Jump to content

சிங்களக் குடியேற்றம் குறித்து கலந்துரையாடல்


Recommended Posts

-க. அகரன் 

முல்லைதீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுகேணி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது பூர்வீக காணிகளில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக, வவுனியா மனித உரிமைகள் அலுவலகத்தில், நேற்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்கள்,

“1984ஆம் ஆண்டு காலப் பகுதியில் கடமை புரிந்த அரச அதிபர், இராணுவத்தினரின் கட்டாய பணிப்பின் பேரில்  பல அழிவுகளைச் சந்தித்து தமது பகுதிகளிலிருந்து அன்று வெளியேறியிருந்தோம்.

“பின்னர் 1990ஆம் ஆண்டு மீளகுடியமர்த்தப்பட்டு அதே ஆண்டில் வெளியேற்றபட்டு வேறு இடங்களில் வாழ்ந்து வந்தோம். போர் முடிவுற்று 2012ஆம் ஆண்டு மீளவும் குடியமர்த்தபட்டோம்.

“இந்நிலையில், எமது காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாம் தயாராகிய நிலையில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தினால் எமது காணிகள் பறிக்கபட்டு சிங்கள மக்கள் குடியேற்றபட்டிருந்தனர்.

“குறிப்பாக ஆமையன்குளம், ஊத்தராயன்குளம், அடையாதான் குளம், கூமாவடிக்குளம், தட்டாமலை,சின்னகுளம், குஞ்சுக்குளம், நாயடிச்சமுறிப்பு. போன்ற பகுதிகளில் வயல்காணி, மேட்டுகாணி என 1,031 ஏக்கர் அளவிலான காணிகள், மகாவலி அபிவிருத்தி திட்டத்தினால் எம்மிடமிருந்து பறிக்கபட்டுள்ளன. இதனால் எமது பொருளாதார நிலை மிகவும் பின்னடைவை நோக்கிசென்றுள்ளது.

“இந்த காணிகள் எமது கிராம மக்களுக்குச் சொந்தமான பேமிற் மற்றும் உறுதிபத்திரங்களை கொண்ட காணிகளாக அமைந்துள்ளது. சட்டவிரோதமான குறித்த காணி சுவிகரிப்பு நடவடிக்கை மூலம் இலங்கையின் நீதி, நியதிசட்டங்கள் மீறப்பட்டுள்ளன.

“எனவே, ஒரு மனித குலம் சந்தித்திருக்காத அத்தனை பேரழிவுகளுக்கும் முகம் கொடுத்த சமூகம் என்ற ரீதியில் அப்பாவி மக்களாகிய எங்களின் குரல்களுக்கு செவிசாய்த்து இன நல்லிணக்கத்தையும், தேசிய ஜக்கியத்தையும் மேலாக விரும்பும் நாம் அமைதியான முறையில் எமது காணிகளை மீளப்பெற்று கொள்வதற்கு அனைவரும்  ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மெற்கொள்ள வேண்டும் என தெரிவித்ததுடன், குறித்த விடயம் தொடர்பாக கடந்த மாதம் 28ஆம் திகதி எமது  மாவட்டச் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு, எமது கோரிக்கையை அனுப்பிவைத்திருந்தோம்.  

“கோரிக்கை அனுப்பப்பட்டு  14 நாள்கள் கடந்த நிலையிலும் எமக்கான தீர்வுகள் எதுவும் கிடைக்கபெறவில்லை. எனவே அடுத்த கட்டமாக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் தொடர்பாகவும் சட்ட உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் நேற்றையதினம் வவுனியாவுக்கு வருகை தந்து மனித உரிமை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/வன்னி/சிங்களக்-குடியேற்றம்-குறித்து-கலந்துரையாடல்/72-238446

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     "உன்னைக் காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்!"   "அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!"   "உன்னைக் நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்!"   "அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!"   "உன்னைக் கண்டதால் தியாகம் அறிந்தோம் சிலுவையின் பெருமை உணர்ந்தோம்! அன்னை தெய்வத்தின் அருமை அறிந்தோம் சிறந்த பண்பு கண்டோம்!"   "அன்று நம்பி மோசம் போனதால் சிதைந்து மதிப்பு இழந்தோம்! இன்று படும் துயரம் போக்க சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • Published By: VISHNU 16 APR, 2024 | 07:48 PM   முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார். பாலித தேவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை  மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார். https://www.virakesari.lk/article/181258
    • "உனக்கு தலை குனியும் !"     நேற்று:   "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!"   இன்று:   "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!"   நாளை:   "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.