Jump to content

இராணுவத்தளபதி – கார்தினல் சந்திப்பு


Recommended Posts

இராணுவத்தளபதி – கார்தினல் சந்திப்பு

 

9db80ce3b4adacda2a5f2879cc166587_XL

இலங்கை இராணுவத்தில் புதிதாக பதவியேற்ற இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இம் மாதம் (10) ஆம் திகதி பகல் கொழும்பு 8 இல் அமைந்துள்ள பேராயர் வாசஸ்தலத்தில் பேராயர் கார்தினல் மெல்கம் ரஞ்ஜித் அவர்களை சந்தித்தார்.

பேராயர் வாசஸ்தலத்திற்கு சென்ற இராணுவ தளபதியை பேராயரது தனிப்பட்ட உதவியாளர் கலாநிதி ஐவன் விதானகே, இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன நுழைவாயிலில் வைத்து வரவேற்றனர்.

பின்னர் இராணுவ தளபதி பேராயரை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன் போது இராணுவ தளபதி எதிர்காலத்தில் இராணுவ நல்லிணக்க முயற்சிகள், பேரழிவிற்குள்ளான சீயோன் தேவாலயம் மற்றும் கட்டுவபிட்டி தேவாலயத்தின் இராணுவ சீரமைப்பு பணிகள், தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளுக்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு தொடர்பாக பேராயருக்கு விளக்கி கூறினார்.

பேராயர் தன்னை சந்திக்க வருகை தந்த புதிய இராணுவ தளபதியை மகிழ்ச்சியுடன் வரவேற்று அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர் இந்த நாடானது பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்த போது இராணுவத்தினரது பங்களிப்பு, அர்ப்பணிப்பு தொடர்பாகவும் தளபதியுடன் பேசினார்.

எங்கள் நாட்டு மக்களால் போற்றப்பட்ட ஒரு அனுபவமிக்க இராணுவ அதிகாரி என்ற முறையில் நாட்டிற்கு பாதுகாப்பை வழங்குவதற்கான உங்கள் முயற்சிகளில் எனக்கு முழு நம்பிக்கையுள்ளது. அத்துடன் எதிர்வரும் தினங்களில் தேர்தல்கள் இடம்பெறவிருப்பதனால் உங்களுக்கு பாரிய பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று நினைக்கின்றேன். என்று பேராசிரியர் தளபதிக்கு கூறினார்.

மேலும் பேராயர் இராணுவ தளபதி மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாட்டிற்காக அவராற்றிய பாரிய சேவையை கௌரவித்தும் இராணுவத்தில் வெவ்வேறான துறைகளில் சிறப்பான திறன்களை கொண்ட அதிகாரியென்று பாராட்டியும், சர்வதேசத்தினால் இராணுவ தளபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நியாயமற்ற குற்ற அழுத்தங்களுக்கு முகமளிக்க உறுதியாய் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

மேலும் இராணுவ தளபதி கருத்து தெரிவிக்கையில் இராணுவம் எப்போதும் நாட்டின் பாதுகாப்பிற்காக பொறுப்புணர்ச்சியுடன் செயல்படும். அதே நேரத்தில் நாட்டின் அனைத்து பொதுமக்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும். என்று வலியுறுத்தினார்.

இறுதியில் இராணுவ தளபதி பேராயரது ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொண்டு பேராயர் வாசஸ்தலத்திலுள்ள பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் தனது வருகையை நினைவு படுத்தும் முகமாக கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.(அ)

-தகவல் திணைக்களம்-

http://www.dailyceylon.com/189234/

Link to comment
Share on other sites

எங்கள் நாட்டு மக்களால் போற்றப்பட்ட ஒரு அனுபவமிக்க இராணுவ அதிகாரி என்ற முறையில் நாட்டிற்கு பாதுகாப்பை வழங்குவதற்கான உங்கள் முயற்சிகளில் எனக்கு முழு நம்பிக்கையுள்ளது. அத்துடன் எதிர்வரும் தினங்களில் தேர்தல்கள் இடம்பெறவிருப்பதனால் உங்களுக்கு பாரிய பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று நினைக்கின்றேன். என்று பேராசிரியர் தளபதிக்கு கூறினார்.

 

பேராயர் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் மாதிரி தெரிகின்றார். 

உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு மிகவும்  மனம் வருந்தினார், அரசு உண்மையை சொல்லவேண்டும் என்கிறார், உலகத்தையும் நம்ப வைத்தார். 

அதேவேளை உலகமே தமிழன படுகொலைக்கு காரணமானவர் ஒருவரை நியமிப்பது தவறு என்ற பொழுதும் இவர் அவருடன் சந்திக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2019 at 8:19 PM, nunavilan said:

இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன

இராணுவ கிறிஸ்தவ சங்கம்  .......ஆகா ஆகா   .....டச்சுக்காரன்,போர்த்துகீஸ்காரங்களின் வாரிசுகளுக்கு இராணுவத்தில உயர்பதவி சங்கம் ......ம்ம்ம்ம்ம்ம்ம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.