Jump to content

யாழில் மரண தண்டனைக்கு ஆதரவளித்தோர் அதிகம்….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மரண தண்டனைக்கு ஆதரவளித்தோர் அதிகம்….

September 11, 2019

1 Min Read

hangar.jpg?resize=650%2C330

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் குரல் மேலெழுந்துள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக மக்கள் கருத்துக் கணிப்பொன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற Enterprises Sri Lanka கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றதுடன், அதில் பங்குபற்றிய 20,634 பேரில் 94.89% சதவீதத்தினர் ஜனாதிபதி அவர்களின் தீர்மானத்திற்கு சார்பாக வாக்களித்துள்ளனர்.

யாழ் மாவட்டம் முழுவதும் பரவியுள்ள சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் காரணமாக பிள்ளைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களின் ஒரேயொரு வேண்டுகோளாக அமைவது இந்த போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதேயாகும்.

இவ்விடயம் தொடர்பில் எந்தவொரு அரச தலைவரும் மேற்கொள்ளாத வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு அதிக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதி அவர்களின் செயற்பாடுகளை இதன்போது பாராட்டிய அம்மக்கள், தமது பிள்ளைகளை நேசிக்கும் அனைத்து குடிமக்களும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோன்றதொரு செயற்திட்டம் அண்மையில் அநுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மைதானத்தில் இடம்பெற்ற Enterprises Sri Lanka கண்காட்சி வளாகத்திலும் இடம்பெற்றதுடன், அங்கு வருகைதந்த 27,168 பேரில் 94.77% சதவீதமானோர் போதைப்பொருளின் பிடியிலிருந்து நாட்டையும் எதிர்காலத் தலைமுறையையும் பாதுகாப்பதற்காக போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் தீர்மானத்திற்கு சார்பாகவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/130324/

Link to comment
Share on other sites

17 hours ago, கிருபன் said:

அங்கு வருகைதந்த 27,168 பேரில் 94.77% சதவீதமானோர் போதைப்பொருளின் பிடியிலிருந்து நாட்டையும் எதிர்காலத் தலைமுறையையும் பாதுகாப்பதற்காக போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்

சிங்கப்பூர் மக்கள் மாதிரி யாழ் மக்கள் 🙂 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.