Jump to content

சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு


ampanai

Recommended Posts

Dkn_Tamil_News_2019_Sep_03__886181056499482.jpg

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்படும் இந்திய திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 13ம் தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்வர் நாராயணசாமி இயக்குநர் மாரிராஜ் விருது வழங்க உள்ளார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525029

Link to comment
Share on other sites

`நோக்கம் நிறைவேறிடுச்சு... எந்தவொரு வருத்தமும் இல்லை!'- தேசிய விருது குறித்து மாரி செல்வராஜ்

mari selvaraj

இதுகுறித்து படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜிடம் பேசியபோது,`` `பரியேறும் பெருமாள்' அரசுக்காக எடுக்கப்படலை. இது மக்களுக்காக எடுத்த படைப்பு. அவங்களுடைய விவாதங்களில் இருக்கணும்னுதான் எடுத்தேன். ஒட்டுமொத்த மக்களும் இந்தப் படத்தைப் பார்த்து ரசிச்சு ஏத்துக்கிட்டாங்க. படத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போயிட்டாங்க. இது மூலமா படம் எடுக்கப்பட்ட நோக்கமும் நிறைவேறிடுச்சு. படத்துக்கு விருது கிடைக்கலையேன்னு எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை.

முதல் படம் எடுக்கிற எந்த இயக்குநரும் தேசிய விருதை எதிர்பார்க்க மாட்டாங்க. ஏன்னா, விருது கிடைக்க தேவையான சூட்சமமும், விதிமுறைகளும் அறிமுக இயக்குநருக்குத் தெரியாது. தொடர்ச்சியா படங்கள் இயக்கியிருந்தா விருதை எதிர்பார்த்திருப்பேன். என் படம் தேசிய விருதுக்குத் தகுதியான படம்னு சொல்ற இடத்துல நான் இல்லை. நிறைய பிழைகள், குறைகள் படத்துல இருந்திருக்கலாம்.

ஆனா, ஒரு நல்ல சினிமாவை இப்போதான் கத்துட்டு வர்றேன். ஏன்னா, இப்போதானே முதல் படமே எடுத்து முடிச்சிருக்கேன். இன்னும் நான் பயணம் பண்ண வேண்டிய தூரம் நிறைய இருக்கு. படத்துக்கு விருது கிடைக்கலைனு நிறைய இயக்குநர்கள் எனக்குப் போன் பண்ணி வருத்தப்பட்டாங்க. எனக்காக இவங்க பேசினது ரொம்பவே ஆறுதலா இருக்கு. இப்போ புதுச்சேரி அரசாங்கம் என்னுடைய படத்துக்கு விருது அறிவிச்சது சந்தோஷம்தான். நாளைக்குதான் விருது வாங்கப் போறேன். என்னுடைய அடுத்த படத்துடைய ஷூட்டிங் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்போகுது'' என்றார் மாரி செல்வராஜ்.

 

https://cinema.vikatan.com/tamil-cinema/director-mari-selvaraj-says-about-national-award-expectation

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.