Jump to content

சந்திர இரவால் நெருங்கும் ஆபத்து.. மவுனம் சாதிக்கும் விக்ரம் லேண்டர்! : செப். 20க்குள் லேண்டரை செயல்பட வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்


Recommended Posts

நிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டருக்கு புதிய ஆபத்து காத்திருக்கிறது. செப்டம்பர் 21 முதல் நிலவில் கடும் குளிர் இரவு வர உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் சிக்கினால் மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை.எனவே அதற்குள் லேண்டருடன் தகவல் தொடர்பு ஏற்ப்டுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகின்றனர். லேண்டர் தொடர்பான முழு விவரங்களை இச்செய்தி குறிப்பில் காண்போம்.

*நிலவின் தென் துருவத்தில் சாய்ந்த நிலையில் விழுந்து கிடைக்கும் விக்ரம் லேண்டரை தட்டி எழுப்ப அத்தனை முயற்சிகளையும் முடிக்கிவிட்டுள்ளது இஸ்ரோ.

*லேண்டரை படமெடுத்து அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் மூலமே அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

*பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்திற்கு தேவையான தினமும் ஏராளமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

*அதே போன்று பெங்களூரு அருகே உள்ள பய்யாலாலு என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள 32 மீட்டர் ஆன்டெனா மூலமும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

*இந்த ஆன்டெனா சந்திராயன் 1 திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். அதன் மூலம் லேண்டருடன் பேச இஸ்ரோ விஞ்ஞானிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

*விக்ரம் லேண்டர் 3 ட்ரான்ஸ்பாண்டர்கள் மற்றும் ஒரு ஆன்டெனாவை கொண்டது. அதன் மேற்பரப்பில் டூ வடிவில் இவை அமைந்துள்ளது. அதன் மூலம் தான் சிக்னலை பெற்று லேண்டர் பதிலளிக்க முடியும். ஆனால் தொடர்பு துண்டிக்கப்பட்டு 100 மணி நேரம் மேலாகியும் லேண்டரில் இருந்து இதுவரை சிக்னல் வரவில்லை.

* அது நல்ல நிலையில் உள்ளதா உடைந்து விட்டதா என்பது குறித்து இதுவரை இஸ்ரோ அறிவிக்காதது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. லேண்டரும் அதன் உள்ளே இருக்கும் ரோவரும் சந்திரனில் ஒரு பகல் பொழுதுக்கு மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

*சந்திரனில் ஒரு பகல் என்பது பூமியின் 14 பகலுக்கு சமம். பகல் பொழுதில் தமக்கு தேவையான ஆற்றலை சூரியனில் இருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் லேண்டருக்கு வெளியே தகடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

*அதன் படி சூரிய சக்தியை பெற்று லேண்டர் இயங்குவதற்கான 14 நாள் கெடுவில் இதுவரை 5 தினங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 9 தினங்கள் மட்டுமே உள்ளன.

*அதற்கு லேண்டர் தனக்கு தேவையான ஆற்றலை சூரியனில் இருந்து பெற்று இயங்குமா என்பதில் மர்மம் நீடிக்கிறது. அதன் பின் சந்திரனில் இரவு தொடங்கிவிடும். அது கடும் குளிர் இரவாக இருக்கக்கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

*குளிர் இரவில் லேண்டர் சிக்கினால் அது மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை. எனவே அதுவரை விஞ்ஞானிகளின் முயற்சி தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525229

Link to comment
Share on other sites

சந்திரயான் 2: விக்ரம் லேண்டர் தொடர்பு ஏற்படுத்தப்படுவது சாத்தியமா? - மயில்சாமி அண்ணாதுரை விவரிக்கிறார்

இந்தியாவின் சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கருவி நிலவின் மேற்பகுதியில் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆனால், அந்தக் கருவியை மீண்டும் செயல்பட வைப்பது சாத்தியமா?

 

விக்ரம் லேண்டர் கருவி நிலவின் மேல் பகுதியில் கிடப்பது ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாகத் தொழில்நுட்ப ரீதியாகப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

விக்ரம் லேண்டர் கருவி நிலவில் முழுதாக இருப்பது ஆர்பிட்டர் எடுத்த தெர்மல் இமேஜ் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால் உண்மையில் அந்தப் படங்கள் எப்படி எடுக்கப்பட்டன?

 

"அந்தப் படங்கள் தெர்மல் இமேஜிங் முறையில் எடுக்கப்பட்டவை என எழுதப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை ஆப்டிகல் முறையில்தான் எடுக்கப்பட்டவை. நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டரில் இரண்டு கேமராக்கள் இருக்கின்றன. ஒன்று ஆர்பிட்டர் ஹை ரெசல்யூஷன் (OHRC) கேமரா. மற்றொன்று டெரைன் மேப்பிங் கேமரா. 30 சென்டிமீட்டர் ரெசல்யூஷன் கொண்ட உயர்தர படங்களை இந்த ஓஎச்ஆர்சி எடுக்கும். இது ஒரு வழக்கமான ஆனால், உயர்ந்தபட்ச ரெசல்யூஷனைக் கொண்ட கேமரா, அவ்வளவுதான். இந்த ஓஎச்ஆர்சி நிலவின் தரைப்பகுதியைப் படம் பிடிக்கும். அப்படித்தான் இந்த லேண்டர் கீழே இருப்பது தெரியவந்தது" என்கிறார் சந்திரயான் - 1 திட்டத்தின் முன்னாள் இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரை.

விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை ஆர்பிட்டரில் உள்ள கேமரா படம் எடுத்துவிட்டதாகக் கூறி சில படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுவருகின்றன. உண்மையில் விக்ரம் லேண்டரின் மிகத் தெளிவான புகைப்படத்தைப் பெற வாய்ப்புள்ளதா?

"இல்லை. அந்தப் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக விழாது. சாய்வாகத்தான் விழும். நீங்கள் கூகுள் மேப்களில் பார்க்கும்போது அவை தெளிவாகத் தெரியக் காரணம், அவை சூரிய ஒளி நேரடியாக விழும்போது எடுக்கப்பட்டவை என்பதுதான். ஆனால், இங்கே சூரிய ஒளி சாய்வாகத்தான் விழும். அதனால், தெளிவில்லாத படம்தான் கிடைக்கும். அதாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட அந்தப் பகுதியின் படத்தில் எந்தப் பொருளும் இருக்காது. இப்போது அங்கே ஒரு பொருள் இருக்கிறது. அப்படித்தான் இது கண்டறியப்படுகிறது. இந்த ஆர்பிட்டர் நிலவிலிருந்து 100 கி.மீ தூரத்தில் சந்திரனைச் சுற்றிவருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்கிறார் மயில்சாமி.

நிலவின் தரையில் கிடக்கும் லாண்டரைத் தொடர்பு கொண்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. 2.1 கி.மீ. உயரத்திலிருந்து லாண்டர் கீழே விழுந்துவிட்ட நிலையில் இது சாத்தியமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

"இந்த லாண்டர் கீழே விழவில்லையென்றே வைத்துக்கொள்வோம். ஆனால், இறங்க வேண்டிய இடத்திற்குப் பதிலாக வேறு ஒரு இடத்தில் இறங்கிவிட்டால்கூட அதனைத் தொடர்புகொள்வது இயலாமல் போகலாம். லாண்டரை நேரடியாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்பு கொள்ள முடியாது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆர்பிட்டரைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஆர்பிட்டர் சிக்னல்களை லாண்டருக்கு அனுப்பும். பிறகு லாண்டர் சிக்னல்களை ஆர்பிட்டருக்கு அனுப்பும். ஆர்பிட்டர் பூமிக்கு அனுப்பும். இதுதான் முறை.

இப்போது வேறு ஒரு இடத்தில் லாண்டர் இருப்பது தெரியவந்திருக்கிறது. அதனுடன் தொடர்புகொள்ள முடியுமா என்பதை இரண்டு, மூன்று காரணிகளை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். அதாவது, அந்த லாண்டர் பவர் - ஆன் நிலையில் இருக்க வேண்டும். லாண்டர் ஆண்டனா தொடர்பு கொள்ளும் திசையை நோக்கி இருக்க வேண்டும். ஆண்டனாவோ, லாண்டரோ சேதமடைந்திருக்கக்கூடாது.

நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர், லாண்டர் கிடக்கும் இடத்திற்கு மேல் 5-10 நிமிடங்கள்தான் வரும். அதற்குள் தகவல் தொடர்பு கிடைத்தால் உண்டு" என விளக்குகிறார் மயில்சாமி அண்ணாதுரை.

லாண்டர் நிலவில் விழுந்துவிட்டாலும்கூட, எப்படியாவது அதனுடன் தொடர்பு கிடைத்துவிட வேண்டும் என்பதுதான் பலரது வேண்டுதலாக இருக்கிறது.

"இப்படிப் பல முறை நடந்திருக்கிறது. ஏதாவது ஒரு கிரகத்திற்கு ஒரு கருவியை அனுப்பினால், அந்தக் கருவி பத்திரமாக தரையிறங்கியிருக்கும். ஆனால், தொடர்பு இல்லாமல் போயிருக்கும். பிறகு சில நாட்கள் கழித்து தொடர்பு கிடைக்கும். இது செயற்கைக்கோள்களில் அடிக்கடி நடக்கும். பல முறை இந்தியா உட்பட பல நாடுகள் அனுப்பிய செயற்கைக்கோள்கள் சுற்றுவட்டப் பாதையில் நின்றவுடன் சமிக்ஞை எதையும் அனுப்பாது. ஆனால், சில நாட்கள் கழித்து சமிக்ஞை கிடைக்க ஆரம்பிக்கும். நாம் தொடர்ந்து அந்த செயற்கைக்கோளுக்கு சமிக்ஞையை அனுப்ப வேண்டும். அதைச் செயல்படவைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். சில சமயங்களில் அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. ஆனால், இதைப் பல காரணிகள் தீர்மானிக்கும்" என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

நிலவில் விழுந்துவிட்ட லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்த அடுத்த பதினான்கு நாட்கள் முயற்சிக்கப் போவதாக இஸ்ரோ தலைவர் சிவன் சொல்லியிருக்கிறார். "லாண்டரைப் பொறுத்தவரை சூரியன் தென்துருவப் பகுதிக்கு வரும் முதல் நாளில் தரையிறங்கும். நிலவில் ஒரு சூரிய நாள் என்பது பூமியில் 14 நாட்கள். இந்த பதினான்கு நாட்களுக்குப் பிறகு அங்கு சூரிய ஒளி இருக்காது. ஆகவே அந்த லாண்டர் செயல்படாது. அதனால்தான் பதினான்கு நாட்களுக்குள் அதைச் செயல்படவைக்க முயற்சிகள் நடக்கின்றன. அந்தப் பகுதி இருளாகிவிட்டால் அந்தக் கருவியின் சர்க்யூட்கள் அணைந்துவிடும். பிறகு எப்படி தொடர்புகொள்ள முடியும்? அந்தப் பகுதிக்கு மீண்டும் சூரிய ஒளி கிடைக்கும்போது சர்க்யூட் மறுபடியும் இயக்கத்தைத் தொடருமா என்பதையெல்லாம் நிச்சயமாக சொல்ல முடியாது" என விளக்கமளிக்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

லாண்டர் நிலவில் தரையிறங்கி நான்கு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகளை இஸ்ரோ தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.

இஸ்ரோவின் முதல் தலைவர் டாக்டர் விக்ரம் ஏ சாராபாயின் பெயர்சூட்டப்பட்ட இந்த லாண்டர், 1471 கிலோகிராம் எடையைக் கொண்டது. 14 நாட்கள் இயங்கக்கூடியது. இதிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகள் பெங்களூருக்கு அருகில் உள்ள பயலாலுவில் உள்ள இந்தியன் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் மையத்தில் பெறப்பட்டு ஆராயப்படும். இந்த லாண்டர் நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டருடனும் தொடர்புகொள்ளும்.

இந்த லாண்டரில் பிரக்யான் என்ற உலவி வாகனமும் வைக்கப்பட்டிருந்தது. நிலவை நெருங்கியவுடன் மேன்ஸினஸ் சி மற்றும் சிம்பெலியஸ் என் என்ற இரு பள்ளத்தாக்குகளுக்கு நடுவில் உள்ள இடத்தில் வினாடிக்கு 2 மீட்டர் வேகத்தில் தரையிறங்கும்படி இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

https://www.bbc.com/tamil/science-49663994

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர்; ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்- 2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த ஜூன் 22 ஆம் திகதி ெராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த விக்ரம் லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது. கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூரிலுள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் கவனமாக தரை இறக்குவதுதான் சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கியமான பணி ஆகும். சமிக்ஞை மூலம், மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.

விக்ரம் லேண்டரின் கதி என்ன ஆனது என்று தெரியாததால் அதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுட்டு வருகின்றனர். நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய தெர்மல் இமேஜ் மூலம் விக்ரம் லேண்டர் சேதம் அடையாமலும் ஒரு பக்கமாக சாய்வாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிடக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளது.

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டர் விழுந்துள்ள தென் துருவத்தில் சில பகுதிகள் கொஞ்சம் கூட சூரியனே படாத இடங்கள் ஆகும். இங்கு மிக மோசமான உறை நிலை காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தென் துருவம் முழுக்க ஐஸ் குவியல்கள் இருக்கும். சூரிய வெளிச்சம் படாத நிலவின் தென் துருவ பகுதியிலுள்ள பள்ளங்களில்100 மில்லியன் தொன் நீர் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில், விக்ரம் லேண்டர் ஆபத்தான இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு ஹெராக்கிள்ஸ் ரோபோடிக்கை அனுப்புவதற்கான பணிகளில் தயாராவதற்கு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தற்போது கனடா மற்றும் ஜப்பானிய விண்வெளி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

https://www.thinakaran.lk/2019/09/11/இந்தியா/40120/ஆபத்தான-இடத்தில்-விக்ரம்-லேண்டர்-ஐரோப்பிய-விண்வெளி-மையம்-எச்சரிக்கை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.