Jump to content

ஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் இளையோர் இருவர் பெண் ஆணுக்கு தாலி கட்டி  திருமண பந்தத்தில் இணைந்திருக்கின்றனர்  சுவிஸ்ஸில் ।
யாழ் வாசிகள் இதனைப் பற்றி ஏதும் அபிப்பிராயம் …...

 

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

என்ன சொல்வதென்றே தெரியவில்லை, குழப்பமாக இருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டியவையா என்பதைப் பற்றிய புரிதல்  இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இன்றைய பெண்கள் இதை விரும்புவார்கள்...தாலி என்பது ஆண், பெண் இரு பாலருக்கும் சுமையாகவே இருக்கும். ஆண்களால் முன்பு போல சட்டையை கழற்ற இயலாது !!

Link to comment
Share on other sites

இன்றைய காலகட்டத்தில் புதுமையாக  எதையாவது செய்ய வேண்டும் என்று  நினைத்து பழமையான பழக்க வழக்கங்களுக்கு முரணாக நடக்கிறார்கள். அதில் இதுவும் ஒன்று. பழைமைவாதிகள் நிச்சயம் இதை எதிர்ப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

SudarSeithy-1-68.jpg

 

 

நானும்  இது  பற்றி  ஒரு  திரி  போட்டேன்

அதில் தாலி   மற்றும்  திருமணம் சம்பந்தமான  பல  தகவல்கள் இருந்தன

அதற்காகவே  அதை  இங்கு  இணைத்தேன்

அது  ஒரு முகநூல்  பதிவு  என்பதற்காக  மட்டும்   தூக்கி  விட்டார்கள்  போலும்

இந்த மாப்பிள்ளை  ஒரு  யாழ்  கள உறவு

அவரை  நான்  சந்தித்திருக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணை ஆணும், பெண்ணை பெண்ணும் திருமணம் செய்து வாழும் காலத்தில் இருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம். சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பின் பேரில் செய்கிறார்கள். ஒரு பெண்ணையோ ஆணையோ மணப்பதற்கு முடிவெடுப்பது என்பது அந்த ஆண் பெண் இருவரிலேயே தங்கி இருக்கிறது அனைத்து முடிவுகளும். காலத்திற்கு ஏற்றாற்போல் மாறுவது கலாச்சாரமாகவும், சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாறுவது சம்பிரதாயமாகவும் மாறிவரும் இக்காலத்தில் இது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லையே.... மணமக்களை வாழ்த்துவோம்.  நமக்கென்று நம்முன்னோர்கள் அவர்களும் நம்மைப்போல்தான் ஏற்படுத்திய ஒரு சம்பிரதாய நிகழ்வை இடம் மாற்றி செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். எதிர்காலத்தில் இவர்களையும் முன்னோர்களாகக் கருதி பின்பற்ற எங்கள் சந்ததிகள் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வல்வை சகாறா said:

ஆணை ஆணும், பெண்ணை பெண்ணும் திருமணம் செய்து வாழும் காலத்தில் இருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம். சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பின் பேரில் செய்கிறார்கள். ஒரு பெண்ணையோ ஆணையோ மணப்பதற்கு முடிவெடுப்பது என்பது அந்த ஆண் பெண் இருவரிலேயே தங்கி இருக்கிறது அனைத்து முடிவுகளும். காலத்திற்கு ஏற்றாற்போல் மாறுவது கலாச்சாரமாகவும், சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாறுவது சம்பிரதாயமாகவும் மாறிவரும் இக்காலத்தில் இது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லையே.... மணமக்களை வாழ்த்துவோம்.  நமக்கென்று நம்முன்னோர்கள் அவர்களும் நம்மைப்போல்தான் ஏற்படுத்திய ஒரு சம்பிரதாய நிகழ்வை இடம் மாற்றி செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். எதிர்காலத்தில் இவர்களையும் முன்னோர்களாகக் கருதி பின்பற்ற எங்கள் சந்ததிகள் வரும்.

உங்களிடமிருந்து இதை  எதிர்பார்க்கவில்லை  சகோதரி

ஒன்று  தவறு  என்றால்  அதை  இல்லாமல் செய்யணுமே  தவிர

இன்னொரு  இடத்துக்கு  மாற்றக்கூடாதல்லவா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

உங்களிடமிருந்து இதை  எதிர்பார்க்கவில்லை  சகோதரி

ஒன்று  தவறு  என்றால்  அதை  இல்லாமல் செய்யணுமே  தவிர

இன்னொரு  இடத்துக்கு  மாற்றக்கூடாதல்லவா???

தவறாக எதைக் கருதுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வல்வை சகாறா said:

தவறாக எதைக் கருதுகிறீர்கள்?

தாலி??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாலி????

முழுமையாகச் சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வல்வை சகாறா said:

தாலி????

முழுமையாகச் சொல்லுங்கள்

ஒன்று  தவறு  என்றால்  அதை  இல்லாமல் செய்யணுமே  தவிர

இன்னொரு  இடத்துக்கு  மாற்றக்கூடாதல்லவா???

Link to comment
Share on other sites

49 minutes ago, வல்வை சகாறா said:

ஆணை ஆணும், பெண்ணை பெண்ணும் திருமணம் செய்து வாழும் காலத்தில் இருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம். சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பின் பேரில் செய்கிறார்கள். ஒரு பெண்ணையோ ஆணையோ மணப்பதற்கு முடிவெடுப்பது என்பது அந்த ஆண் பெண் இருவரிலேயே தங்கி இருக்கிறது அனைத்து முடிவுகளும். காலத்திற்கு ஏற்றாற்போல் மாறுவது கலாச்சாரமாகவும், சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாறுவது சம்பிரதாயமாகவும் மாறிவரும் இக்காலத்தில் இது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லையே.... மணமக்களை வாழ்த்துவோம்.  நமக்கென்று நம்முன்னோர்கள் அவர்களும் நம்மைப்போல்தான் ஏற்படுத்திய ஒரு சம்பிரதாய நிகழ்வை இடம் மாற்றி செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். எதிர்காலத்தில் இவர்களையும் முன்னோர்களாகக் கருதி பின்பற்ற எங்கள் சந்ததிகள் வரும்.

இது சங்க காலத்தில் ஆரியன் வர முன்னம் ஆம்பிள்ளை சிங்கங்கள் போட்ட ஆபரணம் தானே... தமிழ் தமிழர் அடையாள மீட்டெடுப்பு என்று இதை வைத்துக் கொள்வோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஒன்று  தவறு  என்றால்  அதை  இல்லாமல் செய்யணுமே  தவிர

இன்னொரு  இடத்துக்கு  மாற்றக்கூடாதல்லவா???

இதில் எது தவறு என்று எனக்குப் புரியவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வல்வை சகாறா said:

இதில் எது தவறு என்று எனக்குப் புரியவில்லை?

தாலி  என்பது  வேலி 

ஒரு அடிமை விலங்கு  என்கிறார்கள்

பெண்ணியவாதிகள்

அப்படியாயின் அதை  ஆணுக்கு  மாற்றுவதால் என்ன பலன்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

தாலி  என்பது  வேலி 

ஒரு அடிமை விலங்கு  என்கிறார்கள்

பெண்ணியவாதிகள்

அப்படியாயின் அதை  ஆணுக்கு  மாற்றுவதால் என்ன பலன்???

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள். அடிமை விலங்கு, பெண்ணியவாதிகள், ஆணுக்கு மாற்றுவதால் என்ன பயன்? சத்தியமாக நீங்கள் கூற முயல்வது என்ன என்பது விளங்கவேயில்லை.

ஆணுக்கு பெண் தாலியணிவது தவறென்று எதன் அடிப்படையில் சொல்ல வருகிறீர்கள் என்பதையாவது தெளிவு படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வல்வை சகாறா said:

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள். அடிமை விலங்கு, பெண்ணியவாதிகள், ஆணுக்கு மாற்றுவதால் என்ன பயன்? சத்தியமாக நீங்கள் கூற முயல்வது என்ன என்பது விளங்கவேயில்லை.

ஆணுக்கு பெண் தாலியணிவது தவறென்று எதன் அடிப்படையில் சொல்ல வருகிறீர்கள் என்பதையாவது தெளிவு படுத்துங்கள்.

தூங்குபவர்களை  மட்டும்  எழுப்புவதுடன்  நிறுத்திக்கொள்வது  எனது நிலை

நன்றி  வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

தூங்குபவர்களை  மட்டும்  எழுப்புவதுடன்  நிறுத்திக்கொள்வது  எனது நிலை

நன்றி  வணக்கம்

தூங்குபவரை எழுப்பவேண்டும் என்றாலும் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும் அல்லவா..... பெண் ஆணுக்குக் கட்டிய தாலி எவ்வகையில் தவறாகிறது? எவ்வகையில் மற்றவர்களைப்பாதிக்கிறது என்று தவறென்று சுட்டிக்காட்டுபவர்கள் விளக்கம் கொடுத்து அச்செயல் தவறுதான் என்று செவ்வனே உணர்த்தும்  இடத்தில் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லையே... இச்செயலை நான் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை காரணம் இச்செயலால் எனக்கு எத்தகைய பாதிப்பும் கிடையாது இதனால் என் சந்ததியினர் பாதிக்கப்படுவர் என்ற எண்ணமும் எனக்குக் கிடையாது அதனாலேயே அந்த மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். தவறென்று சுட்டிக்காட்ட எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வல்வை சகாறா said:

தூங்குபவரை எழுப்பவேண்டும் என்றாலும் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும் அல்லவா..... பெண் ஆணுக்குக் கட்டிய தாலி எவ்வகையில் தவறாகிறது? எவ்வகையில் மற்றவர்களைப்பாதிக்கிறது என்று தவறென்று சுட்டிக்காட்டுபவர்கள் விளக்கம் கொடுத்து அச்செயல் தவறுதான் என்று செவ்வனே உணர்த்தும்  இடத்தில் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லையே... இச்செயலை நான் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை காரணம் இச்செயலால் எனக்கு எத்தகைய பாதிப்பும் கிடையாது இதனால் என் சந்ததியினர் பாதிக்கப்படுவர் என்ற எண்ணமும் எனக்குக் கிடையாது அதனாலேயே அந்த மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். தவறென்று சுட்டிக்காட்ட எதுவும் இல்லை.

சரி  இந்தாங்க என் விளக்கம்

நன்றி : தம்பி????

 

என்னைப் பொறுத்தவரைக்கும் தாலி என்பது இன்னொரு ஆபரணம். இன்னும் சொல்லப் போனால் தேவையே இல்லாத ஆணி.

கலியாணம் கட்டும் போது நான் மனைவிக்கு கட்டிய தாலி, 364.5 நாட்களுக்கு வங்கி லொக்கரில் மட்டுமே உறங்கிக் கொண்டு இருக்கும். உறவுகளின் / நண்பர்களின் கலியாணத்துக்கு போகும் போது மட்டும் லொக்கரில் இருந்து மனைவியின் கழுத்துக்கும், பிறகு மீண்டும் லொக்கருக்கும் தாவி விடும். அதுவும் உறவுகள் "ஏன் தாலி கொடி போடவில்லை" என்று (தமக்கு கொஞ்சம் கூட அவசியமில்லாத) கேள்விகளை கேட்பதால் மட்டுமே.

என் திருமணம் காதல் திருமணமாக இருந்திருப்பின் தாலி அணியாமல் விட்டிருக்க கூடிய வாய்ப்புகள் தான் அதிகமாக இருந்து இருக்கும் (உன் மூஞ்சிக்கும் உயரத்துக்கும் காதல் திருமண வாய்ப்பு என்பதெல்லாம் டூ மச் என்று மைண்ட் வொய்ஸ் சொல்லுது)

எக் காரணம் கொண்டும் வீட்டிலும் சரி, கலியாணம் தவிர்ந்த விசேட நிகழ்வுகளுக்கும் சரி தாலி அணியப்படுவது இல்லை.

உண்மையில் சங்க காலத்தில் தமிழர்கள் மத்தியில் ஆண்களால் அணியப்படும் ஒரு ஆபரணமாகவே தாலி இருந்து வந்துள்ளது. பின்னர் அது பெண்ணுக்கு தாவி வந்ததன் பின்னனியில் பார்பனியமும், பெண்களை ஒரு ஆபரணத்தின் மூலம் அடக்கி வைக்கும் கருத்துருவாக்கமும் மட்டுமே காரணமாக இருந்தன.

கணவன் இறந்த பின் செத்த வீட்டில் மனைவி அந்த தாலியை கதறலுடன் கணவனின் உடம்பில் கழட்டி வைத்து முழு பெண்மையையும் கேவலப்படுத்தும் அசிங்கமான அருவருப்பான சடங்கும் எம்மக்கள் மத்தியில் இந்த நிமிடம் வரைக்கும் தொடரவே செய்கின்றது. வெறும் ஆபரணமாக அதை பார்க்காமல் பெண்ணை கேவலப்படுத்தும் ஒரு அணிகலனாக அது அங்கு கணவனின் சடலத்தின் மீது கிடக்கும்.

கஷ்டம் வரும் போது அடைவு வைக்க தாலி நல்ல சாமான் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் தாலியை அடமானம் வைக்கும் நிலைக்கு போகும் குடும்பங்கள் கோடியில் ஒன்று.

தாலியில் 11 பவுண் போடுபவனுக்கும் 21 பவுண் போடுபவனுக்கும் கிடைக்கும் மரியாதைகளின் அளவுகளும் மாறும். வெறும் பொருளாதாரத்தை வைத்தே ஒருவனை மதிக்க தெரிந்த இந்த சமூகத்தில் 11 க்கும் குறைவாக பவுண் போடுபவன் ஆம்பிள்ளையே இல்லை எனப்படுவான்.

தாலியை just like another ஆபரணமாக பார்க்கும் ஒரு தலைமுறையும் அண்மைக் காலங்களில் வளர்வது ஆரோக்கியமாகவும் இருக்கு.

-------------------
சுவுசில் நடந்த திருமணத்தில் சங்க காலத்தை போன்று ஆண் தாலி கட்டுகின்றார் என்று வைத்துக் கொண்டாலும், தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்கின்றனர் என்று சொல்லிக் கொண்டாலும் மீண்டும் பழமைக்கு திரும்புதல் என்று தான் என்னால் அணுக முடிகின்றது.

ஒரு இனம் முன்னேறாமல் அப்படியே பழமைக்கு திரும்புவதால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முப்பாட்டனுக்கும் முப்பாட்டன் திருமணம் என்றாலே என்னவென்று தெரியாமல் விரும்பிய பெண்களுடன் உறவுகொண்டு நாடோடியாக அலைந்தான் (பெண்ணுக்கும் இது பொருந்தும்).
இன்றும் தென் அமெரிக்காவில் பழங்குடியினர் அப்படி தான் வாழ்ந்து வருகின்றனர்.  பெண் தனக்கு விரும்பிய ஆணுடன் உடலுறுவது கொள்கின்றாள் / வாழ்கின்றாள். அவர்களிடம் பெண்கள் மீதான கூட அறவே இல்லை என்று நூல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

திருமணம் என்பதே ஒரு அடிமை முறை (இயற்கைக்கு எதிரானதும் கூட). இதில என்ன வெங்காயம் புரட்சி வேண்டி கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

சரி  இந்தாங்க என் விளக்கம்

நன்றி : தம்பி????

 

என்னைப் பொறுத்தவரைக்கும் தாலி என்பது இன்னொரு ஆபரணம். இன்னும் சொல்லப் போனால் தேவையே இல்லாத ஆணி.

கலியாணம் கட்டும் போது நான் மனைவிக்கு கட்டிய தாலி, 364.5 நாட்களுக்கு வங்கி லொக்கரில் மட்டுமே உறங்கிக் கொண்டு இருக்கும். உறவுகளின் / நண்பர்களின் கலியாணத்துக்கு போகும் போது மட்டும் லொக்கரில் இருந்து மனைவியின் கழுத்துக்கும், பிறகு மீண்டும் லொக்கருக்கும் தாவி விடும். அதுவும் உறவுகள் "ஏன் தாலி கொடி போடவில்லை" என்று (தமக்கு கொஞ்சம் கூட அவசியமில்லாத) கேள்விகளை கேட்பதால் மட்டுமே.

என் திருமணம் காதல் திருமணமாக இருந்திருப்பின் தாலி அணியாமல் விட்டிருக்க கூடிய வாய்ப்புகள் தான் அதிகமாக இருந்து இருக்கும் (உன் மூஞ்சிக்கும் உயரத்துக்கும் காதல் திருமண வாய்ப்பு என்பதெல்லாம் டூ மச் என்று மைண்ட் வொய்ஸ் சொல்லுது)

எக் காரணம் கொண்டும் வீட்டிலும் சரி, கலியாணம் தவிர்ந்த விசேட நிகழ்வுகளுக்கும் சரி தாலி அணியப்படுவது இல்லை.

உண்மையில் சங்க காலத்தில் தமிழர்கள் மத்தியில் ஆண்களால் அணியப்படும் ஒரு ஆபரணமாகவே தாலி இருந்து வந்துள்ளது. பின்னர் அது பெண்ணுக்கு தாவி வந்ததன் பின்னனியில் பார்பனியமும், பெண்களை ஒரு ஆபரணத்தின் மூலம் அடக்கி வைக்கும் கருத்துருவாக்கமும் மட்டுமே காரணமாக இருந்தன.

கணவன் இறந்த பின் செத்த வீட்டில் மனைவி அந்த தாலியை கதறலுடன் கணவனின் உடம்பில் கழட்டி வைத்து முழு பெண்மையையும் கேவலப்படுத்தும் அசிங்கமான அருவருப்பான சடங்கும் எம்மக்கள் மத்தியில் இந்த நிமிடம் வரைக்கும் தொடரவே செய்கின்றது. வெறும் ஆபரணமாக அதை பார்க்காமல் பெண்ணை கேவலப்படுத்தும் ஒரு அணிகலனாக அது அங்கு கணவனின் சடலத்தின் மீது கிடக்கும்.

கஷ்டம் வரும் போது அடைவு வைக்க தாலி நல்ல சாமான் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் தாலியை அடமானம் வைக்கும் நிலைக்கு போகும் குடும்பங்கள் கோடியில் ஒன்று.

தாலியில் 11 பவுண் போடுபவனுக்கும் 21 பவுண் போடுபவனுக்கும் கிடைக்கும் மரியாதைகளின் அளவுகளும் மாறும். வெறும் பொருளாதாரத்தை வைத்தே ஒருவனை மதிக்க தெரிந்த இந்த சமூகத்தில் 11 க்கும் குறைவாக பவுண் போடுபவன் ஆம்பிள்ளையே இல்லை எனப்படுவான்.

தாலியை just like another ஆபரணமாக பார்க்கும் ஒரு தலைமுறையும் அண்மைக் காலங்களில் வளர்வது ஆரோக்கியமாகவும் இருக்கு.

-------------------
சுவுசில் நடந்த திருமணத்தில் சங்க காலத்தை போன்று ஆண் தாலி கட்டுகின்றார் என்று வைத்துக் கொண்டாலும், தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்கின்றனர் என்று சொல்லிக் கொண்டாலும் மீண்டும் பழமைக்கு திரும்புதல் என்று தான் என்னால் அணுக முடிகின்றது.

ஒரு இனம் முன்னேறாமல் அப்படியே பழமைக்கு திரும்புவதால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை

விசுகு அண்ணா எப்போதுமே என்னுடனான உங்கள் உரையாடல் என்பது சொந்தமாக சிந்தித்து வருவதில்லை. யாரையாவது இழுத்து வந்து அவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது......

 

மாறுங்கையா நீங்களாக பேசுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வல்வை சகாறா said:

விசுகு அண்ணா எப்போதுமே என்னுடனான உங்கள் உரையாடல் என்பது சொந்தமாக சிந்தித்து வருவதில்லை. யாரையாவது இழுத்து வந்து அவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது......

 

மாறுங்கையா நீங்களாக பேசுங்கள்.

நேரம்  பொன்னானது  சகோதரி

ஏற்புடையதை  வெட்டி ஒட்டுவதன்  நோக்கம்  அது  மட்டுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ஆதங்கம்  எல்லாம் தாலி கட்டுவதோடு மட்டும் இல்லாமல் அந்தப் பட்டுசேலை ரவிக்கை எல்லாம் அவருக்கு குடுத்து , மாறாக அந்தப் பெண்ணும் பட்டுவேட்டியும் பட்டுசட்டையும் அணிந்து தாலி காட்டினால்  செமையாய் இருந்திருக்கும். சமூகம் இன்னும் நிறைய முன்னேற இடமிருக்கு.......தாலி கழுத்தென்ன இடுப்பென்ன எங்க காட்டினாலும் அது பாட்டுக்கு தொங்கப்போகுது.....!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சிந்தனையில் நாங்கள் தமிழர்கள்🥺

இன்றைய தினம் இலங்கை காசுக்கு தங்கத்தின் விலை 76150 ரூபா  

அந்தக்காலத்தில் பெண்ணுக்கு தாலி வேலி என்பார்கள் இப்ப ஆணுக்கு வேலி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாலி கட்டுவது  தேவையில்லாத ஒன்று என இன்றய இளையசமுதாயம் சிந்திக்க ஆரம்பிக்கும் வேளையில்.....ஆணுக்கு பெண் நிகர் எனும் போதையில் ஆணுக்கு தாலிகட்டி மகிழ்கின்றார்களாம்.
காணததை கண்ட தமிழரின் கைகளில் பண்பாடும் பழக்க வழக்கங்களும் சிக்கித் தவிக்கின்றது.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.