Jump to content

9/11 அமெரிக்கா இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? - சதி பின்னணிகள்: விரிவான தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
9/11 இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? - சதி பின்னணிகள்படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவில் செப்டம்பர் 11 ஆம் தேதி தாக்குதல் நடந்து 18 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் சதி பின்னணிகள் இன்னும் மறந்து போய்விடவில்லை என்கிறார் மைக் ருடின்.

இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு எண்ணற்ற அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் ஒரு அனுமானத்தில், ஒரு ஆவணத்தின் மீது சந்தேகம் எழுந்தால், ``பதில் அளிக்கப்படாத மற்றொரு கேள்விக்கு'' கவனம் மாறிவிடுகிறது.

9/11 தாக்குதலின் பின்னணி பற்றி இணையத்தில் சுழற்சியில் உள்ள மிகவும் பிரபலமான ஐந்து அறிக்கைகள் இங்கே தரப் பட்டுள்ளன.

கடத்தப்பட்ட விமானங்களை இடைமறிக்கத் தவறியது

கேள்வி: கடத்தப்பட்ட நான்கு விமானங்களில் ஒன்றைக்கூட, உலகின் வல்லமைமிக்க விமானப் படையால் ஏன் இடைமறிக்க முடியாமல் போனது?

சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: விமானங்களை இடைமறிக்க வேண்டாம் என்றும் கீழேயே இருக்குமாறும் அப்போதைய அமெரிக்கத் துணை அதிபர் டிக் செனே ராணுவத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த 9/11 தாக்குதலின் விளைவாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகைள் ஆரம்பமாகின.படத்தின் காப்புரிமை Getty Images

அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: இது மிகவும் அசாதாரணமான, உள்ளே வன்முறையாளர்கள் உள்ள நிலையில் நடந்த பல விமானங்களின் கடத்தல், விமானத்தைக் கண்டுபிடிக்கும் டிரான்ஸ்பான்டர்கள் ஆப் செய்யப் பட்டிருந்தன அல்லது மாற்றப் பட்டிருந்தன.

இன்னும் சொல்லப் போனால், அன்றைக்கு அமெரிக்க விமானப் படைத் தளத்தில், வழக்கமான ராணுவப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

விமானக் கட்டுப்பாட்டு அதிகாரி காலின் ஸ்காக்கின்ஸ் தொடர்ந்து ராணுவத்துடன் தொடர்பிலிருந்தார். பதில் கிடைப்பதில் குறைபாடு எதையும் அவர் உணரவில்லை. பயணிகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு (FAA) மற்றும் ராணுவ விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களுக்கு இடையில் தகவல் தொடர்பில் குறைபாடு மற்றும் குழப்பம் இருந்தது.

ராணுவத்தின் கருவிகளும் பழைய காலத்தைச் சேர்ந்தவையாகிவிட்டன, மறைமுகப் போர் அச்சுறுத்தலைக் கையாள்வதற்காகக் கடல் பரப்பின் மீது கண்காணிக்கும் வகையில் தான் அவை வடிவமைக்கப் பட்டிருந்தன.

இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்பு

கேள்வி: இரட்டைக் கோபுரங்களில் சில தளங்களில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டும் தீ எரிந்த பிறகு, அதன் காலடியிலேயே எப்படிச் சரிந்தது?

சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: கட்டுப்படுத்தப்பட்ட இடித்தல் செயல்பாடுகள் மூலம் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப் பட்டுள்ளன. அதிவிரைவாக நடந்த இடிப்புகளின் கோட்பாடுகளின்படி, ஒப்பீட்டளவில் மிகக் குறுகிய அவகாசம் எரிந்த தீ விபத்து சம்பவங்களில் (உலக வர்த்தக மையம் 2-ல் 56 நிமிடங்கள், உலக வர்த்தக மையம் 1-ல் 102 நிமிடங்கள்), இடிந்து விழுவதற்கு முன்னதாக குண்டுவெடிப்பு சப்தங்கள் கேட்டதாகவும், வன்முறைக்கான சில வெளிப்பாடுகளைப் பல தளங்களின் ஜன்னல்களில் இடிபாடுகளுக்குக் கீழே காண முடிந்தது என்றும் கூறுகிறார்கள்.

இரட்டை கோபுரம்படத்தின் காப்புரிமை Getty Images

அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட் விரிவாக ஆய்வு நடத்தியதில், அந்த விமானங்கள் கட்டடத்தை இடித்து, ஆதாரமான தூண்களைச் சேதப்படுத்தி விட்டன என்றும் தீ தடுப்பு வசதிகளைத் துண்டித்துவிட்டன என்றும் கண்டறியப் பட்டுள்ளது.

சுமார் 10,000 கேளன்கள் அளவுக்கு விமான எரிபொருள் பல தளங்களில் தெரித்து விழுந்ததால், பரவலாக தீ பிடித்தது. 1,000 டிகிரி சென்டிகிரேடு வரையிலான வெப்பம் காரணமாகத் தளங்கள் அசைந்து கொடுத்தன, தூண்கள் வளைந்துவிட்டன, அதனால் ``வெடி சப்தம்'' ஏற்பட்டிருக்கிறது.

9/11 இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? - சதி பின்னணிகள்படத்தின் காப்புரிமை Getty Images

தளங்களின் பளு கீழே இறங்கியதால், தூண்கள் வடிவமைக்கப்பட்ட திறனைக் காட்டிலும் அதிகமான எடையளவுக்கு நகரும் விசை தாக்கியுள்ளது. தளங்கள் இடிந்த போது இடிபாடுகள் ஜன்னல் வழியாக வீசி எறியப்பட்டுள்ளன.

கட்டுப்படுத்தப்பட்ட இடித்தல் நிகழ்வுகளின் போது கீழ்த் தளத்திலிருந்து மேல் நோக்கி இடிபடும். இங்கு மேலே இருந்து இடியத் தொடங்கியுள்ளது.

மனிதர்களைக் கொண்டு தேடுதல் பணி மேற்கொண்டபோதிலும், வெடிபொருள்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சுவர்கள் அல்லது தூண்களில் முன்கூட்டியே வெட்டுப் பள்ளங்கள் ஏதும் ஏற்படுத்தியதற்கான தடயங்களும் இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட இடித்தலில் இவ்வாறு வெட்டுப் பள்ளம் ஏற்படுத்துவது வழக்கம்.

பென்டகன் மீதான தாக்குதல்

கேள்வி: தொழில்முறையில் இல்லாத ஒரு பைலட், வர்த்தக ரீதியில் சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு விமானத்தைச் சிக்கலான வளைவுகளாக இயக்கி, உலகின் வல்லமை மிக்க ராணுவத்தின் தலைமையகத்தின் மீது எப்படி மோதச் செய்திருக்க முடியும்? கடத்தப்பட்டதாக முதலாவது தகவல் வெளியாகி 78 நிமிடங்களில், தடயங்கள் ஏதும் இல்லாமல் இதை எப்படிச் செய்திருக்க முடியும்?

நியூயார்க் 9/11 இரட்டை கோபுரத் தாக்குதல்படத்தின் காப்புரிமை JASON SCOTT/TEXTFILES

சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: கட்டடத்தின் மீது வர்த்தக சேவையிலிருந்த போயிங் 77 விமானம் மோதவில்லை. மாறாக, ஒரு சிறிய ஏவுகணை, ஒரு சிறிய விமானம் அல்லது ஆளில்லா விமானம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்க விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் விமானம் 77 தான் கட்டடத்தின் மீது மோதியது என்பதற்கான ஆதாரம் அழுத்தமாக உணரப்பட்டதால், அணுகுவதற்குக் கஷ்டமாக இருந்த வளைவு நெளிவான விமானப் பாதை பற்றிய கேள்விகளுக்குக் கவனம் திசை திருப்பப் பட்டது. அது அல்-கொய்த அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இல்லை, பென்டகனின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது என்ற வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.

அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: சம்பவம் நடந்த இடத்திலிருந்து விமானத்தின் சிதறிய பாகங்களும், கருப்புப் பெட்டிகளும் மீட்கப் பட்டுள்ளன. அவை எப்.பி.ஐ. வசம் வைக்கப் பட்டுள்ளன.

9/11 இரட்டை கோபுர தாக்குதல்: அன்று நடந்து என்ன? - புகைப்படங்களின் சாட்சியம்படத்தின் காப்புரிமை Getty Images

ஆரம்பத்தில் வெளியான விடியோக்களில், சிதறிய பாகங்கள் அதிகம் காணப்படவில்லை என்றாலும், பின்னர் கிடைத்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் விமானத்தின் பாகங்களும், விமானம் சென்ற பாதையும், உடைந்த விளக்குக் கம்பங்களும் தெரிய வந்துள்ளன.

விமான அலுவலர்கள் மற்றும் பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, நல்லமுறையில் டி.என்.ஏ. பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பென்டகனை விமானம் தாக்கியதைப் பார்த்த சாட்சிகளும் உள்ளனர்.

நான்காவது விமானம் - யுனைடெட் விமானச்சேவை விமானம் 93

கேள்வி: தாக்குதல் நடந்தபெனிசில்வேனியா ஷான்ஸ்விலே இடம் அவ்வளவு சிறியதாக இருந்ததும், விமானத்தின் சிதறிய பாகங்கள் தென்படாமல் போனதும் ஏன்?

சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: யுனைடெட் ஏர்லைன் விமானம் 93 ஏவுகணையால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதனுடைய சிதறிய பாகங்கள் பெருமளவு பரப்பளவில் சிதறி விழுந்தன.

நியூயார்க் 9/11 இரட்டை கோபுரத் தாக்குதல்: இதுவரை காணாத புகைப்படங்கள்படத்தின் காப்புரிமை JASON SCOTT/TEXTFILES

அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: விமானத்தின் சிதறிய பாகங்களின் தெளிவான புகைப்படங்களும், விமானி அறையின் ஒலிப்பதிவுக் கருவியும் கிடைத்துள்ளன. விமானத்தில் பயணிகள் எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும், அதனால் கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தினார்கள் என்பதும் அவற்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

20 நிமிடங்களுக்குப் பிறகு சடலங்கள் ஏதும் வராததால், பிரேதப் பரிசோதனையைத் தாம் நிறுத்திவிட்டதாக, உள்ளூர் பிரேத பரிசோதனையாளர் வால்லி மில்லர் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அடிப்படையில் மற்றொரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அது விமான விபத்து என்று சீக்கிரம் தாம் தெரிந்து கொண்டதாகவும், பலியான பலருக்குப் பெரிய அளவில் இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டியிருக்கும் என்று நினைத்ததாகவும் கூட அவர் கூறியிருந்தார்.

9/11 இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? - சதி பின்னணிகள்படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், வர்த்தக ரீதியிலான சேவையில் ஈடுபட்டிருந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்துமாறு விமானப் படைக்கு ராணுவம் ஒருபோதும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

உலக வர்த்தக மைய கட்டடம் 7 இடிந்தது

கேள்வி: இரும்பு பிரேம்களைக் கொண்ட விண்ணை முட்டும் வேறு எந்தக் கட்டடமும் தீயின் காரணமாக இடிந்து விழாத போது, விமானத்தால் தாக்கப்படாத, விண்ணை முட்டும் அளவுக்கிருந்த கட்டடம் அவ்வளவு விரைவாக, சமச்சீராக எப்படி இடிந்திருக்கும்?

சதி பின்னணி ஆய்வாளர்கள் கூறுவது: உலக வர்த்தக மையம் கட்டடம் 7 கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிமருந்துகள் மற்றும் தீயிடுதல் மூலமாக இடிக்கப் பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ``இழுத்து விடுங்கள்'' என்று அதன் உரிமையாளர் லார்ரி சில்வர்ஸ்டெயின் தொலைக்காட்சி நேர்காணலில் கூறியதன் மீது கவனம் இருந்தது. ஆனால், உண்மையில், தீயணைப்பு வீரர்களை வெளியே கொண்டு வருவது பற்றித் தான் அவர் அப்படிக் கூறியிருக்கிறார். (வெடிபொருள்களை வெடிக்கச் செய்வதற்கு, கட்டட இடிப்பு நிபுணர்கள் ``இழுத்து விடுங்கள்'' என்ற வார்த்தைகளை வழக்கமாகப் பயன்படுத்துவது இல்லை.

நியூயார்க் 9/11 இரட்டை கோபுரத் தாக்குதல்:படத்தின் காப்புரிமை JASON SCOTT/TEXTFILES

இப்போது அது இடிந்து விழுந்த வேகத்தின் மீது கவனம் செலுத்தப் படுகிறது. 2.25 விநாடிகளில், தடை ஏதுவுமின்றி மிக இயல்பாகக் கட்டடம் இடிந்து விழுந்துவிட்டது. வெடிபொருள்களால் மட்டும் தான் இவ்வளவு வேகமான, சமச்சீரான முறையில் இடித்துச் சரிய வைக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப் படுகிறது.

அதிகாரப்பூர்வ தகவல் பற்றி சந்தேகம் கொண்டிருக்கும் சில விஞ்ஞானிகள், சம்பவ இடத்திலிருந்து நான்கு புழுதி மாதிரிகளைப் பரிசோதனை செய்து பார்த்தனர். சூடாகும் போது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தெர்மைட் பொருட்கள் அங்கே இருந்ததற்கான தடயங்கள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். டன் கணக்கிலான தெர்மைட் பொருட்களும், வழக்கமான வெடிபொருள்களும் உலக வர்த்தக மையம் கட்டடம் 7-ன் உள்ளே மட்டுமின்றி, இரட்டைக் கோபுரத்தின் உள்ளும் துளையிட்டு வைக்கப் பட்டுள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர்.

அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுவது: தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட் மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்த பிறகு, கட்டுப்படுத்த முடியாத தீயினால் கட்டடம் இடிந்து விழுந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளது. அருகில் உள்ள வடக்கு கோபுரம் இடியத் தொடங்கியதும் இது தொடங்கியது. அந்தக் கட்டடத்தில் ஏழு மணி நேரம் தீ எரிந்தது.

அவசர நேரத்தில் தண்ணீர் தெளிக்கும் முறைமைக்குத் தண்ணீர் கொண்டு வரும் இணைப்புகள் துண்டிக்கப் பட்டுவிட்டன. வெடிபொருள்கள் இருந்ததற்கான தடயங்கள் எதுவும் காணப்படவில்லை. கட்டுப்படுத்தப்பட்ட இடித்தல் பணி நடக்கும்போது கேட்பதைப் போன்ற தொடர்ச்சியான மிகவும் பலமான சப்தம் எதுவும் பதிவாகவில்லை. மேலும், ``தெர்மைட் பொருட்கள்'' குறித்த சந்தேகத்துக்கு வேறு காரணமும் உள்ளது. அது பிரமர் சாயத்தின் ஒரு வகை தான். உலக வர்த்தக மையத்தில் 1,200,000 டன்கள் அளவுக்குக் கட்டுமானப் பொருட்கள் நொறுங்கிக் கிடந்தன. அவற்றில் (பெருமளவு என்று இல்லாவிட்டாலும்) பெரும்பாலான மினரல்கள் இருந்தன. புழுதிகளை மிக விரிவாக ஆய்வு செய்து பார்த்ததில், தெர்மைட் வெடிபொருட்கள் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் கிடையாது என்று அமெரிக்கப் புவியியல் சர்வே அமைப்பு அறிக்கையிலும் மற்றும் ஆர்.ஜே. லீ அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-49663989

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.