Jump to content

ஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

புதிய சிந்தனையில் நாங்கள் தமிழர்கள்🥺

இன்றைய தினம் இலங்கை காசுக்கு தங்கத்தின் விலை 76150 ரூபா  

அந்தக்காலத்தில் பெண்ணுக்கு தாலி வேலி என்பார்கள் இப்ப ஆணுக்கு வேலி 

உந்த நெருப்பு விலையிலையும் சனம் நகைநட்டுகள் வாங்குதுகள் தானே.எங்காலையப்பா காசு?

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
காலம் காலமாக மூட நம்பிக்கைகளில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தில், பழைய கலாசாரம், பண்பாடு என்று குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒடுபவர்களுக்கு, தாலி ஆண்,பெண் சமத்துவத்திற்கு எதிரானது என்ற புரிதலில் உள்ள இடர் இயற்கையானது...
 
ஆண், பெண் இருவரும் அணியலாம் அன்றேல் இருவரும் அணியாது விடலாம். அதுவே சமத்துவம், அதுவே மாக்ஸுயம்.
 
மனித வரலாறு என்பதே ஒப்புக்கொண்ட பழைய ஒழுங்குகளை உடைத்துக் கொண்டு காட்டாறாக பாய்வதே....
Link to comment
Share on other sites

ஆணுக்கு தாலி கட்டுவது  ஒரு கட்டத்தில ஆணால் வரவேற்கத் தக்க விசயமாக மாறும். ஆணின் வயது ஏத்தனையோ அத்தனை பவுணில் தாலிகட்டுதல் அவசியம். அதற்கான செலவு பெண்வீட்டாருடையது.  விவகாரத்து ஏற்படும் பட்சத்தில் ஆணிடம் இருந்து திரும்பப் தாலியை பெறக் கூடாது.  இவ்வாறான விதிகளோடு இவை வரவேற்கப்படும். 

இந்த ஆரம்பங்கள் எல்லாம்  நாளை பொல்லு கொடுத்து அடிவாங்கும் கதையாக மாறும்.  சம உரிமை என்ற பெயரில் பெண்ணையும் பெண் வீட்டாரையும் நெருக்கடிக்குள் தள்ளும். தாலி வரதட்சணை எல்லாம்  ஆணாதிக்கத்தின் சுரண்டல். இது அதுக்கு போனஸ் போன்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

உந்த நெருப்பு விலையிலையும் சனம் நகைநட்டுகள் வாங்குதுகள் தானே.எங்காலையப்பா காசு?

எல்லாம்  அங்க இருந்து பாஸ் ஆவதுதானே அண்ண நான் பணத்தை சொல்லல ஏன் பணமும் தான் தற்போது வெளிநாட்டில் பல பவுண்ட்கள் கட்டப்படுவதால் தான் இங்கும் பெண் பல பவுண்களில் தாலி கட்டப்படுகிறது நாளில் ஈழத்தில் இந்த முறையும் வரலாம் .

சிலருக்கு இந்த தாலி பிரச்சினையால் கல்யாணமே நின்று விட்டது கல்யாணம் முடிந்தும் தாலி பிரச்சினை நடந்து கொண்டும் இருக்கிறது புதுமையென நினைத்து  கண்ட கருமத்தையெல்லம் திணித்து தின்ன வைக்க முடியாது 

பிரபாகரன் எங்கள் தலைவர் மதிவதனி அம்மையாருக்கு தாலி கட்டியதால் தான் அவர் மனைவியானார் மாறாக பிரபா அண்ணைக்கு தாலி கட்டிருந்தால்??

 அவர் தமிழருக்கு விடுதலை பெற்றுக்கொடுக்கலாம் என நினைத்து  ஒரு போராட்டத்தையே ஆரம்பித்திருந்தார் இந்த தாலி கட்டும் போராட்டம் எந்த மாற்றத்தையும் நிகழ்த்த போவதில்லை

இதையும் கட்டாமல் கல்யாணம் கட்டுவது சிறந்தது நாம் வெள்ளைகாரன் ரேஞ்சிக்கு மாறிட்டு வருகிறோம் தமிழர்கள் இல்லையென்பதை நிருபிக்கும் காலம் நடந்து வருகிறது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப் பார்த்தால் இந்த திரியும் தடை செய்வதற்கான அம்சங்களை கொண்டிருக்குமோ என ஒரு சந்தேகம் .. என்ன இருந்தாலும் பண்பாடு என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விடயத்திற்கெதிராக எவ்வாறு கருத்தடை ( I mean கருத்தாட ) முடியும் ….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

என்னுடைய ஆதங்கம்  எல்லாம் தாலி கட்டுவதோடு மட்டும் இல்லாமல் அந்தப் பட்டுசேலை ரவிக்கை எல்லாம் அவருக்கு குடுத்து , மாறாக அந்தப் பெண்ணும் பட்டுவேட்டியும் பட்டுசட்டையும் அணிந்து தாலி காட்டினால்  செமையாய் இருந்திருக்கும். சமூகம் இன்னும் நிறைய முன்னேற இடமிருக்கு.......தாலி கழுத்தென்ன இடுப்பென்ன எங்க காட்டினாலும் அது பாட்டுக்கு தொங்கப்போகுது.....!   🤔

போற போக்கிலே, ஆண்கள்..  உடன் கட்டை ஏறுகிற  நிகழ்வுகளும், விரைவில் நடக்கும் போல் இருக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, closeup

இந்த அண்ணை.... மூன்று தாலி கட்டியிருப்பதை  பார்க்க, வயித்தெரிச்சலாக இருக்கு. :grin:

Sad Blackish GIF - Sad Blackish AnthonyAnderson GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: Santhulaki Eelapriyan

நாங்களும்....  60´ம் கலியாணத்துக்கு,   தாலி கட்டுவம். 🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சண்டமாருதன் said:

ஆணுக்கு தாலி கட்டுவது  ஒரு கட்டத்தில ஆணால் வரவேற்கத் தக்க விசயமாக மாறும். ஆணின் வயது ஏத்தனையோ அத்தனை பவுணில் தாலிகட்டுதல் அவசியம். அதற்கான செலவு பெண்வீட்டாருடையது.  விவகாரத்து ஏற்படும் பட்சத்தில் ஆணிடம் இருந்து திரும்பப் தாலியை பெறக் கூடாது.  இவ்வாறான விதிகளோடு இவை வரவேற்கப்படும். 

இந்த ஆரம்பங்கள் எல்லாம்  நாளை பொல்லு கொடுத்து அடிவாங்கும் கதையாக மாறும்.  சம உரிமை என்ற பெயரில் பெண்ணையும் பெண் வீட்டாரையும் நெருக்கடிக்குள் தள்ளும். தாலி வரதட்சணை எல்லாம்  ஆணாதிக்கத்தின் சுரண்டல். இது அதுக்கு போனஸ் போன்றது. 

ஒரு காலத்தில் மெட்டி அணியும் பழக்கம் ஆண்களுக்குரியதாக இருந்தது. இன்று அதை பெண்கள் தங்கள் அணிகலனாக சுவீகரித்துக்கொண்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போங்கப்பா எல்லாம் ஒரு முதலீ டு தான் 😀..பணம் இருப்பவன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறான் .. ஒரு குழுவில் இருப்பவர்களெல்லோரும் அமைதியாக இருப்பார்கள்.ஒருவன் தன்னைக்   காடட துள்ளிக்கொண்டு இருப்பான் அது போலத்தான். இதுவும். புரடசி என்று தங்களை  அறிமுகப்படுத்துகிறார்கள்  . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2019 at 1:38 PM, விசுகு said:

 

 

நானும்  இது  பற்றி  ஒரு  திரி  போட்டேன்

அதில் தாலி   மற்றும்  திருமணம் சம்பந்தமான  பல  தகவல்கள் இருந்தன

அதற்காகவே  அதை  இங்கு  இணைத்தேன்

அது  ஒரு முகநூல்  பதிவு  என்பதற்காக  மட்டும்   தூக்கி  விட்டார்கள்  போலும்

இந்த மாப்பிள்ளை  ஒரு  யாழ்  கள உறவு

அவரை  நான்  சந்தித்திருக்கின்றேன்

சத்தியமாய் அது நான் இல்லை.😂

Link to comment
Share on other sites

18 hours ago, இரும்பொறை said:
காலம் காலமாக மூட நம்பிக்கைகளில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தில், பழைய கலாசாரம், பண்பாடு என்று குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒடுபவர்களுக்கு, தாலி ஆண்,பெண் சமத்துவத்திற்கு எதிரானது என்ற புரிதலில் உள்ள இடர் இயற்கையானது...
 
ஆண், பெண் இருவரும் அணியலாம் அன்றேல் இருவரும் அணியாது விடலாம். அதுவே சமத்துவம், அதுவே மாக்ஸுயம்.
 
மனித வரலாறு என்பதே ஒப்புக்கொண்ட பழைய ஒழுங்குகளை உடைத்துக் கொண்டு காட்டாறாக பாய்வதே....

சிறப்பான கருத்து. மண மக்களுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆண் தோற்றத்தில் இருக்கும் பெண்ணாக இருக்கலாம்.. அது பெண் தோற்றத்தில் இருக்கும் ஆணாக இருக்கலாம்.

சும்மா விட்டுத்தள்ளுங்க. பொழுதுபோக்க ஏதாவது ஒன்று செய்தியாக வேண்டும். அதில் ஓசி விளம்பரம் வேறு.

தாலியே கட்டமாட்டம் என்று விளம்பர..  வகுப்பெடுத்தவை எல்லாம் தங்கட கலியாணங்களில் கட்டிக்காட்டினவை.

அப்படியாப்பட்ட சமூகத்தில்.. இதெல்லாம் சகஜமப்பா. 🤣

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

இது ஆண் தோற்றத்தில் இருக்கும் பெண்ணாக இருக்கலாம்.. அது பெண் தோற்றத்தில் இருக்கும் ஆணாக இருக்கலாம்.

சும்மா விட்டுத்தள்ளுங்க. பொழுதுபோக்க ஏதாவது ஒன்று செய்தியாக வேண்டும். அதில் ஓசி விளம்பரம் வேறு.

தாலியே கட்டமாட்டம் என்று விளம்பர..  வகுப்பெடுத்தவை எல்லாம் தங்கட கலியாணங்களில் கட்டிக்காட்டினவை.

அப்படியாப்பட்ட சமூகத்தில்.. இதெல்லாம் சகஜமப்பா. 🤣

பெண் வாசனையே வேண்டாம் என்று சொன்ன ஒருவர் கலியாணம் கட்டி யாழுக்கு வருவதை குறைத்ததையும் நாங்கள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறம்....

ஆள் ஆர் என்று மட்டும் சொல்ல மாட்டேன் 😁

Link to comment
Share on other sites

 மணப்பெண் மாப்பிள்ளைக்கு தாலிகட்டிய சம்பவமாக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் நடை பெற்றது மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் தமக்குள் தாலி மாற்றிக்கொண்ட நிகழ்வே என தனிப்பட்ட தகவல்கள் மூலமாக  அறிந்து கொண்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாப்பிள்ளை யாழ்கள உறவாம்? யாரென்று தெரியவில்லை ஆனாலும், அவர் இதை விளம்பரப்படுத்தி செய்யாத போது, இதை நாமும் ஒரு தனிப்பட்ட விடயமாக கடந்து செல்வதுதானே கண்ணியமான அணுகுமுறை?

இதை சிலாகிப்பதில் ஏதும் பொது நலனிருப்பதாக தெரியவில்லை.

பிக்பாசில் மூன்றாம் நபர்களின் தனிமனித விடுப்பு வேண்டாம் என்று கருத்தாடலை தடை செய்யும் நாம், இன்னொரு கள உறவின் தனிப்பட்ட விடயத்தில் மூக்கை நுழைப்பானேன்?

அவர் இதைதான் ஒரு புரட்சியாக செய்வதாயோ அல்லது எல்லோரும் இப்படி செய்யுங்கள் என்றோ கூறவில்லையே?

சொல்லப்போனால் ஏன் இப்படி செய்தார்கள் என்பதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊகம் மட்டுமே சொல்கிறோம்.

அவர்களுக்கு ஒரு காரணம் இருக்கும். அதை அவர்கள் மட்டுமே அறிந்தால் போதும்.

ஊரில் கதைக்க பிரச்சினையா இல்லை. டேப்லாயிட் பத்திரிகைகள் போல தனிமனித வாழகையில் மூக்கை நுழைக்கும், கருத்து சொல்லும் அருவருப்பான பழக்கத்தை முடிந்தளவு தவிர்ப்போம் என்பதே என் வேண்டுகோள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்கள் பலர் இப்போதெல்லாம் புதுமை என்று கூறிக்கொண்டு பல கோமாளித்தனங்களைச் செய்கின்றனர். இதுபோன்ற ஒன்று தான் இதுவும். தாலி கட்டுவது என்பதே விசர் வேலை. இதில் ஆணுக்கும் கட்டுவது ????? சடங்குகள் இன்றி தமிழ்முறைப்படி இவர்கள் திருமணம் செய்திருந்தால் வாழ்த்தலாம், பாராட்டலாம்.

 

கேரள இனத்தவரின் சடங்குகளில் ஆணும் பெண்ணும் கழுத்துக்கு நகை அணிவிப்பது உண்டு. அதை பார்த்தும் இவர்கள் செய்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை தேவையற்ற விடயமும் எம் அங்கலாய்ப்பும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

இந்த மாப்பிள்ளை யாழ்கள உறவாம்? யாரென்று தெரியவில்லை

கறுப்பன் என்று ஒரு  காலத்தில் யாழில்  எழுதினார்

சுவிசுக்கு  போயிருந்தபோது   சந்தித்தேன்

கொஞ்சம்  தாயகப்பற்று   அதிகமான  தம்பி

மற்றும்படி  தாலி  கட்டு சம்பந்தமாக  ஏதும்  சொல்வதற்கில்லை😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஊர்க்காவலன் said:

புதுசு கண்ணா புதுசு 😜

9e6871cf4d_album.jpg

bb4d49f3b2_album.jpg

 

முகநூல் முழுக்க முழுக்க கழுவிக்கொண்டு திரிகிறானுகள் இந்தப்படத்தை வச்சி.  நம்மளும் கண்டுக்காம போயிடுவம் 

எங்கயாச்சும் சாமிக்கு அலகு குத்தி காவடி எடுக்கிறாங்களாயா என்ன அந்தப்பக்கம் போவோம்

28168270-157064148328753-305831787891774

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முகநூல் முழுக்க முழுக்க கழுவிக்கொண்டு திரிகிறானுகள் இந்தப்படத்தை வச்சி.  நம்மளும் கண்டுக்காம போயிடுவம் 

எங்கயாச்சும் சாமிக்கு அலகு குத்தி காவடி எடுக்கிறாங்களாயா என்ன அந்தப்பக்கம் போவோம்

28168270-157064148328753-305831787891774

வயதுக்கு வந்த இருவர் தம்விருப்பபடி தம் திருமண நாளை கொண்டாடுவதற்கும். கதற கதற பச்சிளம் பிள்ளைகளின் உடலில் கூரிய ஆயுதங்கள பாய்சுவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. முதலாமதில் ஒரு. வெகுஜன நலனும் (public interest) இல்லை. இரெண்டாவதில் 100/100 வெகுஜன நலன் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

வயதுக்கு வந்த இருவர் தம்விருப்பபடி தம் திருமண நாளை கொண்டாடுவதற்கும். கதற கதற பச்சிளம் பிள்ளைகளின் உடலில் கூரிய ஆயுதங்கள பாய்சுவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. முதலாமதில் ஒரு. வெகுஜன நலனும் (public interest) இல்லை. இரெண்டாவதில் 100/100 வெகுஜன நலன் இருக்கிறது.

பண்டைக்காலம் தொட்டு பச்சிளம் பெண்குழந்தைகளுக்கு  கதறக்கதற தோடு குத்துகின்றார்களே அது கொடுமையாக தெரியவில்லையா?

பக்தி எனும் பெயரில் குழந்தைகளுக்கு அலகு குத்துவதை நான் ஆதரிப்பவன் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

பண்டைக்காலம் தொட்டு பச்சிளம் பெண்குழந்தைகளுக்கு  கதறக்கதற தோடு குத்துகின்றார்களே அது கொடுமையாக தெரியவில்லையா?

பக்தி எனும் பெயரில் குழந்தைகளுக்கு அலகு குத்துவதை நான் ஆதரிப்பவன் அல்ல.

தோடு குத்துவது, ஆபிரிக்காவில் சொண்டில் தட்டை ஒட்டுவது, மா சே க்கு முந்திய சைனாவில் கால் பாதத்தை உடைத்து துணியால் கட்டுவது இப்படி எல்லாமே கொடுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தோடு குத்துவது, ஆபிரிக்காவில் சொண்டில் தட்டை ஒட்டுவது, மா சே க்கு முந்திய சைனாவில் கால் பாதத்தை உடைத்து துணியால் கட்டுவது இப்படி எல்லாமே கொடுமை.

வாழ்க்கை என்பது நகர்ந்து செல்லும் போது.....காலத்துக்குக் காலம்....சில பழக்க வழக்கங்களையும்... தன்னுடன் காவிக்கொண்டு செல்கின்றது...!

அந்தப் பழக்க வழக்கங்கங்களை....இன்னொரு கால கட்டத்தில் நின்று பார்க்கும் போது...அவை முட்டாள் தனமாகத் தோன்றுவது...வழமை தான்!    எனது கருத்தானது....அந்தப் பழக்க வழக்கங்களை.....அந்தக் கால கட்டத்தில் மட்டுமிருந்தே பார்க்க வேண்டும்!

ஆபிரிக்காவில்...சொண்டில் தட்டை ஒட்டுவது....ஒரு ஆணாதிக்க சமுதாய அமைப்பின் முக்கிய அம்சமாகக் கருதப் பட்டது! ஒரு ஆபிரிக்கப் பெண்...அந்த வழக்கத்தைப் கடைப்பிடிக்க மறுத்துப் போராடியிருந்தால்...அவளுக்கு மாப்பிளையே கிடைத்திருக்காது என்பது மட்டுமன்றி......அவள் அந்தக் குழுமத்திலிருந்தே....விவக்கி வைக்கப் பட்டு....மரணித்திருப்பாள்!

அதே போல அந்தக் காலத்து ஜப்பானிலும்....சீனாவிலும்...கால்களைச் சிறிதாக்குவதும் தனது அழகை...ஒரு பெண் அதிகரிப்பதற்காகத் தான்....!அன்னநடை....என்று எமது புலவர்கள் வர்ணிக்கும் அந்த நடை நடப்பதற்க்காகவே....பாதங்கள் சிறிதாக்கப் படுகின்றன!

இவற்றில் உள்ள ஒரு ஆச்சரியம் என்னவெனில்....இவை அனைத்தும் பெண்களாலேயே செய்யப்படுகின்றன என்பது தான்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.