Jump to content

பத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்

சவுதிஅரேபியாவின் முக்கியமான எண்ணெய் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களின் பேச்சாளர் ஒருவர் தாக்குதலிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஹெளதி கிளர்ச்சிக்குழுவினர் தமது அல்மசீரா ஊடகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

aramco.jpg

அப்கேயக் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீதும் குரைஸ் எண்ணெய் வயல்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு 10 ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக யேமனின் கிளர்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யேமனில் தாக்குதல்கள்  தொடர்ந்தால் சவுதிஅரேபியா மீது தாக்குதல்கள் தீவிரமடையலாம் என ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

houthi.jpg

இதனை தவிர்ப்பதற்கு சவுதி அரேபிய அரசாங்கம் எங்களை தாக்காமலிருப்பதே ஒரே வழி எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அப்கெயக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டவேளை எடுக்கப்பட்ட வீடியோக்களில் பின்னணியில் துப்பாக்கி சத்தத்தை கேட்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரம்கோவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்குவைக்கில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

ஆளில்லா விமானதாக்குதல்களை தொடர்ந்து தொழிற்சாலையிலிருந்து பாரிய தீப்பிழம்புகளும் கரும் புகை மண்டலமும் வெளியாவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

sauthi_drone_se14.jpg

இந்த தாக்குதல் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை செய்திகள் வெளியாகாத அதேவேளை இந்த தாக்குதல் காரணமாக மத்தியகிழக்கில் பதற்ற நிலை மேலும் தீவிரமடையும் ஆபத்து உருவாகியுள்ளது என கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

யேமன் கிளர்ச்சியாளர்களிற்கு ஈரான் மறைமுக ஆதரவை வழங்கிவருவதும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி அவர்களிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/64780

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சௌதி அரசின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல்

 
சௌதிபடத்தின் காப்புரிமை Reuters

சௌதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதலால் பெரும் தீ உண்டாகியுள்ளது.

இரான் ஆதரவளிக்கும், ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

எனினும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என சௌதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை நான்கு மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்துள்ளது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சௌதி அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியை சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 1% கிடைக்கிறது.

2006இல் அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அல்-கய்தா நடத்தத் திட்டமிட்ட தற்கொலைத் தாக்குதலை சௌதி காவல் படைகள் முறியடித்திருந்தன.

சௌதி விமானப் படை மற்றும் சௌதி தலைமையிலான கூட்டுப்படை சமீப ஆண்டுகளாக ஏமனில் ஹூதி கிளிர்ச்சியாளர்களுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

2015இல் இருந்து போர் நடந்து வரும் ஏமனில் அதிபர் அப்த்ராப் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சௌதி அரசு உள்ளது.

இன்றைய தாக்குதல்கள் சௌதி அரேபியாவின் ஆதரவைப் பெற்றுள்ள ஏமன் அரசுக்கு எதிராகப் போரிடும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தந்திரோபாய அச்சுறுத்தலை வெளிக்காட்டும் வகையில் இது அமைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக அரம்கோ இருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு வல்லமை பெற்றிருந்தால், அந்த அளவுக்கான வசதிகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-49700918

Link to comment
Share on other sites

"அரம்கோவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்குவைக்கில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது" 

ஈரான் வித்தியாசமாக யேமனில் போராட்டத்தை நகர்த்த ஆரம்பித்துள்ளது. சவூதி என்ற நாடு இயற்கை தந்த வளத்தை வைத்து மிகவும் வசதியாக வாழும் நாடு.  அந்த மூல வருமானத்தில் கை  வைக்கும் முயற்சி. இது சவூதியை ஆத்திரத்திற்கு உள்ளாக்கும்.  

மசகு எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்க நாடு முன்னிலை நாடாக இருப்பதாலும் உலகம் பொருளாதார மந்த நிலை நோக்கி செல்வதாலும், சர்வதேச சந்தையில் விலை இதனால் அதிகரிக்காது !

Link to comment
Share on other sites

10 hours ago, ampanai said:

"அரம்கோவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்குவைக்கில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது" 

ஈரான் வித்தியாசமாக யேமனில் போராட்டத்தை நகர்த்த ஆரம்பித்துள்ளது. சவூதி என்ற நாடு இயற்கை தந்த வளத்தை வைத்து மிகவும் வசதியாக வாழும் நாடு.  அந்த மூல வருமானத்தில் கை  வைக்கும் முயற்சி. இது சவூதியை ஆத்திரத்திற்கு உள்ளாக்கும்.  

மசகு எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்க நாடு முன்னிலை நாடாக இருப்பதாலும் உலகம் பொருளாதார மந்த நிலை நோக்கி செல்வதாலும், சர்வதேச சந்தையில் விலை இதனால் அதிகரிக்காது !

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

Link to comment
Share on other sites

ஆளில்லா விமானதாக்குதலைதொடர்ந்து - சவுதியின் எண்ணெய் உற்பத்தி பெருமளவு பாதிப்பு- சர்வதேச விநியோகத்தில் நெருக்கடி- விலை அதிகரிக்கும் அபாயம்-

 

சவுதிஅரேபியாவின் இரு முக்கிய எண்ணெய் உற்பத்திநிலையங்கள் மீது யேமனின் கிளர்ச்சிக்குழுவினர் மேற்கொண்ட ஆளில்லாத விமானதாக்குதல்கள் காரணமாக சவுதி அரேபியா தனது நாளாந்த எண்ணெய் உற்பத்தி பாரிய பாதிப்பை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஆளில்லா விமானதாக்குதல்கள் காரணமாக நாள் ஒன்றிற்கு நாங்கள் 5.7 மில்லியன் பரல் கச்சா எண்ணெய் மற்றும் வாயு உற்பத்தியை இழக்கவேண்டிய நிலையிலுள்ளோம் என சவுதி அரேபியாவின் எரிசக்தி துறை அமைச்சர் அப்துல்அசீஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

ஒபேக்கின் புள்ளிவிபரங்களின்படி நாள்ஒன்றிற்கு சவுதிஅரேபியா 9.8 மில்லியன் பரல் உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

ஆளில்லா விமானதாக்குதல்கள் காரணமாக இழந்தவற்றை மீளப்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் இந்த தாக்குதல்கள் சவுதி அரேபியாவிற்கு எதிராக மாத்திரம் மேற்கொள்ளப்படவில்லை,சர்வதேச எண்ணெய் விநியோகத்தினையும் பாதுகாப்பையும் இலக்குவைத்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன  இதனால் உலக பொருளாதாரத்திற்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அப்கெய்க் எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையம்  சர்வதேச எண்ணெய் விநியோகத்தை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான இடம் என குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் சர்வதேச சக்தி கொள்கை நிலையத்தின் இயக்குநர் ஜேசன்போர்டொவ் எண்ணெய் விலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதல்களிற்கு யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களிற்கு அதரவு அளித்து வரும் ஈரான் பொறுப்பேற்கவேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரானிய தலைநகர்கள் இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்யும் அதேவேளை ஈரான் சவுதிஅரேபியா  100ற்கும் மேற்பட்ட தாக்குல்களை மேற்கொண்டுள்ளது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ஈரான் சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் மீது எதிர்பாரத தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ள மைக்பொம்பியோ இந்த தாக்குதல் யேமனிலிருந்து மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/64793

Link to comment
Share on other sites

1 hour ago, Jude said:

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

இதுதான் என்பது ஒரு பாடமாக அமையுமா என தெரியவில்லை. காரணம், ஒவ்வொரு போராட்டமும் ஒன்றில் இருந்து வேறுபாடும். 

என்னால் முடிந்த சில குறிப்புக்கள். 

எமது போராட்டம் இனவிடுதலை சார்ந்தது. ஏமனில் நடப்பது கூத்தி என்ற சியா இஸ்லாமிய மதப்பிரிவினர் சுனி மதப்பிரிவினர் இடையே நடக்கும் யுத்தம் என தெரிகின்றது. இரு ஆட்சியாளர்கள் பதவிக்கு போட்டி, மதத்தால் வேறுபட்டவர்கள். 

எம்மைப்போல இரண்டு நாடுகளாக இருந்து ஒருநாடக மாறியது 

இங்கே கூத்தி இனமக்கள் எமது மக்களை விட அதிக அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி கொண்டவர்கள். ஏமன் சண்டை கிட்டத்தட்ட ஆறுவருட சண்டை.  ஈரானும் சவூதியும் ஏமனில் மோதிக்கொள்ளும் களம். 

எனவே, எமக்கும் ஏமனுக்கும் பல வித்தியாசங்கள்.  

ஆனால், அப்பாவி மக்கள் இறப்பு, குழந்தை சிறப்புக்கள், போன்ற மனித அவலங்கள் எமது மக்களை போலவே உள்ளது. இவர்களும் எம்மை போலவே வறுமையானவர்கள், எந்த இயற்கை வளமும் இல்லை. 

எம்மை போல ஒரு கேந்திர முக்கியமான புவிசார் பாதையில் அமைந்துள்ளன. இதுவே வல்லரசுகளின் பார்வையில் உள்ளது.   

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

ஆளில்லா விமானதாக்குதலைதொடர்ந்து - சவுதியின் எண்ணெய் உற்பத்தி பெருமளவு பாதிப்பு- சர்வதேச விநியோகத்தில் நெருக்கடி- விலை அதிகரிக்கும் அபாயம்-

 

3 hours ago, Jude said:

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

 

2 hours ago, ampanai said:

இதுதான் என்பது ஒரு பாடமாக அமையுமா என தெரியவில்லை. காரணம், ஒவ்வொரு போராட்டமும் ஒன்றில் இருந்து வேறுபாடும். 

எதிரி எதிர் பார்க்காத சிறந்த உபகரணமான ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுதும் இதன் மூலம் தமது தரப்புக்கு உயிரிழப்பபை தவிர்த்ததும், எமது மக்களின் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது இவர்களின் சிறந்த அணுகுமுறைகளாக தெரிகின்றன.

Link to comment
Share on other sites

5 hours ago, Jude said:

எதிரி எதிர் பார்க்காத சிறந்த உபகரணமான ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுதும் இதன் மூலம் தமது தரப்புக்கு உயிரிழப்பபை தவிர்த்ததும், எமது மக்களின் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது இவர்களின் சிறந்த அணுகுமுறைகளாக தெரிகின்றன.

ஆம் இந்த தொழில்நுட்பம் இலகுவாக தயாரிக்கபப்படவும்  அதிகம் செலவில்லாமலும், இந்த வருடத்தில் செய்து (2019) , போராட்டத்தில் பாவிக்க கூடியமாதிரி உள்ளது. பத்து வருடத்திற்கு முன்னராக (2009) இந்த தொழில்நுட்பம் இவ்வாறு இல்லை. இன்னும் பத்து வருடத்தில் கூட இந்த தொழில்நுட்பம் மேலும் முன்னேற்றகரமாக அமையலாம் இல்லை இதைவிட மலிவாக உயர் தொழில்நுட்பம் வடிவமைக்கப்படலாம்.  

அதேவேளை, ஈரானின் உதவி அதிகமாக ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்கின்றது. ஈரான் ஒரு அணு ஆயுத வல்லரசாக வர முயலும் நாடு. எனவே, அவர்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை ஒப்பீடடளவில் இலகுவாக செய்யலாம். 

நாளை ஆப்கான் தாலிபான்களும் சோமாலிய கடற்கொள்ளையர்களும் ஆரம்பிக்க இருக்கும் காஸ்மீர் போராட்ட அரங்கிலும் இன்று ட்ரோனை காணவில்லை, ஆனால் விரைவில் இங்கும் வரவும் என்பது வல்லரசு நாடுகளின் உளவுத்துறைக்கும் தெரியும். 

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தாக்குதல் செய்த்தது சாதாரணமாக நாங்கள் க்லியான வீடு சாமத்திய வீடுகளில் படமெடுக்க மேல அனுப்பும் ட்ரோண் வகை இல்லை அதைவிட மேலதிக நவீனத்துடன் வடிவமைக்கப்பட்டது. தவிர ஐரோப்பிய நாடுகளில் இவ்வகை ட்ரோண்கள் பறப்பதற்க்குத் தடை செய்யப்பட்ட பகுதிகளையும் அறிவித்திருக்கிறார்கள் அதைவிட அதனை ஜி பி எஸ் நெவிகேசனில் பதிந்துமிருக்கிறார்கள் அவ்விடங்களில் நாங்கள் ட்ரோண்களை அடாத்தாக மேலே ஏத்த முயன்றாலும் முடியாது அப்படியாகின் ஜிபிஎஸ் சை அணேபிள் பண்ண்வேண்டும். 

ட்றோண்களது முழுமையான வருகை முள்ளிவாய்க்காலுக்குப் பின்பே அதிகரித்தது. அதற்குமுன்பும் இருந்தது ஆனால் எமக்குக் கொஞ்சம் கூரவஏ இருந்தது. 

அப்படி இருந்தாலும் தோல்வியைக் கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கலாமே தவிர நிற்பாட்டியிருக்கமுடியாது. காரணம் இந்தியாவின் செய்மதிகள் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்குப்பகுதிக்கு மேலாகத் திருப்பிவிடப்பட்டிருந்தது அதன்மூலமே சனங்களின் மற்றும் போராளிகளது நடமாட்டத்தை மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு சிறீலங்கா இராணுவத்துக்கு அறிவுறுத்தியிருந்தனர். 

இதன்மூலம் இந்தியா தனது தொழில்நுட்பத்தைச் சோதனைசெய்யும் களமாகவும் தமிழர் தலைகளை மாற்றியிருந்தது அதைத்தவிர இலங்கயிலிருந்து சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்மூலம் வெளியேற்றப்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர்களது மூன்றாவது சந்ததியினர் தங்களது சொந்தங்களைக்காண வன்னிப்பகிதிக்கு வருகிறோம் எனும்போர்வையிலும் இந்திய புலனாய்வு தனது ஆதளை வன்னி வடக்கு எங்கும் உள்நுளைத்திருந்தது. அதைத்தவிர கருணாவுடன் வன்னியில் யெயசுக்குரு காலத்தில் சேர்ந்து செயற்பட்ட பல ஆயிரக்கணக்கான கிழக்கைச் சேர்ந்த முன்னைய கருணாவும் விசுவாசிகள் விருப்பத்துனணோ அன்றேல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியோ இராணுவ ஊடறுப்புகளுக்கு மத்தியில் உள்நுளைக்கப்பட்டனரவர்களே இறுதிகணத்தில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையச் செய்தவர்கள் 

இப்படியான பல விடையங்கள் புலிகளது படை இறுதிப்போரில் வென்றாலும் அதன் பின் அவர்கள் நீண்டகாலத்துக்குத் தாக்குப்பிடிக்கமுடியாதவாறு அனைத்துச் செயல்களும் வடக்கில் செய்துமுடிக்கப்பட்டன ஆகவே தான் 

இந்திய தேசம் தமிழர்விரோத தேசம் என எப்போகும் நான் கூறுவதற்குக்காரணம்.

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

இந்திய தேசம் தமிழர்விரோத தேசம் என எப்போகும் நான் கூறுவதற்குக்காரணம்

இந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. 

இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும்?, முடியாது  

எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்)  ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள்  மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.  

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

இந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. 

இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும்?, முடியாது  

எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்)  ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள்  மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.  

இதற்கும் மேலாக, இந்திய நலன்களுக்கு பாதகமாக அமையும் சிறிலங்கா அரசின் திட்டங்களை அடையாளம் கண்டு, அந்த பாதிப்புகளை குறைக்க தமிழ் மக்கள் செய்ய கூடியவற்றை திட்டமிட்டு, இவற்றை இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது முக்கியமான தேவை.

Link to comment
Share on other sites

4 hours ago, Elugnajiru said:

அப்படி இருந்தாலும் தோல்வியைக் கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கலாமே தவிர நிற்பாட்டியிருக்கமுடியாது. காரணம் இந்தியாவின் செய்மதிகள் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்குப்பகுதிக்கு மேலாகத் திருப்பிவிடப்பட்டிருந்தது அதன்மூலமே சனங்களின் மற்றும் போராளிகளது நடமாட்டத்தை மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு சிறீலங்கா இராணுவத்துக்கு அறிவுறுத்தியிருந்தனர். 

இதன்மூலம் இந்தியா தனது தொழில்நுட்பத்தைச் சோதனைசெய்யும் களமாகவும் தமிழர் தலைகளை மாற்றியிருந்தது அதைத்தவிர இலங்கயிலிருந்து சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்மூலம் வெளியேற்றப்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர்களது மூன்றாவது சந்ததியினர் தங்களது சொந்தங்களைக்காண வன்னிப்பகிதிக்கு வருகிறோம் எனும்போர்வையிலும் இந்திய புலனாய்வு தனது ஆதளை வன்னி வடக்கு எங்கும் உள்நுளைத்திருந்தது. அதைத்தவிர கருணாவுடன் வன்னியில் யெயசுக்குரு காலத்தில் சேர்ந்து செயற்பட்ட பல ஆயிரக்கணக்கான கிழக்கைச் சேர்ந்த முன்னைய கருணாவும் விசுவாசிகள் விருப்பத்துனணோ அன்றேல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியோ இராணுவ ஊடறுப்புகளுக்கு மத்தியில் உள்நுளைக்கப்பட்டனரவர்களே இறுதிகணத்தில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையச் செய்தவர்கள் 

இப்படியான பல விடையங்கள் புலிகளது படை இறுதிப்போரில் வென்றாலும் அதன் பின் அவர்கள் நீண்டகாலத்துக்குத் தாக்குப்பிடிக்கமுடியாதவாறு அனைத்துச் செயல்களும் வடக்கில் செய்துமுடிக்கப்பட்டன ஆகவே தான் 

இந்திய தேசம் தமிழர்விரோத தேசம் என எப்போகும் நான் கூறுவதற்குக்காரணம்.

இலங்கை தமிழரின் அடிப்படை பிரச்சினை, பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் ஆகும். இவை ஏன் தடைப்பட்டன? என்ற கேள்விக்கான பதிலே, மொழிப்பிரச்சினை, பொலிஸ் உரிமை, காணி உரிமை, சுயநிர்ணய உரிமை என்ற தேவைகள் ஆகும். 

இவை இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான பிணக்கு. இந்த பிணக்கை இந்தியா - இலங்கை தமிழர் யுத்தமாக மாற்றியது மாபெரும் தவறு. அதை நிவர்த்தி செய்ய கடுமையான முயற்சி தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

இந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. 

இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும்?, முடியாது  

எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்)  ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள்  மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.  

 

27 minutes ago, Jude said:

இதற்கும் மேலாக, இந்திய நலன்களுக்கு பாதகமாக அமையும் சிறிலங்கா அரசின் திட்டங்களை அடையாளம் கண்டு, அந்த பாதிப்புகளை குறைக்க தமிழ் மக்கள் செய்ய கூடியவற்றை திட்டமிட்டு, இவற்றை இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது முக்கியமான தேவை.

இந்தியா என்பது மிகப்பெரிய அனைத்துச் சக்திகளையும் உள்ளடக்கிய நாடு அதற்கு நாம் மேற்றிய செயற்பாடுகளைச் செய்யமுடியாதுஅது எப்படி இருக்குமெனில் பத்துப்பிளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக்காட்டியமாதிரி அதைவிட அவர்கள் எமது வழிக்கு வருவது கிழவி சாமத்தியப்படுவதற்குச்சமன்.  

நாம் யாரும் இந்தியாவுக்குச் சொம்பு தூக்கவேண்டிய அவசியம் இல்லை காரணம் இலங்கைத் தீவில் அனைத்து அரசியல் சூழலையும் தீர்மானிப்பதும் ஏற்படுத்துவதும் இந்தியாவே அப்படியும் நாம் சொம்புதூகினால் நாம் காமடிப்பீசாகவே கணிக்கப்படுவோம்.

கிட்டத்தட்ட இந்தியாவை ஐம்பது வருட காலமாக நம்பியும் ஏமாந்தும் வருகிறோம்

ஐம்பதுக்குக் குறைவான புலொட் போராளிகளைவைத்தே மாலைதீவினை இந்தியா தனது கைக்குள் கொண்டுவந்தது

அது அந்தகாலம் எனினும் தற்போது இலங்கைத் தீவின் அனைக்து இடங்களிலிம் இந்தியா அனைத்து வடிவிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பின்போது நாம் அவதானித்தவையில்  கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலில் வெடித்த குண்டு  சாதாரணமாக முதுகில் எல்லோரும் சுமக்கும் பையில் கொண்டுபோய் வெடிக்கவைத்து அது பாரிய சேதாரத்தை ஏற்படுத்துமாகவிருந்தால் பஞ்சிகாவத்தையில் கையெறி குண்டுக்காகப் பயன்படும் வெடிபொருள் பாவித்திருக்க முடியாது பிளாஸ்டிக் வகை வெடிமருந்தாக இருக்கவேண்டும் அதை சாதாரணமாக நாம் கையாளமுடியாது தவிர வேறு நாடுகளிலிருந்து தருவிக்க முடியாது அப்படித்தருவிக்க முற்பட்டால உடனடியாக அனைத்துலகத்திலுமுள்ள புலனாய்வுத்துறையினருக்க்கும் செய்தி போய்ச்சேரும் அந்த அளவுக்கு வலையமைப்பு இறுக்கமாக இருக்கு அதன் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தினதான வெளியேற்றத்தை பிரிட்டிஸ் ஒரு ஒப்பந்தத்துடன் நடைமுறைப்படுத்த முயல்கிறது இல்லாதுவிட்டால் சர்வதேச மற்றும் பிராந்திய தீவிரவாத அமைப்புகளது செயல்பாடுகள் மற்றும் முனைவுகளைப்பற்றிய தகவல் பரிமாற்றத்துக்கு நிரம்பவே கணிசமான கட்டணத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இங்கிலாந்து கொடுக்கவேண்டிவரும் ஆக புலனாய்வுப்பரிமாற்றம் என்பது உலக அளவில் நாடுகளுக்கு நாடுகள் மாறினாலும் விடையம் ஒன்றாகவே பார்க்கப்படும். ஆக யாரோ ஒரு பிராந்திய வல்லரசு மிகவும் திட்டமிட்ட ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டு அதி தமிழருக்குப் பாதிப்பு ஏற்படும்வண்ணம் (காரணம் அவனது குரல்தான் இப்போது சகல வழிகளிலும் அடைக்கபட்டுள்ளது) ஆனால் இலங்கை அரசியலில் தங்களது ஆடு புலி ஆட்டத்தை தமக்குச்சாதகமாக ஆட யாரோ ஒருவரால் திட்டமிட்ட சம்பவம் அச்சம்பவத்துக்கு எப்போது இலங்கையின் குடுமியை எப்போதும் தன்வசம் வைத்திருக்க எண்ணும் இந்தியாவே செய்திருக்க வாய்ப்புள்ளது. அதுவும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் பத்தாவது வருட நிறவை எதிர்கொள்ளத் தமிழினம் ஆயத்தானவேளையில் மற்றும் சர்வதேச நாடுகள் அதற்கான நீதி இதுவரை கலதாமதகாஇரது ஏன் எனக் கேத முனைகின்றவெளையில் இப்படியான தாக்குதல் நடாத்தப்பட்டது இந்தியாவின் கைங்கரியம் இல்லாது வேறு யாராலும் இருக்கமுடியாது. அமைதிப்படையின் உற்றுகையப்போல பல்மடங்கு வீரியமான முற்றுகையை தமிழினம்மீது இந்தியா இப்போது மேற்கொண்டுள்ளது.

அது எதுபோல் எனில் தமிழ் நாடு அரசை கிரிஜா வைத்திய நாதன் எனும் ஒரு தலைமைச்செயலாளரை வைத்தே இயக்குவதுபோலாகும்.

ஆகவே இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது இதற்கான விவாதக்களம் அனைத்திடங்களிலும் திறக்கப்படுவது காலத்தின் கட்டாயம் இந்தியக்கனவு காண்பவர்கள் பேடிகள் ஒதுங்கி நில்லுங்கள் விருப்பமென்றால் உங்கள் இந்திய எஜமானனுக்குக் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

29 minutes ago, Elugnajiru said:

இந்தியா என்பது மிகப்பெரிய அனைத்துச் சக்திகளையும் உள்ளடக்கிய நாடு அதற்கு நாம் மேற்றிய செயற்பாடுகளைச் செய்யமுடியாதுஅது எப்படி இருக்குமெனில் பத்துப்பிளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக்காட்டியமாதிரி அதைவிட அவர்கள் எமது வழிக்கு வருவது கிழவி சாமத்தியப்படுவதற்குச்சமன்.  

நாம் யாரும் இந்தியாவுக்குச் சொம்பு தூக்கவேண்டிய அவசியம் இல்லை காரணம் இலங்கைத் தீவில் அனைத்து அரசியல் சூழலையும் தீர்மானிப்பதும் ஏற்படுத்துவதும் இந்தியாவே

.......

.......

ஆகவே இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது இதற்கான விவாதக்களம் அனைத்திடங்களிலும் திறக்கப்படுவது காலத்தின் கட்டாயம் இந்தியக்கனவு காண்பவர்கள் பேடிகள் ஒதுங்கி நில்லுங்கள் விருப்பமென்றால் உங்கள் இந்திய எஜமானனுக்குக் கூறுங்கள்.

" இந்தியா அனைத்துச் சக்திகளையும் உள்ளடக்கிய நாடு" , "இலங்கைத் தீவில் அனைத்து அரசியல் சூழலையும் தீர்மானிப்பதும் ஏற்படுத்துவதும் இந்தியாவே" என்று எழுதிய கையோடு "ஆகவே இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது" என்றும் எழுதுகிறீர்கள். இது தானே முள்ளிவாய்க்கால் தற்கொலைக்கு காரணமான சிந்தனை? "இந்தியாவை நாம் புறமொதுக்கும் " கொள்கை தானே இந்திய - தமிழீழ யுத்தத்துக்கு வழி கோலியது? இப்போது என்ன மீண்டும் "இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது"?

 

 

Link to comment
Share on other sites

#1 : உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 13% அதிகரித்துள்ளது ~ கிட்ட்டத்தட்ட 62 அமெரிக்க டாலர்கள் 

https://www.cnbc.com/2019/09/15/us-crude-oil-jumps-15percent-after-drone-strikes-disrupt-saudi-crude-production.html

#2:  திங்கள் அளவில் பாதிக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மூன்றில் ஒரு பகுதி திருத்தப்பட்டு விடும் 

https://www.cnbc.com/2019/09/15/saudi-arabia-aims-to-restore-one-third-of-lost-oil-output-by-monday-wsj-says.html

#3: அமெரிக்க நாடு யுத்தத்திற்கு ஆயத்தம். யார் இதை செய்தார்கள் என்ற தகவல் கிடைத்ததும் நடவடிக்கை - ட்ரம்ப் 

https://www.cnbc.com/2019/09/15/trump-says-us-is-locked-and-loaded-after-attack-on-saudi-oil-supply.html

Link to comment
Share on other sites

 

அமெரிக்க, உலகின் தனிப்பெரும் வல்லரசு என்று ஊடகங்களும் ஆய்வாளர்களும் பொதுவாக முன்வைப்பர். இருந்தும், பல நெருக்கடிக்களுக்குள் உள்ள ஈரான், துணிந்து இந்த 'புரெக்சி' தாக்குதலை, அதாவது ஏமாறும் ஏமன் போராளிகள் ஊடாக செய்துள்ளது. 

அண்மையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ரன் பதவியை துறந்தார். ஒரு காரணமாக ட்ரம்ப் ஈரானின் அதிபரிடன் நேரடியாக கதைக்க விரும்பியதாயும் அதை  ஜான் போல்ரன் எதிர்த்தார் என்றும் கூறப்படுகின்றது. 

பெரிய பொருளுத்தார சிக்கலை எதிர்கொள்ளும் இந்தியா, உருசியாவிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து விலாடிவஸ்த்ரோக் - சென்னை கடல் பயணத்திற்கு உதவி உள்ளது. காரணம்? சீன கடல் ஆதிக்கத்தை தவிர்க்க ? அப்படியானால் சீனா உருசியாவுடன் நல்ல உறவை கொண்டுள்ளதே? அமெரிக்காவுடன் உறவை கொண்ட இந்தியா எவ்வாறு உருசியாவுடன் இதை செய்து கொண்டது.? 

ஈரான் மீது அமெரிக்க பொருளாதார தடை இருந்தும் மசகு எண்ணெயை ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்த இந்தியா அதை அண்மையில் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க நிறுத்து உள்ளது. இப்பொழுது இந்தியா என்ன செய்யப்போகின்றது? 

இந்தியா - சீன - அமெரிக்க - உருசிய உறவுகள் சொல்லும் செய்து : நமக்குள் நிறைந்த நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. ஆக, நிறைந்த பொருளாதார - இராணுவ - அரசியல் தேவைகளே உள்ளன.      
 

Link to comment
Share on other sites

சவுதி மீது ஆளில்லா விமானதாக்குதல்- பதிலடி கொடுப்பதற்கான தயார் நிலையில் அமெரிக்கா- டிரம்ப்

சவுதி அரேபியாவிற்கு எதிராக  ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டவர்களிற்கு எதிராக தாக்குதலை  மேற்கொள்வதற்கான தயார் நிலையில் அமெரிக்க உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ள அவர் சவுதி அரேபியா மீது யார் தாக்குதலை மேற்கொண்டார்கள் என அமெரிக்க நம்புவதற்கான காரணங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

trump_se13.jpg

சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் தாக்கப்பட்டது ,எங்களிற்கு குற்றவாளியை தெரிந்துள்ளது என்பதற்கான காரணங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ள டிரம்ப் உறுதிப்படுத்தல்களை அடிப்படையாக வைத்து நாங்கள் தாக்குதலிற்கு தயாராகவுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த தாக்குதலிற்கு யார் காரணம் என சவுதி அரேபிய கருதுகின்றது என்ற அவர்களின் பதிலிற்காகவும் என்ன அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பிற்காகவும் நாங்கள் காத்திருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/64843

Link to comment
Share on other sites

செளதி அரேபிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்: இரானுக்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட புகைப்படம்

செளதி அரேபியாபடத்தின் காப்புரிமைREUTERS

செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

செளதியில் மீண்டும் எண்ணெய் உற்பத்தி தொடங்கும் வரை அமெரிக்காவின் எண்ணெய் சேமிப்பை வெளியிடுவதாக டிரம்ப் உறுதியளித்த பிறகு விலையில் சிறிது மாறுதல்கள் இருந்தன.

உலகளவில் செளதி அரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பேரல்களை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது.

தாக்குதலுக்கு பிறகு அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தினமும் 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என செளதியின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

இது செளதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதியளவாகும்

அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்துள்ளது.

அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யில் 1% கிடைக்கிறது.

செளதி அரேபியாவில்தான் உலகிற்குத் தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகிறது. எனவே இந்த தாக்குதலால் திங்களன்று எண்ணெய் விலையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-49711737

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை கவலை முழுக்க பெற்றோல் விலை கூடப்போகுது எண்டதுதான்.... மற்றும்படி உவங்கள் எப்பிடி குத்துப்பட்டாலும் எனக்கு கவலையில்லை:cool:

13 hours ago, ampanai said:

சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் தாக்கப்பட்டது ,எங்களிற்கு குற்றவாளியை தெரிந்துள்ளது என்பதற்கான காரணங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ள டிரம்ப் உறுதிப்படுத்தல்களை அடிப்படையாக வைத்து நாங்கள் தாக்குதலிற்கு தயாராகவுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு அடிக்கிறதுக்கு ஒரு சாட்டு வேணும். அதுக்கு இப்பவே ரெடி பண்ணீனம்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/14/2019 at 9:53 PM, Jude said:

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

பெட்ரோலில் குண்டுபோட்டால் பத்தி எரியும் 

Link to comment
Share on other sites

On 9/14/2019 at 7:53 PM, Jude said:

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

 

10 hours ago, Maruthankerny said:

பெட்ரோலில் குண்டுபோட்டால் பத்தி எரியும் 

தமிழீழத்தில் பெட்ரோல் இல்லாமலே குண்டு போட்ட இடமெல்லாம் பத்தி எரிந்ததாக வந்த கதை எல்லாம் வெறும் வதந்திகள் தானா?

Link to comment
Share on other sites

சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 2 அல்லது மூன்று வாரங்களில் பணி தொடங்கப்படும்: சவுதி அரசு


சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 அல்லது மூன்று வாரங்களில் பணியை தொடங்கும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை பாதியாக குறைத்து சவுதி அரசு. இந்த நிலையில் சேதங்கள் அனைத்தும் சரி செய்ய 2 அல்லது 3 வாரங்கள் ஆகும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.
 
முன்னதாக சவுதி அரேபியாவின் புக்யக் என்ற இடத்தில் செயல்படும் அரசுக்கு சொந்தமான ‘அராம்கோ’ என்ற நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும்,  குரைஸ் எண்ணெய் வயல் மீதும்  டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான இங்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. டிரோன் தாக்குதலில் பயங்கர சேதம் ஏற்பட்டதால், கச்சா எண்ணெய் சப்ளையை சவுதி அரசு பாதியாக குறைத்துள்ளது.

எண்ணெய் சப்ளையை சவுதி அரேபிய அரசு குறைத்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அல்லது பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.  சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது  ஏமனில் போராடி வரும் ஹவுதி அமைப்பினரோ இந்த டிரோன் தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து சேதங்கள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு இன்னும் இரண்டு அல்லது 3 வாரங்களில் அராம்கோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பழையபடி செயல்படும் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526760

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.