Jump to content

தமிழ் தேசியத்தின் குரலை ஓங்கச் செய்ய எழுக தமிழ் பேரணி பலமுற வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தின் குரலை ஓங்கச் செய்ய எழுக தமிழ் பேரணி பலமுற வேண்டும்

Sep 10, 20190

 
 

தமிழ் தேசியத்தின் குரலை ஓங்கச் செய்ய எழுக தமிழ் பேரணி பலமுற வேண்டும்

மு .திருநாவுக்கரசு

தமிழ் தேசியத்தின் குரலை உள்நாட்டிலும் உலக அரங்கிலும் உரத்து ஓங்கச் செய்யவும் அவர்களின் இருப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தவும் “”எழுக தமிழ்”” பேரணி வெற்றிகரமானதாக அமைய வேண்டியது அவசியம். இப்பேரணி பிசுபிசுத்துப் போனால் அது தமிழின எதிரிகளுக்கு பெரும் வாய்ப்பாகவும், ஈழத் தமிழினம் இருந்த அடையாளமே இல்லாது அழிந்து போவதற்கான ஒரு முன்னறிவிப்பாகம் அமைந்துவிடும். ஆதலால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அரசியல் போட்டிகள், கட்சி வேகங்கள் என்பனவற்றையெல்லாம் கடந்து இந்த ” எழுக தமிழ்ப் ”’ பேரணியை வெற்றிகரமானதாக ஆக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனினது கடமையும் பொறுப்புமாகும்.

“”நான் பெரிது நீ பெரிது”” என்று போட்டி போட்டுக் கொண்டிருக்காமல் “” எனக்கா உனக்கா முதல் பங்கு”” என்று சண்டையிட்டுக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் தேசிய இருப்பை நிலைநாட்ட வல்ல அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஆதரிக்கவும் பலப்படுத்தவும் வேண்டும்.

“”மன்னாதி மன்னர் எங்கே
மாமணித் துரோனர் எங்கே
என்னுடன் தம்பி எங்கே
இலக்கணகுமாரன் எங்கே
கர்ணனும் தேரும் எங்கே
கரைகொளாச் சேனை எங்கே”

என்று பதினெட்டாம் நாள் போர் முடிவில் துரியோதனன் கதறிய நிலையில் ஈழத் தமிழர்கள் இன்று நிற்கின்றோம்.

2009ஆம் ஆண்டு உலகில் காணப்பட்ட சுமாராக 700 கோடி மக்களின் கண்களின் முன் கேட்பாரின்றி அநாதரவான நிலையில் சுமாராக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகினர்.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் மூத்த பெரும் தமிழ் தலைவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று தமிழ் தாயின் தலைப் பேறுகளான புதல்வர்களும் புதல்விகளும் கூடவே தமிழ்மக்களும் போர்க்களம் புகுந்தனர்.

“”கரிபால்டி அழைக்கின்றார் இளைஞர்களே எழுங்கள்”” என்று 1977ஆம் ஆண்டு தேர்தல் மேடைகளில் முழங்கிய பிரச்சாரப் பீரங்கிகள் இன்று தமிழ் மக்கள மக்களின் முன்னணி தலைவர்களாய் தேரோடும் வீதியிலே சிங்கள இராணுவத்தின் அரவணைப்போடு அகலக் கைவீசிப் பவனி வருகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் இரத்தத்தில் தோணிகள் ஓட்டி விளையாடி தலைவர்களாய் முள்ளிவாய்க்கால் எலும்புக்கூடுகள் நமக்கு மாளிகை கட்டி மகிழ்ந்து வாழும் தலைவர்களாய் இன்றைய முன்னணி தமிழ் தலைவர்கள் காணப்படுகிறார்கள்.

“” கரிபால்டி அழைக்கிறார் இளைஞர்களே எழுதுக”” என்றும் “” வங்கத்துச் சிங்கங்கள் எழுக “” என்றும் 1970களின் மத்தியில் பேசிய மேடைப் பேச்சு வீரத் தமிழ் தலைவர்களின் வீராவேசப் பேச்சின் பின்னணியில் இளைஞர்களும் யுவதிகளும் உடல் – பொருள் -ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து போராட புறப்பட்டனர்.

“”சம உடமைத் தன்னாட்சி தமிழீழ விடுதலைக்காக எனது உள்ளம், உயிர், உடல், உடமை அனைத்தையும் ஈர்ந்து உறுதியோடு போறாடுவேன் “” என்று . சத்தியம் செய்து போர்க்களம் புகுந்து ஆகுதியான இளைஞர் யுவதிகளின் அர்ப்பணிப்புகளும் வரலாறும் கண்முன் விரிந்து கிடக்கின்றது.

அப்படியே ஆகுதியான அனைத்துப் போராளிகளையும் மக்களையும் நலன் விரும்பிகளையும் கணமுன் கண்ட பின்பும் ஓடுகாலி அரசியலுக்கு குறைவின்றி தமிழ் மக்களின் வரலாறு துயரகரமாய் நீண்டு செல்கிறது.

வன விலங்கியல் வாழ்வில் தலையாய வேட்டை விலங்குகள் , மிச்சம் உண்ணி வேட்டை விலங்குகள் , காட்டிக்கொடுக்கும் மற்றும் ஒற்றர் வேலை செய்யும் பறவைகள் என பலமாக வகைப்படுத்துவர்.

eluka-thamil

உதாரணமாக சிங்கம் மற்றும் புலியினங்கள் என்பன தலையாய வெட்டை விலங்குகள் ஆகும். இவை வேட்டையாடிய மிச்சங்களை உண்ணும் மிச்சமுண்ணி விலங்குகளாக கழுதைப் புலிகள் , ஓநாய்கள் , காட்டு நாய்கள், நரிகள் என்பன காணப்படுகின்றன.

கழுகுகள் ,வல்லூறுகள், பருந்துகள் மற்றும் இவற்றையொத்த பறவையினங்கள் என்பன வேட்டையாடப்பட்ட பிராணிகளை இறந்துபோன பிராணிகளை எனைய பிராணிகளுக்கு காட்டிக் கொடுக்கும் வகையில் தகவல் வழங்கவல்ல பிராணிகளாக காணப்படுகின்றன.

மிச்சமுண்ணி விலங்குகள்விட்ட சிதலங்களை கழுகுகளும் , வல்லூறு களும் , பருந்துகளும் கொத்தி உண்ணும். இந்த மிச்சமுண்ணிநீ பறவைகள்விட்ட துகள்களை வண்டுகளும் ,பூச்சிகளும் உண்ணும்.

இத்தகைய காட்டு விலங்கு வாழ்விலிருந்து நாட்டு அரசியல் அதிகம் வேறுபட்டதல்ல. ஈழத் தமிழினம் மேற்படி தலையாய வேட்டை விலங்கு அரசியல் மிச்சம் உண்ணி விலங்கு அரசியல் காட்டிக்கொடுக்கும் பறவையின அரசியலெனப் பல்வேறு மூர்க்கமான அரசியல் வலைப்பின்னலுள் சிக்குண்டு தவிக்கின்றார்கள்.

இத்தகைய சூழலில் ஈழத் தமிழ் தாயின் புதல்வர்கள் முன்னும் புதல்விகள் முன்னும் விரிந்துகிடக்கும் பணிகள் மிகவும் கடினமானவை. தமிழ் மக்களின் எதிர்காலம் மிகவும் பலமானவர்கள்.

மேற்படி காட்டு விலங்கு வகை தலைவர்களின் அரசியலிலிருந்து தமிழ் மக்களை தற்காத்து முன்னேறுவதற்கும், தமிழ்மக்களுக்கான இறுதி இலக்கை அடைவதற்கும் , அதிக புத்திசாலித்தனமும், அதிக அர்ப்பணிப்பும் , அனைவரையும் அரவணைக்கும் பிரந்த மனப்பாங்கும், யதார்த்த பூர்வமான உலகக் கண்ணோட்டமும் , சாதுரியமான வெளியுறவுக்கொள்கையும் அவசியம்.

இதற்கான சரியான புதிய பாதை கொண்ட ஒரு மாற்று தலைமைத்துவம் இன்றி தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்க முடியாது.

துணை அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் பின்பு தமிழ் மக்கள் நீதிக்காகவும் சமாதானபூர்வமான அரசியல் திமுக்காகவும் சர்வதேச அரசுகளிடம் சிங்களத் தலைவர்களிடமும் தமிழ் தலைவர்களிடமும் நம்பிக்கை வைத்து காத்து நின்றனர்.

ஆனால் மேற்படி உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்புகளினால் நம்பிக்கை ஊட்டப்பட்ட , வாக்குறுதி அளிக்கப்பட்ட நல்லாட்சி அரசின் பெறுபேறுகள் என்பன இனப்படுகொலையாளிகளைப் பாதுகாப்பதிலும் , இனப்படுகொலை அரசை காப்பாற்றுவதிலும் ஒருபுறம் வெற்றி பெற்றதுடன் மறுபுறம் தமிழ் தமிழ் மக்கள் வேண்டி நின்ற நீதியான நியாயமான அரசியல் தீர்வை நிராகரித்துள்ளதுடன் தமிழ் மண்ணை சிங்களக் குடியேற்றங்களால் மேலும் ஆக்கிரமிப்பதிலும், தமிழ் மண்ணை பெரிதும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்துவதிலும் முன்னேறியுள்ளது.

இத்தகைய சூழலில் தமிழ் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சிங்கள ஆட்சியாளர்களின் உற்ற நண்பர்களாக இருக்கும் நிலையில் , அவர்களின் கூடைக்குள் இவர்களும் ஒரு பகுதியாக இணைந்துகொண்ட நிலையில் தமிழ் மக்கள் தன்னெழுச்சி கொண்டு ஒரு புதிய பாதையில் , ஜனநாயக வழியில் போராட வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளவர்களாய் காணப்படுகின்றனர்.

மேற்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் திசைமாறிய அரசியலுக்குப் பதிலாக ஒரு புதிய மாற்று அரசியல் தலைமையை உருவாக்க மாற்றுத் தலைமை பேசும் தமிழ் அரசியல் தலைவர்கள் புறப்பட்டனர் அதன்பொருட்டு தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு மக்கள் போராட்ட அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனாலும் அது தனக்குள் மோதிக்கொள்ள நிலைமையில் வீரியமிக்க காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை மறுசீரமைப்பு புதிய உத்வேகத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியதைத் தவிர வேறு வழி எதுவும் தமிழ் மக்களுக்கு கிடையாது. ஆதலால் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கிய அனைத்து மாற்று அரசியல் சக்திகளும் தங்கம் கிடையான பேதங்களை முற்றிலும் மறந்து பிரதான எதிரி உடனடி எதிரி உடனடிப் பிரச்சினைகள் என்பனவற்றிற்கு முகங்கொடுத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது வரலாற்று கட்டளையாகும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அபூர்வமாக தமிழ் மக்களுக்கான தலைவிதியை முன்னெடுத்து உழைக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். இந்நிலையில் எழுத தமிழ் நிகழ்வை மிக வெற்றிகரமாக முன்னெடுக்க அனைத்து தமிழ் மக்களும் பெரிதும் பாடுபடவேண்டும்.

Eluka-Tamil-East-1-e1484803484976

ஈழத்தமிழ் தேசியவாதத்தை மில் கட்டமைப்பு செய்ய வேண்டும் அதற்காக பண்பாட்டு பணிகள் மூலமாகவும் அடைக்கலமும் முன்னெடுப்புகளை ஆக வேண்டிய அவசர காலம் இது. இந்நிலையில் எழுக தமிழ் பேரணியை அனைத்து உட்பேதங்களையும் கடந்து முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

கட்சி வேறுபாட்டு பட்டிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் வெள்ளாடுகள் தங்களை மடக்கி வைத்துள்ள ஓநாய்களை தாண்டி , பட்டி வேலிகளையும் தாண்டி எழுக தமிழ் பேரணியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பை கொண்டவர்களாக உள்ளனர்.

மாற்றுத் தலைமையை பற்றி பேசுகின்ற அனைவரும் அத்தகைய அனைத்து கட்சியினரும் முதலில் ஒன்றுபட்டு மக்கள் முன் தமது ஐக்கியத்தை காட்சிப்படுத்துவார்களேயானால் வேறு பட்டிகளுக்ககுள் இருக்கும் வெள்ளாடுகள் அனைத்தும் வேலிகளை தாண்டிவந்து எழுக தமிழ் பேரணியை தாமாக பலப்படுத்தும். அது ஈழத்தமிழ் தேசியவாதத்தை பலப்படுத்தும். அதுவே இப்போது தமிழ் மக்களுக்கு வேண்டியதாகும். இது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தமிழ் மக்களின் குரலையும் பேரம் பேசுவதற்கான அரசியல் பலத்தையும் தமிழ் மக்களுக்கும் மாற்று அரசியல் பேசும் அரசியல் தலைவர்களுக்கும் அளித்தும்.

உள்நாட்டு வெளிநாட்டு அரசில் சக்திகளாலும் தமிழ் தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டு, கைவிடப்பட்டு அனாதரவாக காணப்படும் தமிழ் மக்களுக்கு தற்போது எழுக தமிழ் பேரணி மூலமான தமிழ் தேசிய எழுச்சியை முன் நிறுத்துவதை தவிர வேறு மார்க்கம் எதுவும் கிடையவே கிடையாது.

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.