Jump to content

பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் -வர்த்தமானி வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Government_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped-720x450.jpg

பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் -வர்த்தமானி வெளியீடு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் இணையதளத்தில் குறித்த வர்த்தமானி அறிவித்தல்  2140/15  என்னும் இலக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னர் ஊடகத்துறை அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் நியமனம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட அதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திற்கு கிடைத்துள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பதி லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பாதுகாப்பு-அமைச்சின்-கீழ/

Link to comment
Share on other sites

பாதுகாப்பு அமைச்சின் கீழ் அரச ஊடகத்தை கொண்டுவந்தமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் ; சுதந்திர ஊடக இயக்கம் 

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என்பதால் அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனத் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

fmm.JPG

ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விசேடமாக தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் சந்தர்ப்பமொன்றில், இவ்வாறான செயற்பாடு நிலைமையை மிக மோசமாக்கும். அதேபோன்று, அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கான அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்துவதில்லை என உறுதிமொழியளித்து பதவியேற்ற நல்லாட்சி ஜனாதிபதியொருவரின் கீழ் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் மிகவும் வருத்தமடைகின்றது. 

அரசியலமைப்பின் பிரகாரம் வேண்டியதோர் விடயத்தை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவருவதற்கு உள்ள உரிமையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாக விளங்கும் இந்த தீர்மானம், தற்போதைய அரசியல் சூழ்நிலையோடு வைத்து நோக்கப்பட வேண்டுமென்று சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், வெகுசன ஊடகங்கள் சமூகப் பொறுப்புமிக்க விதத்தில் செயற்படுவதை உறுதி செய்வது தேர்தல் ஆணையாளருக்கு உள்ள விசேட பொறுப்பு என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கீழ் உள்ள ஒரு விடயம் அத்தகைய ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு உட்பட்டதா? என்பது கேட்கப்பட வேண்டிய சட்டப் பிரச்சினையாகும். அதேசமயம் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தவுள்ளதாக தற்போதளவில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்பவும் ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை கொண்டுவருவது விவாதத்திற்குரியதாகும்.

எந்தவொரு தேர்தலும் நீதி மற்றும் சுதந்திரமான தேர்தலொன்றாக அமைவது வாக்காளர்களுக்கு சுயாதீனமாக தீர்மானமொன்று மேற்கொள்வதற்குத் தேவையான தகவல்கள் பக்கச்சார்பின்றி வழங்கும் ஊடக பயன்பாட்டிலாகும் என்பது சுதந்திர ஊடக இயக்கத்தின் நிலைப்பாடாகும். 

ஜனாதிபதியவர்கள் மேற்கொண்ட தீர்மானம் அந்த உரிமையை மீறுவதாக அமைகின்றது. அதன் காரணமாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்து, நீதி மற்றும் சுதந்திரமான தேர்தலொன்றை நடத்துவதற்கு உறுதியளிக்குமாறும் சுதந்திர ஊடக இயக்கம் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கின்றது. 

https://www.virakesari.lk/article/64541

Link to comment
Share on other sites

 

Can be interpreted as threat to media freedom in SL: Ruwan

SLRC is incurring a monthly loss of over Rs.50 million

Non-Cabinet Minister Ruwan Wijewardene today wrote to President Maithripala Sirisena and said the latter’s decision to take over the Sri Lanka Rupavahini Corporation (SLRC) under his purview cannot be prevented from being interpreted as a threat to media freedom.

In a letter to the President, the minister said his many attempts to appoint an eligible and an efficient chairman to the SLRC to replace the incumbent inefficient demonstration were obstructed by President Sirisena.

"According to audit reports, the SLRC is incurring a monthly loss of over Rs.50 million. The rank of the SLRC has also gone down to the 6th place among TV channels according to media surveys. This clearly shows the current chairwoman had failed in promoting the SLRC. A majority of SLRC employees will also confirm this," he said in the letter.

"When the situation is as such, the decision to take the SLRC under the Ministry of Defence's purview by an extraordinary gazette seems to have created a troublesome situation. The SLRC was never taken under the Defence Ministry even during the time of the war. Therefore, the decision cannot be prevented from being interpreted as a threat to media freedom in Sri Lanka," he said.

Though the gazette notification said the SLRC was taken over to implement programmes for the promotion of peace, harmony and reconciliation among people whilst ensuring national security through the use of audiovisual media, enhancement of the entertainment quality of the people and creation of a higher media culture using state-of-the-art technology, Minister Wijewardene said the President never intervened in the SLRC affairs for the last four years.

"It is also regrettable to note that you, who expect to create a media culture of a higher standard, has failed to inform me, the subject minister, before issuing the gazette notification," he said.

http://www.dailymirror.lk/top_story/Can-be-interpreted-as-threat-to-media-freedom-in-SL-Ruwan/155-174308

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.