Jump to content

சலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்

முகம்மது தம்பி மரைக்கார் / 2019 செப்டெம்பர் 10 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:44Comments - 0

image_16a39f6474.jpgஐக்கிய தேசியக் கட்சி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் இருந்து கிட்டத்தட்ட விலகியுள்ள நிலையில் ‘யாரையாவது அறிவித்துத் தொலைங்கய்யா’ என்று கூறும் மனநிலைக்கு, மக்கள் வந்துவிட்டனர்.

இன்னொருபுறம், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காமல் இப்படி இழுத்தடிப்பது, அவரின் தந்திரோபாயம் என்று, சிலர் கூறத் தொடங்கியுள்ளனர். தனது தலையில், தானே மண்ணை வாரிக் கொட்டுவதில் என்ன தந்திரோபாயம் இருக்கப் போகிறது என்றுதான் தெரியவில்லை.

முரண்நகை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கும் ஏழாவது நபர் ரணில் விக்கிரமசிங்க. இவரைப் போல், முன்னிருந்த எந்தத் தலைவரும், தமது யானைக் கட்சியை வழிநடத்துவதற்கு, ஒரு ‘பாகன்’ ஆக,  இத்தனை இடர்பாடுகளைச் சந்தித்திருக்கவில்லை. 

இந்த நாட்டைப் பலமுறை ஆட்சி செய்த, ஒரு மிகப் பெரும் கட்சியின் தலைவராக இருந்து கொண்டே, அந்தக் கட்சி சார்பாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதளவு இயலுமையற்றவராக இருப்பது, ரணில் விக்கிரமசிங்கவின் மிகப்பெரும் பலவீனமாகும்.

ஜனாதிபதித் தேர்தலொன்றில், ரணில் களமிறங்கினால் தோற்றுவிடுவார் என்று, அவருடைய கட்சியின் முக்கியஸ்தர்களே அச்சப்படுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் “ரணில் வேண்டாம்” என்கின்றனர். இத்தனை பலவீனமாக இருக்கும் ஒருவர், தனது கட்சிக்குள் ‘பலம்’ காட்டிக் கொண்டிருப்பது பெரும் முரண்நகையாகும்.

தலைமைத்துவ வறுமை

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்து, ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்குரிய பலமான வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைத்தான் அந்தக் கட்சிக்குள் இருக்கும் பெரும்பான்மையானோர் பார்க்கின்றனர். ஐ.தே.கட்சியின் பங்காளிக் கட்சித் தலைவர்களில் பலரும், சஜித் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், ரணில் இன்னும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனாலும், சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர். இந்த அழுத்தங்களுக்குப் பலன் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது போலவும் தெரிகின்றது. அதனால்தான், சஜித் பிரேமதாஸவை முன்னர் கடுமையாகவும் வெளிப்படையாகவும் விமர்சித்து வந்த, ரவி கருணாநாயக்க போன்றோர், இப்போது அடக்கி வாசிக்கின்றார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பிடும் போது, சஜித் பிரேமதாஸ மிகவும் ‘பாரம்’ குறைந்தவராவார். 

ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத் திறன், அவருக்குள்ள சர்வதேச உறவு, அவரின் மொழியாளுமை, அனுபவம் போன்றவற்றின் முன்னால், சஜித் பிரேமதாஸ மிகவும் சின்னவராகவே தெரிகின்றார். ஆனாலும், ரணிலின் ‘தோல்வி முகம்’ என்பது, ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் களமிறங்க முடியாதளவுக்கு அவரைப் பலவீனமானவராக்கி வைத்திருக்கிறது. 

இன்னொருபுறம், ரணிலுக்கு மாற்றீடாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யார் உள்ளார் என்பதும், மிகப் பெரியதொரு கேள்வியாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு வகையான தலைமைத்துவ வறுமை நிலவுகின்றமையே அதற்குக் காரணமாகும். 

இந்த வறுமை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம், ரணில் விக்கிரமசிங்க என்பதுதான் இங்கு கவலைக்குரிய செய்தியாகும். அந்தக் கட்சிக்குள் இரண்டாம் நிலைத் தலைவர்கள் எவரையும் ரணில் விக்கிரமசிங்க, தட்டிக்கொடுத்து வளர்த்து விடவில்லை. 

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தனது தலைமைத்துவத்துக்கு யாரும் போட்டியாக வந்து விடக் கூடாது என்று ரணில் நினைப்பது, அதற்குரிய பிரதான காரணமாகும். அதன் விளைவைத்தான், இப்போது ஐக்கிய தேசியக் கட்சி அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.

சஜித் பொருத்தமானவரா?

ரணில் விக்கிரமசிங்க ‘தோல்வி முகம்’ கொண்டவர் என்பதற்காகத்தான், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை அந்தக் கட்சிக்குள் பலரும் விரும்புகின்றனர் என்கிற யதார்த்தத்தையும் நாம் இங்கு பதிவு செய்ய வேண்டும். 

சஜித் பிரேமதாஸவை, அந்தக் கட்சிக்குள் பெரும்பாலானோர் ஜனாதிபதி வேட்பாளராக்க விரும்புகின்றனர் என்பதற்காக, ஜனாதிபதி வேட்பாளருக்கான ‘பத்து’ப் பொருத்தங்களும் சஜித் பிரேமதாஸவுக்கு அச்சொட்டாக  இருக்கிறது என்று பொருள் கொள்ள முடியாது. 

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கின்றவர்களில் சஜித் ‘பரவாயில்லை’ என்கிற இடத்தில்தான் உள்ளார். 

ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ என்கிற பெரும்  ஆளுமையின் பின்னணியுடன் களமிறங்கும் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் மோதுவதற்கான பலம், சஜித் பிரேமதாஸவுக்கு இருக்கின்றதா என்கிற கேள்வியும் அரசியலரங்கில் உள்ளது.

சிறுபான்மை வாக்குகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மை இனத்தவரின் வாக்குகள் இல்லாமல், எவரும் வெற்றிபெற முடியாது என்கிற யதார்த்தத்தைப் பலரும் பேசுகின்றனர். ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பெரும்பான்மையான வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றமை போல், வருகின்ற தேர்தலில் யாராலும் பெற முடியுமா என்கிற கேள்வியும் உள்ளது.  

சிறுபான்மை இனத்தவர்களின் பிரதான அரசியல் கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளையும் பேச்சுகளையும் கவனிக்கையில், இம்முறை ஐக்கிய தேசியக் கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளரையே தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதான அரசியல் கட்சிகள் ஆதரிக்கும் என ஊகிக்க முடிகிறது.  

ஆனால், இம்முறை சிறுபான்மை அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க, ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் தமது வாக்குகளை அளிப்பார்களா என்கிற கேள்வியும் உள்ளது. 
குறிப்பாக, முஸ்லிம் மக்கள், தமது அரசியல் கட்சிகளின் தீர்மானங்களுக்கு இணங்கச் செயற்படுவார்களா என்பது முக்கியமான கேள்வியாகும்.   

ஜனாதிபதித் தேர்தலும் முஸ்லிம்களும்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ‘முஸ்லிம்களின் கட்சி’ என்கிற பெயர் ஒரு காலத்தில் இருந்தது. முஸ்லிம்களுக்கு அந்தக் கட்சிக்குள், அப்படியோர் இடமும் மரியாதையும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலையில்லை. 

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்களை விடவும் பலமடங்கு அநியாயங்களும் அக்கிரமங்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய ஆட்சியில் நடந்துள்ளன. இத்தனைக்கும் முஸ்லிம்களின் ஆதரவுடன்தான் இந்த அரசாங்கம் இருக்கின்றது. 

அந்த வகையில் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த ஆட்சியாளர்கள் செய்த கொடுமைகளை விடவும், மஹிந்த ஆட்சியிலிருந்த போது, ஒப்பீட்டு ரீதியாகத் தமக்குப் பெரிய அநியாயங்கள் நடந்து விடவில்லை என்று, முஸ்லிம்களில் ஒரு தரப்பார் வாதிடத் தொடங்கியுள்ளனர். 

மறுபுறம், “ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் மஹிந்த அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு அக்கிரமம் இழைத்துள்ளன. எனவே, இந்தத் தரப்பில் இருந்து களமிறக்கப்படும் எவருக்கும் வாக்களிப்பதில்லை. இந்த இரண்டு தரப்பினருக்கும் நமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், மூன்றாவது தரப்பாகக் களமிறங்கும் அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாக்களிப்போம்” என்றும், முஸ்லிம்களில் மற்றொரு தரப்பு, இப்போதே தீர்மானித்துக் கூறிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் பார்த்தால், இம்முறை முஸ்லிம்களின் மிகப் பெரும்பான்மை வாக்குகளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் இல்லைப் போலவே தெரிகிறது. முஸ்லிம்களின் வாக்குகள், அனைத்து வேட்பாளர்களுக்கும் பிரிந்து போகும் நிலைதான் ஏற்படும். 

தமிழ்க் கட்சிகள் என்ன செய்யும்?

இதேவேளை, தமிழ் மக்களும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீது கோபத்தில் உள்ளனர். இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் பொருட்டு, புதிய அரசமைப்பைக் கொண்டு வரப்போவதாகக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளது. 

ஆனாலும், இந்தப் பழியை ஜனாதிபதி மைத்திரியின் தலையில்தான் ஐக்கிய தேசியக் கட்சி சுமத்தும். “புதிய அரசமைப்பை உருவாக்குவதற்குத் தடையாக மைத்திரிதான்  இருந்தார்” எனக் கூறியே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது வேட்பாளருக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாக்குக் கேட்கும். 

ஆனால், இதேகுற்றச்சாட்டைக் கூறி, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு, தமிழ்க் கட்சிக்கு கேட்க முடியாது. அப்படிக் கூறுவது தமிழ் மக்களிடம் எடுபடாது. 

எனவே, கோட்டாவைச் சாடி, “கோட்டா ஒரு போர்க் குற்றவாளி” என்றும், “தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்தவர் கோட்டா” என்றும் பழி கூறித்தான், தமிழ் மக்களின் வாக்குகளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்குத் திருப்பிவிடும் வேலையைத் தமிழ்க் கட்சிகள் செய்ய வேண்டும். அதற்கான அத்திபாரங்கள் இடப்படுகின்றமையை, இப்போதே காணக்கிடைப்பதை வைத்தே, இந்த ஊகம் பதிவு செய்யப்படுகிறது.

கட்சியா, பதவியா?

இப்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் எதிர்கொள்ளக் கூடிய எக்கச்சக்க பிரச்சினைகளும் சவால்களும் இருக்கத்தக்க நிலையில்தான், தமது கட்சி சார்பான வேட்பாளரை அறிவிப்பதில் அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இத்தனை இழுத்தடிப்புகளைச் செய்து, மக்களைச் சலிப்பூட்டி வருகிறார். 

ஐக்கிய தேசியக் கட்சியில், தான் வகிக்கும் தலைமைப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ரணில் விக்கிரமசிங்க எதையும் செய்வார்;  செய்யாமல் விடுவார் என்கிற பார்வையும் பேச்சும் அரசியலரங்கில் உள்ளது; அது பொய்யுமில்லை. 

ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்து, தனது கட்சித் தலைவர் பதவியைத் தக்க வைக்கும் நிலைக்கு, ரணில் விக்கிரமசிங்க செல்வாரா என்கிற கேள்விக்கான பதிலை, ஜனாதிபதி வேட்பாளராக அவர் அறிவிக்கும் ஆள், யார் என்கிற தீர்மானம் நிச்சயம் சொல்லிவிடும்.

சிலவேளை, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக, ரணில் விக்கிரமசிங்க அறிவிக்காமல் வேறொரு நபரை அறிவித்து விட்டால் மட்டும், ரணிலின் தலைமைப் பதவிக்கு பிரச்சினைகள் எதுவும் வந்து விடாது என்று, சொல்லி விடவும் முடியாது. 

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் அறிவிக்கப்படாமல் விட்டால், சஜித் பிரேமதாஸவும் ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிச்சயம் போர்க்கொடி உயர்த்துவார்கள். 

சிலவேளை, வேறு அணி சார்பாக, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி நடந்தால், ஐக்கிய தேசியக் கட்சி சுக்குநூறாக உடையும். ஐக்கிய தேசியக் கட்சி, இவ்வாறு உடையும் என்பதை, மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்கெனவே ஊகித்துச் சொல்லியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க நிலைமைகளைச் சமாளிப்பதிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதிலும் மிகத் திறமைசாலி என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

அவரின் தலைமைத்துவத்துக்கு மிகப் பெரும் சவால்கள் ஏற்பட்ட போதெல்லாம், அவற்றைத் துணிந்து நின்று, எதிர்கொண்டு வென்றவர் என்பதையும் இங்கு பதிவுசெய்ய முடியும். 

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்து கொண்டு செல்வதை, ஒரு தலைவராக அவரால் தடுக்க முடியவில்லை. ‘நேற்று முளைத்த’ பொதுஜன பெரமுன கட்சி, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற பெருவெற்றியை வைத்தே,   ஐக்கிய தேசியக் கட்சியின் மிக மோசமான வீழ்ச்சி என்ன என்பதைக் கண்டு கொள்ள முடியும். 

எனவே, கட்சி முக்கியமா? அல்லது கட்சித் தலைவர் பதவி முக்கியமா? என்பதை ரணில் விக்கிரமசிங்கதான் முடிவு செய்ய வேண்டும். 

‘யானை’யை இழந்து விட்டு, அங்குசத்தை மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பாகன், ‘மாடு’ மேய்ப்பதற்கும் லாயக்கற்றவன் என்பதை, ரணில் புரிந்து கொண்டால், ஐக்கிய தேசியக் கட்சியை மட்டுமன்றி, தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். 

ஜனாதிபதித் தேர்தலில் திணறடிக்கப்படும் முஸ்லிம் அடையாள அரசியல்

‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திணறடிக்கப்படும் முஸ்லிம் அடையாள அரசியல்’ எனும் தலைப்பில் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், தனது கருத்துகளை அண்மையில் பதிவு செய்திருந்தார். அதனை, இங்கு சற்றுச் சுருக்கி வழங்குகின்றோம்.

1. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில், ஐ.தே. கட்சி இழுபறிப்படுவது, அக்கட்சி தடுமாறுகிறது;தவறி விழவும் வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது. ஏற்கெனவே, சுதந்திரக்கட்சி வரலாறு காணாத சரிவைச் சந்தித்துவிட்டது. ஐ.தே. கட்சியில் சாய்ந்து நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது தடுமாறி நிற்கிறது. இரண்டு முஸ்லிம் கட்சிகளும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றன. இந்நிலைமையால், ஐ.தே. கட்சி தோல்வியைத் தனது தோளில் சுமக்க, த.தே. கூட்டமைப்பு மேலும் செல்வாக்கிழக்க, முஸ்லிம் கட்சிகள் சிதைய வாய்ப்புண்டு. ஆயினும், ஐ.தே. கட்சி, சில வருடங்களில் மீளக் கட்டி எழுப்பப்படும். த.தே. கூட்டமைப்பு அழிந்தாலும், தமிழ்த் தேசிய அரசியல் அழியாது. ஆனால், முஸ்லிம் அடையாள அரசியல் கட்சிகள் சிதைந்தால், முஸ்லிம் அடையாள அரசியல் முகமழிந்து போய்விடும் ஆபத்து உள்ளது.

2. ஐக்கிய தேசியக் கட்சி மூன்று வேட்பாளர்களை மானசீகமான அடிப்படையில் முதன்மைப் போட்டியாளர்களாக முன்நிறுத்தியுள்ளது. இவர்கள் சஜித், கரு, ரணில் ஆகியோராவார்.  இவர்களில் எவர் வேட்பாளரானாலும் கட்சியின் ஒருமித்த ஆதரவு எவருக்கும் கிடைக்காது. பிரிவினை ஆழமாகி உள்ளதால், ஏதோ ஒரு தரப்பு முன்நிலையாகும் வேட்பாளருக்கு எதிராக, இரகசியமாக இயங்கும் அல்லது தேர்தல் வேலைகளில் ஈடுபடாதிருக்கும்.

இந்த நிலையால் ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் இரண்டு முஸ்லிம் கட்சிகளுமே, மோசமாகப் பாதிக்கப்படும். இதனை இரண்டு கட்சிகளும் நன்குணர்ந்துள்ளன. ஆகவே, வெற்றி பெற வாய்ப்புள்ள பொதுஜன பெரமுனவுடன் எந்த முஸ்லிம் கட்சியாவது முதலில் இணையுமா, நாடாளுமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களைப் பெறும் வாய்ப்பை இழக்க விரும்பாமையால் ஜனாதிபதித் தேர்தல் தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஐ.தே. கட்சியுடன்தான் இருக்குமா என்பது இன்றைய முக்கிய கேள்வியாகும்.

முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் ஒன்றாக இருப்பது போல், வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும், அவை எதிரிக் கட்சிகளாகவே இருக்கின்றன. ஐ.தே. கட்சியின் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக மக்கா சென்று உம்றா செய்தாலும், அங்கு ஒன்றாக நின்ற புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டாலும் பரஸ்பரம் அக்கட்சிகளின் தலைவர்கள்,  உறுப்பினர்களின் மனங்களில் பதிந்திருக்கும் வேற்றுமையையும் போட்டி மனப்பான்மையையும் எவரும் மறைக்க முடியாது. இதனை, அண்மையில் ஒலுவில் துறைமுகத்தில் இடம்பெற்ற இரு தரப்புகளுக்கும் இடையிலான மோதல் நிரூபிக்கிறது.

2015ஆம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்போடு ஊறிக் கிடந்த ரிஷாட் பதியுதீன் முதலில் வெளியேறி, மைத்திரியுடன் இணைந்தார். மஹிந்த தரப்புடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த ரவூப் ஹக்கீம் தாமதமாகி மைத்திரியுடன் சேர்ந்தார்.

கடந்த வாரம் பசில் ராஜபக்‌ஷவும் ஹக்கீமும் இரகசியமாகப் பேசியதாக ஊடகங்களில் செய்தி கசிந்திருந்தது. இச்சந்திப்பு, இம்முறை முதலில் மஹிந்த தரப்புடன் ஹக்கீம் இணையும் ஏற்பாடா? அல்லது என்றென்றைக்குமான நண்பர்களான பசில் - ரிஷாட் ஆகியோர் திட்டமிட்டு ஹக்கீமை இழுத்தெடுக்கும் ஏற்பாடா என்பதும் சிந்திக்கவேண்டியதாகும்.

3. மஹிந்தவின் புதிய வியூகம் என்பது, தானாக கிடைக்கும் சிறுபான்மை வாக்குகளை வரவேற்று மதிப்பளிப்பது. மேற்குலகின் கதைகளைக் கேட்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை கணக்கில் எடுப்பதில்லை; இஸ்லாமிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களாக சிங்கள மக்கள் நம்பும் முஸ்லிம் அடையாள அரசியல்வாதிகளின் ஆதரவை நேரடியாகப் பெறுவதில்லை என்பதோடு, ஏற்கெனவே தம்மோடு ‘இருந்த’ சிறுபான்மை அரசியல்வாதிகளோடு புரிந்துணர்வுடன் வேலை செய்வது என்பதாக இருப்பதை உள்ளார்ந்து அறிய முடிகிறது.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சலிப்பூட்டுகிறார்-மைலோட்-இழுத்தடிக்கும்-ஏழாம்-பாகன்/91-238214

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.