Jump to content

ஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

வாழ்க்கை என்பது நகர்ந்து செல்லும் போது.....காலத்துக்குக் காலம்....சில பழக்க வழக்கங்களையும்... தன்னுடன் காவிக்கொண்டு செல்கின்றது...!

அந்தப் பழக்க வழக்கங்கங்களை....இன்னொரு கால கட்டத்தில் நின்று பார்க்கும் போது...அவை முட்டாள் தனமாகத் தோன்றுவது...வழமை தான்!    எனது கருத்தானது....அந்தப் பழக்க வழக்கங்களை.....அந்தக் கால கட்டத்தில் மட்டுமிருந்தே பார்க்க வேண்டும்!

ஆபிரிக்காவில்...சொண்டில் தட்டை ஒட்டுவது....ஒரு ஆணாதிக்க சமுதாய அமைப்பின் முக்கிய அம்சமாகக் கருதப் பட்டது! ஒரு ஆபிரிக்கப் பெண்...அந்த வழக்கத்தைப் கடைப்பிடிக்க மறுத்துப் போராடியிருந்தால்...அவளுக்கு மாப்பிளையே கிடைத்திருக்காது என்பது மட்டுமன்றி......அவள் அந்தக் குழுமத்திலிருந்தே....விவக்கி வைக்கப் பட்டு....மரணித்திருப்பாள்!

அதே போல அந்தக் காலத்து ஜப்பானிலும்....சீனாவிலும்...கால்களைச் சிறிதாக்குவதும் தனது அழகை...ஒரு பெண் அதிகரிப்பதற்காகத் தான்....!அன்னநடை....என்று எமது புலவர்கள் வர்ணிக்கும் அந்த நடை நடப்பதற்க்காகவே....பாதங்கள் சிறிதாக்கப் படுகின்றன!

இவற்றில் உள்ள ஒரு ஆச்சரியம் என்னவெனில்....இவை அனைத்தும் பெண்களாலேயே செய்யப்படுகின்றன என்பது தான்!

வரலாற்றை அதன் இயங்குநிலையில் இருந்தே பார்கவேண்டும். வரலாற்றை இன்றைய நிலையில் இருந்து மதிப்பிட முடியாது என்பதை நானும் ஏற்கிறேன்.

ஆனால் கடந்தகாலத்தில் ஒன்றை செய்தோம் என்பதற்காக அதை கேள்வியின்றி இப்போதும் செய்யவேண்டும் எனும் கருத்தில்தான் உடன்பாடில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

இதுகும்... வித்தியாசமான கலியாணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

இதுகும்... வித்தியாசமான கலியாணம்.

அடப்பாவி .....முதலிரவில் இருந்து  உதைத்தானே செய்யப்போகிறாய், அதுக்கிடையில் என்ன அவசரம்டா மகனே உனக்கு....!  🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, suvy said:

அடப்பாவி .....முதலிரவில் இருந்து  உதைத்தானே செய்யப்போகிறாய், அதுக்கிடையில் என்ன அவசரம்டா மகனே உனக்கு....!  🤔 

அவர்  முதலிரவில்  இருந்து பெண் பாத்திரத்தை தான்  ஏற்கலாம் என  நினைத்து

முதலிலேயே காலில்  விழுந்துஆரம்பிக்கிறாரோ  தெரியவில்லை😂

விடுங்கண்ணயா

நாம்  பட்ட ......  படுக  இவ்வையகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அடப்பாவி .....முதலிரவில் இருந்து  உதைத்தானே செய்யப்போகிறாய், அதுக்கிடையில் என்ன அவசரம்டா மகனே உனக்கு....!  🤔 

 நான் இண்டுவரைக்கும் கால்லை விழுந்தது கிடையாது. ஏனெண்டால் நான் ஆண்சிங்கமாக்கும்

Ãhnliches Foto

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 நான் இண்டுவரைக்கும் கால்லை விழுந்தது கிடையாது. ஏனெண்டால் நான் ஆண்சிங்கமாக்கும்

Ãhnliches Foto

😂

 குமாரசாமி அண்ணா...  பெண் சிங்கத்திடம், ஒரு ஆண் சிங்கம்... மண்டியிட்ட போது...  
கடி வாங்கி ஓடும், ஒரு காணொளியை முன்பு பார்த்தேன்.
அதனை, இப்போ தேடினால்...  கண்டு பிடிக்க முடியவில்லை. 
காணொளியை பார்த்தால்,   உங்களுக்கே.... ச்சீய்.. என்று போயிடும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 நான் இண்டுவரைக்கும் கால்லை விழுந்தது கிடையாது. ஏனெண்டால் நான் ஆண்சிங்கமாக்கும்

Ãhnliches Foto

😂

எல்லா சிங்கங்களும் சக்தி ஏறி சவாரி போற வாகனம்தான் 😂

13 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

இதுகும்... வித்தியாசமான கலியாணம்.

எனக்கென்னமோ அந்தாள் மெட்டி போல ஏதையோ காலில் அணிவிப்பது போலவே படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

 குமாரசாமி அண்ணா...  பெண் சிங்கத்திடம், ஒரு ஆண் சிங்கம்... மண்டியிட்ட போது...  
கடி வாங்கி ஓடும், ஒரு காணொளியை முன்பு பார்த்தேன்.
அதனை, இப்போ தேடினால்...  கண்டு பிடிக்க முடியவில்லை. 
காணொளியை பார்த்தால்,   உங்களுக்கே.... ச்சீய்.. என்று போயிடும். :grin:

சிறித்தம்பி! ஆயிரத்திலை ஒண்டு அப்பிடி நடக்கும் அதைப்போய் எல்லாம் பெரிசாய் எடுக்கேலாது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

எல்லா சிங்கங்களும் சக்தி ஏறி சவாரி போற வாகனம்தான் 😂

சொன்னாலும் சொல்லாட்டிலும் சைவசமயத்திலை கும்புடுற தெய்வங்களிலை முக்காவாசியும் பெண்தெய்வங்கள்.😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சொன்னாலும் சொல்லாட்டிலும் சைவசமயத்திலை கும்புடுற தெய்வங்களிலை முக்காவாசியும் பெண்தெய்வங்கள்.😀
 

இதை ஒருவகை de-humanizing என்றே நான் பார்கிரேன். ஒரு பகுதியினர்கு மனித உரிமைகளை மறுப்பதன் ஆரம்பம் அவர்களை மனிதர் இல்லை என சித்தரிப்பது. ஒன்றில் அவர்களை மனிதரிலும் கீழான விலங்குகளாக சித்தரிக்கலாம் (ஆபிரிக்க கறுபின அடிமைகளை மனிதருக்கும் குரங்கிற்கும் இடையேயான இனமாக சித்தரித்தது, இந்தியாவின் தெற்கே வாழும் இனக்கூட்டத்தை குரங்காக (அனுமான்) சித்தரித்தது).

அல்லது அவர்களை பூஜிக்க வேண்டிய பொருளாக ஆக்கிவிடலாம். பூஜிக்க வேண்டியவள் பெண். அவள் எப்படி இருப்பாள்? எம் பெண் தெய்வங்களை போல, எத்தனை காமாந்திரனாக இருப்பினும்,  புருசனை தலையில் வைத்து தாசி வீட்டுக்கு காவிச் செல்வவாள். பூமாதா போல் எதையும் தாங்கும் பொறுமை உள்ளவள். சக்தி போல ஆயிரம் கரங்களால் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வாள். 

அப்போ இப்படி தெய்வாம்சத்தோடு இல்லாமல், ரத்தமும், சதையும், மனித உணர்சிகளும், நன்மையும், தீமையும், பிணியும், மூப்பும் கலந்த பெண்? அவள் பெண்ணுக்கான இலக்கணத்தையே இழந்துவிட்டவள். அவள் பெண்ணே இல்லை. மனிதப்பிறவியே இல்லை.

அவளை தெருவில் வைத்து நாயை கொல்லுவது போல கொல்லலாம். கொலை செய்துவிட்டு அவளின் பெயரை களங்கப்படுத்தி கொலையை நியாயமும் படுத்தலாம். ஏனெனில் அவள் மனித/பெண் க்கான இலக்கணத்தில் இருந்து தவறியவள்.

#இதுதான் சூட்சுமம்.

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
    • 22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)  
    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏.............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.