வருட சிலையை 16ஆம் நூற்றாண்டு எனக்கூறி $$$$$$ பெற்றிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

16 ம் நூற்றாண்டு  ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதா? 

 

7 hours ago, ampanai said:

அவுசைப்பொறுத்தவரையில், சிலைக்கும் ' கூட  விசா' வேண்டும்  🙂 

சுபாஷ்கபூர் ஆயிரம் வருட சிலையை 16ஆம் நூற்றாண்டு எனக்கூறி $$$$$$ பெற்றிருப்பார்.

தற்ஸ்  தமிழ்காரன்.... தண்ணி அடிச்சு போட்டு, தட்டச்சு செய்யும் போது.... 
பதினாறு (16), பத்தாக (10) தெரிந்திருக்கு என்றே நினைக்கின்றேன். :grin:

சிலையின் விலை,  5.6 மில்லியன்  டாலர் எனும் போது, 
அது நிச்சயம்  1000 வருடம் பழைமையானதாக  இருக்க சந்தர்ப்பம் அதிகம்.

சரி போகுது..... கபூர்,  காசை வாங்கிக் கொண்டு, கம்பி நீட்டிட்டான். 
நமக்கு சிலையும் வரப் போகுது....
பாவம் அவுஸ்திரேலியாதான்....சரியாய் நொந்து போச்சுது.   🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.