Jump to content

எழுக தமிழை ஏன் ஆதரிக்க வேண்டும் ?


Recommended Posts

எழுக தமிழை ஆதரித்து பல்வேறு ஈழ ஆதரவு சக்திகளும் ஒன்றுபட்டுவருகின்றன. இருப்பினும் ஆங்காங்கே சில முரண்பட்ட செய்திகளும் தகவல்களும் வெளிவராமலில்லை. எழுக தமிழ் நிகழ்வுகளின் வெற்றியை எவ்வாறாயினும் குழப்ப வேண்டும் என்பதுதான் அவ்வாறான செய்திகளதும் தகவல்களினதும் உள்நோக்கமாகும். இது ஒரு கட்சிக்கு சார்பானது, இதனால் விக்கினேஸ்வரன் பலமடைவார் என்றவாறான பிரச்சாரங்கள் அனைத்தும் மேற்படி உள்நோக்கத்தின் விளைவே! ஒரு மக்கள் இயக்கமான தமிழ் மக்கள் பேரவை, அதனுடன் கொள்கை அடிப்படையில் உடன்படக் கூடிய அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, மக்களுக்காக போராடும் போது, குறித்த அரசியல் கட்சிகள் இதனால் பயனடையும் என்று வாதிடுவதானது, அடிப்படையிலேயே தவறானதொரு புரிதலாகும்.

  • et1-1-1024x576.jpeg

இவ்வாறு வாதிடுபவர்கள் எவரும் விபரம் அறியாமல் வாதிடவில்லை. அவ்வாறு வாதிடுபவர்களும் தங்களின் கட்சி நலன்களை முன்னிறுத்தியே மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். எழுக தமிழ் தோல்வியடையும் போது, அதில் தங்களின் பங்களிப்பு இல்லாமையால்தான் அது தோல்வியடைந்தது என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே அவ்வாறானவர்களது உண்மையான நோக்கமாகும். இதன் காரணமாகவே எழுக தமிழின் நோக்கம் தொடர்பில் அவ்வப்போது சில பிழையான அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. தேர்தல் வெற்றியை மட்டும் இலக்கு வைக்கும் கட்சிகள் இவ்வாறு தங்களுக்குள் முரண்படுவது சாதாரணமான ஒன்றே ஆனால் கட்சி நலனையும் மக்கள் நலனையும் ஒன்றாக்கும் போதே இவர்கள் தவறு செய்யவிளைகின்றனர். மக்களுக்கு எதிராக சிந்திக்கின்றனர். இதில் மக்களுக்கே அதிக பொறுப்புண்டு. 

ஒரு விடயத்தை ஆதரிப்பதற்கு முன்னர் அதனை ஏன் ஆதரிக்க வேண்டும் என்னும் தெளிவு மக்கள் மத்தியில் இருக்க வேண்டியது அவசியம். மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாத போதுதான் போலியான பிரச்சாரங்கள் மக்களை வசியப்படுத்திவிடுகின்றன. எனவே முதலில் எழுக தமிழை ஆதரிப்பதற்கு முன்னர் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்று பார்க்க வேண்டிய கட்டாயமான ஒன்றாகும். இந்தக் கேள்விக்கான பதிலை தேடுவதற்கு முன்னர் – எவ்வாறானதொரு காலகட்டத்தில் பேரவை எழுக தமிழுக்கான அழைப்பை விடுத்திருக்கின்றது என்பதற்கான பதிலை காண்போம்.

  • miss.jpg

மகிந்த ராஜபக்ச சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கின்றார் எனவே அந்த ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் என்னும் ஒரு புறச்சூழலில்தான், 2015இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அந்த ஆட்சி மாற்றம் தொடர்பில் அளவுக்கதிகமான நம்பிக்கைகள் விதைக்கப்பட்டன. இடைக்கால அறிக்கை, புதிய அரசியல் யாப்பு, சமஸ்டித் தீர்வு அதற்குள் மறைந்திருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டுவந்தது. இறுதியில் அவற்றுக்கு என்ன நடந்தது? மீண்டும் தமிழ் மக்கள் மிக மோசமாக ஏமாற்றப்பட்டனர். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பு, கடந்த நான்கு வருடங்காளக சிறிலங்கா அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வந்த நிலையில், அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டதாக புலம்புகிறது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான அனுபவங்கள் தமிழர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறது.

அதாவது, சிங்கள ஆட்சியாளர்கள் எந்தக் கட்சி நிறத்திலிருந்தாலும் கூட, அவர்களின் அடிப்படையான அரசியல் பண்பில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. கடந்த நான்கு வருடகால அனுபவங்கள் இதனை தெட்டத்தெளிவாக நிரூபித்திருக்கின்றது. அதே வேளை வெறும் தேர்தல்வாத அரசியல் கட்சிகள் எவற்றாலும், தமிழர் தாயகப்பகுதியின் மீதான திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆட்சி மாற்றம் எதையெல்லாம் தடுக்கும் என்று சொல்லப்பட்டதோ, அது எவற்றையுமே அது தடுக்கவில்லை. மாறாக, தமிழர் தாயகப்பகுதியான வட-கிழக்கில் பௌத்தமயமாக்கல் தொடர்ந்தது, திட்டமிட்ட குடியேற்றங்கள் மிகவும் நுட்பமாக தொடர்ந்தன. தொல்பொருளியல் ஆய்வு என்னும் அடிப்படையில் தமிழர்களின் பாரம்பாரியமான கலாசாரா – மத இடங்கள் கபளீகரம் செய்யப்பட்டது. இது எவற்றையும் அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வந்த, கூட்டமைப்பால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இது ஒரு தெளிவான செய்தியை சொல்லியது. அதாவது, தமிழ் மக்கள் வெறுமனே தேர்தலில் வாக்களித்து, தங்களின் பிரதிநிதிகளை சிறிலங்காவின் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதால் மட்டும் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. அது சாத்தியம் என்றால், கடந்த நான்கு வருடங்களில் கூட்டமைப்பால் பல்வேறு விடயங்களை சாதித்திருக்க முடியும் ஆனால் எதுவும் முடியவில்லை. எனவேதான் கட்சிகளை நம்பிக்கொண்டிருத்தல் என்பதற்கும் அப்பால் செயலாற்றவேண்டியிருக்கிறது. அதற்காக மக்கள் ஒரு இயக்கத்தின் கீழ் அணிதிரண்டு போராட வேண்டியிருக்கிறது. இவற்றின் மூலம்தான் தமிழ் மக்களின் தலையை நோக்கி வரும் ஆபத்தை ஆகக் குறைந்தது தோளோடாவது தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறானதொரு அரசியல் சூழலில்தான், தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழிற்கான அழைப்பை விடுத்திருக்கிறது. இப்போது இந்த எழுக தமிழை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கான பதிலை காண்பதில் சிரமமிருக்காது.

  • et-1-1024x765.jpeg

இதற்கு மேலும் எழுக தமிழ் தொடர்பில் ஒருவருக்கு தடுமாற்றமும் சந்தேகமும் இருப்பின், பேரவை, விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் இதனுடன் கைகோர்த்திருக்கும் ஏனைய கட்சிகள் அனைத்தையும் விட்டுவிட்டு, எழுக தமிழுக்காக முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளை மட்டுமே கருத்தில் கொள்ளலாம் – செயற்படலாம். ஏனெனில் 2009இற்கு பின்னர் – தமிழ் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதிரிக்கக் கூடிய எந்தவொரு அரசியல் கட்சியோ, மக்கள் இயக்கங்களோ வடக்கு கிழக்கில் இல்லை என்பது உண்மையே! அவ்வாறு மக்கள் ஆதரிக்கக் கூடியளவிற்கான அர்ப்பணிப்போடும் தியாகசிந்தையோடும் எந்தவொரு தலைமையும் இல்லை என்பதும் உண்மையே!

இதுதான் யதார்த்தம் என்றாலும் கூட. நாம் எந்தவொரு நிகழ்வையும், அதற்கு தலைமை தாங்குவோரையும் குறிப்பிட்ட சூழலில் வைத்துத்தான், மதிப்பிட வேண்டும். அந்த வகையில் நோக்கினால் பேரவையின் எழுக தமிழுக்கு இன்றைய காலத்தில் ஒரு வரலாற்றுப் பாத்திரம் உண்டு. ஈழத் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் அனைவரும் கட்சி பேதங்களையும், கடந்தகால கசப்புக்களையும் மறந்து ஓரணியில் திரண்டு, எழுக தமிழை வெற்றிபெறச் செய்ய வேண்டிய ஒரு காலத்தேவையாகும். காலத்தை தவறவிட்;டால் பின்னர் கண்டவரெல்லாம் கதவைதட்டும் போது, தமிழ் மக்கள் வெறும் பார்வையாளராக மட்டுமே நிற்க நேரிடும்.

  • Ezhuka-vgg-1.jpg

பேரவையின் எழுக தமிழுக்கான கோரிக்கைகள் முற்றிலும் சரியானவை – நியாயமானவை. அதாவது, சிங்கள, பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்து, வடக்கு – கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து மற்றும் இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக்குடியமர்த்து – ஈழத் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் ஒருவரால் இந்தக் கோரிக்கைகளை எவ்வாறு நிராகரிக்க முடியும் – எவ்வாறு எழுக தமிழை எதிர்க்க முடியும்?

-கரிகாலன்

http://thamilkural.net/?p=2110

Link to comment
Share on other sites

பிரபாகரனை எதிர்க்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தையே எதிர்த்துவிட்டு, இன்று தமிழ்மண் பறிபோகிறதே என்று அனைத்துத் தமிழர்களும் புலம்புவதைப்போன்ற நிலைமையே, விக்கினேசுவரனை எதிர்க்கிறோம் என்று எழுக தமிழை எதிர்ப்பதாலும் ஏற்படலாம். பட்டறிவைக்கொண்டு தமிழ்மக்கள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். 🤔 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.