Jump to content

ஊரான் காசில் பேரு வாங்கும் உதயநிதி ஸ்ராலின்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரார் காசில் பேரு வாங்கும் உதயநிதி ஸ்டாலின்...!! அப்பாவையே மிஞ்சிட்டார் என்று அலறும் உபிக்கள்...!!

mk-udhaya-jpg_1200x630xt.jpg

தன் அதிரடி திட்டங்கள் மூலம், தந்தையைப்போலவே தொண்டர்கள் செலவில்  ஒசியில் பெயரெடுக்கிறார் வாரிசுத்தலைவர் என்ற விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார் உதயநிதி.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை எப்படியாவது வீழ்ந்த வேண்டும் என்று வியூகம் வகுத்து நமக்கு நாமே  திட்டம் தொடங்கி தமிழகம் முழுவதற்கும் டூர் சென்றார் ஸ்டாலின்.  ஆனால் எதிர்பார்த்தபடி தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை.  மாறாக கட்சி தொண்டர்களின் காசைக் கரியாக்கி அரசியலில் தன் இருப்பை தக்கவைத்துக் கொண்டதுதான் மிச்சம் என்று எதிர்கட்சிகளால் அப்போது  விமர்சிக்கப்பட்டார்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் திமுக இல்லை, அதனால் கட்சி தொண்டர்களுக்கு வருமானமும் இல்லை. ஆனாலும் பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சாரம், ஆர்பாட்டம், போராட்டம் என அனைத்திற்கும்  மாவட்டச் செயலாளர்கள் முதல் வட்டச்செயலாளர்கள் வரை  நிதி திரட்டி ஆள் கூட்டி செலவு  செய்ய வேண்டும் என்பது தலைமையின் உத்தரவு.

இதனால் கட்சி தொண்டர்கள் கை காசுப்போட்டு செலவு செய்து  செலவு செய்து நொந்து நூடுல்ஸ்ஸாகி போயுள்ளனர். இந்த நிலையில் தனக்கடுத்து கட்சியில் முக்கிய தலைவராக தன் மகன் உதயநிதியை உருவாக்கும் வேலையில் இறங்கியுள்ள ஸ்டாலின்.

கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லாமலிருந்த உதய்க்கு , தனக்கு தளபதி என்று பெயர் வாங்கிக்கொடுத்த திமுக இளைஞரணி செயலாளர் பதிவியையே வாரி வழங்கினார். பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றி வரும் வகையில் அவருக்கும் ஒரு டூர் பிளான் ஏற்பாடு செய்துள்ளாராம் ஸ்டாலின்.

தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதைப்போல  இளைஞரணி செயலாளர் பொறுப்பேற்ற கையோடு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து பீதியை கிளப்பினார் உதய்,

அதாவது தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் நீர் நிலைகள் உள்ளது இவற்றில் அரசு தூர்வாரத நீர் நிலைகளை திமுக இளைஞர் அணியினர் தூர்வாரி சீரமைப்பர் என்பதுதான் அந்த அறிவிப்பு. இத்திட்டத்தின் மூலம் இளைஞர்கள் புது ஊக்கம் பெறுவர் என்றும் எக்ஸ்ட்ரா பிட் போட்டார் உதய்.

பதவிக்கு ஆசைபட்டு லட்சக் கணக்கில் பணத்தை செலவு செய்து பொறுப்புக்கு வந்த பொறுப்பாளர்களுக்கும் புது ஆப்புதான் இந்த அறிவிப்பு.  இளைஞர் அணி நிர்வாகிகள் கையில் கழுத்தில் இருந்ததையெல்லாம் அடகு வைத்து "பொக்லைன், புல்டேசர்" என வாடகைக்கு எடுத்து குளத்தை தூர்வாரினால்,  நம்ம உதய் சார் சினிமா சூட்டிங்குக்கு போற கணக்கா, வெள்ளையும் சொள்ளையுமா ஊர் மக்கள் மத்தியில் போய் குளத்தை திறந்து வைத்து போட்டோக்கு போஸ் கொடுக்கிறார் என்பதுதான் அடிமட்ட உபிக்களின் குமுறல்.

https://tamil.asianetnews.com/politics/dmk-youth-wing-secretary-udhayanidhi-also-seeking-fame-by-cadets-expenture-pxlrsk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஊரார் காசில் பேரு வாங்கும் உதயநிதி ஸ்டாலின்...!! அப்பாவையே மிஞ்சிட்டார் என்று அலறும் உபிக்கள்...!!

-----

பதவிக்கு ஆசைபட்டு லட்சக் கணக்கில் பணத்தை செலவு செய்து பொறுப்புக்கு வந்த பொறுப்பாளர்களுக்கும் புது ஆப்புதான் இந்த அறிவிப்பு.  இளைஞர் அணி நிர்வாகிகள் கையில் கழுத்தில் இருந்ததையெல்லாம் அடகு வைத்து "பொக்லைன், புல்டேசர்" என வாடகைக்கு எடுத்து குளத்தை தூர்வாரினால்,  நம்ம உதய் சார் சினிமா சூட்டிங்குக்கு போற கணக்கா, வெள்ளையும் சொள்ளையுமா ஊர் மக்கள் மத்தியில் போய் குளத்தை திறந்து வைத்து போட்டோக்கு போஸ் கொடுக்கிறார் என்பதுதான் அடிமட்ட உபிக்களின் குமுறல்.

பெரியப்பா  அழகிரி,  சின்னம்மா கனிமொழியையே..... ஓரம் கட்டி வைத்து விட்டார்களாம்.
உடன் பிறப்புகள்  எம்மாத்திரம். இப்பிடியே... புலம்பிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.