Jump to content

கனிமொழி இலங்கை பயணம்: தமிழக மீனவர்கள் மீதான கடற்படை தாக்குதல் குறித்த கேள்வியும், அமைச்சகத்தின் பதிலும்


Recommended Posts

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தற்போது தாக்குதல் நடத்துவதில்லை. ஆனால், அசாம்பாவிதங்கள் தொடர்கின்றன என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவிக்கின்றார்.

சந்திப்பு

இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர், இலங்கை அமைச்சர்கள் சிலரை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.

கொழும்பிலுள்ள விவசாய அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கை சார்பில் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் , இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்தனர்.

 

இலங்கை கடற்படை

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்தியுள்ள போதிலும், சில சந்தர்ப்பங்களில் சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்" எனவும் கூறியிருந்தார்.

இலங்கையில் கனிமொழி: "தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் இல்லை, அசம்பாவிதங்கள் தொடர்கின்றன"

 

கனிமொழியினால் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டை இலங்கை அதிகாரிகள் மறுத்திருந்ததுடன், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது எனவும் உறுதியளித்தனர்.

 

இந்திய மீனவர்களோ அல்லது இலங்கை மீனவர்களோ திட்டமிட்டு கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என இரண்டு தரப்பினரும் கூறியிருந்தனர்.

இந்த சந்திப்பு நிறைவு பெற்றதன் பின்னர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

எனினும், இலங்கை சார்பில் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார்.

 

மீனவர் பிரச்சனை

இரண்டு நாட்டு அதிகாரிகளும் ஒன்றிணைந்து, கலந்துரையாடல்களை நடத்தி, எதிர்காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை செய்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டார்.

மீனவப் பிரச்சினை தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள தமிழக அரசாங்கத்துடன் முன்னர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், மாநில ரீதியில் அதனைச் செய்வதில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையில் உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இரண்டு நாட்டு மீனவர்களும் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவத்திற்குத் தீர்வாக, பொறிமுறையொன்று அத்தியாவசியம் என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படவுள்ள மாநாட்டில் அதற்கான தீர்வு எட்டப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49677772

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

ம்ம் .. பரிசு பெட்டிகள் தயாராக இருக்கிறதல்லோ .? 😊

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்தியுள்ள போதிலும், சில சந்தர்ப்பங்களில் சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்" எனவும் கூறியிருந்தார்.

ஆம், நிச்சயம் பரிசுப்பொருட்கள் கிடைத்திருக்கும் 😞 

ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்தமை என்பதே பல உண்மைகளை கூறிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர், இலங்கை அமைச்சர்கள் சிலரை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.

தனிப்பட்ட விசயமாய் போய் அரச அலுவல் எல்லாம் பாக்கலாமோ? :rolleyes:

Link to comment
Share on other sites

பிரதமரை சந்தித்த கனிமொழி உள்ளிட்ட இந்திய அரசியல் முக்கியஸ்தர்கள்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தி.மு.க துணைத்தலைவர் கனிமொழி உட்பட இந்தியாவின் சில முக்கிய அரசில் தலைவர்கள் பிரதமரை இன்று காலை அலரி மாளிகையில்  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

8BB54D25-1FBF-4BE4-ADA9-9304894652E2.jpe

இதன்போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் ,  இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்கள், முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், முன்னாள் பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினர்ருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் , உட்பட பல்வேறு முக்கியஸ்த்தர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

406723E3-856E-47B2-82DB-6C39F3694659.jpe

இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

7FD8E103-196B-48A6-B905-975DF3AF6BD3.jpe8E14FDBB-A568-4F77-9FBA-B5AB1B47EBBA.jpe34B9685A-59C6-45AE-A994-1BF809E852B1.jpeD556B27C-EA05-4953-AE6B-6C6B5DA4B543.jpe53C94240-30D5-4738-B777-BF57190EAC20.jpe0413D520-1F86-4ABC-A0E0-075312964072.jpe

 

https://www.virakesari.lk/article/64730

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக பணத்துக்காக எதையும் செய்யும்

Bild

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

 

இதன்போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் ,  இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்கள், முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், முன்னாள் பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினர்ருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் , உட்பட பல்வேறு முக்கியஸ்த்தர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

 

இந்திய  தரப்பிலும் இலங்கை தரப்பிலும் ஏறக்குறைய கலந்துகொண்ட அனைவருமே முஸ்லீம்கள்.

பேசபோனது மீனவர் பிரச்சனையாக இருக்காது  ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லீம்கள்மீது கடுமையாக நடந்துகொள்ளவேண்டாம் என்று கோரிக்கை விடுப்பதற்காக இருக்கலாம்.

இந்திய மீனவர்கள் பிரச்சனையை ஊறுகாய்போல தொட்டுக்கொண்டது தமிழர்களுக்காக கவலைப்படுகிறோம் என்று காட்டிக்கொள்ளும்  கனிமொழி  அவ அப்பாவிடம் கற்றுக்கொண்ட  அரசியல் சாணக்கியம்.

அதனால்தான் ஊடகங்களிடம் வாயே கொடுக்கவில்லை திறந்தால் தமிழக அரசியலிலும்,,அரசியல்வாதிகளிடமும் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

தனிப்பட்ட விசயமாய் போய் அரச அலுவல் எல்லாம் பாக்கலாமோ? :rolleyes:

 

1 hour ago, valavan said:

இந்திய  தரப்பிலும் இலங்கை தரப்பிலும் ஏறக்குறைய கலந்துகொண்ட அனைவருமே முஸ்லீம்கள்.

பேசபோனது மீனவர் பிரச்சனையாக இருக்காது  ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லீம்கள்மீது கடுமையாக நடந்துகொள்ளவேண்டாம் என்று கோரிக்கை விடுப்பதற்காக இருக்கலாம்.

இந்திய மீனவர்கள் பிரச்சனையை ஊறுகாய்போல தொட்டுக்கொண்டது தமிழர்களுக்காக கவலைப்படுகிறோம் என்று காட்டிக்கொள்ளும்  கனிமொழி  அவ அப்பாவிடம் கற்றுக்கொண்ட  அரசியல் சாணக்கியம்.

அதனால்தான் ஊடகங்களிடம் வாயே கொடுக்கவில்லை திறந்தால் தமிழக அரசியலிலும்,,அரசியல்வாதிகளிடமும் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக.

à®à®²à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ à®à®©à®¿à®®à¯à®´à®¿: "தமிழ஠மà¯à®©à®µà®°à¯à®à®³à¯ à®®à¯à®¤à¯ தாà®à¯à®à¯à®¤à®²à¯ à®à®²à¯à®²à¯, à®à®à®®à¯à®ªà®¾à®µà®¿à®¤à®à¯à®à®³à¯ தà¯à®à®°à¯à®à®¿à®©à¯à®±à®©"

கனிமொழி..  தனது சகோதரன், ஸ்ராலினால்... 
தமிழக அரசியலில். ஓரம் கட்டி வைக்கப் பட்ட நிலையில்,
தனது அரசியல் இருப்பிடத்தை, தக்க வைப்பதற்கும்.... 
தமிழக முஸ்லீம்  வாக்காளர்களை கவர்வதற்காகவும்,
இலங்கையில்... உள்ள, முஸ்லீம்  அமைச்சர்களையும்... பிரதமர் ரணிலையும்....சந்தித்த  பின்னணியில்....

கருணாநிதி குடும்பம், இலங்கையில்.... பல முதலீடுகளை (பினாமி) செய்துள்ளதாக,
முன்பு... பல செய்திகள் வந்தது.  இப்போ... கருணாநிதி இல்லாத நிலையில்... சொத்துப் பங்கீடு  வரும் போது,
அதனை நிவர்த்தி செய்ய... அவர் சந்தித்த ஆட்கள் தான், தகுந்தவர்கள்.

அதை... விட்டிட்டு, சம்பந்தன், சுமந்திரன், மாவை கோஸ்ட்டிகளை...
சந்தித்ததாலும்... ஒரு, பிரயோசனமும் இருக்காது... என்று,
கனிமொழி... நன்கே  அறிந்து வைத்துள்ளது, மிக்க மகிழ்ச்சி.    

இனி அவர் ... இந்தியாவுக்கு, திரும்பி போய்....
அரசியல் செய்யும் போது....  மோடி அரசு, இவர் முன்பு செய்த  திருகு தாளங்களை...
தூசி தட்டி, திகார் ஜெயிலுக்கு அனுப்ப... சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

திமுக பணத்துக்காக எதையும் செய்யும்

Bild

Bild

இதில இருக்கிற சாப்பாடுகள் என்னவாக இருக்கும்.😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

இதில இருக்கிற சாப்பாடுகள் என்னவாக இருக்கும்.😉

 

Bild

கொத்து ரொட்டியும், சமோசாவாகவும் இருக்கலாம்.  🤑
ஏனென்றால்... அது, இரண்டும்தான்....  😎
இலங்கை  -  இந்திய,  நட்புறவு  🤩 பாலம் அமைக்க... வலிமையானது.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Bild

34B9685A-59C6-45AE-A994-1BF809E852B1.jpe

406723E3-856E-47B2-82DB-6C39F3694659.jpe

என்ன பார்வை....😍   உந்தன் பார்வை .... 💓
கனிமொழியின்.. உடல் மொழியில்,  அப்பவும், இப்பவும்.. எந்த மாற்றமும்  இல்லை. 😎

தமிழக மீனவருக்காக, தனிப்பட்ட  பயணத்தை  கதைக்கப்  போன ஆள் மாதிரி தெரியவில்லை.
ஒருவரின்... உடல் மொழியே... அவர் எப்படிப் பட்டவர், என்பதை காட்டிக் கொடுத்து விடும்.

ஒருவரின்... கண்களை வைத்தே, அவரின் குணாதியங்களை அறிய முடியும்.
இவரின் பார்வை... தமிழக மீனவர் பிரச்சினைக்கு, போன மாதிரி தெரியவில்லை.

கருணாநிதி குடும்பங்கள்... சரியான,  பணப் பேராசை பிடித்தவர்கள்.
அவர்களை...  நம்பிக் கொண்டு இருப்பவர்கள், தான்... பாவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊழ‌ல் செய்து சிறைக்கு சென்று பிற‌க்கு வெளியில் வ‌ந்து இந்த‌ ஊட‌க‌ங்க‌ள் முன்னால் எப்ப‌டி தான் த‌ல‌ காட்ட‌ முடியுதோ , வெக்க‌ம் கெ.......ள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி(?0 மொ ழிக்கு...2009 ம் ஆண்டு போரின் பின்(/) கிடைத்த காசு 250 மில்லியன் டொலரில் அஙு கு ஒரு தேயிலைத்தோட்டம் வான்ங்கிவிட்டவ...அதனைப் பார்க்கப் போகையில் 4 முசுலிம்களையும் கூட்டிப்போஇ நம்ம ஆட்கள் இவர்கள்தான்...வோடு வேணுமின்னா காசு கொடு என்றிருப்ப...இல்லையெனில் ஒரு நாட்டின் சனாதிபதியும் ...பிரதமரும் ..இந்திய ஆளும் கட்ட்சியில்லாத ஒரு சாதாரண ராஜ்யசபா எம்மியுடன் இருந்து பிரியாணி சாப்பிட்டு சீலை போர்த்து காட்டிபிடி வைத்தியம் செய்வார்களா..... ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ஊழ‌ல் செய்து சிறைக்கு சென்று பிற‌க்கு வெளியில் வ‌ந்து இந்த‌ ஊட‌க‌ங்க‌ள் முன்னால் எப்ப‌டி தான் த‌ல‌ காட்ட‌ முடியுதோ , வெக்க‌ம் கெ.......ள் 

சூடு, சொரணை அற்ற... ஜென்மங்கள் தான்...
திராவிட தமிழக அரசியல் வாதிகள்.

அவர்களுக்கு... கொடி, பிடிக்கும் கூட்டங்களை, நினைக்க கவலையாக உள்ளது.
ஆனால், இந்த நிலைமை... நீண்ட நாள், நீடிக்காது.

உலகம்... முழுக்க,  சேர்த்து வைத்த, காசை.... இவர்கள்....
தானமாக, கொடுக்கும்...  நேரம் வரலாம்.

இல்லை என்றால்.... திகார் ஜெயில் போக... 
மறியல்,  உடுப்பு... அணிய வேண்டி வரும்.   🐽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

Bild

34B9685A-59C6-45AE-A994-1BF809E852B1.jpe

406723E3-856E-47B2-82DB-6C39F3694659.jpe

என்ன பார்வை....😍   உந்தன் பார்வை .... 💓
கனிமொழியின்.. உடல் மொழியில்,  அப்பவும், இப்பவும்.. எந்த மாற்றமும்  இல்லை. 😎

தமிழக மீனவருக்காக, தனிப்பட்ட  பயணத்தை  கதைக்கப்  போன ஆள் மாதிரி தெரியவில்லை.
ஒருவரின்... உடல் மொழியே... அவர் எப்படிப் பட்டவர், என்பதை காட்டிக் கொடுத்து விடும்.

ஒருவரின்... கண்களை வைத்தே, அவரின் குணாதியங்களை அறிய முடியும்.
இவரின் பார்வை... தமிழக மீனவர் பிரச்சினைக்கு, போன மாதிரி தெரியவில்லை.

கருணாநிதி குடும்பங்கள்... சரியான,  பணப் பேராசை பிடித்தவர்கள்.
அவர்களை...  நம்பிக் கொண்டு இருப்பவர்கள், தான்... பாவம்.

அப்பிடியே வழியுதண்ணை...அன்பு...பாவம் ராசா திகார் நினைவோடை..காலத்தை கழிக்க வேண்டியதுதான்...சிங்கன் சும்மாவிட்டிரான்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, alvayan said:

அப்பிடியே வழியுதண்ணை...அன்பு...பாவம் ராசா திகார் நினைவோடை..காலத்தை கழிக்க வேண்டியதுதான்...சிங்கன் சும்மாவிட்டிரான்.. 

இதுகளும்... அதுக்கு, பழக்கப் படுத்திய ஆட்கள் தானே....  😎

Link to comment
Share on other sites

இவ்வாறு தான் இந்திய ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி உள்ளது 

'தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்தார். திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான குழுவினர், இலங்கைப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேற்று சந்தித்து பேசினர். அப்போது கனிமொழி எம்பி, ' தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. எனவே, அவர்களை விடுவிக்கும்போது படகுகளையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகள் விடுவிக்கப்படாததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, இது தொடர்பான சட்டத்தைத் தளர்த்தி, படகுகளையும் விடுவிக்க்க வேண்டும். அதே நேரம், இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். முன்னதாக கனிமொழி எம்பி, இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதாராச்சியை சந்தித்து பேசினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525831

Link to comment
Share on other sites

கூட்டு சரியில்லை. தமிழர்களை விற்று பிளைப்பு நடத்தும் கூட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

இவ்வாறு தான் இந்திய ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி உள்ளது 

'தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்தார். திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான குழுவினர், இலங்கைப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேற்று சந்தித்து பேசினர். அப்போது கனிமொழி எம்பி, ' தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. எனவே, அவர்களை விடுவிக்கும்போது படகுகளையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகள் விடுவிக்கப்படாததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, இது தொடர்பான சட்டத்தைத் தளர்த்தி, படகுகளையும் விடுவிக்க்க வேண்டும். அதே நேரம், இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். முன்னதாக கனிமொழி எம்பி, இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதாராச்சியை சந்தித்து பேசினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525831

இந்த படகுகள் கட்சிக்காறரின்ர என்று எங்கோ வாசித்த நினைவு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.