Jump to content

மருத்துவத்தின் முன்னோடி ரிக்லி; யார் இவர்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மஹிமா ஜெயின் பிபிசிக்காக
  •  
நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்லோவேனியாவில் பிலெட் ஏரிக்கு இயற்கை வழி சிகிச்சை முறையின் அருமைகளைத் தேடி சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருந்தனர்.படத்தின் காப்புரிமை Brian Jannsen/Alamy Image caption நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்லோவேனியாவில் பிலெட் ஏரிக்கு இயற்கை வழி சிகிச்சை முறையின் அருமைகளைத் தேடி சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருந்தனர்.

ஸ்லோவேனியாவில் வடமேற்குப் பகுதியில் ஜூலியன் ஆல்ப்ஸில் செங்குத்தான மலா ஒசோஜ்னிகா மலையின் உச்சிக்குச் செல்லும் குறுகலான பாதையில் நான் சென்றபோது, என் பார்வைக்கு தெரிந்தும், தெரியாமலும் எல்லைகளைக் கொண்டதாக 144 ஹெக்டரில் பரந்துள்ளது பிலெட் ஏரி.

நீல நிறத்தில் உள்ளது. சிகரங்களுக்கு அப்பால் சூரியன் மேலே எழுந்து கொண்டிருந்தான். 17 ஆம் நூற்றாண்டின் உயர் கோபுர வடிவமைப்பில் உள்ள கட்டடம் ஏரியின் மத்தியில் கீழே கண்ணீர்த் துளி வடிவிலான தீவில் உள்ளது.

மலையின் உச்சியில் இருந்து சூரிய உதயத்தின் முதலாவது கதிர்களைக் காண வேண்டும் என்பது தான் என்னுடைய திட்டமாக இருந்தது. பொழுது புலர்வதை எதிர்பார்த்து பறவைகள் கிறீச்சிட்டுக் கொண்டிருந்தன. லேசான தென்றல் தவழத் தொடங்கி இருந்தது. கீழே காட்டுக்குள் இருந்து, நான் வந்த பாதையில் மக்கள் நடமாடும் சப்தம் கேட்டது, ஐரோப்பா முழுவதிலும் இருந்து மருத்துவ சுற்றுலாவுக்காக வந்தவர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய அதே பாதை அது. இதற்கெல்லாம் ஸ்விஸ் ஹீலர் அர்னால்டு ரிக்லிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மூன்று மூலகங்கள் - சூரியன், நீர் மற்றும் காற்று மூலகங்கள் - அடிப்படையில் சிகிச்சை அளிக்கக் கூடிய, ரசாயன மருந்துகளைத் தவிர்த்த மாற்று மருத்துவ முறையாக நேச்சுரோபதி மற்றும் ஹைட்ரோபதி சிகிச்சை முறையை உருவாக்கியவர் ரிக்லி. 1855 ஆம் ஆண்டில் இருந்து 21ஆம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தம் வரையில், வசதிமிக்க ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்கள், ஏரியின் கரையில் உள்ள அவருடைய இயற்கை முறை சிகிச்சை நிலையத்தைத் தேடி அங்கு குவிந்தனர்.

ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தில் சிறிய நகரமாக இருந்த பிலெட் நகரம், சிகிச்சைக்கான முக்கிய இடமாக உருவாக அதுவே காரணமாக இருந்தது. 1870களில் பிலெட் நகரைச் சுற்றி ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதை அடுத்து அங்கு நிறைய மக்கள் வரத் தொடங்கினர்.

``இயற்கை வழி சிகிச்சையில் ரிக்லி முன்னோடியாக மட்டுமின்றி, பிலெட் நகரில் ஸ்பா மற்றும் உடல் சிகிச்சை சுற்றுலாவையும் தொடங்கி வைத்தவராக இருந்தார்.

உண்மையான மார்க்கெட்டிங் மனிதராக அவர் இருந்தார்'' என்று வோஜ்கோ ஜாவோட்னிக் கூறுகிறார். அர்னால்டு ரிக்லியின் தடங்களைக் கண்டுபிடித்து எழுதிய பெண் எழுத்தாளர் இவர். மாசுபாட்டின் பாதிப்பால் துன்புறக்கூடிய, வேகமான தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வரும் நகரங்களில் தினசரி மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள நகரவாசிகளுக்கு இயற்கை மற்றும் நல்ல ஆரோக்கிய கலவையை அளிக்க வேண்டும் என்பது ரிக்லியின் நோக்கமாக இருந்தது.

வசதிமிக்க ஐரோப்பியர்கள் ஆடம்பரமான பங்களாக்களில் விடுமுறைக் காலத்தை கழிப்பது பற்றி பிரபலமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பிலெட் நகரம் வேறு காரணத்துக்காக விடுமுறைக் கால தங்குமிடமாக இருந்தது. தொலைதூர இடங்களில் இருந்து ராணுவ கட்டுப்பாடு போன்ற சூழலில் வாழ்வதற்காக ஐரோப்பியர்கள் பயணம் மேற்கொண்டனர். ஆனால் எதற்காக அப்படி வந்தார்கள்?

``அது எல்லாம் கலந்த கலவையாக இருந்தது; பிலெட் நகரின் அருமையான சீதோஷ்ண நிலை, ஜூலியன் ஆல்ப்ஸ் சுற்றி வரும் நடைபாதைகள், உச்சியில் இருந்து பார்க்கும் காட்சி அமைப்பு, இதெல்லாவற்றுக்கும் மேலாக ரிக்லியின் சிகிச்சை முறைகள்'' என்று டாக்டர் ஜ்வோன்கா ஜுபானிக் ஸ்லாவெக் கூறுகிறார். இவர் மருத்துவ வரலாறு குறித்த லிஜுபில்ஜனா கல்வி நிலையத்தின் பல்கலைக்கழகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.

``ஹைட்ரோ தெரபி (நீர் அடிப்படையிலான சிகிச்சை), ஹீலியோ தெரபி (சூரியனை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை), பருவநிலை தெரபி ஆகியவற்றுடன், சிறிதளவு உணவுப் பட்டியல் மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் ஆகியவை இருந்தால் மக்கள் குணம் அடைவார்கள் என்று அவர் நிரூபித்துள்ளார்.'' வேறு வகையில் சொல்வதானால், இளஞ்சூடான மற்றும் குளிர்ந்த நீர், சூரிய வெளிச்சம் மற்றும் பருவநிலை (மலைப் பகுதி காற்று) ஆகியவற்றை, நோய்த் தடுப்பு மற்றும் குணமாக்கலுக்கு அவர் பயன்படுத்தியுள்ளார்.

பிலெட் ஏரியை முன்னணி ஆரோக்கிய ஸ்தலமாக ஆக்கினார் ஸ்விஸ் ஹீலர் அர்னால்டு ரிக்லி. (நன்றி: வோஜ்கோ ஜாவோட்னிக்கின் தனிப்பட்ட தொகுப்பில் இருந்து. அனைத்தும் பதிப்புரிமை பெற்றவை)படத்தின் காப்புரிமை Private Collection of Vojko Zavodnik Image caption பிலெட் ஏரியை முன்னணி ஆரோக்கிய ஸ்தலமாக ஆக்கினார் ஸ்விஸ் ஹீலர் அர்னால்டு ரிக்லி.

மூன்று மூலகங்களைக் குறிப்பிட்டு ரிக்லியின் குறிக்கோள் எளிமையானதாக இருக்கிறது: ``தண்ணீர் நல்லது. காற்று இன்னும் நல்லது. ஒளி எல்லாவற்றையும் விட சிறந்தது'' என்பதே அது.

``வெளிச்சமும் காற்றோட்டமும்'' உள்ள குடில்களில் விருந்தினர்களை தங்க வைப்பார். மூன்று புறங்களிலும் மரக் கட்டைகளால் உருவாக்கப்பட்ட சுவர்களும், ஏரியை நோக்கிய நான்காவது பக்கத்தில் திரை போட்டதாகவும் அந்தக் குடில் இருக்கும். ஏரியின் அழகை ரசிக்கும் வகையில் அது அமைந்திருக்கும். உடலில் நச்சுகளை வெளியேற்றவும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் கம்பு ரொட்டி, பால், பழங்கள் மற்றும் அவரை வகைகள் என மிதமான சைவ உணவுகள் வழங்கப்படும். புகைபிடிக்கவும், மது அருந்தவும் அங்கு தடை இருந்தது. தடையை மீறியதாகக் கண்டறியப் பட்டால் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

சிகிச்சை விடியலில் தொடங்கி மாலை வரையில் தொடரும். ஆண்கள் காட்டன் சட்டைகள் மற்றும் டிரவுசர்கள் அணிந்திருப்பர். பெண்கள் கை வைக்காத ஆடைகள் கால் முட்டி வரையில் இருக்கும் ஆடைகள் அணிந்திருப்பர். வெறும் காலுடன் பிலெட் நகரை சுற்றி மலையில் அவர்கள் நடந்து செல்ல வேண்டும்.

அவரவர் உடல் நிலையும், ஆணா பெண்ணா என்பதைப் பொருத்தும் இதற்கான கால அளவு, சரிவுப் பாதை மற்றும் எவ்வளவு தொலைவு என்பவை முடிவு செய்யப்பட்டிருக்கும்; புல்வெளிகளில் குறுகிய நடைபயணம் என்பது 30 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும். நீண்ட நடைபயணம் என்பது நான்கு மணி நேரம் வரை என்பதாக இருக்கும். அது பிலெட் தொடங்கி லேசான சரிவு கொண்ட ஸ்ட்ராஜா வரையிலும், நான் சென்று கொண்டிருந்த மலா ஓசோஜ்னிகா வரையிலும் நடப்பதாக இருக்கும்.

கட்டணத்தை தங்கமாக செலுத்த மக்கள் தயாராக இருந்தனர்.

நவீனகால இயற்கை வழி சிகிச்சையின் பிறப்பிடம் எது?படத்தின் காப்புரிமை Mike Clegg/Alamy

வெளியிலேயே சிறிது காலை உணவு சாப்பிட்ட பிறகு, நோயாளிகள் `பருவநிலை சிகிச்சை' பெறுவர். புத்துணர்வான மலைப் பகுதி காற்றில் உடற்பயிற்சிகள் செய்வதாக அது இருக்கும்; ஹீலியோ தெரபி, ஏரியைச் சுற்றி மரப் பலகைகள் மீது சூரியக் குளியல் (ஏறத்தாழ நிர்வாணமாக) இருக்கும்; நீராவி, குளிர் மற்றும் இளஞ்சூடான நீரில் குளியல் என்பதாக இருக்கும்.

உடலில் நச்சுகளை நீக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் அந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஓய்வு எடுப்பதும் முக்கியமானது. ஒவ்வொரு இரவும் நோயாளிகள் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பதும் விதிமுறையாகும். மாலை நேரங்களில் பிறருடன் கலந்து பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் இருக்கும். ஏரியில் படகு சவாரி செய்வது, டென்னிஸ் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது அல்லது இசை கேட்பது என அவை இருக்கும்.

இவை அனைத்துக்கும் அதற்கான கட்டணம் உண்டு. பெரும்பாலான நோயாளிகள் ஒரு மாத காலத்துக்கு அங்கே தங்குவார்கள் என்று ஜோவோட்னிக் குறிப்பிட்டுள்ளார். அந்த காலக்கட்டத்தில் மாதத்துக்கான கட்டணம் 12-15 பவுண்டாக இருந்தது. ஆண்டுதோறும் அது உயர்த்தப்பட்டு வந்துள்ளது.

1880களில் தொழிலாளரின் வருடாந்திர சராசரி ஊதியம் 20-30 பவுண்ட் என்று இருந்த நிலையில், இந்தக் கட்டணம் மிகவும் அதிகமானது தான். ``ஒரு வகையில், அடிப்படையில் அவர் கவர்ச்சிகரமான முகாம் வசதியை அளித்தார். அது இன்று மிகவும் நாகரிகமானதாகக் கருதப்படுகிறது'' என்று ஜாவோட்னிக் கூறியுள்ளார். ``கட்டணத்தை தங்கமாகச் செலுத்துவதற்கு மக்கள் தயாராக இருந்தார்கள் என்பதை சிலர் அளித்துள்ள நற்சான்றுக் கடிதங்கள் காட்டுகின்றன'' என்கிறார் அவர்.

புத்துணர்வான மலைப் பகுதி காற்றில் உடற்பயிற்சிகள் செய்வதுடன் கூடிய ``பருவநிலை தெரபி'' நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டது.படத்தின் காப்புரிமை Private Collection of Vojko Zavodnik. All rights r Image caption புத்துணர்வான மலைப் பகுதி காற்றில் உடற்பயிற்சிகள் செய்வதுடன் கூடிய ``பருவநிலை தெரபி'' நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் உள்ளூர்வாசிகள் ரிக்லி மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அவருடைய சிகிச்சைகள் அவமானம் ஏற்படுத்துபவை என்று கருதினர். அவருடைய நோயாளிகள், அந்த காலக்கட்டத்தில் இருந்த உடை நடைமுறைகளுக்கு மாறாக, குறைந்த அளவே ஆடைகள் உடுத்தி இருந்தனர், பெண்கள் இயற்கை வெளியில் சுதந்திரமாக நடமாடினர், வழக்கத்திற்கு மாறாக அதிக முறைகள் எல்லோரும் குளித்தனர் என்பதால் இந்த எதிர்ப்பு நிலை இருந்தது. தங்களுடைய நில அமைப்பை சாதகமாகப் பயன்படுத்தி ரிக்லி லாபம் சம்பாதிப்பதைப் பார்த்த ஸ்லோவேனியர்கள், அவருடைய பாணியைப் பின்பற்றினர். நகரில் தங்குமிடங்கள் பராமரித்து வந்தவர்கள், கட்டுபடியான கட்டணத்தில் வெளிச்சம் மற்றும் காற்றோட்டமான குடில்களை வாடகைக்கு அளித்தனர்.

பொய் சொல்லி நோயாளிகளை வரவழைக்கும் ஏமாற்றுக்காரர் என்று பல டாக்டர்கள் ரிக்லி பற்றி குற்றம் கூறினாலும், அவருடைய நோயாளிகள் வேறு வகையில் அவரைப் பார்த்தனர், தொடர்ந்து அவரிடம் சென்றனர். ஒரு நோயாளி தபால் அட்டையில் பின்வருமாறு எழுதியிருந்தார்: ``உங்கள் கடிதத்துக்கு ஆயிரம் நன்றிகள்.... நான் இப்போது நன்றாக உணர்கிறேன்.''

அர்னால்டு ரிக்லியின் சிகிச்சை முறையின் தேவை குறித்த தனது கட்டுரையில், ரத்த சோகை, ஒற்றைத் தலைவரி, நரம்புக் கோளாறுகள், மன உளைச்சல் வெறி, மாதவிடாய் கோளாறு, கருப்பை தொற்று, மூலநோய், பக்கவாதம், வீக்கம் இல்லாத தோல் நோய்கள், பல வகையான பாலியல் குறைபாடுகளை சரி செய்ததாக ரிக்லி கூறியுள்ளார் என்று ஜுபனிக் ஸ்லாவெக் எழுதியுள்ளார். வெவ்வேறு உறுப்புகளுக்கு தனித்தனியாக அல்லாமல், உடலுக்கும் மனதுக்கும் முழுமையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தான் அவருடைய அணுகுமுறையாக இருந்தது.

வேகமாக தொழில் வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களின் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் பாதிப்புகளில் துன்புறும் நகரவாசிகளுக்கு, இயற்கை மற்றும் நல்ல ஆரோக்கியத்தைத் தருவது என்பதாக ரிக்லியின் சிகிச்சை முறை அமைந்திருந்தது.படத்தின் காப்புரிமை Ira Budanova/Alamy Image caption வேகமாக தொழில் வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களின் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் பாதிப்புகளில் துன்புறும் நகரவாசிகளுக்கு, இயற்கை மற்றும் நல்ல ஆரோக்கியத்தைத் தருவது என்பதாக ரிக்லியின் சிகிச்சை முறை அமைந்திருந்தது.

தவிர்க்க முடியாமல், ரிக்லியின் சிகிச்சை முறைகள் உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தின. தன்னுடைய சிகிச்சையின் உச்சகட்டத்தில் பிலெட், டிரியஸ்ட்டே, பிளாரன்ஸ் மற்றும் மெரான் ஆகிய இடங்களில் அவர் சிகிச்சை அளித்து வந்தார். தென்னிந்திய நேச்சுரோபதி என்ற தனது புத்தகத்தில், தனது வாழ்வில் இயற்கை வழி நடைமுறைகளைப் பின்பற்றி வந்த மகாத்மா காந்தி எப்படி ரிக்லியின் வழிமுறைகளை 20வது நூற்றாண்டில் பின்பற்றி வந்தார் என்பது குறித்து இவா ஜேன்சென் எழுதியுள்ளார்.

ஐரோப்பாவில் இயற்கை வாழ்க்கை முறைக்குத் திரும்புதல், சமைக்காத மற்றும் இயற்கை உணவுக்கு, நிர்வாணத்துக்கு, மாற்று மருத்துவத்துக்கு மாறுவதில் 20ஆம் நூற்றாண்டில் கவனம் செலுத்திய லெபென்ஸ்ரெபார்ம் என்ற இயக்கம் தோன்றியதில் இருந்து, ரிக்லியின் தாக்கம் வெளிப்பட்டது. சுவிட்சர்லாந்தில் லெபென்ஸ்ரெபார்ம் இயக்கத்தில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மோன்ட்டே வெரிடா மலையில் உட்டோபியன் கலாச்சாரத்தை தோற்றுவித்தவர்கள், ரிக்லியிடம் சிகிச்சை பெறுவதற்காக பிலெட் நகருக்கு வந்திருக்கிறார்கள் என்று ஜாவோட்னிக் தெரிவிக்கிறார்.

1906ல் ரிக்லியின் மரணத்துக்குப் பிறகு, அவருடைய சகாப்தம் மறைந்து போனது. அவருடைய மகன்களில் ஒருவர் அதை ஏற்று நடத்திய நிலையில், போர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வமின்மை காரணமாக ஸ்லோவேனியாவில் மாற்று மருத்துவத்துக்கான வரவேற்பு குறைந்துவிட்டது.

தண்ணீர் நல்லது. காற்று இன்னும் நல்லது. ஒளி எல்லாவற்றையும் விட சிறந்தது.

எவ்வளவு இருந்தாலும், ரிக்லியின் தத்துவமே திரும்ப எழுவது என்பது தான். அவருடைய மறைவுக்குப் பிறகு நூறாண்டுகளில் இயற்கை வழி சிகிச்சை முறைகள் மீண்டும் பிரபலம் அடைந்து, அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளன. பொதுவாகச் சொன்னால், மாற்று மருத்துவ சிகிச்சைகள் பெரிய தொழிலாகவும், ஆண்டுதோறும் வளரும் துறையாகவும் மாறியுள்ளது. 2026 ஆம் ஆண்டு வாக்கில் $210.81 பில்லியன் அளவுக்கு இதில் வருமானம் இருக்கும் என்று கிராண்ட் வியூ ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.

``அவர் பரிந்துரைத்த நடைமுறைகளுக்கு ஆதரவாக அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இப்போது இருப்பதால், அவை ஏற்புடையவையாக உள்ளன. ஆனால், அந்தக் காலத்தில் அது புரட்சிகரமானதாக இருந்தது'' என்கிறார் ஜுபானிக் ஸ்லாவெக். வைட்டமின் டி உருவாதலுக்கு சூரிய வெளிச்சம் முக்கியம் என்பதை ஆராய்ச்சிகள் இப்போது காட்டுகின்றன; தூக்கத்தின் சுழற்சியை மெலட்டினன் சீர் செய்கிறது, நல்ல ஆரோக்கியத்துக்கு சீரான தூக்கம் அவசியமாகிறது; உடல் இயக்க செயல்பாடுகளும், இயற்கையுடன் இணைந்திருப்பதும் செரோட்டோனின் சுரக்கச் செய்து மன ரீதியில் நம்மை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

வோஜ்கோ ஜாவோட்னிக்: ``ஒரு வகையில் அடிப்படையில் அவர் கவர்ச்சிகரமான முகாம் சேவை அளித்தார்.''படத்தின் காப்புரிமை Private Collection of Vojko Zavodnik. All rights r Image caption வோஜ்கோ ஜாவோட்னிக்: ``ஒரு வகையில் அடிப்படையில் அவர் கவர்ச்சிகரமான முகாம் சேவை அளித்தார்.''

கடந்த சில ஆண்டுகளில், பிலெட் நகரம் தன்னுடைய இயற்கை வழி சிகிச்சை பாரம்பரியத்தை தோண்டி எடுக்கத் தொடங்கியுள்ளது. மன அழுத்தம் நிறைந்த வாழ்வில் இருந்து விலகியிருக்க விரும்புவோருக்கு, அசத்தலான இயற்கை சூழ்ந்த பாரம்பரியம் மற்றும் கலாசாரம் மிகுந்த இடமாக அந்த நகரம் இப்போது பிரபலப்படுத்தப் படுகிறது. கடந்த ஆண்டு ரிக்லியின் வாழ்க்கையின் உந்துதலில் சாவா குரூப் ரிக்லி பேலன்ஸ் ஓட்டல் (முன்பு ஹோட்டல் கோல்ப்) நான்கு நட்சத்திர அந்தஸ்துள்ள தங்குமிட சேவையை அளிக்கத் தொடங்கியது. உள்ளூரில் உள்ள சில அழகு மற்றும் சிகிச்சை நிலையங்கள், ரிக்லியின் சிகிச்சை முறைகளை தங்களுடைய சிகிச்சைப் பட்டியலில் சேர்த்திருப்பதாக ஜாவோட்னிக் தெரிவிக்கிறார்.

பிலெட் கலாசார நிலையம் பிலெட் கோட்டையில் அவருக்காக ஒற்றை அறை கண்காட்சி ஒன்றை திறந்துள்ளது. 130 மீட்டர் உயரத்தில் மலை உச்சியில் இந்த இடம் அமைந்துள்ளது. கடந்த 21 ஆண்டுகளாக ஜூலை மாதத்தில் ரிக்லி நடைபயணங்கள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கோட்டையில் இருந்து சிறிது நேரத்தில் நடந்து செல்லக் கூடிய தொலைவில் உள்ள, கூரையில்லாத ரிக்லி வில்லா என்ற அவருடைய வீடு, அவரின் 200வது பிறந்த ஆண்டான 2023 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப் பட்டுவிடும் என்று ஜுபானிக் ஸ்லாவெக் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஹோட்டல் ரிக்லி பேலன்ஸில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், சற்று சரிவான ஸ்ட்ராஜா மலை உள்ளது. ரிக்லி பரிந்துரைத்த சாதாரண மலைகளில் ஒன்றாக அது இருந்தது. 21 ஆம் நூற்றாண்டின் மாற்றங்களைக் காட்டுவதாக அது மாறியுள்ளது. சாலை வசதிகள், சுற்றுலாப் பயணிகள் நின்று பார்ப்பதற்கான இடங்கள், பெரிய மரச் சட்டங்கள் கொண்ட புகைப்பட பூத், பொழுது போக்கு பூங்கா செயல்பாடுகள் வந்துவிட்டன. இருந்தபோதிலும், மலை உச்சியில் ரிக்லிக்கு ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. கிரானைட் கல்லில் அவருடைய உருவம் செதுக்கப் பட்டுள்ளது. நவீன வாழ்க்கை முறையில் அவர் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதற்கான சிறிய அங்கீகாரமாக அது அமைந்துள்ளது.

ரிக்லியின் காலத்தை தோண்டி எடுக்கிறது பிலெட் ஏரி. மன அழுத்தமான வாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புவோருக்கு உகந்த இடமாக இந்த இடம் கருதப் படுகிறது. (நன்றி: யோர்கில்/அலாமி)படத்தின் காப்புரிமை Yorgil/Alamy Image caption ரிக்லியின் காலத்தை தோண்டி எடுக்கிறது பிலெட் ஏரி. மன அழுத்தமான வாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புவோருக்கு உகந்த இடமாக இந்த இடம் கருதப் படுகிறது.

மலா ஒசோஜ்னிகாவில் உயரத்தில் இருந்து, வயல்களின் மீது காலைப் பனி எழுவதை என்னால் பார்க்க முடிகிறது. காலை சூரிய வெளிச்சத்தில் நனைந்தபடி அங்கு நான் நின்றிருந்தபோது, இதமான தென்றல் காற்று என் உடலைக் குளிர்வித்தது, 45 நிமிடம் மலைமீது நடந்து சென்றதற்கு அது இதமாக இருந்தது. இலைகள் மிதிபடும் ஓசை மட்டும் துணையாக இருக்கும் நிலையில், பசுமையான புல்வெளிகளையும் மலைப் பகுதி காடுகளையும், நீல நிற ஏரி மற்றும் ஆரஞ்சு நிற வானத்துடன் நான் பார்த்தபோது அமைதியான உணர்வு ஏற்பட்டது.

நான் கீழே இறங்கி வந்தபோது, நீச்சல் உடை அணிந்தவர்கள், சூரியனை முத்தமிடும் உடல்களுடன் ஏரியின் நீரில் கால்களை நனைத்துக் கொண்டிருந்தனர். இயற்கை நமக்கு அளிக்கும் சாதாரண மகிழ்ச்சிகளின் பயன்களை முழுமையாக அறிவதற்காக நான் நீண்ட தூரம் பயணம் செய்திருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

https://www.bbc.com/tamil/science-49626270

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
    • செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.