Jump to content

சு.கவின் கலைந்துபோன கனவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சு.கவின் கலைந்துபோன கனவு

கே. சஞ்சயன் / 2019 செப்டெம்பர் 09 திங்கட்கிழமை, மு.ப. 10:43 Comments - 0

image_0dad5c8f76.jpg2015இல் தான் பொறுப்பு ஏற்ற நாட்டை மாத்திரமன்றி, தனது தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் குழப்பமான நிலைக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

1951ஆம் ஆண்டில் இருந்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சமமான போட்டிக் கட்சியாக இருந்துவந்த; மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இப்போது, மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது மாநாடு, செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில், சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றே கடந்த சில மாதங்களாக, அந்தக் கட்சியின் தலைவர்கள் கூறிவந்தார்கள்.

ஆனால், செவ்வாயன்று நடந்த மாநாட்டில், அதுபற்றிய எந்த அறிவிப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடவில்லை. ஜனாதிபதித் தேர்தல் பற்றியோ, அதனை எதிர்கொள்வதற்கான உத்தி பற்றியோ எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் நழுவினார் அவர்.

எனினும்,“19ஆவது திருத்தச் சட்டதால் இனிமேல் ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. பாதுகாப்பு அமைச்சுகூட அவரிடம் இருக்காது. பிரதமர் பதவிக்கே அதிகாரம் இருக்கும். அதன் மீதே கவனம் செலுத்த வேண்டும்” என்று மாத்திரமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

‘’சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று கூறி, எட்டாத பழத்தை விட்டு நழுவிய நரியார் போலத் தான், ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது.

முன்னதாக, சுதந்திரக் கட்சித் தலைவர்கள் பலரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் போட்டியிடுவார் என்று அடித்துக் கூறினார். அதனை யாராலும் தடுக்க முடியாது என்று சவாலும் விடுத்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட, அதற்கான விருப்பத்துடனேயே இருந்தார். 2015இல் பதவியேற்ற போது, தான் இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று கூறியிருந்தார்.

ஆனால், காலப்போக்கில் அவருக்கு மீண்டும் அதிகாரத்தில் இருக்கும் ஆர்வம் வந்த பின்னர், அவ்வாறு தெளிவாக கூறுவதை தவிர்த்தே வந்தார். போட்டியிடுவது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்றே கூறிக்கொண்டிருந்தார்.

இப்போது, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற அவரது கனவு கலைந்துவிட்டது. ஐ.தே.கவும் அவருக்கு வாய்ப்பளிக்கத் தயாராக இல்லை.

இந்தநிலையில், ஏதாவதொரு கூட்டணியுடன் ஒட்டிக்கொள்வதென்ற முடிவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்து விட்டார். ஐ.தே.கவுடன் மீண்டும் கூட்டு வைப்பது முடியாத காரியம் என்பதால், வேறு வழியின்றி, மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பேச்சுகளை ஆரம்பித்திருக்கிறார்.

இரண்டு கட்சிகளையும் கூட்டாக இணைத்துப் போட்டியிடுவதற்கு, சில பேரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எதிர்கால அரசாங்கத்தில், மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவரது முக்கியமான விசுவாசிகளுக்கும் எந்த இடங்களை ஒதுக்குவதென்பது இப்போது நடக்கின்ற பேச்சுகளின் முக்கியமான அம்சமாகக் கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைந்த பின்னர், அவர்கள் அறிவித்த வேட்பாளரே (கோட்டாபய) மாற்றப்படலாம் என்று கதைவிட்ட சுதந்திரக் கட்சியினர், இப்போது தமது சுருதியை மாற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

கொழும்பு மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, 2020இல் நாமே ஆட்சியமைப்போம் என்று கூறிய நிலையில், அந்த மாநாட்டில் உரையாற்றிய ஏனைய தலைவர்கள் வேறு விதமாகப் பேசினார்கள்.
எதிர்காலங்களில், தங்களின் ஆதரவுடனேயே அரசாங்கம் அமைக்கப்படும் என்று சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மஹிந்த அமரவீர கூறியிருந்தார்.

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர உரையாற்றிய போது, சுதந்திரக் கட்சியை சேர்த்துக்கொள்ளாமல், எந்தக் கட்சியாலும் 47 சதவீத வாக்குகளைக்கூட பெற முடியாது என்று கூறினார்.

2020இல் ஆட்சியமைக்கப் போகும் கட்சி என்று ஜனாதிபதி கூறுகின்ற நிலையில், தயாசிறி ஜயசேகரவும் மஹிந்த அமரவீரவும் இன்னொரு கட்சியுடன் கூட்டுச்சேர்வது பற்றிப் பேசியது குழப்பமாகவே இருந்தது.

அடுத்தநாள் கொழும்பில் சுதந்திரக் கட்சித் தலைமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த அமரவீர, ஜனாதிபதி 2020இல் ஆட்சியமைப்போம் என்று கூறியது, எதிர்காலத்தில் எங்களின் ஆதரவுடனேயே அரசாங்கம் அமைக்கப்படும் என்பதையே குறிக்கிறது என்று சமாளித்தார்.

இந்தத் திருத்த முயற்சிக்கு, பொதுஜன பெரமுன தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களைக் காரணமாகத் தெரிகிறது. ஏனென்றால், ஜனாதிபதியின் இந்தப் பேச்சு, கூட்டணி முயற்சிகளைப் பாதிக்கக்கூடும் என்று அதே நாளில் வாசுதேவ நாணயக்கால கூறியிருந்தார்.

ஜனாதிபதியின், 2020இல் ஆட்சியமைப்பது என்ற பேச்சு, மஹிந்த தரப்புக்கு கடும் சீற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்றே தெரிகிறது. அதேவேளை, இப்போதைய நிலையில், பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணித்தாலேயே சுதந்திரக் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு வந்திருக்கிறது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு.

அதுகூட நிலையானதா நிரந்தரமானதா, இறுதியானதா என்றால், இல்லை என்றே கூறலாம். இரண்டு கட்சிகளுக்கும் இப்போது பரந்துபட்ட கூட்டணி தேவைப்படுகிறது, பொதுஜன பெரமுனவுக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்துகொண்டால் தான், ஜனாதிபதித் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைத் தாண்ட முடியும் என்ற நம்பக் கூடிய நிலையில் இருக்கிறது.

சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட்டாலோ, மறைமுகமாக ஐ.தே.கவுக்கு ஆதரவு கொடுக்க முனைந்தாலோ, அது தமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கருதுகிறது பொதுஜன பெரமுன. அதனால், எப்படியாவது தமது கூட்டுக்குள் கொண்டு வந்துவிடும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது,

அதுபோலவே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இப்போதைய நிலையில் பொதுஜன பெரமுனவை விட்டால் வேறு கதியில்லை. சுதந்திரக் கட்சியில் இருந்த பெரும்பாலானவர்கள், மஹிந்தவுக்குப் பின்னால் ஓடிவிட்டார்கள். கடைசியாக எஸ்.பீ.திசநாயக்கவும் டிலான் பெரேராவும்கூட, பொதுஜன பெரமுனவுக்கு சென்றுவிட்டனர். 

நிமல் சிறிபால டீ சில்வாவும்கூட, அவ்வாறான முடிவை வரும் நாள்களில் எடுப்பார் என்கிறது ஒரு தகவல். கொழும்பு மாநாட்டில் அவரது உரை அவ்வாறான ஒரு முடிவையே வெளிப்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர்.

இப்படியே போனால், மைத்திரிபால சிறிசேனவுடன் சுதந்திரக் கட்சியில் மிஞ்சியிருக்கப் போவது யார் என்ற கேள்வியே எழுந்திருக்கிறது. பலமான ஒரு கட்சியாகப் பொறுப்பேற்ற சுதந்திரக் கட்சியில், இப்போது எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற சரியான கணக்குகூட ஜனாதிபதிக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால், நிலைமை அப்படி உள்ளது. யார், எப்போது, எங்கே மாறுவார்கள் என்ற நிலையே காணப்படுகிறது.

இப்படியானதொரு நிலைக்கு, சுதந்திரக் கட்சியைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்ற ஜனாதிபதிக்கு, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, இருக்கின்ற உறுப்பினர்களை தக்கவைத்துக் கொள்வதே ஒரே வழி.

இதன்மூலம், அடுத்த அரசாங்கத்தில் சில பதவிகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதுதான் அவரது ஒரே இலக்கு. அதன் மூலம், கட்சித் தாவல்களைத் தடுக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்.

ஆனாலும், இந்தக் கூட்டு சரிப்பட்டு வருமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. கோ்டாபய ராஜபக்‌ஷவை வேட்பாளராக ஏற்றுக்கொண்டாலும், கட்சி தாவிக் கொண்டிருப்பவர்களால், இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முறுகல்கள் காணப்படுகின்றன.

தம்மைப் பலவீனப்படுத்த முனைகிறது, பிளவுபடுத்தப் பார்க்கிறது, கோட்டாபய ராஜபக்‌ஷவை போட்டியில் இருந்து அகற்ற முனைகிறது என்று சுதந்திரக் கட்சி மீது பொதுஜன பெரமுனவினருக்கு ஆழமான சந்தேகங்கள் உள்ளன. அதனை அவர்கள் பகிரங்கமாகக் கூறவும் தயங்கவில்லை.

இந்தநிலையில், அவ்வாறான நோக்கம் இல்லை என்பதை வெளிப்படுத்த அக்கினி குண்டத்தில் இறங்கவேண்டிய நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கும் வரை தான், இந்தப் போக்கு இருக்கப் போகிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து தூக்கப்படும்நிலை ஏற்படும். 

அப்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றிக் கொள்வார் என்ற பரவலான எதிர்பார்ப்பு தோன்றியிருக்கிறது.

நீண்ட காலத்துக்குப் பின்னர், அண்மையில் சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்குச் சென்றிருந்த சந்திரிகா குமாரதுங்க, கடந்த செவ்வாயன்று நடந்த மாநாட்டிலும் பங்கேற்றிருந்தார். 

கடந்த ஆண்டு நடந்த மாநாட்டில், தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சந்திரிகா பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் இப்போது, அவர் கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் தென்பட ஆரம்பித்திருக்கிறார்.

இது, மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்து பயணிக்குமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. 

தொடர் தோல்விகளில் சிக்கியிருந்த சுதந்திரக் கட்சியை, 1994இல் மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தவர் சந்திரிகா. 

எனினும், அப்போது சுதந்திரக் கட்சி இரண்டாம் இடத்தில்தான் இருந்தது. அதைவிட, சந்திரிகா அரசியலுக்கு புதுமுகமாக இருந்தார். அவர் மீது அனுதாப அலையும் இருந்தது. அவரிடம் ஒரு வாக்கு கவர்ச்சியும் இருந்தது. 

இவையெல்லாம் இப்போது இல்லாத சூழலில் சுதந்திரக் கட்சியை மைத்திரியாலோ, சந்திரிகாவினாலோ காப்பாற்ற முடியும் போல தெரியவில்லை.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சு-கவின்-கலைந்துபோன-கனவு/91-238139

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.