Jump to content

4,000 கார்களை காவிச்சென்ற கப்பல் கவிழ்ந்ததில் நால்வரை காணவில்லை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

korean-ship-shank-with-car-720x450.jpg

4,000 கார்களை காவிச்சென்ற கப்பல் கவிழ்ந்ததில் நால்வரை காணவில்லை!

தென்கொரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்திற்கு அருகேயுள்ள கடல்பகுதியில் கவிழ்ந்துள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு சுமார் 4,000 ஹூன்டாய் கோல்விஸ், கியா ரகக் கார்களை ஏற்றிச்சென்ற குறித்த கப்பல் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது கப்பலில் 24 பேர் இருந்துள்ளதாகவும், அதில் 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் 4 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போன நால்வரும் இயந்திர அறையில் இருந்ததாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்களில் 13 பேர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், 6 பேர் தென்கொரியர்கள் எனவும், ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விபத்துக்குள்ளான கப்பல் 6,900 கார்களைக் காவிச் செல்லக்கூடியது என்று தென்கொரிய கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/4000-கார்களை-காவிச்சென்ற-கப்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

golden-ray-cargo-ship-four-crew-members-are-missing-fro-720x439.jpg

கடலில் கவிழ்ந்த சரக்குக் கப்பல் : 3 தென்கொரியர்கள் மீட்கப்பட்டனர்

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்திற்கு அருகே உள்ள கடல்பகுதியில் சுமார் 4,000 கார்களுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ‘கோல்டன் ரே’ கப்பலினுள் சிக்கியிருந்த 4 தென்கொரியர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

சரக்குக் கப்பலில் துளையை ஏற்படுத்தி அவர்கள் வெளியே கொண்டுவரப்பட்டதாக அமெரிக்கக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த கப்பல் தென்கொரியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றிச் சென்ற நிலையில், நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.

சம்பவ தினத்தன்று 20 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை தொடர்ந்து 4 பேர் இயந்திர அறையில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்பதற்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வந்த நிலையில் ஒவ்வொருவராக உலங்கு வானூர்தியின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

கப்பல் விபத்தை எதிர்கொண்ட போது தீ ஏற்பட்டதால், இரவு நேரங்களில் மீட்புப் பணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கடலில்-கவிழ்ந்த-சரக்குக்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.